Category: News

  • JioHotstar Unveils Teaser of ‘Good Wife’ Starring Priyamani and Sampath Raj, Directed by Revathi The teaser of Hotstar Specials ‘Good Wife’, helmed by Director Revathi and produced by Banijay Asia was officially released on JioHotstar social handles.

    JioHotstar Unveils Teaser of ‘Good Wife’ Starring Priyamani and Sampath Raj, Directed by Revathi
The teaser of Hotstar Specials ‘Good Wife’, helmed by Director Revathi and produced by Banijay Asia was officially released on JioHotstar social handles.
    Chennai, June 16, 2025 – JioHotstar set social media abuzz today by dropping the Teaser of its forthcoming Hotstar Specials drama, the Tamil adaptation of the internationally acclaimed series The Good Wife. Headlined by National Award–winner Priyamani and versatile actor Sampath Raj, the show marks Actor-Director Revathi’s OTT directorial debut.

    This Tamil adaptation brings a regional touch to the globally beloved format, following the success of its Hindi adaptation, The Trial- Pyaar, Kanoon, Dhokha, which featured Kajol and Jisshu Sengupta in lead roles and was a massive hit on JioHotstar in India.

    Making her OTT directorial debut, actor-director Revathi expressed her excitement saying, “Adapting The Good Wife in Tamil, after its successful Hindi remake, is a fantastic opportunity. The show has a strong female lead, whose journey is filled with emotional complexities and professional challenges, making it a great script to execute. I am excited to be working with talented actors like Priyamani and Sampath Raj, and look forward to delivering a narrative that’s both engaging and relatable. This will be an experience I cherish as I step into the world of OTT with proven industry leaders JioHotstar and Banijay Asia.”

    Krishnan Kutty, Head of Cluster, Entertainment (South) – JioStar added, “We are thrilled to bring the Tamil adaptation of The Good Wife to our audiences. The Hindi version, The Trial – Pyaar, Kanoon, Dhokha was met with great enthusiasm from viewers, and we believe the Tamil adaptation will be just as impactful. Our focus is on delivering high-quality, engaging content, and with a director like Revathi and a cast led by Priyamani and Sampath Raj, together with Banijay Asia, we’re confident that the show will engage and entertain our audience.”

    Deepak Dhar, Founder and Group CEO, Banijay Asia & EndemolShine India said, “Following the overwhelming success of The Trial, Pyaar, Kanoon, Dhokha in Hindi, we are delighted to bring The Good Wife in Tamil to our audiences in the South. South India has been a key market for us at Banijay Asia and the appetite for quality content here continues to grow, and with a story as powerful and timeless as The Good Wife, we believe this adaptation will resonate well with the audiences there. This project is yet another addition to our growing collaboration with JioHotstar, where we continue to deliver exceptional content to the audiences.”

    Katie Pike, Director, International Formats from Paramount Global Content Distribution, which holds the format rights to The Good Wife added, “We are delighted to see The Good Wife continue to captivate audiences around the world. Given India’s growing appetite for diverse storytelling, it is the perfect market to bring this powerful narrative to life in a new regional form. The strength of the show’s narrative and characters transcends borders, and we are excited to see how JioHotstar and Banijay Asia reimagine this story with their creative expertise for Tamil-speaking audiences.”

    Robert and Michelle King served as creators, showrunners and executive producers of the original U.S. series. Ridley Scott, David Zucker and Brooke Kennedy also served as executive producers. The Good Wife is produced by CBS Studios in association with Scott Free Productions and King Size Productions. The format rights are licensed by Paramount Global Content Distribution.

    *****

    About JioHotstar
    JioHotstar is one of India’s leading streaming platforms, formed through the coming together of JioCinema and Disney+ Hotstar. With an unparalleled content catalogue, innovative technology and a commitment to accessibility, JioHotstar aims to redefine entertainment for everyone across India.

    About Banijay Asia:
    Launched in early 2018, as a Joint Venture between content powerhouse Banijay Entertainment and Deepak Dhar, Banijay Asia is today amongst the biggest players in entertainment – across screens, and across genres. Over the last few years, Banijay Asia has delivered mega-hit scripted adaptations like The Night Manager, The Trial (The Good Wife), Hostages, Call My Agent: Bollywood, Fall and successful originals such as Dahan, Matsya Kaand, Undekhi, and Tribhanga amongst many others. The content studio’s upcoming shows include Indian adaptations of Monk, House and Suits. On the non-scripted front, Banijay Asia is leading the genre with blockbuster titles like Temptation Island, The Kapil Sharma Show, MTV Roadies, The Voice, The Big Picture, Into The Wild with Bear Grylls, Case Toh Banta Hai and more.

    For further media queries:

    Media Contact: D’one
    Point of contact : Abdul.A.Nassar
    Email ID: d.onechennai@gmail.com
    Ph. No: 99418 87877

  • *ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!*

    *ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!*

    சென்னை, ஜூன் 16, 2025: ஜியோஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம். தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இந்தத் தொடரை நடிகை-இயக்குநர் ரேவதி இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக ரேவதி ஓடிடியில் அறிமுகமாகிறார்.

    இதே சீரிஸ் இந்தியிலும் ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ என்ற பெயரில், நடிகர்கள் கஜோல் மற்றும் ஜிஷூ சென்குப்தா நடிப்பில் உருவானது. இது ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகி வெற்றிப்பெற்றது. இப்போது தமிழ் ரசிகர்ளுக்கு ஏற்றபடி இந்த தொடர் உருவாகியுள்ளது.

    ஓடிடியில் இயக்குநராக அறிமுகவாது குறித்து நடிகை- இயக்குநர் ரேவதி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தி ரீமேக்கில் ‘குட் வொய்ஃப்’ வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து தமிழில் இதனை இயக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்தக் கதையில் கதாநாயகி கதாபாத்திரம் மிகவும் வலுவானது. தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் தொழில் சார்ந்தும் நிறைய சவால்களை அவர் எதிர்கொள்கிறார். இதனை திரைக்கதையில் இருந்து படமாக்குவதை மிகவும் விரும்பி செய்தேன். பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் போன்ற திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பானிஜே ஆசியாவுடன் ஓடிடி உலகில் நான் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சிகரமான அனுபவம்” என்றார்.

    கிருஷ்ணன் குட்டி, ஹெட் ஆஃப் கிளஸ்டர், எண்டர்டெயின்மென்ட் (சவுத்) ஜியோஸ்டார், “தமிழ் ரசிகர்களுக்கு ‘குட் வொய்ஃப்’ சீரிஸை வெளியிட ஆர்வமாக இருக்கிறோம். இதன் இந்தி வெர்ஷனான ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் அப்படியான வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். உயர்தர தொழில்நுட்பம், என்கேஜிங்கான கண்டெண்ட், ரேவதி போன்ற இயக்குநர், ப்ரியாமணி, சம்பத் ராஜ் போன்ற நடிகர்கள் மற்றும் பனிஜய் ஆசியா ஆகியோருடன் இணைந்து நல்ல படைப்பை பார்வையாளர்களுக்குக் கொடுக்க இருக்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

    தீபக் தார், ஃபவுண்டர் & குரூப் சிஇஓ, பானிஜே ஆசியா & எண்டேமோல்ஷைன் இந்தியா பகிர்ந்து கொண்டதாவது, “’குட் வொய்ஃப்’ சீரிஸின் இந்தி வெர்ஷனான ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தக் கதையை தமிழிலும் கொண்டு வர ஆர்வமாக இருக்கிறோம். பானிஜே ஆசியா தென்னிந்தியாவை முக்கிய சந்தையாக கருதுகிறது. இங்கு தரமான உள்ளடக்கம் கொடுப்பதற்கும் ஆர்வம் காட்டுகிறது. அதற்கான முதல்படியாக ‘குட் வைஃப்’ இருக்கும். தரமான கதைகளைத் தொடர்ந்து கொடுத்து வரும் ஜியோஹாட்ஸ்டாருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.

    கேட்டி பைக், இயக்குநர், இண்டர்நேஷனல் ஃபார்மட்ஸ் ஃப்ரம் பாராமவுண்ட் குளோபல் கன்டென்ட் டிஸ்டிரிபியூஷன், ’குட் வொய்ஃப்’ சீரிஸின் ஃபார்மட் உரிமைகளை பெற்றுள்ளது. ”உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை ‘குட் வொய்ஃப்’ கவர்ந்திருப்பது மகிழ்ச்சி. இந்தியாவில் வளர்ந்து வரும் மாறுபட்ட கதைசொல்லல் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வலுவான கதையை பார்வையாளர்களுக்குக் கொண்டு வர இருக்கிறோம். ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பானிஜே ஆசியா ஆகியவை தமிழ் ரசிகர்களுக்காக இந்தக் கதையை எவ்வாறு மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க நாங்கள் ஆவலாக உள்ளோம்”.

    ஒரிஜினல் யு.எஸ். சீரிஸில் ராபர்ட் மற்றும் மிஷேல் கிங் ஆகியோர் கிரியேட்டர்ஸ் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர்களாகப் பணியாற்றினர். ரிட்லி ஸ்காட், டேவிட் ஜுக்கர் மற்றும் ப்ரூக் கென்னடி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றினர். ’குட் வைஃப்’ தொடரை சிபிஎஸ் ஸ்டுடியோஸ், ஸ்காட் ஃப்ரீ புரொடக்ஷன்ஸ் மற்றும் கிங் சைஸ் புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து தயாரித்தது. பாராமவுண்ட் குளோபல் கன்டென்ட் டிஸ்ட்ரிபியூஷன் இதன் ஃபார்மட் உரிமைகளை பெற்றுள்ளது.

    *ஜியோஹாட்ஸ்டார் பற்றி:*

    ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. நல்ல கதையம்சம், புதுமையான தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்புடன், ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    *பானிஜே ஆசியா பற்றி:*

    பானிஜே ஆசியா என்டர்டெயின்மென்ட் மற்றும் தீபக் தார் இடையே கூட்டு முயற்சியாக 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பானிஜே ஆசியா தொடங்கப்பட்டது. இன்று பல்வேறு வகைகளில் பொழுதுபோக்குத் துறையில் மிகப்பெரியதாக பானிஜே ஆசியா உருவெடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், பானிஜே ஆசியா தி நைட் மேனேஜர், தி டிரையல் (தி குட் வைஃப்), ஹோஸ்டேஜஸ், கால் மை ஏஜென்ட்: பாலிவுட், ஃபால் போன்ற மெகா-ஹிட் (தழுவல்), தஹான், மத்ஸ்யா காண்ட், உண்டேகி மற்றும் திரிபங்கா போன்ற வெற்றிகரமான அசல் படங்களையும் வழங்கியுள்ளது. மாங்க், ஹவுஸ் அண்ட் சூட்ஸ் ஆகியவை அடுத்து வரவிருக்கிறது. டெம்ப்டேஷன் ஐலேண்ட், தி கபில் சர்மா ஷோ, எம்டிவி ரோடீஸ், தி வாய்ஸ், தி பிக் பிக்சர், இன்டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ், கேஸ் தோ பந்தா ஹை மற்றும் பல போன்ற பிளாக்பஸ்டர்களையும் பானிஜே ஆசியா கொடுத்துள்ளது.

    தொடர்பு:

    Media Contact: D’one
    Point of contact : Abdul.A.Nassar
    Email ID: d.onechennai@gmail.com
    Ph. No: 99418 87877

  • *ரெபல் ஸ்டார் பிரபாஸின் ‘தி ராஜாசாப்’ படத்தின் மாபெரும் டீசர் வெளியீடு, இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது!*

    *இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபான்டஸி படமான ‘தி ராஜாசாப்’ டீசர் தற்போது வெளியாகியுள்ளது!*

    ஹைதராபாத் மாநகரமே, ‘தி ராஜாசாப்’ டீசர் விழாவுக்காக ஒரு திருவிழாக்கோலமாக மாறியது. இசை, ரசிகர் பேரதிர்வு, மாயாஜாலக் கலை—all-in-one கலந்த ஒரு களமாக மாறியது. ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் இந்த ஹாரர்-ஃபான்டஸி படத்திற்கான டீசர் விழா, அண்மைக்கால இந்திய சினிமாவில் நடந்த மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது.

    இந்த டீசர் பழமையான புராணக் கதைகள், திகில் மற்றும் மர்மங்களை நேர்த்தியாக இணைத்து, கிராண்டியர் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இசை மாஸ்ட்ரோ தமன் எஸ் வழங்கிய பின்னணி இசை, தோள்கள் புடைக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது வெறும் டீசர் வெளியீடாக இல்லாமல், உணர்ச்சிகளை கிளப்பும் பார்வை அனுபவமாக மாறியுள்ளது.

    இந்தியாவில் இதுவரை உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஹாரர்-ஃபான்டஸி செட்டில் இந்த விழா நடந்தது. அந்த மர்மக் குகையில், பத்திரிகையாளர்களும் விருந்தினர்களும் நுழைந்து பழங்கால மாளிகை, இருளின் ஜாலங்கள், மெழுகுவர்த்திகளால் ஒளிரும் பாதைகள், மற்றும் மர்மங்களால் நிரம்பிய சுற்றுச்சூழலை நேரில் அனுபவித்தனர்.

    இயக்குநர் மாருதி, தயாரிப்பாளர் டி.ஜி. விஷ்வ பிரசாத், இசையமைப்பாளர் தமன் எஸ், மற்றும் ரெபல் ஸ்டார் பிரபாஸ் ஆகியோர் மேடையில் தோன்றி ரசிகர்களிடம் பேரதிர்வை ஏற்படுத்தினர். இது ஒரு டீசர் நிகழ்வை தாண்டி, கலையுலகமே திரும்பிப் பார்க்கும் திருவிழாவாக மாறியது.

    டீசரில் பிரபாஸ் இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் வெளிப்படுகிறார் — ஒன்று ஸ்டைலிஷான ஹீரோ தோற்றம்; மற்றொன்று இருண்ட, மர்மமிக்க, பரபரப்பூட்டும் தோற்றம். அவரது எனர்ஜி மற்றும் நடித்த விதம் ரசிகர்களை மைய வட்டத்தில் இழுத்துவைத்தது.

    டீசரின் இறுதியில் தோன்றும் சஞ்சய் தத், அதிரடியான தோற்றத்துடன் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.

    நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் போன்ற நடிகைகளும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

    தயாரிப்பாளர் டி.ஜி. விஷ்வ பிரசாத் கூறியதாவது:

    “தி ராஜாசாப்’ஐ ஆரம்பித்த போது, இந்தியா இதுவரை கண்டிராத வகையில் ஒரு பெரிய படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. இன்று ரசிகர்கள் முன்னிலையில், பிரம்மாண்ட அரங்கில் டீசரை வெளியிட்டதே, அந்த உலகத்தில் நம்மை நேரடியாக எடுத்து செல்வது போலவே உணர்ந்தோம். இது இன்னும் ஆரம்பமே!”

    இயக்குநர் மாருதி கூறியது:

    “தி ராஜாசாப் என்பது வழக்கமான ஜானரை மீறிய ஒரு தனித்த பயணம். ஹாரர், ஃபான்டஸி, உண்மை, மாயை—இவை அனைத்தையும் இணைக்கும் இந்தப் பயணத்தில், நெஞ்சை பதைக்கும் உணர்வுகளும் உள்ளன. பிரபாஸின் சொந்த ஊரில் இந்த டீசரை வெளியிடுவதே, ஒரு மறக்க முடியாத அனுபவம்.”

    தமன் எஸ் வழங்கிய பின்னணி இசை சமூக ஊடகங்களில் வலையைக் கிளப்பி, டீசரை வைரலாக்கியுள்ளது. ரசிகர்கள் தற்போது ஏராளமான மீம்கள், ஃபேன் எடிட் வீடியோக்கள், கதை ஊகங்கள் போன்றவற்றால் இணையத்தை கலக்கி வருகின்றனர்.

    People Media Factory தயாரித்துள்ள இந்த பான் இந்தியத் திரைப்படம் 2025 டிசம்பர் 5 அன்று, தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது — இது மாயாஜாலம் கலந்த மர்ம உலகுக்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் ஒரு பான் இந்திய சினிமா அனுபவமாக அமையும்!

  • *The Grand Teaser Launch of Rebel Star Prabhas’ The RajaSaab Raises Spirits Across the Nation; Teaser Out Now*

    *The Teaser Of India’s Biggest Horror Fantasy Starring Rebel Star Prabhas Unveiled*

    Hyderabad turned into a whirlwind of mystery, music, and mass frenzy as the grand teaser of Rebel Star Prabhas’ much-awaited horror-fantasy spectacle The RajaSaab was unveiled amidst thunderous celebrations. One of the biggest teaser launches in recent memory, the event brought together nationwide media and fans on a scale that truly matched the ambition of the film — and what followed was nothing short of a cinematic eruption.

    The teaser lands with a bang, blending grandeur, folklore, and edge-of-the-seat horror in a spellbinding cocktail. Music maestro Thaman S delivers a haunting and electrifying background score that pulses through the veins of the teaser. This wasn’t just a teaser drop — it was a sensory spectacle.

    Set inside India’s largest horror-fantasy set ever created, the event gave media an exclusive walkthrough of The RajaSaab’s eerie universe — a towering, haunted haveli steeped in secrets, flickering candlelight, and ominous silence. As fog swirled through the air and shadows danced across the age-old corridors, guests were transported into the very world that will soon haunt cinema screens.

    Director Maruthi, producer TG Vishwa Prasad, music director Thaman S, and the man of the hour — Prabhas — took center stage, greeted by deafening cheers from thousands of fans. The launch felt like a festival of cinema, celebrating not only the return of Prabhas but his bold step into a genre that India hasn’t seen at this scale.

    In the teaser, Prabhas appears in two striking looks — one brimming with irresistible swag, boundless energy, and screen-dominating charm, and another that hints at darker, mystical undertones. His charisma is magnetic, his performance sharp, and his dedication to the role shines through in every frame. Fans are rejoicing to see him dancing, delivering punchlines, and embracing a character he’s poured his heart into.

    Sanjay Dutt is a surprise that nobody saw coming, his presence is magnificent and leaves us wanting more.

    Joining them are Nidhhi Agerwal, Malavika Mohanan, and Riddhi Kumar — each adding layers of mystery to the cursed mansion’s tale.

    Producer TG Vishwa Prasad shared:

    “With The RajaSaab, we wanted to build something massive, something India hasn’t seen. The sets, the scale, the story — everything is crafted to pull audiences into this fantastical world. Launching the teaser within the haveli itself gave it life — it felt like we were stepping into the movie before it even released. This is only the beginning.”

    Director Maruthi added:

    “The RajaSaab is a genre-defying journey — it flows between horror and fantasy, the real and the surreal. At its heart, it’s about emotion, but surrounded by magic, mystery, and madness. Launching it in Prabhas’ city, and seeing everyone respond so powerfully, was unforgettable. This haveli isn’t just a set — it breathes with the film’s soul.”
    Backed by Thaman S’s goosebump-inducing score, The RajaSaab is already setting social media on fire. From viral fan edits to endless theories, the film has grabbed the country’s imagination — and if the teaser is anything to go by, The RajaSaab promises a theatrical experience like no other.

    Produced by People Media Factory and directed by Maruthi, The RajaSaab releases on December 5, 2025, in Telugu, Hindi, Tamil, Kannada, and Malayalam — a pan-Indian entertainer with a supernatural soul.

  • *ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    *ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    *’ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் – ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ஹும்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.*

    இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், பாடலாசிரியர் விவேகா, இயக்குநர்கள் எல். சுரேஷ், இஸ்மாயில், தயாரிப்பாளர்கள் ராஜா, கஸாலி, பத்திரிக்கையாளர்கள் டி எஸ் ஆர் சுபாஷ், செந்தில் வேல், ‘ஜீவா டுடே’ ஜீவ சகாப்தன், ‘ யூ டூ ப்ரூட்டஸ்’ Minor, தொழிலதிபர்கள் அப்பு பாலாஜி, கமல்ஹாசன், டி. சுரேஷ், இணை தயாரிப்பாளர்கள் சித்தர் திருதணிகாசலம், கௌரி ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை இயக்குநர் கே பாக்யராஜ் வெளியிட, வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

    இவ்விழாவில் இசையமைப்பாளர் ஹேமந்த் சீனிவாசன் பேசுகையில், ” இந்த திரைப்படத்தில், கதாநாயகனும், கதாநாயகியும்’ காதல் கோட்டை’ படத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் காதலிப்பார்களே.. அதுபோல் நானும், பாடலாசிரியரும் பணிபுரிந்தோம். பாடலாசிரியர் விவேகா எழுதி கொடுத்த பாடலுக்கு இசையமைத்தேன். இதற்கு கொரோனா காலகட்டத்தில் இப்பணிகள் நடைபெற்றதே காரணம். இந்தப் பாடலுக்கு இசையமைத்த பிறகு படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு பிடிக்குமா? என்ற ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அந்த பாடலை தற்போது திரையில் பார்த்தபோது எங்கள் அனைவருக்கும் பிடித்தது. ரசிகர்களுக்கும் பிடித்திருக்கும் என்ன நம்புகிறேன்.

    இந்தப் பாடலை உருவாக்குவதற்கு முன் தயாரிப்பாளர் எனக்கு படத்தில் இடம்பெறும் காட்சிகளின் புகைப்படங்களை காண்பித்தார். தற்போது திரையில் காண்பித்த போது மிகவும் அற்புதமாக இருந்தது. இதற்காக உழைத்த இயக்குநருக்கும், இதில் முகத்தை காண்பிக்காமல் நடித்த நாயகன் – நாயகிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த மேடையில் திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜிடமிருந்து வாழ்த்து பெற்றதை பாக்கியமாக கருதுகிறேன். ” என்றார்.

    இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ” ஹும் என்பதை எப்படி சொல்வது என எனக்குத் தெரியவில்லை. ஹும் என்பதில் ஏகப்பட்ட மாடுலேஷன் இருக்கிறது. ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு மாடுலேஷனில் இந்த ஹும் இருக்கலாம். அப்படி ஒரு அழகான டைட்டில். இப்படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இப்படத்தின் தயாரிப்பாளரான உமாபதி மற்றும் என் நண்பர் சுபாஷ் ஆகியோரின் பேச்சில் ஏராளமான விசயங்கள் இருக்கும். நான் அவர்களை பேச சொல்லிவிட்டு, அவர்கள் பேசுவதை கேட்பேன். யார் எப்போது சினிமாவில் வருவார்கள் என்று சொல்லமுடியாது. ‘தூறல் நின்னு போச்சு’ படத்தின் தயாரிப்பாளர் நஞ்சப்பனுடன் அதுபோன்றதொரு அனுபவம் ஏற்பட்டது. அது வித்தியாசமாகவே இருந்தது. இதுபோன்ற தருணங்களில் என்னுடைய ஆசான் சொன்னது தான் நினைவுக்கு வரும். ‘நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான். அவரிடமிருந்து நீ கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு விசயம் இருக்கும்’ என சொல்வார். அதனால்தான் நான் யாரையும் எளிதாக பார்க்க மாட்டேன் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விசயம் இருக்கும்.

    இயக்குநர் கிருஷ்ணவேல் யாரிடமும் உதவியாளராக பணியாற்ற வில்லை என்றார் . சரி சுயம்புவாக சிலர் வருவார்கள் என எண்ணினேன்.

    சினிமா மாறிவிட்டது. பாடலாசிரியர் விவேகாவிடம் இயக்குநரை பற்றி கேட்டபோது, ‘அவரை நான் இப்போதுதான் நேரில் சந்திக்கிறேன்’ என்றார். சினிமா ரொம்ப அட்வான்ஸாக சென்று கொண்டிருக்கிறது.

    தயாரிப்பாளராக இருக்கும் உமாபதி நிறைய விசய ஞானம் உள்ளவர் . அவர் படத்தை தயாரித்திருக்கிறார் என்றால் அதில் ஏதேனும் விசயம் இருக்கும். அவர் தன்னுடைய அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி இருக்கிறார். அவருடன் ஆரம்ப காலத்தில் பழகிய நண்பரையும் தயாரிப்பாளராக்கியது அவர் நட்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தெரிகிறது. விரைவில் அவருடைய இலட்சிய கனவான இயக்குநராகவும் ஆக வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    இங்கு மேடையில் பேசிய யூ டூ ப்ரூட்டஸ் Minor, அவருக்கு யார் மேல் கோபமோ.. அவருடைய பேச்சில் என்னையும் கோர்த்து விட்டார். ” என்றார்.

    கதாநாயகன் கணேஷ் கோபிநாத் பேசுகையில், ” என்னுடைய மானசீக குரு கே. பாக்யராஜ் சார். அவர் இருக்கும் மேடையில் அவருடன் இருந்ததை பெருமிதமாக கருதுகிறேன்.

    இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் அடுத்த நாளே படப்பிடிப்பு சென்றேன். இந்த அனுபவம் வித்தியாசமாக இருந்து. படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

    கதாநாயகி ஐஸ்வர்யா பேசுகையில், ” இந்தப் படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும் , இயக்குநருக்கும் நன்றி. வித்தியாசமான முயற்சியில்.. அழுத்தமான செய்திகள் இந்த படத்தில் இருக்கிறது. பல தடைகளை கடந்து இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நானும், நாயகனும் முகத்தை காண்பிக்காமல் நடித்திருந்தாலும்… இந்த படம் வெளியான பிறகு ஏராளமானவர்கள் எங்களை பாராட்டுவார்கள் என ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். ” என்றார்.

    இயக்குநர் கிருஷ்ணவேல் பேசுகையில், ” திரைப்படத் துறைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் எந்த இயக்குநரிடமும் உதவியாளராக பணியாற்ற வில்லை. எந்த உதவி இயக்குநரும் எனக்கு நண்பராகவும் இல்லை. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று எனக்கு ஏன் தோன்றியது? என்றால்.. அடிப்படையில் நான் ஒரு சர்வைவர்.

    கொரோனா காலகட்டத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய மகளை நாயகியாக முன்னிறுத்தி திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என சொன்னார்.‌ அதற்காக ஒரு கதையை எழுதினோம். கதை எழுதிய பிறகு தயாரிப்பாளர் பின்வாங்கி விட்டார். அந்தத் தருணத்தில் தான் யாருடைய முகத்தையும் காண்பிக்காமல் ஒரு படத்தை உருவாக்கலாம் என நினைத்து இப்படத்தின் கதையை எழுதத் தொடங்கினேன்.

    ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் பாக்கியராஜ் கதாபாத்திரத்திற்கு பெயர் இருக்காது. அதுவும் இந்த திரைப்படத்திற்கு ஒரு இன்ஸ்பிரேஷன். அறிஞர் அண்ணாவின் ‘ஓர் இரவு’ எனும் திரைப்படமும் இன்ஸ்பிரேஷன் . கலைஞரின் படங்களும் இன்ஸ்பிரேஷன். பார்த்திபனின் படங்களும் இன்ஸ்பிரேஷன். இப்படியாக ஒரு வித்தியாசமான படத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்து இருக்கிறேன்.

    பெண்களின் பாதுகாப்பு குறித்து.. பெண்கள் எதைக் கண்டு அச்சப்படக்கூடாது என்பது குறித்து.. ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும். இது பல படங்களின் தழுவலாகவும் இருக்கலாம். சாயலாகவும் இருக்கலாம். காப்பி என்று கூட சிலர் சொல்லலாம். ஆனால் கதை புதிது. அதற்கு நான் உத்திரவாதம். இந்த படம் கண்டிப்பாக பேசப்படும் என நம்புகிறேன் ” என்றார்.

    தயாரிப்பாளர் உமாபதி பேசுகையில், ” எங்களின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி.
    பத்திரிக்கை துறையில் புகைப்பட கலைஞராக பணியாற்றத் தொடங்கி அதன் பிறகு பல முன்னணி ஊடகங்களில் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் உண்டு.

    2004 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் ‘Grand Master of Politics ‘ எனும் புத்தகத்தை எழுதினேன். அதனை அப்போதைய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டார். அதன் பிறகு பத்தாண்டுகள் கழித்து ‘பதிவுகள்’ எனும் இரண்டாவது புத்தகத்தை எழுதினேன். அதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.

    என்னுடைய நண்பர் கிருஷ்ணவேல் ஒரு படத்தை தயாரித்து நிறைவு செய்திருந்தார். ஆள் இல்லாத படம் என்றார். அதன் பிறகு ஒரு நாள் அந்தப் படத்தை காண்பித்தார். அரை மணி நேரம் கடந்தது தெரியவில்லை. சுவாரசியமாக இருந்தது. இதுவரை யாரும் அது போன்ற முயற்சியை மேற்கொண்டதில்லை. புதிதாக இருந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது அதன் பிறகு விவாதித்தோம். அதனைத் தொடர்ந்து அந்தப் படத்தை மீண்டும் தயாரிக்க தொடங்கினோம். நண்பர்களின் உதவியுடன் இப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். ” என்றார்.

    தயாரிப்பாளர் கஸாலி பேசுகையில், ,” இந்த திரைப்படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன். ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக இருக்கும். இந்த திரைப்படம் வெளியான பிறகு பெரிய அளவில் பேசப்படும். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

    பாடலாசிரியர் விவேகா பேசுகையில், ” மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர் உமாபதி முன்னணி செய்தி நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார். கம்போடியா நாட்டில் நடைபெற்ற உலக தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தேன். அந்த தருணத்தில் இருந்து தயாரிப்பாளர் உமாபதியுடன் நெருக்கமாக பழகத் தொடங்கினேன். அவர் தயாரிப்பாளர் மட்டுமல்ல அவரிடம் ஏராளமான கதைகளும் உள்ளது. விரைவில் அவர் இயக்குநராகவும் மாறுவார். அதற்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலக படங்களில் சில படங்கள் வித்தியாசமாக இருக்கும். நண்பர் சந்திர மௌலி ஹிட்ச்காக்கின் நாற்பது திரைப்படங்களையும் பார்த்து, அவரைப் பற்றிய ஒரு ஆவண படத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தார். அவரோடு இணைந்து நானும் அந்த நாற்பது திரைப்படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஒவ்வொரு படத்திலும் அவர் ஒவ்வொரு புதுமையை செய்திருப்பார். அதில் ‘ரோப்’ என்று ஒரு படம். அதில் 11 ஷாட்ஸ்கள் மட்டும்தான் இருக்கும்.

    அப்படி ஒரு வித்தியாசமான படமாக நான் இந்த திரைப்படத்தை பார்க்கிறேன். இந்தப் படத்தில் 13 கதாபாத்திரங்கள். 13 குரல்கள். 13 உடல்கள் நடித்திருக்கின்றன. 13 உணர்ச்சிகள் நடித்திருக்கின்றன. ஆனால் அவர்களது முகங்கள் மட்டும் வெளியில் தெரியாது. இதுதான் இப்படத்தின் வித்தியாசம். இதுதான் இப்படத்தில் முகவரி என்று நினைக்கிறேன். இந்தப் படத்தின் முகவரியே முகம் இல்லை என்பதுதான்.
    இது ஒரு புது முயற்சி.

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹேமந்த் சீனிவாசன் அற்புதமாக இசையமைத்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் உமாபதி இப்படத்திற்காக கடுமையாக உழைத்தது நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

    கொரோனா காலகட்டத்தின் போது நாம் முற்றாக நவீன உலகத்திற்கு மாறிவிட்டோம். இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பம்.. நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்துகிறது. நேர விரயத்தை தவிர்க்க முடிகிறது. தொழில்நுட்பம் இல்லாமல் இன்று நம்மால் வாழவே இயலாது.

    இந்த உலகத்தில் விமர்சிக்கப்பட வேண்டும் அல்லது விமர்சிக்க வேண்டும். விமர்சனம் இல்லாமல் வாழவே இயலாது. ‘நீ விமர்சிக்கப்படக்கூடாது என நினைத்தால் நீ எதையும் பேசாதே.. எதையும் செய்யாதே.. எதுவாகவும் உருவாகாதே’ என தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் குறிப்பிட்டதை போல்..
    நீ எதுவும் பேசவில்லை என்றால்.. நீ எதுவும் செய்யவில்லை என்றால்… எதுவாகவும் உருவாகவில்லை என்றால்.. உன்னை எவனும் கண்டுகொள்ள மாட்டான். உன்னை எவனும் கவனிக்க மாட்டான். எனவே விமர்சிக்கப்படுவது ஒரு அங்கீகாரம். ஒவ்வொரு விமர்சனங்களிலும் அழகும், அறிவும் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

    இந்தப் படத்தில் இயக்குநரின் உழைப்பை விட தயாரிப்பாளர் உமாபதியின் உழைப்பு அதிகம். இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன். ” என்றார்.

  • மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் அப்போலோ மருத்துவமனையின் CSR பிரச்சாரத்திற்கு திருமதி. உபாசனா காமினேனி கொனிடேலா ஆதரவு*

    *

    அப்போலோ மருத்துவமனையின் CSR பிரிவின் துணைத் தலைவரான திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா மார்பக புற்று நோய் குறித்தான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் CSR பிரச்சாரத்திற்கு தனது ஆதரவை வழங்கி உள்ளார்.

    நாடு முழுவதும் 23 நகரங்களில் இந்தப் பிரச்சாரம் நடத்தப்படும். இதில் அப்போலோ டெலி மெடிசின் நெட்வொர்க்கிங் அறக்கட்டளை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக செயல்படுகிறது.

    மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பொறுப்பேற்க ஊக்குவிப்பதும் தான் இந்த CSR பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

    ஹைதராபாத், ஜூன் 11, 2025: சுகாதார துறை சார்ந்த தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள FUJIFILM இந்தியா, அப்போலோ மருத்துவமனை அறக்கட்டளையின் CSR பிரிவின் துணைத் தலைவர் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா முன்னிலையில் , ”முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல்” ( Find It Early, Fight It Early) எனும் அதன் சமீபத்திய CSR பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த முயற்சி மார்பக புற்றுநோய் மற்றும் அதன் ஆரம்ப கால நோய் பாதிப்பினைக்கண்டறிதலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் குறித்த விவாதங்கள் பெரும்பாலும் நடைபெறாத அல்லது எதிர்மறையான- நியாயமற்ற நம்பிக்கைகளை கொண்டிருக்கும் பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

    இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் 23 நகரங்களில் செயல்படுத்தப்படும். கட்டமைக்கப்பட்ட சமூக ஈடுபாடு – சுகாதார இடர் மதிப்பீடுகள் மற்றும் உணர்திறன் முயற்சிகள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களை சென்றடைவதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் இந்த பிரச்சாரம், இதற்காக பிரத்யேகமாக பயிற்சி பெற்ற களக் கல்வியாளர்களால் வழிநடத்தப்படும். அப்போலோ டெலி மெடிசின் நெட்வொர்க்கிங் அறக்கட்டளை ( ATNF) செயல்படுத்தும் இந்த திட்டம், அதிக அளவில் தகவல்களை அறிந்த மற்றும் சுகாதார விழிப்புணர்வு உள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான FUJIFILM இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

    மார்பக புற்றுநோய் இந்திய பெண்களிடையே மிகவும் பரவலாக காணப்படும் புற்று நோய்களில் ஒன்றாகும். ICMR எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய புற்றுநோய் பதிவு திட்டத்தின் படி, பெண்களிடையே கண்டறியப்பட்ட அனைத்து வகையான புற்று நோய்களிலும் இது தோராயமாக 14 சதவீதம் ஆகும். மேலும் 29 பெண்களில் ஒருவருக்கு இந்த நோய் உருவாகும் அபாயமும் உள்ளது. துரதிஷ்டவசமாக இது பற்றிய அறியாமை , விழிப்புணர்வு இன்மை, சரியான நேரத்தில் நோயை கண்டறிவதற்கான வசதிகள் எளிதில் கிடைக்காதது மற்றும் பராமரிப்பு கிடைக்காததால்.. பெரும்பாலான வழக்குகள்.. நோய் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகின்றன.‌ ‘முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல்” என்பது சமூகத்தில் நம்பகமான, கலாச்சார ரீதியாக உணர்திறன் வாய்ந்த தகவல்களை வழங்குவதன் மூலம், இந்த சவால்களை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆரோக்கியமான விவாதங்கள் – விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமர்வுகள் மூலமும் மரியாதையுடன் கூடிய திறந்த நிலையிலான உரையாடல்களை நிகழ்த்தி எளிதாக்குவதன் மூலம் .. இந்த முயற்சி பெண்கள் தங்களின் உடல் நலம் குறித்து மிகவும் விழிப்புணர்வுடனும் முன் முயற்சியுடனும் செயல்பட ஊக்குவிக்கிறது. ஆரம்பக் கட்ட அறிகுறிகளை அறிந்து கொள்வது மற்றும் கண்டறிவது, சுய பரிசோதனைக்கான நுட்பங்களை புரிந்து கொள்வது மற்றும் சரியான தருணத்தில் முழுமையான மருத்துவ ஆலோசனையை பெறுவது உள்ளிட்டவைகளும் இதில் அடங்கும்.‌

    இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனையின் CSR பிரிவின் துணைத் தலைவரான திருமதி. உபாசனா காமினேனி கொனிடேலா பேசுகையில், ”சுகாதாரத் துறையில் முன்னணியில் இருக்கும் நாங்கள் நோய்க்கு சிகிச்சை அளிப்பதுடன் மட்டுமல்லாமல், அது குறித்த விழிப்புணர்வு , கல்வி, எளிதில் அணுகும் முறை ஆகியவற்றை வழங்கும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. மார்பக புற்றுநோய் தொடர்ந்து உயிர்களை கொன்று வருகிறது. ஏனெனில் பல பெண்களுக்கு இத்தகைய நோய் பாதிப்பை கண்டறிந்து முன்கூட்டியே செயல்படுவதற்கு தேவையான தகவல்களும், வசதிகளும் இல்லை. FUJIFILM இந்தியாவின் இந்த CSR முயற்சி அந்த யதார்த்தத்தை பற்றிய ஆழமான புரிதலை பிரதிபலிக்கிறது. மிகவும் முக்கியமான இடங்களில் அர்த்தமுள்ள நடவடிக்கை மேற்கொள்வதற்கும் , தாமதமாகிவிடும் முன் விழிப்புணர்வு தேவைப்படும் பெண்களை சென்றடைவதை உறுதி செய்வதற்கும் பகிர்ந்துக் கொள்ளப்பட்ட உறுதிப்பாட்டில் எங்களது ஆதரவு அடித்தளமாக உள்ளது என்றார்.

    இது தொடர்பாக FUJIFILM இந்தியாவின் நிர்வாக இயக்குநரான திரு கோஜி வாடா தொடர்ந்து பேசுகையில், ” எங்களின் FUJIFILM இந்தியா, ‘ நம் உலகிற்கு மேலும் அதிகளவிலான புன்னகைகளை வழங்குதல்’ ( Giving Our World More Smiles) என்ற எங்கள் குழுவின் நோக்கத்தை உள்ளடக்கிய புதுமையான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.‌ பல்வேறு ஆலோசனைகள், தனித்துவமான திறன்கள் மற்றும் அசாதாரணமான மக்களுடன் கலந்து கொள்வதன் மூலம் உலகிற்கு மகிழ்ச்சியையும் , புன்னகையும் தரும் தீர்வுகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம். ‘முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல் ‘ எனும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு CSR பிரச்சாரத்தின் மூலம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை விரிவுபடுத்துவதையும், இதனால் இறக்கும் பல உயிர்களை காக்கும் வகையில் ஆரம்ப கால நோயறிதலை மேம்படுத்துவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்” என்றார்.

    FUJIFILM இந்தியா தனது CSR முயற்சிகள் மூலம் பூர்த்தி செய்யப்படாத மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலமும், ஆரம்பகால நோய் கண்டறிதலை ஊக்குவிப்பதன் மூலமும், கல்வி மூலமும், தடுப்பு மற்றும் பராமரிப்பை செயல்படுத்துவதன் மூலமும், சுகாதார பராமரிப்பை கூடுதலாக உள்ளடக்கியதாகவும் , எளிதில் அணுகக் கூடியதாகவும் மாற்றுகிறது. ‘முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல்’ என்ற FUJIFILM குழுமத்தின் நிலையான மதிப்பு 2030 ஆம் ஆண்டிற்கான திட்டத்துடன் ஒத்துப் போகிறது. இது குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற மக்களுக்கு சுகாதார சமத்துவம் மற்றும் ஆதரவிற்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த முயற்சி தேவைப்படும் இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் ‘நம் உலகிற்கு அதிக புன்னகையை வழங்குதல்’ என்ற எங்கள் நிறுவனத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது. தொலைதூரம் உள்ள நகரமாக இருந்தாலும் அல்லது அடர்த்தியான நகர் புறமாக இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணும் தனது ஆரோக்கியத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவும், அதனை பாதுகாத்துக் கொள்ளவும், தனது ஒட்டு மொத்த நல்வாழ்விற்கான பொறுப்பினை ஏற்கவும், அதற்கான வாய்ப்பினை பெற தகுதியானவர் என FUJIFILM இந்தியா நம்புகிறது.

  • *Ms. Upasana Kamineni Konidela, Vice Chairperson of CSR, Apollo Hospitals, has extended her support to the CSR campaign promoting breast cancer awareness.*

    *Ms. Upasana Kamineni Konidela, Vice Chairperson of CSR, Apollo Hospitals, has extended her support to the CSR campaign promoting breast cancer awareness.*

    *Ms. Upasana Kamineni Konidela, Vice Chairperson of CSR, Apollo Hospitals, has extended her support to the CSR campaign promoting breast cancer awareness.**Ms. Upasana Kamineni Konidela, Vice Chairperson of CSR, Apollo Hospitals, has extended her support to the CSR campaign promoting breast cancer awareness.**Ms. Upasana Kamineni Konidela, Vice Chairperson of CSR, Apollo Hospitals, has extended her support to the CSR campaign promoting breast cancer awareness.**Ms. Upasana Kamineni Konidela, Vice Chairperson of CSR, Apollo Hospitals, has extended her support to the CSR campaign promoting breast cancer awareness.*

    *Ms. Upasana Kamineni Konidela, Vice Chairperson of CSR, Apollo Hospitals, has extended her support to the CSR campaign promoting breast cancer awareness.**Ms. Upasana Kamineni Konidela, Vice Chairperson of CSR, Apollo Hospitals, has extended her support to the CSR campaign promoting breast cancer awareness.*

    The campaign will be conducted in 23 cities across the nation, with Apollo Telemedicine Networking Foundation serving as the implementation agency.

    The purpose of this CSR campaign is to raise awareness about breast cancer and encourage women to take charge of their health.

    Hyderabad, June 11th, 2025: FUJIFILM India, a leader in healthcare technology, has launched its latest CSR campaign, ‘Find It Early, Fight It Early’, in the presence of Ms. Upasana Kamineni Konidela, Vice Chairperson of CSR, Apollo Hospitals Foundation. This initiative is focused on generating awareness about breast cancer and the importance of early detection, particularly in underserved regions where discussions around women’s health are often stigmatized.

    This awareness campaign will be implemented across 23 cities, aiming to reach over 1 lakh women through structured community engagement, health risk assessments, and sensitization efforts led by trained field educators. The program, implemented by Apollo Telemedicine Networking Foundation (ATNF), reflects FUJIFILM India’s commitment to building a more informed and health-aware society.

    Breast cancer is one of the most prevalent forms of cancer among Indian women. According to the National Cancer Registry Program by ICMR, it accounts for approximately 14% of all cancers diagnosed among women, with 1 in 29 women at risk of developing the disease in her lifetime. Unfortunately, most cases are detected at advanced stages due to stigma, limited awareness, and lack of access to timely care. ‘Find It Early, Fight It Early’ is designed to address these challenges by providing reliable, culturally sensitive information at the community level. By facilitating respectful, open conversations through on-ground workshops and awareness sessions, the initiative encourages women to become more proactive about their health—recognizing early symptoms, understanding self-examination techniques, and seeking timely medical consultation.

    *Ms. Upasana Kamineni Konidela, Vice Chairperson of CSR, Apollo Hospitals, said,*

    > “As healthcare leaders, we have a responsibility not only to treat illness but to anticipate it through awareness, education, and access. Breast cancer continues to claim lives because too many women lack the information and resources needed to act early. This CSR initiative by FUJIFILM India reflects a deeper understanding of that reality. Our support is grounded in a shared commitment to take meaningful action where it matters most and ensure that awareness reaches the women who need it before it’s too late.”

    Mr. Koji Wada, Managing Director, FUJIFILM India, added,

    > “At FUJIFILM India, we are committed to delivering innovative products and solutions that embody our Group purpose of ‘Giving Our World More Smiles.’ By blending diverse ideas, unique capabilities, and extraordinary people, we aim to create solutions that bring joy and smiles to the world. With the ‘Find It Early, Fight It Early’ breast cancer awareness CSR campaign, we aim to extend the reach of breast cancer awareness and are committed to advancing early diagnosis so that many lives can be saved.”

    Through its CSR efforts, FUJIFILM India continues to make healthcare more inclusive and accessible by addressing unmet medical needs, promoting early disease detection, and enabling preventive care through education. ‘Find It Early, Fight It Early’ aligns with the FUJIFILM Group’s Sustainable Value 2030 Plan, which prioritizes health equity and support for underrepresented populations. The initiative reflects the company’s group purpose of ‘Giving Our World More Smiles’ by creating impact where it is needed most. Whether in a remote town or a dense urban neighborhood, FUJIFILM India believes every woman deserves the opportunity to know her health, protect it, and take charge of her overall well-being.

    *For More Photos & Videos link attached please find below :*

    Video : https://www.transfernow.net/dl/20250611sQVk5lvT

    Photos : https://we.tl/t-gF8G1GUukv

  • *அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்’அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*

    *அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்'அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*

    *அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்'அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*
    *அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்’அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*

    *அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்'அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*

    A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் ஆகியோர் சவாலான வேடத்தில் நடித்திருக்கும் ‘அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

    அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தில் அருண் பாண்டியன் , கீர்த்தி பாண்டியன், சீதா, ஷிவ் பிங்க் , ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா , கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். தேவத்யன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ராஜா கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அதிரடி திரில்லராக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை A&P குரூப்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு சரவணன்- ஏகே சேகர் ஆகியோர் இணை தயாரிப்பாளராக உள்ளனர்.

    ஜூலை மாதம் நான்காம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது . இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    பாடலாசிரியர் கார்த்திக் நேதா பேசுகையில், ” அஃகேனம் என்ற தமிழ் தலைப்பிற்காக மிக்க மகிழ்ச்சி. இதற்கான காரணத்தை இயக்குநர் விவரிப்பார்.

    இயக்குநர் உதய் என் வீட்டிற்கு வந்து பாடல்களுக்கான சூழல்களை விவரித்தார். இந்த திரைப்படம் அமைதியான மற்றும் ஆழமான உணர்வை பேசக்கூடியது.

    இந்தப் படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களும் வெவ்வேறு வகைமைக்குள்ளான பாடல்களாக இருக்கிறது. மேற்கத்திய இசை -ராக் இசை – இந்திய நாட்டார் இசை – இந்திய செவ்வியல் இசை – என வெவ்வேறு வகைமையியான இசை வடிவம் இந்தப் படத்தில் பாடல்களாக இடம் பிடித்திருக்கிறது. இசையமைப்பாளர் பரத் வீரராகவன் மிகுந்த திறமைசாலி.

    இந்த ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் என்ற ஆனந்த விகடன் வழங்கும் விருதினை பெற்றிருக்கும் சக பாடலாசிரியர் மோகன் ராஜனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

    அருண் பாண்டியன் ஐயாவை முதன்முறையாக சந்திக்கும்போது சற்று பதட்டத்துடன் தான் இருந்தேன். அவருடன் தொடர்ந்து பழகும் போது தான் அவர்’ பலாப்பழம் ‘என தெரிந்து கொண்டேன். பழகிய பிறகு இனிக்க இனிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்ததற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த திரைப்படத்தில் நிறைய பேர் புது முகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். இது அரிதினும் அரிதாக நடக்கக்கூடிய நிகழ்வு. இன்றைக்குள்ள காலகட்டத்தில் வியாபாரத்திற்கு யார் பயன்படுவார்களோ அவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், புதிதாக ஒரு குழுவினரை அறிமுகப்படுத்துவதற்கு மிகப்பெரிய துணிவு வேண்டும்.

    அறிமுக இசையமைப்பாளர் பரத் வீரராகவனிடமிருந்து இப்படி ஒரு ஓசையை நான் எதிர்பார்க்கவில்லை. சாலச் சிறந்த பணியை செய்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

    அறிமுக இயக்குநர் உதய்க்கும் என்னுடைய வாழ்த்துக்கள். சக பயணியாக ..சக கலைஞனாக.. இணைந்து பயணிப்போம். நேர்மையுடனும், அறத்துடனும் பயணம் செய்யுங்கள் ” என்றார்.

    பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், ” தயாரிப்பாளர் அருண் பாண்டியனுக்கு நன்றி. நானும் பாடலாசிரியர் கார்த்திக் நேதாவும் ஒரே மேடையில் இருப்பது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த கவிஞன். பாடலாசிரியர். பாடலுக்குள் நவீன கவிதைகளை உள்ளே வைப்பதில் சாமர்த்தியசாலி. அவர் எழுதி அண்மையில் ஹிட்டான ‘அஞ்சு வண்ண பூவே..’ பாடலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவர் மேலும் ஏ ஆர் ரகுமானுக்கு எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    இந்த விழாவின் நாயகன் பரத் வீரராகவனுக்கு வாழ்த்துக்கள். ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசைக்காக ஏ ஆர் ஆர் என்ற பிராண்ட் புகழ்பெற்றது போல்.. எதிர்காலத்தில் பி ஆர் எனும் பிராண்டும் புகழ் பெற வேண்டும். அதற்கும் வாழ்த்துக்கள்.

    இயக்குநர் உதய்- நேர்த்தியாக கதை சொல்வதில் கெட்டிக்காரர். இவரும், இசையமைப்பாளரும் எதிரிகளை வலிக்காமல் அடிப்பதில் கெட்டிக்காரர்கள். பாடல் வரிகளை பெறுவதில் சில திருத்தங்களை நாசுக்காக சுட்டிக் காட்டுவார்கள். பரத் நன்றாக வர வேண்டும் என உதய் பாடுபடுகிறார். இவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்த அருண் பாண்டியனுக்கு பெரிய மனசு.‌ நிறைய புது முகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு துணிவு வேண்டும். பேரன்பு இருக்க வேண்டும்.‌

    அவரை சந்தித்தபோது உங்களின் படத்தில் நான் பங்கு பெற வேண்டும் . இது மட்டும் தான் என்னுடைய விருப்பம் என்றேன். ஏனெனில் அவரை நான் அவ்வளவு தூரம் நேசித்திருக்கிறேன். ‘இணைந்த கைகள் ‘ படத்தை இப்போதும் பார்ப்பேன். எப்போதும் பார்ப்பேன்.

    ‘மூங்கில் கோட்டை’ என்றொரு படத்தில் அவர் நடித்திருந்தார். அந்த தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவருக்காக சின்ன வயதில் ஏங்கிருக்கிறேன்.

    ‘ஊமை விழிகள்’ படத்தை வெளியிடுவதற்கு முன் நடைபெற்ற சம்பவங்களை நீங்கள் என்னிடம் சொல்லி இருக்கிறீர்கள். அதையே நீங்கள் ஒரு கதையாக உருவாக்கலாம். அவ்வளவு அழகும் , திரில்லும் அதில் இருக்கிறது. அதிலும் படம் வெளியான பிறகு சத்யம் தியேட்டரில் கூட்டம் கூடி இருந்ததை நீங்கள் மகிழ்ச்சியுடன் சொன்னபோது உங்களின் சந்தோஷத்தை கண்களால் ரசித்து உணர்ந்தேன்.

    இந்தப் படத்தில் கீர்த்தி நடித்திருந்த காட்சிகளை பார்த்து தான் ‘வாழ்க்கை போராட்டமே ‘எனும் பாடலை எழுதினேன். அதில் அவர் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். இங்குதான் அவர்கள் அப்பா – பொண்ணு என்று இருக்கிறார்கள். இந்த படத்தில் வேறு இரு கதை மாந்தர்களாக இருப்பார்கள் . கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும்.‌

    சின்ன படங்கள் வெற்றி பெறும்போது பெரிய படங்களாகிறது. இதற்கு ‘குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களின் வெற்றியே உதாரணம். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்” என்றார்.

    இவ்விழாவில் இசையமைப்பாளர் பரத் வீரராகவன் பேசுகையில், ” இது என்னுடைய முதல் படம். எனக்கு இசையை கற்பித்த குருமார்களுக்கு வணக்கம்.

    இயக்குநருடன் முதன்முதலாக அருண்பாண்டியன் சாரை சந்தித்தோம். அவர் முதலில் எதையும் பேசவில்லை. இந்தப் படத்திற்கான இசையமைப்புக்கு உரிய பட்ஜெட்டை அவரிடம் சொன்னேன். அவர் அதனை கேட்டுவிட்டு, இதற்குள் செய்து விடுவாயா? என கேட்டார். நான் ஆமாம் என்று பதிலளித்தேன். ஆனால் உண்மையில் நான் சொன்ன பட்ஜெட்டை விட மும்மடங்கு அதிகமானது. ஆனால் அதனை செய்து கொடுத்தார். இந்த மனசு யாருக்கு வரும்? . இவர் கொடுத்த ஆதரவினால் தான் என்னால் பல இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற முடிந்தது. இங்கு மேடையில் இருக்கும் பாடலாசிரியர்கள் மோகன் ராஜன் மற்றும் கார்த்திக் நேதா ஆகியோர் ஐநூறு பாடலுக்கு மேல் எழுதிய அனுபவம் கொண்டவர்கள். இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இயக்குநர் உதய் .கே நண்பர் மட்டுமல்ல மிகுந்த திறமைசாலி. இந்த படத்தின் பின்னணி இசைக்காக காட்சிகளை பார்த்த போது.. அதில் இந்திராவாக நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியனின் நடிப்பு பிரமாதம். அருண் பாண்டியனை இந்த படத்தில் பார்ப்பது போல் வேறு எந்த படத்திலும் பார்த்திருக்க மாட்டீர்கள். நன்றாக ஸ்மார்ட்டாக ஜீன்ஸ் டீ சர்ட் அணிந்து நடனமாடி இருக்கிறார்.

    நாங்கள் பொறுப்பை உணர்ந்து கடினமாக உழைத்து படைப்பை உருவாக்கி இருக்கிறோம். படத்தில் நான்கு பாடல்கள் இருக்கிறது. அனைத்தும் நன்றாக இருக்கிறது. பாடல்களையும், படத்தையும் திரையரங்கத்தில் பார்த்து ரசித்து விட்டு ஆதரவு தாருங்கள்” என்றார்.

    இயக்குநர் உதய்.கே பேசுகையில், ” இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பெண் கதாபாத்திரமாகட்டும் அல்லது இனி என்‌ இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களிலாகட்டும்.. பெண் கதாபாத்திரம் வலிமையாக இருக்கும் . இதற்கு என் அம்மா தான் காரணம்.

    அம்மாவிற்கு அடுத்ததாக தயாரிப்பாளர் அருண் பாண்டியனுக்கு நான் நன்றி சொல்கிறேன். என்னை நம்பி என்னுடைய ஒட்டுமொத்த குழுவிற்கு வாய்ப்பளித்திருக்கிறார். இதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும். அவர் நினைத்தால் ஒரு போன் காலில் யாரை வேண்டுமானாலும் அழைத்து பணியாற்ற சொல்லலாம். ஆனால் என்னையும், என் குழுவினரையும் நம்பி இந்த வாய்ப்பை அளித்திருக்கிறார். இதை நாங்கள் மிகப்பெரிய விசயமாக பார்க்கிறோம். இதனை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். வாழ்க்கை முழுவதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அவரிடமிருந்து நான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

    நான் குறும்படத்தை இயக்கி விட்டு நேரடியாக படத்தை இயக்க வந்தவன். பெரிய அனுபவம் எதுவும் இல்லை. அந்த தருணத்தில் 45 வருட கால அனுபவமுள்ள ஒருவருடன் இணைந்து பயணித்ததை எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக நினைக்கிறேன்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர், அவருடைய குடும்பத்தார்களை விட எங்களுடன் செலவழித்த நேரம் தான் அதிகம். அவரும் நாங்களும் இணைந்து தான் இப்படத்தினை உருவாக்கி இருக்கிறோம். நிச்சயமாக தரமான படமாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன்.

    கீர்த்தியிடம் இருந்துதான் இந்தப் படத்தின் பணிகள் தொடங்கியது. அவர்களிடம் இந்த கதையை குறும்படமாகத்தான் விவரித்தேன். அதில் இந்திரா என்ற கதாபாத்திரம் தான் முக்கியமானது. நான் எதை மனதில் வைத்துக் கொண்டு கீர்த்தியிடம் அந்த இந்திரா கதாபாத்திரத்தை விவரித்தேனோ… அந்த இந்திராவாகத்தான் இந்த படத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார். படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் அந்த இந்திரா கதாபாத்திரம் மனதில் நிற்கும்.

    இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

    அருண் பாண்டியனின் வழிகாட்டலால்தான் இந்தப் படத்தை இந்த பட்ஜெட்டிற்குள் தரமாக உருவாக்க முடிந்தது.

    இசையமைப்பாளர் பரத் – ஒளிப்பதிவாளர் விக்கி- எடிட்டர் தேவத்யன்- இவர்கள் அனைவரும் என்னுடன் நண்பர்களாக பயணித்தவர்கள். இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களின் பணி- படம் வெளியான பிறகு பேசப்படும். அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு. இந்தப் படம் வெளியான பிறகு அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    நான் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் ரசிகன். அவர் என் படத்தில் பணி புரிந்தாலும் புரியாவிட்டாலும் அவரை ரசிப்பேன். இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் போது அவர் எனக்காக ‘மெல்லாலியே மெல்லாலியே’ என்று புதிய வார்த்தையை வழங்கினார். அந்தப் பாடல் அழகானது மற்றும் ஆழமானது அவருக்கும் நன்றி.

    அஃகேனம் என்ற டைட்டிலுக்கான காரணம் இதுதான். ஃ என்பது ஆயுத எழுத்தின் வார்த்தை வடிவம். அஃகேனம் என்றால் மூன்று புள்ளி. இதைத் தவிர்த்து இதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. அந்த மூன்று புள்ளி என்பது இப்படத்தில் இடம்பெறும் மூன்று கதாபாத்திரத்தினை பிரதிபலிக்கிறது. அந்த மூன்று முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் கதை என்பதால் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். இதையே தயாரிப்பாளரிடமும் ஆலோசனையாக சொன்னோம். அவரும் இந்த டைட்டில் மீது நம்பிக்கை வைத்து அனுமதி அளித்தார். ஒரு சமயத்தில் இந்த டைட்டில் யாருக்கும் தெரியவில்லை என்றால்.. நாம் தெரியப்படுத்துவோம் என எங்களுக்கு ஊக்கமளித்தார். இந்தப் படம் வெளியான பிறகு இந்த வார்த்தையும் பிரபலமாகும் என நம்புகிறேன்.

    ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு இந்த படம் ஏற்றதாக இருக்கும். ஒரு புது குழுவாக எங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து ஒரு படத்தை வழங்குகிறோம். ஜூலை நான்காம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

    நடிகை கீர்த்தி பாண்டியன் பேசுகையில், ” நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் உதய் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னார்.‌ அதற்கு முன் அவர் இயக்கிய ‘யாக்கை திரி’ எனும் குறும்படத்தினை காண்பித்தார். அந்த குறும்படத்தை அவர் இயக்கியிருந்த விதம்… அதன் தொழில்நுட்ப தரம்… சிறப்பானதாக இருந்தது. அதை பார்த்தவுடன் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நினைத்தேன்.

    அதன் பிறகு மீண்டும் என்னை சந்தித்து அந்த குறும்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய குழுவினர் அனைவரும் படத்திலும் பணியாற்றுவார்கள் என அவருடைய வேண்டுகோளை உறுதியாக சொன்னார்.‌ அவரது இந்த நிலைப்பாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌ புது குழுவினருடன் இணைந்து பணியாற்றும்போது அவர்களுக்குள் இருக்கும் உத்வேகம் எனக்கு நம்பிக்கை அளித்தது.‌ அதைவிட ஆர்வத்துடன் அப்பா இந்த படத்திற்குள் வருகை தந்தார். ஒரு தயாரிப்பாளராக..
    ஒரு நடிகராக…. இல்லாமல் அதையும் கடந்து இந்த படத்தின் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டினார். படத்தின் திரைக்கதை அவருடைய பெயரில் தான் இருக்கும்.

    அப்பா ‘ஊமை விழிகள்’, ‘இணைந்த கைகள்: ஆகிய படங்களின் பணிகளில் ஈடுபட்டிருந்த போதும் நான் பிறக்கவில்லை. அவருடைய திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கூட்டத்துடன் இணைந்து எவ்வளவு ஆர்வத்துடன் பணியாற்றி இருப்பாரோ அதே அளவு ஆர்வமும் ஊக்கமும் இந்தப் படத்தின் பணிகளிலும் அவர் காட்டியதாக நான் உணர்ந்தேன்.

    நான் இந்த படத்தில் நடிகையாக மட்டும் தான் பங்களிப்பு செய்திருக்கிறேன். நம்மைச் சுற்றி நிறைய விசயங்கள் நடைபெறுகிறது. விபத்து – போர்- இழப்பு – என ஏராளமான விசயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது மிகவும் டிஸ்டர்ப்பாக இருக்கிறது.

    இந்த நேரத்தில் எனக்குள் ஒரு கேள்வி எப்போதும் எழுந்து கொண்டே இருக்கும். இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும்? நம்மால் என்ன செய்ய முடியும்? என மனதில் கேள்வி எழுந்துக் கொண்டிருக்கும். இதற்கு எனக்கு கிடைத்த ஒரே பதில்.. எனக்குத் தெரிந்த கலை மூலம், இதற்காக என்ன செய்ய முடியும் என்பது தான். ஒரு சிறிய அளவிலாவது பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். நான் தேர்ந்தெடுக்கும் கதைகளாக இருந்தாலும் சரி தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த வகையில் தான் நான் நடித்து வருகிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறேன்.

    இந்தத் திரைப்படம் பெண்களை மையப்படுத்திய படமல்ல. இது ஒரு படம். இந்த படத்தில் சில கேரக்டர்களுக்கு சில விசயங்கள் நடக்கிறது. அந்த சூழலை அந்த கதாபாத்திரம் எப்படி எதிர்கொள்கிறார்கள்? எப்படி கடந்து செல்கிறார்கள்? என்பதைத்தான் சொல்லியிருக்கிறோம். அது ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம்.‌ அதனால் இதனை பெண்களை மையப்படுத்திய படம் என்று வகைப்படுத்த வேண்டாம்.

    இந்தப் படத்தில் வித்தியாசமான ஒலிகளும், ஓசைகளும் இருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் பரத் வீரராகவனை வாழ்த்துகிறேன்.

    படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இறுதியாக அப்பா எனக்கு எப்போதும் ஆதரவளித்துக் கொண்டிருக்கும் என்னுடைய ஹீரோ . சூப்பர் ஹீரோ அப்பா தான்.

    இந்தப் படத்தில் நான் இந்திரா எனும் வேடத்தில் ஒரு கேப் டிரைவராக நடித்திருக்கிறேன். எனக்கு டிரைவிங் மிகவும் பிடிக்கும். நடிகையாகி நடிக்க வராவிட்டால்.. நான் ஒரு கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன்.” என்றார்.

    நடிகர் அருண் பாண்டியன் பேசுகையில், ” இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஏன் யாரையும் அழைக்கவில்லை என்றால் .. அவர்கள் இங்கு வருகை தந்து படத்தைப் பற்றி மிகையாக பேசி விடுவார்களோ ..! என்பதற்காக தான் யாரையும் அழைக்கவில்லை.

    நாங்கள் எங்களுக்கு பிடித்தது போன்ற ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம். ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு ஏற்ற வகையில் தரமுள்ள படத்தை தயாரித்திருக்கிறோம். நீங்கள் கொடுக்கும் காசு வீணாகாது. ஏனெனில் திரைக்கதை அவ்வளவு வலிமையுடன் இருக்கிறது. இதனால் தான் சிறப்பு விருந்தினர்கள் என யாரும் இல்லாமல் என் நண்பர்களான கருணா மூர்த்தி மற்றும் பி ஆர் ஓ டைமண்ட் பாபு ஆகியோர் இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.

    இந்த படத்தில் மூன்று சிறப்பம்சங்கள் இருக்கிறது. எல்லாரும் புது தொழில்நுட்ப கலைஞர்கள். கீர்த்தி சொன்ன பிறகு இந்த குழுவினருடன் கதையைக் கேட்டேன். கதையும் எனக்கு பிடித்திருந்தது. அவர்களிடம் இந்த கதையில் சிறிதளவு இணைந்து பணியாற்ற வேண்டியது இருக்கும். உங்களுக்கு சம்மதமா? எனக் கேட்டேன். அவர்களும் சரியென சம்மதித்தார்கள்.

    அதன் பிறகு இயக்குநர் என்னிடம் இந்த படத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற விருப்பமாக இருக்கிறோம் என்றார். அவர்களுக்கு ஏதேனும் அனுபவம் இருக்கிறதா ?அவர்களின் திறமை என்ன? எனக் கேட்டபோது, அவர்கள் வெளியில் தான் நிற்கிறார்கள். உள்ளே வர சொன்னால் அவர்கள் தங்களின் திறமையை காண்பிப்பார்கள் என்றார் அந்த தருணத்தில் இசையமைப்பாளர் -ஒளிப்பதிவாளர் – படத்தொகுப்பாளர் -என அனைவரும் வந்திருந்தனர்.‌ அவர்களின் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தத் தருணத்தில் தான் நம்முடைய அனுபவத்தை இவர்களுக்கு வழங்கலாம் என தீர்மானித்தேன்.

    முதல் கட்ட படப்பிடிப்பு ஒரிசாவில் நடைபெற்ற போது அவர்களின் ஒருங்கிணைப்பு வியப்பை ஏற்படுத்தியது. நான் ஊமை விழிகள் படத்தில் பணியாற்றும்போது இருந்த ஆர்வம் இவர்களிடத்தில் தென்பட்டது. இதனால்தான் என்னுடைய குடும்பத்தார்களை விட இரண்டு வருடங்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றினேன். இந்தப் படம் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ” என்றார்.

  • பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

    பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
    பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
    பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
    பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

    ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.

    ஜியோ ஸ்டார் ரீஜனல் ஜெட் கிருஷ்ண குட்டி, “ராம் இந்த கதையை என்னிடம் சொன்னபோது உடனே பிடித்துவிட்டது. இந்த படத்தை தயாரிக்க நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அப்பா- மகன் எமோஷன் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

    எடிட்டர் வி.எஸ். மதி, “எனக்கு முதல் படத்தை கொடுத்த இயக்குநர் ராமுக்கும், இயக்குநர் மாரி செல்வராஜூக்கும் நன்றி. என் முதல் படமே இவ்வளவு பெரிய படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி” என்றார்.

    இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, “வாய்ப்பு தந்த ராம் சாருக்கு நன்றி. ஒரு படத்தையும் இசையையும் எப்படி பார்க்க வேண்டும் என்பதை ராம் சாரிடம் கற்றுக் கொண்டேன். மதன் கார்க்கி சாருக்கும் நன்றி”.

    பாடலாசிரியர் மதன் கார்க்கி, “ராமுடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்தும் எனக்குப் பிடித்தவை. ‘பறந்து போ’ படத்தில் வேறு ஒரு ராம் சாரைப் பார்த்தேன். இந்தப் படத்திற்கு மொத்தம் 25 பாடல்கள் எழுதினேன். அதில் 19 பாடல்கள் படத்தில் அமைந்துள்ளது. நடிகர் சித்தார்த்தும் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அண்ணன், மனைவி, மகன் என மூன்று உலகங்களுக்குள் நடக்கும் இணைப்பு- போராட்டம்தான் இந்தக் கதை. மெல்லிய சிரிப்பு இந்தப் படம் முழுக்க இருக்கும். என்னுடைய 1000 ஆவது பாடல் இந்தப் படத்தில் எழுதியிருக்கிறேன். நன்றி”.

    மாஸ்டர் மிதுன், “இந்த வாய்ப்பு கொடுத்த ராம் அங்கிளுக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.

    நடிகை கிரேஸ் ஆண்டனி, “இந்தக் கதாபாத்திரமே எனக்கு வித்தியாசமாக இருந்தது. சிவா சாருடன் நகைச்சுவை செய்தது புதுசாக இருந்தது. அவர் நிறைய விஷயங்கள் சொல்லித் தந்தார். ராம் சாருக்கு நன்றி”.

    நடிகர் மிர்ச்சி சிவா, “ராம் சாருடன் படம் என்றம் கொஞ்சம் பயம் இருக்கதான் செய்தது. ’நானே இதுவரை செய்யாத படம் இது. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்’ என்று ஸ்கிரிப்ட் கொடுத்தார். உடனே ஒத்துக் கொண்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநராக மட்டுமில்லாமல் எல்லா வேலைகளும் அவர் எடுத்துப் போட்டு செய்தார். அவர் இன்னும் கொண்டாடப்பட வேண்டிய இயக்குநர். படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் அனைவரது ஆதரவும் வேண்டும்” என்றார்.

    திங்க் மியூசிக் சந்தோஷ், “ராம் சாரிடம் இருந்துதான் முதல் அழைப்பு வந்தது. கிட்டத்தட்ட 20 பாடல்கள் இந்தப் படத்தில் இருக்கிறது. படம் ஃபன்னாக இருக்கிறது. குடும்பத்துடன் நீங்கள் நிச்சயம் இந்தப் படம் பார்க்கலாம். மதன் கார்க்கியுடைய 1000ஆவது பாடல் இதில் அமைந்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.

    நடிகர் சித்தார்த், ”ராம் மிகச்சிறந்த படைப்பாளி. அவரது படைப்புகளில் உண்மையும் நேர்மையும் இருக்கு. அவரது படைப்புகளில் எனது பங்களிப்பு எதாவது ஒரு வகையில் இருக்கும் என்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் நான் பாடியிருக்கும் பாட்டு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ். ரொம்ப ஜாலியான, அழகான படம் இது. ராம் சின்ன பசங்களிடம் நன்றாக வேலை வாங்குவார். மிதுனும் நன்றாக நடித்திருக்கிறார். சிவா முன்பிருந்தே எனக்கு பழக்கம். சிவாவுக்கு ஒரு நடிகராக இந்தப் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கு. கிரேஸூடைய நடிப்பு சென்சேஷனலாக இருந்தது. ராம்-சிவா- கிரேஸ் மூன்று பேருடைய கூட்டணி நன்றாக வந்திருக்கிறது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். ஜூலை 4 எங்களுக்கு முக்கியமான நாள். நான் நடித்திருக்கும் ‘3 BHK’ மற்றும் ‘பறந்து போ’ இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவது மகிழ்ச்சி. குடும்பங்களுடன் நீங்கள் வந்து பார்க்கலாம். நன்றி”.

    தயாரிப்பாளர் அருண் விஸ்வா, “ஸ்பெஷலான, எமோஷனலான மேடை இது. நான் தயாரிப்பாளர் என்று சொல்வதை விட ராம் சாரின் அசிஸ்டெண்ட் என்று சொல்வதுதான் பெருமை. நீங்கள் இயக்குநர் ஆவதை விட தயாரிப்பாளர்தான் ஆவீர்கள் என்று நினைக்கிறேன் என்று பத்து வருடங்களுக்கு முன்பே ராம் சார் சொன்னார். மிர்ச்சி சிவாவுக்கும் இது ஸ்பெஷலான படம். படம் வெளியாகும்போது நிச்சயம் உங்கள் ஆதரவு தேவை”.

    தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, “படம் வெற்றி பெற படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.

    இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, “’வீட்டுக்கு வெளியே ஒரு உலகம் உண்டு. அதைத்தெரிந்து கொள்ள நீங்கள் பயணம் செய்ய வேண்டும்’ என ஜெயமோகனின் ஒரு வரி உண்டு. அதை ராம் சாரின் படங்களில் பார்க்கலாம். மகிழ்ச்சியுடன் குடும்பத்துடன் பார்க்கும்படியான படம் இது. படம் சிறப்பாக வந்துள்ளது. நன்றி!”.

    தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “என் திரைப்பயணத்தில் மாரி செல்வராஜ், ராமுடன் பணியாற்றிய நாட்கள் மிக மகிழ்ச்சியான நாட்கள் என்பேன். ‘பேரன்பு’ பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் நான் தூங்காமல் இருந்தேன். எனக்கு மிகப்பிடித்த படம் இது. ‘பறந்து போ’ எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும். இந்தப் படத்தில் சிவா மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். கிரேஸ், சந்தோஷ் தயாநிதி, மதன் கார்க்கி எனப் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

    நடிகை வேணி, ” ராம் சாருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். செட்டில் பல நாட்கள் ஜாலியாக இருக்கும். எல்லோரும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள். நன்றி”.

    இயக்குநர் மீரா கதிரவன், “இந்தப் படம் பார்த்ததும் என் குழந்தைகளையும் பயணம் அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனக்கு மட்டுமல்ல, எல்லா பெற்றோருக்கும் இந்தப் படம் பார்த்ததும் அந்த எண்ணம் தோன்றும். வீட்டுக்குள் அடைந்திருப்பது பெரும் சாபம். அதுவும் கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு குழந்தைகளின் உளவியல் சிதைந்து போயிருக்கிறது. குழந்தைகளுக்காக தான் நாம் வாழ்க்கையில் ஓடுகிறோம். ஆனால், குழந்தைகளை அவர்களின் உலகத்துடன் வைத்துக் கொள்கிறோமா என்பது கேள்விதான். இது அனைவரையும் மாற்றும் படமாக இருக்கும். நிச்சயம் பாருங்கள்”.

    ஜியோ ஹாட் ஸ்டார், கண்டெண்ட் ஹெட் பிரதீப் மில்ராய், ” ராம் மிகவும் சென்சிபிளான இயக்குநர். அவருக்கு பெரிய பெரிய சண்டை காட்சிகள் தேவையில்லை. மனிதர்கள் மட்டும் அவரது கதைக்கு போதும். நடிகர்கள் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்” என்றார்.

    இயக்குநர் மாரி செல்வராஜ், “‘பறந்து போ’ படம் எனக்கு மிகவும் பிடித்தது. படப்பிடிப்பு தளத்திற்கு சென்று போய் பார்க்க முடியாதது எனக்கு வருத்தம். காமெடி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை பலமுறை பார்த்து நினைவில் வைத்து பேசி மகிழ்ந்திருக்கிறோம். எங்கள் வாழ்க்கையை மாற்றிய தருணம் ஈழப்பிரச்சினை தான். அதில் இருந்துதான் படத்திலும் தீவிரமாக பேச ஆரம்பித்தோம். இல்லை என்றால் நான் ‘களவாணி’ போன்ற கமர்ஷியல் கிராமத்துப் படங்களைக் கொடுத்திருப்போம். சின்ன வயதில் நான் வாழாத வாழ்க்கையை இந்த படம் சொல்லி இருக்கிறது. தான் உருவாக்கும் கதாபாத்திரங்களில் பொய் இருக்கக் கூடாது என்று நினைப்பவர் ராம். இந்தப் படம் எங்கள் குடும்பத்தின் திருவிழா. ‘வாழை’ படத்தைக் கொண்டாடியது போலவே ரசிகர்கள் நிச்சயம் ‘பறந்து போ’ படத்தையும் கொண்டாடுவார்கள்” என்றார்.

    இயக்குநர் மிஷ்கின், ” இயக்குநர் ராம் இந்த கதை சொன்னதுமே எனக்கு மிகவும் பிடித்துப் போனது. ஒரு நாளைக்கு படவிழாவில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்து ஐந்து முதல் ஆறு ஃபோன் கால்கள் வருகிறது. இது போன்ற விழாவுக்கு என்னை அழைத்தால் இனிமேல் அதற்கான தொகையாக குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் கொடுத்து விடுங்கள். சீக்கிரம் சினிமாவை விட்டு போக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சினிமாவில் அவ்வளவு சந்தோஷமாக நான் இல்லை. மிகவும் சந்தோஷமாக படங்கள் செய்த காலம் போய்விட்டது. இப்போது அதிக போட்டி இருக்கிறது. ராம் படங்களை பார்க்கும் பொழுது எப்போதுமே அதிசயம் போல தான் இருக்கும். ‘பறந்து போ’ படமும் நிச்சயம் குடும்பங்கள் ரசிக்கும் வகையில் இருக்கும். அழகான படம்” என்றார்.

    இயக்குநர் ராம், ” எல்லோரையும் போல நிறை குறைகள் இருக்கக்கூடிய சாதாரண மனிதன் நான். முதலில் இந்த படத்திற்கு யுவன் தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால், அவருடைய ஷெட்யூல் அடுத்தடுத்து பிஸியாக இருந்தது. படத்திற்கும் 20 பாடல்கள் தேவைப்பட்டதால் யுவனால் அந்த ஷெட்யூலில் செய்து தர முடியாததால் தான் சந்தோஷ் உள்ளே வந்தார். ஜியோ ஹாட்ஸ்டார் எனக்கு வேலை செய்வதற்கு மிகவும் இலகுவான இடம். பிரதீப்பை பார்த்தாலே தனி எனர்ஜி வரும். சிவா,கிரேஸ் போன்ற திறமையான நடிகர்களை என் படத்தில் பயன்படுத்திக் கொண்டது மகிழ்ச்சி. தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக வேலை செய்திருக்கின்றனர் இந்த செட்டில் தான் நாம் ரிலாக்ஸாக இருந்தேன். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்தப் படத்தை முதலில் பார்த்து வாழ்த்து சொன்னார். அவர் படம் பார்த்து வாழ்த்தியதுடன் உலக அளவில் வெளியிடுவது எங்களின் பெரும் பலம். படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

    தொடர்பு:

    Media Contact: D’one
    Point of contact : Abdul.A.Nassar
    Email ID: d.onechennai@gmail.com
    Ph. No: 99418 87877