
“மக்கள் தலைவா” திரைக்கதை சாமானிய மனிதனை அரசியல் தலைவராக மாற்றும் பண அதிகாரம் படைத்த செல்வந்தர்களின் அரசியல் விளையாட்டை மக்களுக்கு புரியும்படி திரைக்கதை அமைத்து சிறப்பான திரைக்கதையுடன் திரையில் காண்போரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார் இயக்குனர் ராம்தேவின் திரைக்கதை.
சாமானிய மனிதனாக ரகுமரியா தனது தொகுதியில் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்டு சோசியல் மீடியா மற்றும் தினசரி செய்தியில் பிரபலமாகி வருகிறார் அதேசமயம் வெளிநாட்டிலிருந்து தனது சொந்த கிராமத்திற்கு குடி பெயரும் ராதாரவி மக்களிடையே பிரபலமாகும் ரவி மரியாதை வைத்து அரசியல் செய்ய முடிவு செய்கிறார் அதனைத் தொடர்ந்து பண அதிகாரம் படைத்த ராதாரவியின் அதிகாரத்திற்கு உட்பட்டு நாயகன் ரவி மரியா அரசியல் களம் இறங்கி மக்களின் செல்வாக்கோடு பச்சை முத்து மாணிக்கம் ராதாரவியின் பண பலத்தோடும் அரசியலில் மக்களுக்கு தேர்தல் வாக்குறுதியாக போலியான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெறும் அரசியல் தலைவர்களை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து காண்போரை சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளது மக்கள் தலைவா திரைப்படம் .
பண பலம் படைத்த செல்வந்தராக ராதாரவி, தனது அனுபவ நடிப்பால் திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ளார் தனது நடிப்பின் மூலம். மக்கள் தலைவா கதையின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ராதாரவி நடிப்பு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ராதாரவி கதாபாத்திரம் மக்கள் தலைவாபடத்திற்கு அவரது நடிப்பு வலுவான தூணாக உள்ளது. மற்றும் பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், கஞ்சா கருப்பு, பேரரசு உள்ளிட்டோர் தங்களது திரைக்கதையை உணர்ந்து தங்களின் நடிப்பின் மூலம் கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர்.
