Blog

  • அங்கம்மாள் திரை விமர்சனம்

    ஆண் ஆதிக்கம் தலை ஓங்கி இருந்த காலத்தில் ஒரு பெண் (கணவனை இழந்த) ஆண் துணை இல்லாமல் தன் குடும்ப சுமையை சுமக்கும் தாயாக மட்டுமல்லாமல் திரையில் தனது கதாபாத்திரம் மூலம் அனைவரையும் அரவணைத்து திரைக்கதையோடு தனது நடிப்பின் மூலம் ரசிக்க வைத்துள்ளார் இந்த அங்கம்மாள். பெண் என்பவள் (கணவனை இழந்த) சமுதாயத்தில் தன்னை சார்ந்து வாழும் மக்களின் பார்வைக்கு எண்ணங்களுக்கும் உட்பட்டு வாழ்பவள் என்று தான் அனைவராலும் அறியப்படும் வாழ்க்கை முறை அதற்கு அப்பாற்பட்டு தன் குடும்பம் தன் வாழ்க்கை தன் குழந்தைகளின் எதிர்காலம் போன்றவற்றை முன்னுறுத்தி அங்கம்மாள் கதைக்கும் ஒரு பெண்ணின் உணர்வுக்கும் கதைக்களம் நியாயம் சேர்த்துள்ளது அதற்கு அங்கம்மாளின் நடிப்பு திரையில் காண்பவரை கண்கலங்கவும் சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளார்,இது போன்ற துணிச்சலான பெண்ணின் உணர்வை  குடும்பத்திற்காகவும் தனக்கான கனவுகாகவும் அர்ப்பணிக்கும் பெண்களின் உணர்வை, சேலை மறைவில் பெண்களின் இறுதிச்சடங்கிலும்  பெண்ணின் உடல் சார்ந்த உன்னதத்தை உலகிற்கு சொல்லும் திரைக்கதையே அங்கம்மாள்.

    கிராம வாழ்க்கை சூழலில் ஒரு பெண் அங்கம்மாள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வை திரைக்கதையாக அனைவரும் ரசிக்கும் படி திரையில் கொடுத்துள்ளார் இயக்குனர். கிராமத்தில் வாழும் மக்கள் தனது குழந்தைகளிடம் அவர்கள் என்னும் உயர்ந்த படிப்பான் கலெக்டர் மற்றும் டாக்டர் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் அது போன்ற ஆசையை அங்கம்மாள் தனது இரண்டாவது மகனான  பவளமுத்து (சரண்) கொண்டு தனது கனவை நிறைவேற்றிக் கொள்கிறார் அங்கம்மாள் அவர் ஆசைப்படும் தனது தாயின் இன்றைய நாகரீகத்திற்கு மாற்ற முயற்சிக்கிறார் தனது நகரத்தில் வாழும் காதலி குடும்பத்திற்காக, நகரத்தில் வசிக்கும் வசதியான வீட்டுப் பெண்ணான ஜாஸ்மினை (முல்லையரசி) காதலிக்கிறான் அங்க மாலினி இளைய மகன்.

    ஊரிலிருக்கும் அவனது அம்மா அங்கம்மாள் (கீதா கைலாசம்) வாழ்நாள் முழுவதும் ரவிக்கை போட்டதே இல்லை. இந்நிலையில் திருமணம் பேச ஜாஸ்மின் வீட்டார் அவர்கள் வீட்டிற்கு வரும் நாள் நெருங்குகிறது அதனால் அவளமுத்து தனது தாயாரை ரவிக்கை அணியும்படி தன் குடும்பத்தாருடன் சேர்ந்து வற்புறுத்துகிறார் டாக்டர் பவளமுத்து.

    அங்கம்மாள் இளைய மகன் டாக்டர் பவளமுத்துவின் நாகரீக வாழ்க்கை முறைக்கு மாறி அங்கம்மாள் ரவிக்கை போட்டுக்கொண்டாரா, இல்லையா?
    இளைய மகன் பாலமுத்துவின் காதல் திருமணம் நடைபெற்றதா?
    அங்கம்மாள் நாகரீக உடை அணிந்து தன்னை மாற்றிக் கொண்டாரா?
    அங்கம்மாளின் மூத்த மகன் வாழ்வியல் ஏன் மாற்றம் செய்யவில்லை?
    அங்கம்மாள் மற்றும் அவரது மூத்த மருமகளின் வாழ்க்கை முறை எந்த உணவை ஏற்படுத்தியது?
    அங்கம்மாள் திரையில் காண்போரை தங்கள் தாயாகவும் தங்களின் பாட்டியாகவும் பார்த்து ரசிக்க வைத்து சிந்திக்கவும் வைத்துள்ளார்!!!!
    இதுபோன்ற கேள்விக்கு பதில் உங்கம்மாளின் திரைக்கதை.

    இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூரின் பின்னணி இசை, திரையில் திரைக்கதையோடு நம்ம ரசிக்க வைத்துள்ளது

    . படத்தொகுப்பாளர் பிரதீப் சங்கர், அங்கம்மாளின் மனதையும், அவரது எண்ணங்களையும் திரையில் காண்போரை ரசிக்க வைத்துள்ளது.

  • Puththam puthu neram movie audio launch content

    Puththam puthu neram movie audio launch content

    சக்தி பீடம் ப்ரொடக்‌ஷன்ஸ் & Face Guru Institute of Legends movie media தயாரிப்பில் பி.சந்திரகுமார் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் “புத்தம் புது நேரம்”. கே.பரஞ்சோதி இசையமைக்க, முரளி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விவசாயிகளின் நலன் பற்றி இந்த படம் பேசுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை கான்கிரீட் ஜங்கிளாக மாற்றுவதை எதிர்க்கும் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    இந்த நிகழ்வினில் இயக்குனர் சந்திரகுமார் பேசும்போது, “35 வருடங்களாக சென்னையில் தான் வசிக்கிறேன். பிளாக் & ஒயிட் சினிமாவில் இருந்து கலர், தற்போது டிஜிட்டல் சினிமா வரை வந்து நிற்பது மகிழ்ச்சி. கோவிட் பெருந்தொற்று காலத்தில் கிளப் ஹவுஸில் பேசும்போது சினிமா பற்றி நிறைய பேசினோம்.  ஆன்லைனில் பலருக்கு இலவசமாக சினிமா பற்றி கிளாஸ் எடுத்தேன். அப்போது எங்களுக்கு ஒர்க் ஷாப் வைத்தால் நன்றாக இருக்கும் என சொன்னார்கள். ஆனால் ஒர்க் ஷாப் நடத்துவதை விட 15, 20 நாட்களில் ஒரு சினிமாவாக எடுப்போம் என பேசினோம். அப்படி ஒரு படத்தையும் எடுத்தோம், ஆனால் அதை திரையரங்கில் ரிலீஸ் செய்யவில்லை. அதனால் தியேட்டரில் ரிலீஸ் செய்ய ஒரு படம் எடுக்க வேண்டும் என உருவாக்கப்பட்ட படம் தான் இந்த புத்தம் புது நேரம். இந்த படத்தில் தயாரிப்பாளர்கள் என யாரும் இல்லை, எல்லோரும் முடிந்த அளவு பணத்தை போட்டு எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்து எடுத்திருக்கிறோம். இந்த படத்தின் மூலம் லட்சங்கள், கோடிகள் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. இந்த படத்துக்கு உங்கள் ஆதரவை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

    இசையமைப்பாளர் கே.பரஞ்சோதி பேசும்போது, “பாலக்காடு அருகில் உள்ள கொல்லங்கோட்டில் சந்திரகுமார் சார் குடும்பத்துடன் எங்களுக்கு நல்ல பழக்கம். அங்குள்ள கோவிலில் நான் பாடுவதை சார் கேட்டிருக்கிறார். அப்போதே என்னை நன்றாக வருவார் என சொன்னார். இசைஞானி இளையராஜா சார் என் மானசீக குரு. அவர் சொன்ன விஷயங்களை நான் இசையமைக்கும்போது இன்றும் பின்பற்றுகிறேன். சந்திரகுமார் சார் நன்றாக ட்யூன்ஸ் கேட்டு வாங்குவார். 1988ல் அவர் படத்துக்கு இசையமைத்தபோது என் இசையை கேட்டு விட்டு படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ணகுமார் துபாயில் இருந்து எனக்கு ஒரு கீபோர்ட் வாங்கி அன்பளிப்பாக தந்தார். இப்போது என்னுடைய 70வது வயதில் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறேன். என் பிறந்த நாளன்று இந்த இசை வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார் இயக்குனர் சந்திரகுமார் சார். அவருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி” என்றார்.

    படத்தொகுப்பாளர் கே.ராஜகோபால் பேசும்போது, “புத்தம் புது நேரம் படத்துக்கு முன்பு சந்திரகுமார் சாருடன் பணியாற்றியிருக்கிறேன். அவர் எங்களுக்கெல்லாம் குருவாக இருக்கிறார். படம் பெரிய வெற்றி அடைய வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.

    ஸ்கிரிப்ட் ரைட்டர் மற்றும் இணை இயக்குனர் டோனி தாமஸ் பேசும்போது, “சந்திரகுமார் சாரை நான் சந்தித்து 2 வருடம் ஆகிறது. புத்தம் புது நேரம் படத்தை கடுமையாக உழைத்து உருவாக்கியிருக்கிறோம். ரசிகர்களின் ஆதரவை எதிர்நோக்கியிருக்கிறோம்” என்றார்.

    பாடலாசிரியர் கொங்கு கவி பாலு பேசும்போது, “என் பெயர் பாலசுப்ரமணியம். இந்த படத்தின் தலைப்பு பாடல் எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது தான் என்முடய முதல் சினிமா பாடல். இதற்கு முன்பு நான் கவிதைகள் எழுதியிருக்கிறேன், 4 புத்தகங்களும் எழுதியிருக்கிறேன்” என்றார்.

    நாயகி சுபஸ்ரீ பேசும்போது, “இது என்னுடைய இரண்டாவது படம். முதல் படமும் சந்திரகுமார் சாரின் படம் தான். அவர் என்னுடைய சினிமா வாழ்க்கையின் காட்ஃபாதர். இந்த புத்தம் புது நேரம் படம் வெற்றி பெற வேண்டும், ரசிகர்கள் ஆதரவு தேவை” என்றார்.

    நாயகன் பரத்வாஜ் பேசும்போது, “சந்திரகுமார் சார் எங்கள் எல்லாருக்கும் அப்பா போன்றவர். எங்களது ஷூட்டிங் சினிமா செட் போலவே இருக்காது, குடும்பத்தினர் ஒன்றாக சுற்றுலா சென்றது போல தான் இருக்கும். விவசாயிகளின் முக்கியத்துவத்தை பற்றி இந்தப் படம் பேசுகிறது. என்னை நம்பி எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி” என்றார்.

    நாயகன் சதீஷ்குமார் பேசும்போது, “சந்திரகுமார் சாருடன் என்னுடைய இரண்டாவது படம். சார் எல்லோருக்கும் தந்தை போன்றவர். ஆனாலும் அவர் என்னிடம் ஒரு நண்பன் போல தோளில் கைபோட்டு பழகுவார். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி” என்றார்.

    நடிகர் ராஜ்குமார் பேசும்போது, “அடிப்படையில் நான் ஒரு வழக்கறிஞர். இந்த படத்தில் நடிக்கும்போது இது ஒரு குடும்ப கெட் டுகெதர் போலவே இருந்தது. எல்லோரும் ஒற்றுமையாக இந்த படத்தில் பணிபுரிந்தோம். உங்கள் அனைவரது ஆதரவும் எங்களுக்கு தேவை” என்றார்.

    நடிகர் செந்தில் பேசும்போது, “புத்தம் புது நேரம் ஒரு படம் எனபதை விட குடும்பம் என்று தான் சொல்லணும். இந்த படத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை எடுத்து செய்தோம். இந்த குடும்பம் 2026-ல் ஐந்து திரைப்படங்களை எடுக்கப் போகிறோம் என்பதை சக்தி பீடம் சார்பில் பெருமையுடன் அறிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

    நடிகை ரசியா பேசும்போது, “என் வாழ்க்கையில் இப்படி ஒரு மனிதரை சந்தித்ததில்லை. ஒரு அப்பாவாக, குருவாக, வழிகாட்டியாக இருந்துள்ளார். நான் மாலத்தீவில் இருந்து நடிக்க வந்திருக்கிறேன். இந்த அளவுக்கு நான் நடிக்க காரணம் சார் தான். இந்த குழுவுடன் இன்னும் பல படங்களில் பணிபுரிய ஆசை” என்றார்.

    பாடகி மாதங்கி அஜித்குமார் பேசும்போது, ” இந்த படத்தில் பாட எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் ரொம்பவே பெருமை. நான் இதுவரை 25 பாடல்களை பாடியிருக்கிறேன். கே.ஜே.யேசுதாஸ், மது பாலகிருஷ்ணன் போன்ற லெஜண்ட்ஸ் உடன் பாடியிருக்கிறேன். இந்த படத்தில் வத்தலகுண்டு, கன்னி மாங்கா என இரண்டு பாடல்களை பாடியிருக்கிறேன். வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் பரஞ்சோதி சாருக்கும், இயக்குனர் சந்திரகுமார் சாருக்கும் நன்றி” என்றார்.

  • Xiaomi India launches REDMI 15C 5G with sleek design, immersive display and dependable performance


    Chennai : Xiaomi India today announced the launch of the REDMI 15C 5G, a smartphone designed to deliver a sleek aesthetic, a spacious 17.53 cm immersive display, and dependable all-day performance for users who seamlessly switch between work and entertainment.
    Commenting on the launch, Anuj Sharma, Chief Marketing Officer, Xiaomi India said, “With REDMI 15C 5G, our goal was to build a phone that feels effortless in the hands of everyday users. The combination of a big immersive display, a reliable all-day battery and a refined royale design reflects how people now watch, learn and work on their phones. As we look ahead, our focus is on keeping the REDMI experience reliable and built around what truly matters to our users.”
    The REDMI 15C 5G features a slim, polished body with a 3D quad-curved back for a balanced grip and a distinctive floating crater camera design. It comes in Moonlight Blue, Dusk Purple and Midnight Black, with Moonlight Blue crafted through a dual-colour magnetic ink process.
    The 17.53 cm HD+ display with up to 120Hz AdaptiveSync delivers smooth, responsive viewing, while the 50MP AI dual camera ensures clear, vibrant photography across bright, indoor and low-light conditions.
    A large 6000mAh battery powers the device through extended use, supporting 23 hours of video playback and 106.9 hours of music. With 33W turbo charging, the phone reaches 50% in just 28 minutes, and 10W reverse charging offers added on-the-go convenience. It also comes with a 33W charger in the box.
    Powered by the MediaTek Dimensity 6300 octa core processor, the REDMI 15C 5G delivers smooth multitasking, with up to 16GB RAM (with memory extension) and 1TB expandable storage. It runs on Xiaomi HyperOS 2, offering smart features such as Circle to Search with Google, built-in Google Gemini, and Xiaomi interconnectivity tools including Call Sync and Shared Clipboard.
    Engineered for everyday durability, the device includes IP64 dust and water resistance and a 200% volume boost for clearer audio in noisy environments.
    The REDMI 15C 5G will be available in 4GB+128GB, 6GB+128GB and 8GB+128GB variants. The pricing has been set competitively, with the 4GB+128GB variant priced at ₹12,499, the 6GB+128GB variant at ₹13,999, and the 8GB+128GB variant at ₹15,499.

  • JioHotstar South Unbound நிகழ்வினை முன்னிட்டு, JioStar Leadership குழுவினர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர் !!

    JioStar Head Entertainment Business, South Cluster, கிருஷ்ணன் குட்டி, JioStar Executive Vice President – Tamil பாலச்சந்திரன் R, மற்றும் CEO – Turmeric Media R. மகேந்திரன் ஆகியோர், இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, வரவிருக்கும் JioHotstar South Unbound என்ற முக்கிய நிகழ்வைப் பற்றி விளக்கினர்.

    இந்த சந்திப்பில், நிகழ்வின் நோக்கம், தென்னிந்திய கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் அது உருவாக்கும் தாக்கம் போன்ற பல அம்சங்கள் குறித்து குழுவினர் முதல்வரிடம் பகிர்ந்தனர். மேலும், ‘Letter of Engagement’ என்ற ஒப்பந்தத்தின் முக்கிய குறிப்புகளும் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டின் திரைப்பட மற்றும் ஊடகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறமைகளை உருவாக்குவது, பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது, படைப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் JioStar வழங்கும் ஆதரவை குழுவினர் உறுதிப்படுத்தினர்.

    டிசம்பர் 9, 2025 அன்று சென்னை நகரில் நடைபெறும் JioHotstar South Unbound நிகழ்வு, தென்னிந்திய சினிமா மற்றும் படைப்புத் திறனைக் கொண்டாடும் முக்கிய விழாவாகும். தென்னிந்தியாவின் முன்னணி இயக்குநர்கள், படைப்பாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள திறமைகள் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள். JioHotstar இன், புதிய தென் மாநில படைப்புகள், கதைகள், இந்த நிகழ்வில் வெளியிடப்படும்.

    இந்த விழாவை தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். பாராட்டுப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பத்மபூஷண் திரு. கமல்ஹாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

    தென்னிந்திய நடிகர்கள், இயக்குநர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் முன்னணி படைப்பாளர்கள் பங்கேற்கும் இந்த விழா, தென்னிந்திய கலை மற்றும் கதைக்கூறும் மரபின் தாக்கத்தை உலகுக்கு முன்னிறுத்தும் முக்கிய தருணமாக இருக்கும். மேலும், தென்னிந்திய பொழுதுபோக்கு உலகை உயர்த்த, வளர்க்க, பலப்படுத்த JioStar மேற்கொள்ளும் தொடர்ந்த பங்களிப்பையும் இது மீண்டும் வலியுறுத்துகிறது.

  • A New Era of Hearing: Kauvery Hospital Radial Road Becomes Centre of Excellence for Cochlear ImplantsImagine a world where silence is all you know, and then, suddenly, sound bursts into your life, connecting you to loved ones and the world around you. At Kauvery Hospital, Radial Road, Chennai,

    A New Era of Hearing: Kauvery Hospital Radial Road Becomes Centre of Excellence for Cochlear Implants
    Imagine a world where silence is all you know, and then, suddenly, sound bursts into your life, connecting you to loved ones and the world around you. At Kauvery Hospital, Radial Road, Chennai, this transformation is now a reality for more people than ever, thanks to the hospital’s emergence as a Centre of Excellence for Cochlear Implants. With state-of-the-art technology and dedicated medical expertise, Kauvery Hospital is bringing hope and sound to individuals of all ages battling hearing loss.
    Cutting-Edge Technology Meets Expert Care
    Kauvery Hospital, Radial Road, has reached a significant milestone by successfully performing three complex cochlear implant surgeries. These cases ranged from an adult with profound hearing loss to two children—one with Down syndrome and another with a rare congenital inner-ear condition known as Mondini malformation. Each surgery represents not just a medical achievement but a life-changing moment for the patients and their families.
    Leadership in Advanced ENT Care
    The cochlear implant programme at Kauvery Hospital, Radial Road, is led by Dr Anand Raju, Head of the ENT Department. With over 600 successful cochlear implant surgeries to his name and more than 25 years of experience, Dr Anand’s expertise ensures that even the most challenging and complex cases receive the highest standard of care. He is supported by a multidisciplinary team including anaesthesia specialists, audiologists, and rehabilitation therapists—all working together for optimal patient outcomes.
    Personalised, Patient-Centred Approach
    “No two patients are the same,” says Dr Anand Raju. “Our approach is individualised, meticulous, and multidisciplinary—ensuring safe outcomes, even in rare or challenging ear conditions.” This philosophy was demonstrated in the hospital’s recent successes:
    ● An elderly woman with a history of complex ear disease underwent successful cochlear implant surgery, regaining her connection to the world of sound after years of silence. ● A young boy with Down’s syndrome, deaf from birth, experienced the joy of hearing after his implant was activated.
    ● A six-year-old girl with scoliosis and a rare inner ear anatomy received a cochlear implant, despite being turned away by other hospitals—her surgery was a testament to the hospital’s commitment and Dr Anand Raju’s expertise.
    From Silence to Sound: Changing Lives at Every Age
    Hearing loss is often a neglected health issue, yet it affects people of all ages—from children born with congenital hearing loss or acquired brain fever and chronic ear infections to elderly individuals dealing with psychological and social impacts such as depression and isolation. Kauvery Hospital is determined to challenge misconceptions and offer comprehensive solutions, believing that hearing loss should not mean a life of silence or loneliness.
    Comprehensive Care, Lifelong Support
    At Kauvery Hospital, Radial Road, the cochlear implant programme is truly comprehensive. Patients receive evaluation, surgery, device activation, therapy, and long-term follow-up. The hospital emphasises the importance of early intervention for improving speech and developmental outcomes, particularly in children.
    Hope and Healing for All
    The message from Kauvery Hospital is clear: with the right evaluation and advanced treatment, countless people can rediscover the joy of sound. By bringing together cutting-edge technology and compassionate care, the hospital is changing lives and setting a new standard for hearing restoration in South Chennai.

  • கேட்டல் திறனுக்கான ஒரு புதிய சகாப்தம்: உட்செவி உட்பொருத்தல் (Cochlear Implant) சிகிச்சைக்கான சிறந்த மையமாக காவேரி மருத்துவமனை ரேடியல் சாலை மேம்படுகிறது


    பூரண அமைதியாக மட்டுமே இருக்கும் ஓர் உலகைக் கற்பனை செய்யுங்கள். திடீரென, அவ்வுலகில் மாற்றம் ஏற்பட்டு, ஒலியை உணரும் திறன் பெற்று உங்கள் மனதுக்குப் பிரியமானவருடனும், உலகத்துடனும் தொடர்பு ஏற்பட்டால் எப்படியிருக்கும்? அத்தகைய மாற்றத்தைச் சாத்தியமாக்குகிறது ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை. நவீன மருத்துவ முன்னேற்றத்தாலும், மருத்துவர்களின் அர்ப்பணிப்பான நிபுணத்துவத்தாலும், காதுக்குள், உட்செவியில் நுண்கருவி பொருத்தப்பட்டு, பல காலங்களாகப் போராடி வந்த செவிப்புலன் இழப்பில் இருந்து மீட்டு, நம்பிக்கையையும் ஒலியையும் அளிக்கிறது காவேரி மருத்துவமனை.

    அதிநவீன தொழில்நுட்பத்துடன் கைகோர்க்கும் நிபுணத்துவப் பராமரிப்பு
    மூன்று சிக்கலான உட்செவி உட்பொருத்தல் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து, ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை. இந்த அறுவை சிகிச்சைகள், ஆழ்ந்த காது கேளாமை கொண்ட ஒரு வளர்ந்த நபரிடமிருந்து இரண்டு குழந்தைகள் வரை நீள்கிறது. அக்குழந்தைகளில் ஒருவர் டவுன் சிண்ட்ரோத்துடனும், இன்னொரு குழந்தை, மொண்டினி உருமாற்றம் எனும் மிகவும் அரிய பிறவி உட்செவி குறைப்பாட்டுடனும் பாதிக்கப்பட்டவர். ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் ஒரு மருத்துவ சாதனையை மட்டுமல்ல, நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வாழ்க்கையை மாற்றும் அற்புத தருணத்தையும் குறிக்கிறது.

    மேம்பட்ட ENT பராமரிப்பில் தலைமைத்துவம்
    ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் உட்செவி உட்பொருத்தல் திட்டத்திற்கு, காது, தொண்டை (ENT) துறையின் தலைவரான மருத்துவர் ஆனந்த் ராஜு தலைமை தாங்குகிறார். 600க்கும் மேற்பட்ட வெற்றிகரமான உட்செவி உட்பொருத்துதல் அறுவை சிகிச்சைகள் மற்றும் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமிக்க மருத்துவர் ஆனந்தின் நிபுணத்துவம், மிகவும் சவாலான மற்றும் சிக்கலான பிரச்சனைகளுக்குக் கூட மிக உயர்ந்த தரமான பராமரிப்பைப் பெற்றுத் தருவதை உறுதி செய்கிறது. மயக்க மருந்து நிபுணர்கள், செவிப்புலன் மருத்துவர்கள் (Audiologists) மற்றும் இயல்புமீட்பு சிகிச்சையாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட குழு அவருக்கு உறுதுணையாக ஒன்றிணைந்து நோயாளிக்கான மிகச் சிறந்த சிகிச்சையைச் சாத்தியமாக்குகின்றனர்.

    தனிப்பயனாக்கப்பட்ட, நோயாளியை-மையப்படுத்திய அணுகுமுறை
    “எந்த இரண்டு நோயாளிகளும் ஒரே மாதிரியானவர்கள் இல்லை” என்கிறார் மருத்துவர் ஆனந்த் ராஜு. மேலும், “எங்கள் அணுகுமுறை தனிப்பயனாக்கப்பட்ட, நுணுக்கமான, மற்றும் பல துறைகளை ஒருங்கிணைத்து, அரிதான அல்லது சவாலான காது பிரச்சனைகளுக்கும் பாதுகாப்பான சிகிச்சையை உத்திரவாதம் அளிக்கிறது” என்றார். இந்தத்
    தத்துவத்தின் அடிப்படையிலான அணுகுமுறை, மருத்துவமனையின் சமீபத்திய வெற்றிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது:

    ● சிக்கலான காது நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயதான பெண்மணி, வெற்றிகரமான உட்செவு உட்பொருத்துதல் அறுவை சிகிச்சையின் பலனாக, பல வருட நிசப்தத்தில் இருந்து மீண்டு, ஒலி பெற்று, உலகத்துடனான தனது தொடர்பைப் புதுப்பித்துக் கொண்டார்.

    ● டவுன்’ஸ் நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட, பிறவியிலேயே காது கேளாத ஒரு சிறுவன், அவனது உட்பொருத்துதல் சிகிச்சைக்குப் பிறகு கேட்கும் திறனைப் பெற்று மகிழ்ச்சியில் ஆழ்ந்தான்.

    ● தண்டுவட வளைவும், அரிதான உட்செவி உடற்கூறியல் கொண்ட ஆறு வயது சிறுமிக்கு, உட்செவி உட்பொருத்துதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மற்ற மருத்துவமனைகள் அவளை மறுத்த போதிலும், அவளுடைய வெற்றிகரமான அறுவை சிகிச்சை காவேரி மருத்துவமனையின் அர்ப்பணிப்பு மற்றும் மருத்துவர் ஆனந்த் ராஜுவின் நிபுணத்துவத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது.

    நிசப்தத்தில் இருந்து ஒலிக்கு: எல்லா வயதினர் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்துதல்
    காது கேளாமை என்பது பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உடல்நலப் பிரச்சினையாகும். பிறவியிலேயே காது கேளாமை அல்லது மூளை காய்ச்சல், நாள்பட்ட காது தொற்றுகளுடன் பிறந்த குழந்தைகள் முதல் மனச்சோர்வு மற்றும் தனிமை போன்ற உளவியல் மற்றும் சமூக தாக்கங்களைச் சமாளிக்கும் வயதானவர்கள் வரை என இது அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. காவேரி மருத்துவமனை, தவறான புரிதல்களைக் கலைவதோடு மட்டுமல்லாமல், விரிவான தீர்வுகளை வழங்கவும் உறுதியாக உள்ளது. காது கேளாமையால் ஒருவரின் வாழ்க்கை நிசப்தத்தாலோ, தனிமையாலோ சூழ்ந்து விடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறது காவேரி மருத்துவமனை.

    விரிவான பராமரிப்பும், வாழ்நாள் முழுமைக்கு ஆதரவும்
    சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் உட்செவி உட்பொருத்துதல் சிகிச்சை உண்மையிலேயே மிக விரிவானது. மருத்துவ கணிப்பைப் பெறுவது, அறுவை சிகிச்சை, கருவியைச் செயல்படுத்தல், சிகிச்சை மற்றும் நீண்டகால பராமரிப்பை ஆகியவற்றை நோயாளிகள் பெறுகிறார்கள். ஆரம்பகால நோயறிதல், குறிப்பாக குழந்தைப் பருவத்திலேயே கண்டுபிடித்தல், அவர்களது சிறப்பான பேச்சிற்கும், ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அச்சாணியாக அமைகிறது.

    அனைவருக்குமான நம்பிக்கையும் குணமாகுதலும்
    காவேரி மருத்துவமனையின் செய்தி மிகத் தெளிவானது: சரியான நோயறிதலாலும், மேம்பட்ட சிகிச்சையாலும், எண்ணற்ற மக்கள் கேட்கும் திறனைப் பெற்று மகிழ்ச்சியை மீண்டும் கண்டுபிடிக்க இயலும். அதிநவீன தொழில்நுட்பத்தையும், அக்கறையான பராமரிப்பையும் ஒன்றிணைப்பதன் மூலம், எண்ணற்றவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கேட்கும் திறனை மீட்டெடுப்பதில் புதிய தரத்தைத் தென் சென்னையில் அமைத்து வருகிறது காவேரி மருத்துவமனை.

    நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர் எவரேனும் காது கேளாமையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களை நிசப்தத்தில் ஒலிக்கும், தனிமையிலிருந்து மீட்டுப் பிறருடன் இணைப்பதற்கும் உதவ ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை தயாராக உள்ளது.

  • நாங்கள் வாழ்ந்ததாக உணர்ந்த ஒரு கதையைச் சொல்ல விரும்பினோம்” – இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன்!

    நஜாய் பிலிம்ஸ் & ஃபிரோ மூவி ஸ்டேஷனுடன் இணைந்து, ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்கும் ’அங்கம்மாள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று படம் வெளியாகிறது. இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் ஒரு நேர்மையான, கிராமப்புறக் கதையை பெரிய திரைக்குக் கொண்டுவருகிறார். தமிழ்நாட்டு கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்தக் கதைக்களத்தில் ரவிக்கை உடுத்தாத பழக்கம் கொண்டவர் அங்கம்மாள். அவரது மகன் திருமணம் முடிந்த பின்னர் தன்னுடைய மனைவி தாயின் ரவிக்கை அணியாத பழக்கத்தை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று கவலைப்படும்போது குடும்பத்தில் எப்படி மோதல் வெடிக்கிறது என்பதை இந்தக் கதை பேசுகிறது. கேட்பதற்கு சாதாரண விஷயமாகத் தோன்றினாலும் அடையாளம், கண்ணியம், பெண்மை மற்றும் ஒரு குடும்பத்திற்குள் உணர்ச்சிபூர்வமான பேச்சு என மனதைத் தொடும் கடினமான கதையாக இது இருக்கும்.

    படம் குறித்து இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “உண்மையாக இந்தக் கதை நடந்த மண்ணிலிருந்தும், மக்களிடம் இருந்து இந்தப் படத்தை உருவாக்க விரும்பினோம். நாங்களும் வாழ்ந்ததாக உணரும் ஒரு படத்தை உருவாக்கியுள்ளோம். அங்கம்மாள் கதாபாத்திரத்தை நடிகை கீதா கைலாசம் மிகவும் திறமையாக பிரதிபலித்துள்ளார். அவர் அந்த கிராமத்தில் வாழ்ந்து அங்குள்ள பெண்களின் ஒவ்வொரு சைகையையும் உள்வாங்கினார். அவரது மிகவும் கண்ணியமான நடிப்பு இந்த படத்தின் ஆன்மா. ’வடசென்னை’ படத்திலேயே சரண் சக்தியின் நடிப்பு மிகவும் பிடிக்கும். இந்தக் கதையின் வலுவான தூணாக தீவிரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் நடிகர் பரணியின் கதாபாத்திரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அவருக்கு சிறப்பு பாராட்டுகள்!

    நீண்ட இரவுநேர படப்பிடிப்பு, கணிக்க முடியாத கிராமத்தின் காலநிலை என அனைத்து சூழல்களையும் எங்கள் படக்குழு தைரியமாகவும் நேர்மையுடனும் சந்தித்தது. நாங்கள் எடுத்த மற்றொரு தைரியமான முடிவு சிங்க்- சவுண்ட். இதற்கு படக்குழு மற்றும் நடிகர்கள் என அனைவரிடம் இருந்து முழுமையான ஒத்துழைப்பு தேவைப்பட்டது. இது ஒலியை பதிவு செய்யும் குழுவினருக்கும் சவாலான விஷயம்தான்.

    இசை, காட்சிகள் என ஒவ்வொரு துறையின் நோக்கமும் ஒன்றுதான்…அது உண்மை! எங்கள் நோக்கத்தை தயாரிப்பாளர்களும் முழுமையாக ஆதரித்தனர். இந்தக் கதை எளிமையானதாகத் தோன்றினாலும் பாரம்பரியம், அடையாளம் மற்றும் பெருமை ஆகியவற்றை பற்றி ஆழமாகப் பேசும் படமாக வர வேண்டும் என விரும்பினர். அவர்களின் ஆதரவு இல்லாமல், அங்கம்மாள் படத்தை நாங்கள் எடுத்திருக்க முடியாது” என்றார்.

    நடிகர்கள்: நடிகை கீதா கைலாசத்துடன் சரண் சக்தி, நாடோடிகள் புகழ் பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

    தொழில்நுட்பக்குழு விவரம்:

    திரைக்கதை, இயக்கம்: விபின் ராதாகிருஷ்ணன்,
    மூலக்கதை: எழுத்தாளர் பெருமாள் முருகன்,
    தயாரிப்பாளர்கள்: கார்த்திகேயன் எஸ், ஃபிரோஸ் ரஹிம் மற்றும் அஞ்சாய் சாமுவேல்,
    இணைத்தயாரிப்பு: ஷம்சுதீன் காலித் மற்றும் அனு ஆபிரகாம்,
    ஒளிப்பதிவு: அஞ்சாய் சாமுவேல்,
    இசை மற்றும் பின்னணி இசை: முகமது மக்பூல் மன்சூர்

  • Director Mohan G Urges Chinmayi to Clarify Remarks on EmKoney or Remove Tweet

    Following the release of the first single “EmKoney” from the upcoming film Draupathi 2, director Mohan G has responded to public criticism surrounding the track and the involvement of singer Chinmayi Sripaada.

    Chinmayi, who performed the song, issued a public apology shortly after its release, stating that she had been unaware of the film’s ideological background at the time of recording. She added that had she known more about the project, she would have declined to participate.

    In a statement, Mohan G expressed disappointment over the apology, noting that he personally chose Chinmayi for the song and that the recording session was conducted without the music composer present. According to him, Chinmayi had been briefed solely on the tonal style required for the track, and no contextual or ideological details were discussed.

    The director said he was surprised that Chinmayi made her statement without seeking clarification from him or the composer. He called on her to either clarify her remarks or consider removing the tweet.

    Mohan G also urged the public not to target other members of the film’s cast and crew, stressing that criticism should be directed at him alone. Targeting collaborators, he said, amounted to “cowardice.”

    Questioning Chinmayi’s reference to “contradictory ideologies,” he remarked that her surname “Sripaada” itself indicates a connection to faith, suggesting he was unclear about the ideological differences she was referring to.

  • திரெளபதி2′ திரைப்படத்தின் ‘எம் கோனே’ பாடல் குறித்து பாடகி சின்மயி தான் பதிவிட்ட ட்வீட்டை நீக்க வலியுறுத்தும் இயக்குநர் மோகன் ஜி!

    வெளியாகவிருக்கும் ‘திரௌபதி 2’ படத்தின் முதல் தனிப்பாடலான ‘எம் கோனே’ சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலைப் பாடிய சின்மயி வெளியிட்டுள்ள கருத்தால் பாடலை சுற்றி எழுந்துள்ள விமர்சனங்களுக் இயக்குநர் மோகன் ஜி பதிலளித்துள்ளார்.

    இந்த பாடல் வெளியான பின்பு பாடலை பாடிய சின்மயி, மன்னிப்பு கேட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதாவது, அந்த பாடலை பதிவு செய்யும் நேரத்தில் படத்தின் சித்தாந்த பின்னணி குறித்து தனக்குத் தெரியாது என்றும், தெரிந்திருந்தால் பாடலை பாடியிருக்க மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.

    சின்மயி வெளியிட்டிருக்கும் இந்தப் பதிவிற்கு இயக்குநர் மோகன்.ஜி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பாடலுக்கு சின்மயி குரலை தனிப்பட்ட முறையில் தான் தேர்ந்தெடுத்ததாகவும், இசையமைப்பாளர் இல்லாமல் பாடல் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், பாடலுக்குத் தேவையான பாணி குறித்து மட்டுமே சின்மயியிடம் விளக்கப்பட்டதாகவும் படத்தின் கருத்தியல் விவரங்களும் விவாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

    சின்மயி தன்னிடமோ அல்லது இசையமைப்பாளரிடமோ விளக்கம் கேட்காமல் தனது கருத்தை வெளியிட்டது ஆச்சரியமாக இருப்பதாகவும் சின்மயி தனது கருத்துக்களை தெளிவுபடுத்த வேண்டும் அல்லது ட்வீட்டை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் இயக்குநர் கூறியுள்ளார்.

    படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினரை குறிவைக்க வேண்டாம் என்றும், விமர்சனங்கள் தன்னை மட்டுமே நோக்கி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் மோகன் ஜி. ஒட்டுமொத்த படக்குழுவினரை குறிவைத்து பேசுவது கோழைத்தனம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

    சின்மயி குறிப்பிடும் முரண்பாடான சித்தாந்தங்கள் பற்றி கேள்வி எழுப்பும் இயக்குநர், உண்மை மற்றும் நம்பிக்கை எனப் பொருள்படும் ‘ஸ்ரீபாதா’ என்ற குடும்பப் பெயரை சின்மயி எதற்காக தனது பெயருடன் இணைத்து வைத்துள்ளார் என்றும், அவர் குறிப்பிடும் சித்தாந்த வேறுபாடுகள் குறித்து அவருக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

  • லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பிரீமியரில் ‘டெர்மினேட்டர்’ நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுடன் மீண்டும் இணைந்தார்!

    லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பிரீமியரில் கலந்து கொண்டதன் மூலம், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தனது நீண்டகால நண்பரான இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கு தனது ஆதரவை வழங்கினார். பத்து வருடங்களுக்கும் மேலாக இருவரும் நல்ல நட்பில் இருந்து வருகின்றனர். ‘தி டெர்மினேட்டர்’ திரைப்படம் முதல் அவர்களின் அடுத்தடுத்த பல படைப்புகள் இருவரையும் சினிமாவில் ஜாம்பவான்களாக மாற்றியது.

    இந்த ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாக இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பிரீமியர் உற்சாகத்துடன் தொடங்கியது. கேமரூனின் அறிவியல் புனைகதை பிரபஞ்சத்தின் அடுத்த பரிணாமத்தைக் காண ரசிகர்கள், திரைத்துறையினர் மற்றும் உலகளாவிய ஊடகங்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். அதன் அதிநவீன காட்சிகள், விரிவாக்கப்பட்ட உலகம் மற்றும் ஸ்வார்ஸ்னேக்கரின் தோற்றம் அந்த இரவை மேலும் ஒளிர செய்தது.

    பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், சிலிர்ப்பூட்டும் புதிய கதாபாத்திரங்கள் மற்றும் அற்புதமான சினிமா அனுபவத்திற்காக படத்தைப் பார்த்த விமர்சகர்கள் பாராட்டினர். ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.