Blog

  • தலைவர் தம்பி தலைமையில் திரை விமர்சனம்

    தயாரிப்பு: கண்ணன் ரவி புரடக் ஷன்ஸ்
    இயக்கம்: நிதிஷ் சஹதேவ்
    நடிப்பு: ஜீவா, தம்பிராமையா, இளவரசு, ஜென்சன் திவாகர், பிரார்த்தனா
    ஒளிப்பதிவு: பப்லு அஜூ
    இசை: விஷ்ணு விஜய்
    வெளியான தேதி: ஜனவரி 15, 2026
    நேரம்: 1 மணி 55 நிமிடங்கள்
    ரேட்டிங்: 4/ 5


    மாட்டிப்புதூர் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவரத்தினம் (ஜீவா) தனது கிராமத்தில் நடக்கும் நல்லது கெட்டது இரண்டிற்கும் முன் நின்று நடத்தும் நாயகன் ஜீவா, விரைவில் தேர்தல் வர இருப்பதால் தன் கட்சிக்கு நற்பெயர் கிடைக்க நாயகன் ஜீவா இளவரசு மகள் திருமணத்தை முன் நின்று நடத்த நாயகன் ஜீவா ஏற்பாடுகளை செய்கிறார் இதனை தடுத்து நிறுத்த மணி (தம்பி ராமையா) அப்பா இறந்து போக தினை பயன்படுத்தி இளவரசு மற்றும் மணி (தம்பி ராமையா) இருவருக்கும் முன்விரோத பகை பழித்திருக்க. பக்கத்து வீட்டில் ஏற்பாடு செய்திருக்கும் முகூர்த்த நேரம் பத்தரை மணிக்கு தனது அப்பாவின் உடலை எடுக்க வேண்டும் என்று தம்பி ராமையா அடம்பிடிக்க. ஒரு பக்கம் மார்த்தாண்டத்தில் இருந்து மாப்பிளை வீட்டார் திருமணத்துக்காக கிளம்பி வந்து கொண்டிருக்க, பெண் வீட்டில் கல்யாண ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்குகிறார் ஜீவா. இன்னொரு பக்கம் எதிர்க்கட்சியை சேர்ந்த தவிடு (ஜென்சன் திவாகர்) எப்படியாவது இதில் தானும் பெயர் சம்பாதிக்க முயற்சிக்கிறார்.
    ஊராட்சி மன்ற தலைவராக ஜீவா இரு வீட்டாரின் நிகழ்வினை ஒரே நேரத்தில் எப்படி நடத்தினார்?
    இளவரசுக்கும் மணி (தம்பி ராமையா) இருவருக்கும் இடையே பகை ஏற்பட காரணம் என்ன?
    எதிர்க்கட்சி தவிடு என்ன சதி வேலைகளை செய்கிறார்?
    அவற்றை எல்லாம் ஜீவா எப்படி சமாளிக்கிறார் என்பதெல்லாம் தான் படத்தின் மீதிக்கதை.
    ஊர்த்தலைவரான ஜீவா எந்த பிரச்சனை என்றாலும் தலையிட்டு தீர்த்து வைக்கும் செல்வாக்கு உள்ளவராக இருக்கிறார். இதனால் எந்த நல்லது கெட்டது என்றாலும் அவரது பங்களிப்பு இருக்கும் சூழலில், இளவரசுவின் மகள் சௌமியாவிற்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. அதே சமயத்தில் பக்கத்து வீட்டுக்காரர் மணி

  • நாகபந்தம்” திரைப்படத்தில் பார்வதி ஆக நடிக்கும் நபா நடேஷ் – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது | பான்-இந்தியா வெளியீடாக இந்த கோடையில் வெளியாகிறது !!

    “நாகபந்தம்” (Nagabandham) எனும் பிரமாண்ட புராண ஆக்ஷன் திரைப்படம், இயக்குநர் அபிஷேக் நாமாவின் கனவு முயற்சியாக உருவாகி வருகிறது. விராட் கர்ணா நாயகனாக நடிக்கும் இந்த படம், தயாரிப்பின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ‘பார்வதி’ கதாபாத்திரத்தில் தோன்றும் நாயகி நபா நடேஷின் (Nabha Natesh) ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மகர சங்கராந்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த போஸ்டரில், பாரம்பரிய உடையில் நபா நடேஷ் மிகுந்த அழகும் ஆன்மிக ஒளியும் நிறைந்த தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அழகிய சேலை, நுட்பமான ஆபரணங்கள், அமைதியான முகபாவனை—அனைத்தும் அவரது கதாபாத்திரத்தின் பக்தி, தூய்மை மற்றும் புராண அம்சத்துடன் உருவாக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.

    போஸ்டரில் படத்தின் தரத்தை களத்தை வெளிப்படுத்தும் வகையில், நாயகி அருகே நீல நிறப் பறவை, ஒரு பிரம்மாண்ட மயில் மற்றும் கோவில் பின்னணி இடம் பெற்றுள்ளன. ‘பார்வதி’ கதாபாத்திரத்தின் ஆன்மிக அடையாளத்தையும், படத்தின் கருப்பொருளையும் இந்த ஒரே போஸ்டர் அழகாக எடுத்துரைக்கிறது.

    இந்த படத்தில் மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். மேலும் ஜகபதி பாபு, ஜெயப்பிரகாஷ், முரளி ஷர்மா, B. S. அவினாஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்தியாவின் பழமையான விஷ்ணு கோவில்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் நாகபந்தம் திரைப்படம், நம் மரபின் புனித ரகசியங்களை மையமாக வைத்து, புராணம், சஸ்பென்ஸ் மற்றும் தெய்வீக பாரம்பரியத்தை இன்றைய காலகட்ட கதையுடன் இணைக்கும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பைக் கொண்டுள்ளது.

    ஒளிப்பதிவு சௌந்தர் ராஜன் S, எடிட்டிங் RC பிரணவ், கலை இயக்கம் அசோக் குமார் என முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றுவதால், படம் மிகச் சிறப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    கிஷோர் அன்னபூரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோரின் தயாரிப்பில் உருவாகும் நாகபந்தம், இந்த கோடைக்காலத்தில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.

    நடிப்பு:
    விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, B.S.அவிநாஷ் மற்றும் பலர்

    தொழில்நுட்ப குழு

    கதை / திரைக்கதை / இயக்கம்: அபிஷேக் நாமா
    தயாரிப்பாளர்கள்: கிஷோர் அன்னபூரெட்டி, நிஷிதா நாகிரெட்டி
    ஒளிப்பதிவு: சௌந்தர் ராஜன் S
    இசை: அபே, ஜுனைத் குமார்
    கலை இயக்கம்: அசோக் குமார்
    எடிட்டிங்: RC பிரணவ்
    சிஇஓ: வாசு போதினி
    மக்கள் தொடர்பு : யுவராஜ்

    Introducing The Graceful Nabha Natesh As Parvathi From Nagabandham, Pan-India Release In Theaters This Summer

    Abhishek Nama’s ambitious mythological action drama- Nagabandham, starring Virat Karrna, continues to scale new heights as it nears the final stages of production. While the film is already making waves for its massive scale and mystical storyline, the team has now unveiled the captivating first look of lead actress Nabha Natesh as Parvathi.

    Marking the occasion of Makara Sankranthi, the poster showcases the graceful Nabha Natesh in a gorgeous and traditional avatar. Draped in an elegant saree and adorned with intricate jewellery, she radiates poise, purity, and spiritual warmth. Her soulful expression hints at a character deeply rooted in devotion and mythic grace.

    Adding to the visual richness, a vivid blue bird rests near her hand, complemented by the presence of a majestic peacock and a temple backdrop. This poster perfectly captures the essence of the character and the film’s thematic core.

    Iswarya Menon is the other heroine, with stalwarts like Jagapathi Babu, Jayaprakash, Murali Sharma, and B.S. Avinash in pivotal roles.

    Nagabandham unfolds against the backdrop of India’s ancient Vishnu temples. The storyline explores the sacred mysteries of the Nagabandham tradition, weaving mythology, suspense, and divine legacy into a gripping contemporary narrative.

    With Soundar Rajan S handling cinematography, RC Pranav overseeing editing, and Ashok Kumar taking care of production design, the film promises visual excellence. Backed by producers Kishore Annapureddy and Nishitha Nagireddy, Nagabandham is gearing up for a grand multi-language release in Telugu, Hindi, Tamil, Kannada, and Malayalam, this summer.

    Cast : Virat Karrna, Nabha Natesh, Iswarya Menon, Jagapathi Bab, Jayaprakash, Murali Sharma, B.S. Avinash, and others

    Technical Crew:
    Story, Screenplay & Director: Abhishek Nama
    Producers: Kishore Annapureddy, Nishitha Nagireddy
    Director of photography: Soundar Rajan S
    Music: Abhe, Junaid Kumar
    Production Designer: Ashok Kumar
    Editor: RC Panav
    CEO: Vasu Potini
    PRO: Yuvraaj

  • The Mummy Returns” Film Launched with a Grand Pooja !

    “The Mummy Returns” Begins Its Journey with a Grand Pooja Ceremony !

    The film “The Mummy Returns”, a delightful comedy family entertainer, officially commenced today with a grand pooja ceremony held in a festive atmosphere. The film is produced by Pepin de Raisin Productions, with P. J. Kishore as the producer, and is directed by Jai Amar Singh. The launch event was attended by the entire film crew along with several prominent personalities from the Tamil film industry, marking an auspicious beginning for the project.

    Celebrated filmmakers Vishnuvardhan and I. Ahmed graced the occasion and conveyed their heartfelt wishes to the team, adding further significance to the event.

    The story of The Mummy Returns revolves around a son who strives to save his mother after she emerges from a long coma. In an emotional yet humorous attempt to help her recover, he recreates the world of the 1990s—the era in which his mother once lived—along with the support of his friends. The amusing chaos and comic situations that arise during this journey form the core of the film. Director Jai Amar Singh is shaping the film as a wholesome family entertainer filled with rib-tickling comedy that promises to make audiences laugh their hearts out.

    The film features Krishna, Devadarshini, Swathi Muppala, Kinsley, Lollu Sabha Maaran, Bjorn, and Deepa in important roles.

    The shooting of the film is planned to be carried out in and around Chennai, across two schedules.

    Speaking about the film, director Jai Amar Singh shared that after completing his film studies in London, he worked under director I. Ahmed in the film Endrendrum Punnagai. At a time when action films dominate the screens, he believes audiences are longing for pure comedy entertainers. Being personally inclined towards comedy films, he has designed The Mummy Returns as a full-fledged laugh riot. At its heart, the film is an emotional story about a son’s efforts to save his mother, narrated in a way that makes audiences laugh till their stomachs ache.

    The film’s music is composed by leading composer Sam C. S.. Editing is handled by Manikandan Balaji, while cinematography is by Karthik Subramanian.

    The production team has also stated that announcements regarding additional cast members and technical crew will be made officially in the coming days.

  • “தி மம்மி ரிட்டர்ன்ஸ்” படம், பூஜையுடன் துவங்கியது !!

    Pepin de Raisin Productions சார்பில், P. J. கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர் சிங் இயக்கத்தில் உருவாகும், அழகான காமெடி ஃபேமிலி எண்டர்டெயினர் “தி மம்மி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம், படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, விமரிசையான பூஜையுடன், இன்று கோலாகலமாக துவங்கியது.

    இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் இயக்குநர் I. அகமது இவ்விழாவில் கலந்துகொண்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    பல வருட கோமாவில் இருந்து மீண்டு வரும் தன் தாயை காப்பாற்ற தன் அம்மா வாழ்ந்த 1990 களின் உலகை தன் நண்பர்களுடன் இணைந்து உருவாக்குகிறான் மகன். அதில் நடக்கும் களேபரங்கள் தான் இப்படத்தின் மையம். வயிறு வலிக்க சிரித்து மகிழும் காமெடியுடன், அனைவரும் ரசிக்கும் அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்குகிறார் ஜெய் அமர் சிங்.

    இந்த படத்தில் கிருஷ்ணா, தேவதர்ஷினி, ஸ்வாதி, கின்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பியோர்ன், தீபா (விஜய் டிவி) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    இப்படத்தின் படப்பிடிப்பை, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    படம் குறித்து இயக்குநர் ஜெய் அமர் சிங் கூறியதாவது..,
    நான் லண்டனில் ஃபிலிம் இண்ட்ஸ்டிடியூட்
    படித்து விட்டு சென்னையில் இயக்குநர் I. அகமது அவர்களிடம் “என்றென்றும் புன்னகை” படத்தில் பணிபுரிந்தேன். ஆக்சன் படங்கள் அதிகமாக வரும் இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் காமெடி படங்களுக்கு ஏங்குகிறார்கள். எனக்கும் காமெடி படங்கள் தான் அதிகம் பிடிக்கும். எனவே தான் இந்தப்படத்தை முழுக்க முழுக்க ரசிகர்கள் சிரித்து மகிழும் படமாக வடிவமைத்துள்ளேன். ஒரு தாயை காப்பாற்ற மகன் என்னவெல்லாம் செய்கிறான் என்பது தான் படம், எமோஷனலான கதையை, மக்கள் வயிறு வலிக்க சிரிக்கும்படி சொல்லப்போகிறோம் என்றார்.

    இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்ககிறார். மணிகண்ட பாலாஜி எடிட்டிங் செய்கிறார். கார்த்திக் சுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

  • பிராரம்பா 2026′ நிகழ்வில் இந்தியாவின் புதிய ஆற்றல் தளமாகத் தனது 4680 பாரத் செல் – ன் விரிவாக்கத்தை அறிவிக்கும் ஓலா எலக்ட்ரிக்

    பிராரம்பா 2026′ நிகழ்வில் இந்தியாவின் புதிய ஆற்றல் தளமாகத் தனது 4680 பாரத் செல் – ன் விரிவாக்கத்தை அறிவிக்கும் ஓலா எலக்ட்ரிக்


    4680 பாரத் செல் தளத்தை போக்குவரத்து மற்றும் குடியிருப்பு வீடுகளுக்கான ஆற்றல் சேமிப்பிற்கும் அப்பால் விரிவுபடுத்துவதாக அறிவிப்பு – வணிக நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் (புத்தொழில்) நிறுவனங்களுக்கு 4680 பாரத் செல்கள் மற்றும் 1.5kWh 4680 பாரத் செல் பேட்டரி பேக்குகளின் விற்பனையைத் தொடங்கியுள்ளது.
    4680 பாரத் செல்களால் ஆற்றல் பெறும் ஓலா சக்தி, இந்தியாவின் முதல் வீட்டு உபயோக BESS (பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு) சாதனமாகும். ஓலா நிறுவனத்தால் உள்நாட்டிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இதன் விற்பனை தொடங்கப்பட்டிருக்கிறது.
    ரோட்ஸ்டர் X+ (9.1kWh) டெலிவரி துவக்கம் – 4680 பாரத் செல்லால் இயங்கும் இது, 500 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது.
    S1 Pro+ 5.2kWh வாகனங்களின் டெலிவரி அதிகரிப்பு – 4680 பாரத் செல்லால் இயங்கும் இந்த வாகனத்தின் விநியோகம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
    பெங்களூரு, ஜனவரி 14, 2026: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், இன்று ‘பிராரம்பா 2026’ (Prarambh 2026) நிகழ்வில் தனது 4680 பாரத் செல் தளத்தின் விரிவாக்கத்தை பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது. இந்த 4680 பாரத் செல் தளம் மூலம், வணிகங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இப்போது 4680 பாரத் செல்களையோ அல்லது 1.5kWh 4680 பாரத் செல் பேட்டரி பேக்குகளையோ நேரடியாக வாங்கலாம். இவற்றை வாகனங்கள், மனித உருவம் கொண்ட ரோபோக்கள், ட்ரோன்கள் மற்றும் கையடக்க மருத்துவ உபகரணங்கள் போன்ற பல்வேறு உபயோகங்களுக்குப் பயன்படுத்தலாம். இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட புதிய ஆற்றல் சேமிப்புத் தீர்வுகளைக் கொண்டு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் வணிகங்களும் புத்தாக்க செயல்பாடுகளில் ஈடுபடவும் மற்றும் விரைவாக தங்களது செயற்பரப்பை விரிவுபடுத்தி வளர்ச்சி காணவும் இந்த அறிவிப்பின் மூலம் ஓலா வழிவகை செய்கிறது.

    மேலும், தனது வீட்டு உபயோக பேட்டரி ஆற்றல் சேமிப்பு சாதனமான (BESS) ‘ஓலா சக்தி’ இப்போது விற்பனைக்குக் கிடைப்பதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. ‘ஓலா சக்தி’ 6kW/9.1kWh மாடலின் விநியோகம் ஜனவரி 2026 இறுதியிலும், ‘ஓலா சக்தி’ 3kW/5.2kWh மாடலின் விநியோகம் பிப்ரவரி 2026 நடுப்பகுதியிலும் தொடங்கும். இதுதவிர, 4680 பாரத் செல்லால் இயங்கும் தனது முதன்மை மோட்டார் சைக்கிளான ரோட்ஸ்டர் X+ 9.1kWh (Roadster X+) டெலிவரியையும் இந்நிறுவனம் தொடங்கியுள்ளது; இது, ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை செல்லும் திறனுள்ளது. அத்துடன், S1 Pro+ 5.2kWh வாகனத்தின் விநியோகத்தையும் இந்தியா முழுவதும் ஓலா நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.

    4680 பாரத் செல், இந்த தயாரிப்புகளின் மைய அம்சமாக திகழ்கிறது. ஓலா நிறுவனத்தால், சுயமாக அதன் தொழிலகத்திலேயே உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் ஆற்றல் செயல்தளமாகும். இது இப்போது நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் மற்றும் ‘ஓலா சக்தி’ ஆகிய இரண்டிற்கும் ஆற்றல் அளிக்கிறது – அதாவது ‘ஒரு செல், ஒரு செயல்தளம், இந்தியாவிற்காக உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்புத் தொகுப்பு’ (one cell, one platform, one portfolio). நவீன இந்திய வீடுகள், விவசாயப் பண்ணைகள் மற்றும் வணிகங்களுக்காக வடிவமைக்கப்பட்ட, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு ஆதார வளமாக ‘ஓலா சக்தி’ திகழ்கிறது. ஆற்றல் ஆதாரத்தை அணுகுவது, கட்டுப்படுத்துவது மற்றும் நுகர்வது ஆகிய செயல்பாடுகளில் இந்திய மக்களுக்கு ஒரு அடிப்படையான மாற்றத்தை வழங்கும் ஒரு நவீன வளர்ச்சியை ஓலா சக்தி பிரதிபலிக்கிறது.

    ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறியதாவது: “4680 பாரத் செல் என்பது எங்களின் நிறுவனத்திலேயே உருவாக்கப்பட்ட ஆற்றல் மற்றும் போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பின் மைய அம்சமாகும். நுகர்வோர் வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான மின்ஆற்றல் என்பதையும் கடந்ததாக இந்த தளத்தை நாங்கள் இப்போது விரிவுபடுத்தி வருகிறோம். 4680 பாரத் செல் தளத்தை வணிகங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்வதன் மூலம், மனித உருவம் கொண்ட ரோபோக்கள் மற்றும் ட்ரோன்கள் முதல் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் கையடக்க மருத்துவ இயந்திரங்கள் வரை பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கு நாங்கள் வழிவகுத்திருக்கிறோம். வணிக நிறுவனங்கள் 4680 பாரத் செல்லை நேரடியாக வாங்கலாம் அல்லது எங்களின் 1.5kWh 4680 பாரத் செல் பேட்டரி பேக்கைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை விரைவாக உருவாக்கலாம் மற்றும் விரிவுபடுத்தலாம். போக்குவரத்து, ஆற்றல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கு உதவும் ஒரே செல் மற்றும் அளவை உயர்த்தக்கூடிய ஒரே தளத்தை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட எதிர்காலத்திற்கு ஏற்ற ஆற்றல் அடித்தளத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம்,” என்றார்.

    ‘ஓலா சக்தி’ (Ola Shakti) இப்போது இரண்டு அளவீடுகளில் கிடைக்கிறது. 3kW/5.2kWh மாடல் ₹1,49,999 என்ற விலையிலும், 6kW/9.1kWh மாடல் ₹2,49,999 என்ற விலையிலும் கிடைக்கிறது. இந்த சாதன அமைப்பு ஏர் கண்டிஷனர்கள், ஃப்ரிட்ஜ்கள், இண்டக்‌ஷன் குக்கர்கள், விவசாய பம்புகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை இயக்கும் ஆற்றலை வழங்குகிறது. இது விரைவாக சார்ஜ் ஆகும் திறன் கொண்டது மற்றும் முழுமையான சார்ஜில் 1.5 மணிநேரம் வரை பேக்கப் ஆற்றலை வழங்கக்கூடியது. இத்தயாரிப்பை ஓலா எலக்ட்ரிக் இணையதளம் மற்றும் ஓலா எலக்ட்ரிக் ஸ்டோர்களில் வாங்கலாம். 9.1kWh மாடலின் விநியோகம் ஜனவரி 2026 இறுதியிலும், 5.2kWh மாடலின் விநியோகம் பிப்ரவரி 2026 நடுப்பகுதியிலும் தொடங்கும்.

    ₹1,89,999 விலையில் கிடைக்கும் ரோட்ஸ்டர் X+ 9.1kWh (Roadster X+), 4680 பாரத் செல்லுடன் கூடிய 9.1kWh பேட்டரி மற்றும் 11kW மோட்டாரைக் கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை தூரம் வரை செல்லும்; மற்றும் மணிக்கு 125 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. மேலும், இது வெறும் 2.7 வினாடிகளில் 0-40 கி.மீ வேகத்தை எட்டுகிறது.

    ₹1,90,338 விலையில் கிடைக்கும் S1 Pro+ 5.2kWh, 4680 பாரத் செல்லுடன் கூடிய 5.2kWh பேட்டரி மற்றும் 13kW மோட்டாரைக் கொண்டுள்ளது. S1 Pro+ ஒரு முறை சார்ஜ் செய்தால் 320 கி.மீ (IDC range) தூரம் வரை செல்லும் மற்றும் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்லும். இது வெறும் 2.1 வினாடிகளில் 0-40 கி.மீ வேகத்தை எட்டுகிறது.

  • ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் (Icon Star Allu Arjun) × லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) கூட்டணியில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) வழங்கும் பிரம்மாண்ட மெகா திரைப்படம் !!

    இந்திய சினிமாவில் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் பிரம்மாண்டமான திரைப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ஒன்றிணையும் இந்த கனவு கூட்டணி, ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரையனுபவத்தை வழங்கும் என பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

    பவர்ஃபுல் வீடியோவுடன் இந்தப் பிரம்மாண்டமான திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் ( Mythri Movie Makers)  நிறுவனம் பன்னி வாஸ் ( Bunny Vas )  உடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம், அறிவிப்பு வெளியான தருணத்திலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

    ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, இப்படம்  இந்திய சினிமாவில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

    இந்தப் பிரம்மாண்ட முயற்சிக்கு தலைமையேற்கும் முன்னணி தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி ( Naveen Yerneni ) மற்றும் ரவி சங்கர் ஆகியோருடன் இணைந்து, பன்னி வாஸ் (Bunny Vas) இணைத் தயாரிப்பாளராகவும், நட்டி, சாண்டி, ஸ்வாதி ஆகியோரும் தயாரிப்பு குழுவில் இணைந்துள்ளனர்.

    அறிவிப்பு வீடியோ வெளியானதிலிருந்து, படத்தின் பிரம்மாண்டம் மற்றும் கதையின் தன்மை குறித்து ரசிகர்கள் மத்தியில் தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    தனித்துவமான ஸ்டைல், மின்னல் வேக நடனங்கள், மாஸ் ஆக்ஷன் மற்றும் வலுவான திரை நடிப்பு என பான்-இந்தியா ஸ்டார்டம் கொண்ட அல்லு அர்ஜுன், தனித்துவமான  கதை சொல்லல் மற்றும் மாறுபட்ட மாடர்ன் மேக்கிங் மூலம் கமெர்ஷியல் சினிமாவை மறுவரையறை செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் — இந்த கூட்டணி தான் இப்படத்தின் மிகப்பெரிய பலம். மேலும், ராக் ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.

    AA23 (தற்காலிக தலைப்பு) என அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2026ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜின் வேகமான, மாறுபட்ட இயக்கத்தில், அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் இதுவரை ரசிகர்கள் காணாத ஒரு முற்றிலும் புதிய, அதிரடி தோற்றத்தில் (இதுவரை காணாத வேடத்தில்) நடிக்கவுள்ளதாக கூறப்படுவதால், இது சமீப காலத்தில்  மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்பட நிகழ்வாக உருவெடுத்துள்ளது.

    Icon Star Allu Arjun x Lokesh Kanagaraj: A Mammoth Project by Mythri Movie Makers

    The monumental project featuring Icon Star Allu Arjun in an epic collaboration with blockbuster filmmaker Lokesh Kanagaraj was announced today. This highly anticipated project brings together two of the most celebrated names in Indian cinema, promising a spectacular experience.

    The project was announced with a powerful video content and it raises hype to the next level on this project backed by the prestigious Mythri Movie Makers in association with BV works. It has already captured the imagination of fans nationwide.

    The project is spearheaded by ace producers Naveen Yerneni and Ravi Shankar, with producer Bunny Vas joining as co-producer along with Nutty, Sandy, and Swathi. The official announcement video took social media by storm, with discussions about the scale and tone of this ambitious venture.

    Allu Arjun, a phenomenon known for his unparalleled style, electrifying screen presence, and pan-India stardom with Lokesh Kanagaraj, a director celebrated for redefining commercial cinema with his gritty narratives and high-impact filmmaking. Along with them, the rockstar Anirudh joined the team.

    With sensational composer Anirudh Ravichandran scoring the music and the film scheduled to commence shooting in August 2026, the anticipation continues to soar. Tentatively titled AA23, the film is expected to present Allu Arjun in a never-seen-before avatar under Lokesh Kanagaraj’s dynamic direction, making it one of the most awaited cinematic events in recent times.

  • வா வாத்தியார் திரை விமர்சனம்


    தயாரிப்பு: ஸ்டூடியோ கீரின்
    இயக்கம்: நலன் குமரசாமி
    நடிப்பு: கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிர்த்தி ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத்
    ஒளிப்பதிவு: ஜார்ஜ்
    இசை: சந்தோஷ் நாராயணன்
    வெளியான தேதி: ஜனவரி 14, 2026
    நேரம்: 2 மணி 09 நிமிடங்கள்
    ரேட்டிங்: 3.5 / 5


    ராஜ்கிரண், தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்  எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரை நேரில் சென்று பார்க்க முடியாது என்ற காரணத்தால் தான்  ஊரில் உள்ள திரையரங்கில் எம்ஜிஆர் படத்தை நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது திரையரங்க உரிமையாளர்கள் மூலமாக மக்கள் திலகம் எம்ஜிஆர் இறந்த செய்தி  ராஜ்கிரனுக்கு தெரிய வர சோகத்தில் திரையரங்கு வாசலில் அமர்ந்திருக்கும் பொழுது அவருக்கு எம்ஜிஆர் இறந்த அதே நேரத்தில் அவருக்கு ஆண் பேரக்குழந்தை பிறக்கிறது அதனைத் தொடர்ந்து அந்த குழந்தை எம்ஜிஆரின் மறுபிறப்பு என்று ராஜ்கிரண் நேர்மையான வழியில் வளர்த்து வருகிறார் ராஜ்கிரண் நடிகர் கார்த்திக்கு வா வாத்தியார் படத்தின் ராமு என்ற பெயர் வைத்து சமுதாயத்தில் எம்ஜிஆர் போன்ற நேர்மையான மனிதராக வளர்த்து  கார்த்தி போலீஸ் துறையில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார் பின்பு சமுதாயத்தில் கெட்ட மனிதர்களுடன் சேர்ந்து நம்பியாரை பார்த்து ராமு என்கிற கார்த்திக் நண்பர் ரசிகராக மாறி சமுதாயத்துக்கு எதிரான செயல்களை செய்து வருகிறார் ராமு ..

    இன்ஸ்பெக்டர் கார்த்தி  அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும்  “மஞ்சள்முகம்” என்ற ஹாக்கர் கும்பல்  பிடித்தால் நல்ல பணம் கிடைக்கும் என்று நினைத்து, கார்த்தி அந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்கிறார். அதே நேரத்தில், கார்த்தியின் உண்மை முகம் ராஜ்கிரணுக்கு தெரிய வருகிறது.

    எம்ஜிஆர் ரசிகரான ராஜ்கிரண் கனவை கார்த்தி நிறைவேற்றினார்?
    இன்ஸ்பெக்டர் கார்த்தி நம்பியார் ரசிகராக காரணம் என்ன?
    ராமு உடலில் எம்ஜிஆரின் ஆவி நுழைந்ததின் காரணம் என்ன?
    மக்கள் திலகம் எம்ஜிஆரின் ஆவி எவ்வாறு மக்களை காப்பாற்றுகிறது?
    இது போன்ற கேள்விக்கு பதில் வா வாத்தியார் திரை

    வா வாத்தியார் திரைப்படத்திலிருந்து வில்லனாக சத்யராஜ் எம்ஜிஆர் ரசிகனாக ராஜ்கிரன், எம்ஜிஆர் ரசிகராக ஆனந்தராஜ், கீர்த்தி செட்டி ஆகியோர் தங்களது நடிப்பினை சிறையில் ரசிக்க வைத்துள்ளனர்.

    திரைப்படத்திற்கு பக்கபலமாக ஒளிப்பதிவு மற்றும் இசை திரைக்கதையுடன் திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளது.

  • Letterboxd வரலாற்றில் இடம்பிடித்த ஒரே இந்திய அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – ‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்கு சர்வதேச பாராட்டு !!

    உலகளாவிய திரைப்பட தளமான Letterboxd தளத்தின் டாப் டென்னில் இடம்பிடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் !!

    சர்வதேச திரைப்பட விமர்சன தளமான Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய Highest Rated Comedy Films of 2025 தரவரிசைப் பட்டியலில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் Top 10 பட்டியலில் 6-ஆம் இடத்தை பிடித்துள்ளது. உலகளாவிய அளவில் வெளியாகியுள்ள இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரும் சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

    Letterboxd என்பது உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பயன்படுத்தும் முன்னணி திரைப்பட விமர்சன தளமாகும். பயனர்களின் மதிப்பீடுகள், விமர்சனங்கள் மற்றும் பார்வை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிடும் இந்த தளம், சர்வதேச அளவில் பெரும் நம்பகத்தன்மை பெற்றுள்ளது. அந்த வகையில், காமெடி எண்டர்டெயினர் பிரிவில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பெற்றுள்ள உயர்ந்த இடம், உலக ரசிகர்களிடையே இப்படம் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.

    இலங்கை மக்களின் வலியை அவர்களின் வாழ்வினை, குடும்பத்தோடு அனைவரும் ரசிக்கும் வகையில் காமெடி–கமர்ஷியல் கலவையுடன் சொல்லியிருப்பதே ‘டூரிஸ்ட் ஃபேமிலி’யின் பெரிய பலமாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். வலுவான கதை அமைப்பு, எளிமையான ஆனால் தாக்கமுள்ள திரைக்கதை, மனிதநேய உணர்வுகள் ஆகியவை பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் அசத்தலான இயக்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. Letterboxd வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டின் டாப் டென் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய அறிமுக இயக்குநர் என்பதும், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மூலம் அபிஷன் ஜீவிந்த் பெற்றுள்ள சர்வதேச அங்கீகாரத்தை பெருமைகொள்ள வைக்கிறது.

    2025 ஆம் ஆண்டில் வெளியான முக்கியமான தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, வரும் காலங்களில் தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் மேலும் பல விருதுகளை வெல்லும் என்ற நம்பிக்கையை திரை ஆர்வலர்களிடையே உருவாக்கியுள்ளது. குறிப்பாக இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு குவியும் பாராட்டுகள், அவரை எதிர்கால தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக அடையாளப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவுக்கு காமெடி எண்டர்டெயினர் வகையில் கிடைத்த இந்த சர்வதேச அங்கீகாரம், ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது.

  • ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம்!

    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் ஜனவரி 16 அன்று ‘புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் வெளியாகிறது.

    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘புஷ்பா 2: தி ரூல்’ தற்போது ஜப்பானிலும் வெளியாக தயாராக உள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த இந்த படம் இந்திய ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டமாக மாறியது. படத்தின் தொடக்கத்தில் புஷ்பாவின் அறிமுக சண்டைக்காட்சி ஜப்பானில் படமாக்கப்பட்டது மட்டுமல்லாது, அதில் அல்லு அர்ஜுன் ஜப்பானிய மொழியிலும் சரளமாக வசனம் பேசும்படியும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

    ஜனவரி 16ஆம் தேதி ஜப்பானில் படம் வெளியாகவுள்ள நிலையில், குடும்பத்துடன் டோக்கியோ சென்றுள்ள நடிகர் அல்லு அர்ஜூன் தனது ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படத்தை புரமோட் செய்து வருகிறார். டோக்கியோ நகரத்தின் அழகிய ஸ்கைலைன் இடம்பெற்ற புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் அல்லு அர்ஜூன்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் உடன் இணைந்து, இந்தப் படத்தை ஜப்பானில் ’புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் கீக் பிக்சர்ஸ் மற்றும் சோசிகு நிறுவனங்கள் வெளியிடுகின்றன. சுமார் 250 திரையரங்குகளில் இந்த படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்திய சினிமாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களுக்கு ஜப்பான் ரசிகர்கள் ஏற்கனவே காட்டி வரும் பேராதரவை கருத்தில் கொண்டு, இந்தப் படமும் அங்கு பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.

    சுகுமார் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜப்பான் தியேட்டர்களில் ’புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் ஜனவரி 15, 2026 அன்று படம் ப்ரீமியர் ஆகிறது. போலீஸ் அதிகாரியாக ஃபஹத் ஃபாசில் நடித்திருக்க, நாயகியாக ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார். இந்தப் படத்தை நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ளனர்.

  • பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 ஆம் தேதி”வா வாத்தியார்” உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !!

    ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”.

    இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று  பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

    இந்நிகழ்வினில்

    கலை இயக்குநர் கிரண் பேசியதாவது..,

    எனக்கு பிடித்த இயக்குநர் நலன், அவரது இரண்டாவது படத்தில் என்னை நடிக்க வைத்தார் அவர் இப்படத்தில் ஆர்ட் டைரக்டராக வேலை செய்யச் சொன்னார். இந்தக்கதை கேட்ட போது எப்படி இப்படத்தில் கார்த்தி நடிக்கப்போகிறார் என்று தான் தோன்றியது. நான் ரஜினி ரசிகன்,  என் அம்மா எம் ஜி ஆர் ரசிகர். ஷீட்டிங்கில் கார்த்தியைப் பார்த்த போது அவர் முகம் எம் ஜி ஆர் போட்டோவுடன் அப்படியே  மேட்ச் ஆனது. அப்போதே இந்தப்படம் பெரிய வெற்றி பெறும் என நலனிடம் சொன்னேன்.  கண்டிப்பாக இப்படம் உங்கள் அனைவரையும் கவரும் நன்றி.

    நடிகர் GM சுந்தர்  பேசியதாவது..,

    எம் ஜி ஆர் பற்றி பேச  எனக்குத் தகுதியில்லை, பரம ரசிகர்  சத்தியராஜ் சார் முன் எம் ஜி ஆர் பற்றி எதாவது தகவல் தப்பாகக் கூறி விடுவோம் என பயமாக உள்ளது. அவர் அவ்வளவு தீவிரமான ரசிகர்.  கார்த்திக்கின் சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு ஐகானிக் இமேஜை மீண்டும் திரையில் கொண்டு வருவது மிக கடினமான விசயம்.  எம் ஜி ஆராக நடிக்க கார்த்தி நிறைய ஹோம் ஒர்க் பண்ணியிருக்கிறார். அவரது பாடி லாங்குவேஜு எல்லாம் மிகவும் நன்றாக  இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். முழு அர்ப்பணிப்புடன் உண்மையாக உழைத்தால் தான்  அந்த மாதிரி விஷயங்கள்லாம் வெளிவரும்.  கார்த்தி மிகச்சிறப்பாகச் செய்துள்ளார்.  கிருத்தி ஷெட்டி  வெல்கம் டு தமிழ் சினிமா.  நான்  ஆனந்தராஜனோட கிளாஸ்மேட் ஃபிலிம் இனஸ்டிட்யூட்டில். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இயக்குநர் நலன் அவரது காதலும் கடந்து போகும் படம் போலவே, இந்த படத்திலேயே எனக்கு ஒரு நல்ல ரோல் கொடுத்திருக்கார். அவருக்கு ரொம்ப நன்றி. இந்தப்படம் வெளிவருதற்குத் தயாரிப்பாளர்  ஞானவேல் சார் மற்ற எல்லா நடிகர்களும் ஆர்டிஸ்ட் எல்லாருமே சேர்ந்து எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியும். மிகக்கஷ்டபட்டு  இந்த படத்தைப் பொங்கலுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.  நிச்சயமாகச் சத்தியமாக இந்த படம்  மிகப்பெரிய வெற்றி பெறும்.

    நடிகை ஷில்பா மஞ்சுநாத் பேசியதாவது..,

    முதலில் எனக்கு மாலினி என்ற கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்காக, எங்கள் இயக்குநர் நலன் குமாரசாமி   சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. ஒரு கதையை எழுதும்போது, ஒரு கேரக்டர்க்கும் ஒரு ஆர்க் இருக்கும். ஆனால் ஒரு நடிகையா, எனக்கும் ஒரு ஆர்க் வேண்டும், எல்லா விதமான கதாபாத்திரங்களையும் செய்ய வேண்டுமென்று  ஆசைப்படுவேன். அதனால் தான் இப்படத்தில்  இந்த மாதிரி ஒரு ரிஸ்க் எடுத்தேன். அந்த ரிஸ்க் எடுக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதனால தான் மாலினி இவ்வளவு அழுத்தமான ஒரு கேர்கடராக மாறியிருக்கிறாள். இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவரின் முயற்சியையும் உழைப்பையும் முதலில் பாராட்ட வேண்டும். இந்த படம் பெரிய சிக்கல்களைச் சந்தித்தது. எங்கள் இயக்குநர் நலன் குமாரசாமி   சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இந்த மாதிரி ஒரு பெரிய மேடையில், இந்த அளவுக்கு இந்த படம் நிற்கிறது என்றால், அதற்கு முழுக் காரணமும் அவர்கள்தான். படக்குழுவிற்கு நன்றி.  எனக்கு வரும் படங்கள் ஏதாவது ஒரு காரணமாகத் தான் வரும். இந்தப் படம் ஒரு ஸ்டார் படம். தமிழ்நாட்டில் இது ஒரு பெரிய திருவிழா வெளியீடாக இருக்கும்,  அதனால்  இதுபோன்ற ஒரு படத்தைத் தேர்வு செய்வது ரொம்ப சிக்கலான விஷயம். ஆனா எனக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்கிறது. இந்த படம் மிக நன்றாக வந்திருக்கிறது. நீங்க எல்லாரும் இந்த படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் நன்றி.

    நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது..,

    இந்த படம் ஒரு நல்ல படம். நீங்களும் பார்த்தாலே அது உங்களுக்குப் புரியும். நாளைக்கு இந்த படம் வெளியாகப் போகிறது. அதுவும் ஒரு நல்ல நாளில், ஒரு நல்ல நேரத்தில் வெளியாகிறது. நான் தயாரிப்பாளர் ஞானவேல்  சார்கிட்ட கூட “சார், முன்னாடி சொன்ன தேதியை விட, நாளைக்கு ரிலீஸ் ஆகுற தேதியே ரொம்ப நல்ல தேதிங்க” என்று சொன்னேன். நாளை போகி பண்டிகை. பழசுகளை எல்லாம் எரிச்சிட்டு, புதுசா ஆரம்பிக்கிறதுதான் நம்ம கலாச்சாரம். அதனால் நாளைக்கு நம்ம மனசில் இருக்கிற எல்லா பழைய விஷயங்களையும் விட்டுவிட்டு, ஒரு புதுசா ஆரம்பிக்கிற படம்தான் ‘வா வாத்தியார்’. இன்று  காலை நானும், கார்த்தி சாரும், சத்யராஜ் சாரும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சமாதிக்கு போயிருந்தோம். அங்க போனப்போ ஒரு சந்தோஷம், ஒரு மன நிறைவு இருந்தது. அவர் சமாதியை நேரில் போய் பார்த்து, எங்களோட கண்ணீர் அஞ்சலியை செலுத்திட்டு, இந்த படத்தை உங்களுக்குக் கொண்டு வர்றதுல எனக்கு ஒரு பெருமை இருக்கிறது. உங்களால முடிந்தவரை இந்த படத்தை அவருக்கான மரியாதையா நினைச்சு, எங்களுக்கும் கொஞ்சம் ஆதரவு தாருங்கள். இந்த படம் நன்றாக வெற்றி பெறும் என்று  எங்களுக்கு முழு நம்பிக்கை இருகிறது .இந்த படத்தில் நடித்த கார்த்தி சார், சத்யராஜ் சார் கிட்ட இருந்து தான் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டார். அவர் ஒரு சீனியர், ஒரு அண்ணன் மாதிரி. இந்த படத்தோட இயக்குநர் நலன் சார் – ரொம்ப பெரிய, அனுபவம் வாய்ந்த இயக்குநர். அவர் கதையை நேரில வந்து சொன்னபோதே “சார், நீங்க சொல்லவே வேண்டாம்… நான் செய்கிறேன்”என்று உடனே சொன்னேன். இந்த படம் மிக நன்றாக இருக்கும்.  புரட்சித் தலைவரை மீண்டும் திரையில் பார்க்கவேண்டுமென்று ஆசைப்பட்டால், இந்த படத்தைக் கண்டிப்பா பாருங்க. அனைவருக்கும் நன்றி.
    நடிகர் சத்யராஜ் பேசியதாவது.., 

    எம் ஜி ஆர் பற்றிப் பேசினால் அது தனியா ஒரு கதையாக போய் வ்டும். இந்த படத்தோட தயாரிப்பாளர் தம்பி ஞானவேல் ராஜா பற்றி ஒரு விஷயம் சொல்லவேண்டும். அவருடைய அப்பா ஒரு தீவிரமான எம் ஜி ஆர் ரசிகர். அவர் 110 தடவை  நாட்டோடி மன்னன் படம் பார்த்ததாக சொன்னார். அவ்வளவு தீவிர ரசிகர். அப்படிபட்ட தயாரிப்பாளருக்கு அவர் இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. கார்த்திக்கு முதல் படமே மிக சவாலான படம். வெளிநாட்டில் படிச்சிட்டு வந்து, அந்த மாதிரி ஒரு கிராமத்துக் கதாபாத்திரம் பண்ணுறது எளிமையானது இல்லை.  ஆனால் அதைவிட கஷ்டமான விஷயம் இந்த வாத்தியார் கதாபாத்திரம். ஏனென்றால் இது ஒரு தலைவரின் பெயரோட சம்பந்தப்பட்ட கதாபாத்திரம். ஆனால் அதைத்தாண்டி இந்தப்படத்தில் எம் ஜி ஆர் பாடி லாங்குவேஜை கொண்டு வந்து அசத்திவிட்டார். கிருத்தி ஷெட்டி, ஷில்பா, தம்பி ஆனந்த்ராஜ், தம்பி சுந்தர்  எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஐம்பது வருடம் முன் கோவையிலிருந்து வந்த போது,  பல் பெரிதாக இருக்கிறது என சிவக்குமார் அண்ணன் சிபாரிசில் டாக்டரிடம் சென்று பல்லைக் குறைத்தேன். ஆனால் நலன் இப்படத்தில் உங்கள் கதாப்பாத்திரம் வித்தியாசமாக வேண்டுமென பல் வைக்க வைத்து விட்டார்.  இப்படத்தில் நான் வில்லனாக நடித்துள்ளேன்.  எம் ஜி ஆரின் பொங்கல் படம் படம் போல இந்தப் பொங்கலுக்கு வா வாத்தியார் வருகிறது அனைவரும் கொண்டாடுங்கள் நன்றி.

    நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது..,

    ஒரு பேட்டியில்  நலன் சார் ஒரே விஷயத்தை “இது ஒரு பெஸ்டிவல் படம். பல குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்து பார்க்கிற படம்”என்று சொன்னார். இப்போது அது அப்படியே நடந்துள்ளது. குடும்பமா, நண்பர்களோடு, எல்லாரும் சேர்ந்து படம் பார்க்கிற மாதிரி இந்த படம் மாறியிருக்கிறது. அதுக்கு நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுறேன். இந்த படம் தாமதமானது பற்றி நிறைய பேர் என்கிட்ட கேட்டார்கள். அந்த நேரத்தில் எனக்கும் கொஞ்சம் வருத்தமா தான் இருந்தது. ஆனால் நான் ஒன்று நம்புகிறேன் – நல்ல விஷயம் நடக்கவேண்டுமானால், அதுக்கு ஒரு சரியான நேரம் இருக்கும். கடவுள் நம்மளை காத்திருக்க வைக்குறார்னா,அதுக்குப் பின்னால் ஒரு பெரிய திட்டம் இருக்கும்னு நம்புறேன். அதனால இப்போ எல்லாம் சரியா நடந்ததுக்கு நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறேன். இந்தப்படத்தில் என்னைச் சேர்த்ததுக்காக நலன் சார், மற்றும் ஞானவேல் சார்  இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நலன் சார் இந்த படத்திற்காக எவ்வளவு கடினமா உழைத்திருக்கார்னு நான் நேரில பார்த்திருக்கேன். அவர் வெற்றியைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.  கார்த்தி சாரின் தீவிர ரசிகை நான், ஆனால் அவரை நேரில சந்திச்ச பிறகு, நான் இன்னும் பெரிய ரசிகையா மாறிவிட்டேன். ‘வா வாத்தியார்’ கதாபாத்திரம் – பெரியதாக  இருந்தாலும்,  அதை அவரைவிட சிறப்பாக யாராலும்  செய்ய முடியாது. கார்த்தி  மனதளவில் மிகச்சிறந்த மனிதர். அது அவரது கதாப்பாத்திரங்களிலும் பிரதிபலிக்கிறது, வா வாத்தியார் ஒரு நல்ல மனசு கொண்ட கேரக்டர் அது அவருக்குள்ள இயல்பாகவே இருக்கிறது. நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இப்படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி

    தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது..,

    சில படங்கள் சரியாகப் போகவில்லை, அதனால் நெகடிவிட்டி, நிறையக் செய்தி பரவி விட்டது. ஆனால் நான் இங்கு தான் இருக்கிறேன். அவருக்கு அவ்வளவு கடன் இருக்கிறது எனச் சொல்லுகிறார்கள். ஆனால் இண்டஸ்ட்றியில் கடனே இல்லாத தயாரிப்பாளர் நான் தான். நான் நன்றாகத் தான் இருக்கிறேன். முக்கியமாகச் சிலருக்கு நன்றி சொல்ல வேண்டும். முதலில் சூர்யா அண்ணாவுக்கு நன்றி. பல நண்பர்கள் மேடையில் ஆதரவாக பேசி விட்டு, காணாமல் போய் விடுவார்கள்.  ஆனால் சூர்யா அண்ணன் எப்போதும் எதுவானாலும் என்னுடன் இருந்து, என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் அண்ணாவுக்கு நன்றி. KVN அண்ணா, அவர்களின் ஜனநாயகன் படம் பெரிய புக்கிங் ஆகியிருந்தது,  விஜய் சாரின் கடைசிப்படம் ஆனால் அது வருவது தாமதமாகியுள்ளது. ஆனால் இப்படம் வெளிவருவதில் எனக்கு  அவர் எனக்கு பெரிய துணையாக இருந்தார்.  அவருக்கு என் நன்றிகள்.  பென் மூவிஸ் ஜெயந்திலால் காடா சாருக்கு நன்றி. சக்தி பிலிம்ஸ் சக்திவேலனுக்கு நன்றி. பல நண்பர்கள் உறுதுணையாக இருந்தார்கள் அனைவருக்கும் நன்றி.  TTT படம் வருகிறது கண்ணன் ரவி சார்  இப்படத்திற்கும் பெரிய உதவிகள் செய்தார் அவர் படமும் பெரிய வெற்றி பெறட்டும். இப்படத்தில் எல்லோரும் மிகச்சிறந்த நடிப்பைத் தந்துள்ளார்கள். படம் 2 மணி நேரம் 9 நிமிடங்கள் தான், தீயாகப் பறக்கும். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

    நடிகர் கார்த்தி பேசியதாவது..,

    கடந்த வருடம்,  பெரிய  செலிப்ரேஷனோட இந்த படத்தை வெளியிட  நாங்கள் திட்டமிட்டோம். ஆனால் அது தள்ளிப்போய்விட்டது. எனது முதல் படமும் இது போல  தள்ளிப்போனது. அடுத்த படம் தள்ளிப்போனது.  அதனால தாமதம் என்கிறது எங்களுக்கு புதுசு இல்லை – பழகிவிட்டது. இந்த சூழ்நிலையில், நான் ஞானவேல்ராஜா சார்கிட்ட எப்போதும் ஒரு விஷயத்தை மட்டும் தான் சொன்னேன். “நீங்கள்  நான் என்ன நினைக்கிறேனென்று நினைக்கவே வேண்டாம். உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன். நாம் போராட்டத்தில் உடலைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.

    சின்ன வயதில் என் அப்பா ஒவ்வொரு அரிசியிலும் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும் என்பார். அது போல் சினிமாவில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும். அவர் சொன்னது அப்போது புரியவில்லை இப்போது புரிகிறது

    ஞானவேல்ராஜா சார் சொன்ன மாதிரியே,நான் நிறைய பேருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன். முக்கியமாக சூர்யா  அண்ணா. அவரோட சப்போர்ட் இல்லாமல் இந்த படம் இப்படி ரிலீஸ்  ஆகி இருக்க முடியாது. அதே மாதிரி பைனான்ஸியர்ஸ், டிஸ்ட் ரிபியூட்டர்ஸ்,  எக்ஸிபிட்டர்ஸ், டெக்னீஷியன்ஸ் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. 48 மணி நேரம், 50 மணி நேரம், தூங்காம வேலை செய்து, இந்த படத்தை நம்ம கைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். எல்லா தொழிலாளர்களுக்கும் நான் மனதார நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

    நலன் சார் எல்லாருக்கும் பிடிச்ச ஒரு இயக்குநர். ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஆர்டிஸ்ட்களுக்கும், இயக்குநர்களுக்கும் பிடித்த இயக்குநர்.  அவர் இந்த கான்செப்ட் கொண்டு வந்தப்போ, எனக்கு ரொம்ப பயமா இருந்தது. இந்த கேரக்டருக்கு ஒரு தனி டிரெய்னிங் வேண்டும். ஆனால் நான் டிரெய்னிங் எடுத்து வரவில்லை. On-set-ல கற்றுக்கொண்டேன், மிகவும் சின்சியராக பண்ண முயற்சி செய்துள்ளேன்.ஒவ்வொரு நாளும், எம் ஜி ஆர் சாரோட படங்களைத் திரும்பத் திரும்ப பார்த்து, அவரோட close-ups பார்த்து, “என்னோட முகத்துல அதை எப்படி கொண்டு வரலாம்?”ன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். எனக்கு என்னோட முகத்தையே சரியா பார்க்க முடியாத பயம் இருந்தபோது, அவரோட முகத்தை screen-ல கொண்டு வரணும்னு நினைத்ததே ரொம்ப பயமாக இருந்தது. ஆனால் நலன் மாதிரி ஒரு இயக்குநர், ஜார்ஜ் மாதிரி ஒரு கேமராமேன், அந்த முழு குழுவின் சப்போர்ட் இருந்ததால “இத பண்ண முடியும்”ன்னு ஒரு நம்பிக்கை வந்தது. அது படத்தில் சாத்தியமாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் அவர்களின் இசை இந்த படத்தை இன்னொரு லெவலுக்கு கொண்டு போயிருக்கிறது.

    எம் ஜி ஆர் திரையில் மட்டுமில்லை நிஜத்திலும் ஒரு ஹீரோவாக இருந்திருக்கிறார். அதை மாடர்னாக ரசிக்கக்கூடிய கமர்ஷியல் படமாக  செய்தது ரொம்ப பெரிய விஷயம். காலை அவர் சமாதிக்கு போய் கும்பிட்டு வந்தோம். அங்க நின்னப்போ உணர்வு வேற மாதிரி இருந்தது. நாற்பது வருஷமா அவர் இல்லை. ஆனா இன்னும் அவரை நினைக்கிறோம். இன்னும் அவரைப் பற்றி படம் எடுக்க ஆசைப்படுகிறோம். அங்கிருந்து திரும்பி வரும்போது, இந்த எல்லா விஷயங்களும் சரியாக அமைந்ததுக்கு அவரோட ஆசிர்வாதம் கண்டிப்பாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். குழந்தைகளோடு, குடும்பமா, எல்லாரும் சேர்ந்து பார்த்து ரசிக்ககூடிய ஒரு ஜாலியான படம் இது. இந்த பொங்கலுக்கு  ரிலீஸ்  ஆகுற, ரிலீஸ் ஆகப்போகுற எல்லா படங்களும் மக்களைச் சந்தோஷப்படுத்தி பெரிய வெற்றி பெறவேண்டுமென்று மனசார வாழ்த்துகிறேன். நன்றி.

    இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி எல் தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

    முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.

    பெரும் பொருட்செலவில்  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக  தயாரித்திருக்கிறார்.  

    இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.