Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் மக்கள் சார்பாக வைகை அணையின் 67 அடி உபரி நீர் 58 அடி உபரி நீர் விவசாய கால்வாய் நீர்ப்பாசனத் திட்டத்திற்கு நிரந்தர அரசாணை கோரி கோரிக்கை மனு வழங்கப்பட்டது

Posted on June 21, 2026

வைகை அணையின் 58 கால்வாய் நீர்ப்பாசன திட்டத்தை 58 அடியில் இருந்தே கொடுக்க வேண்டும்…

வைகை அணையின் நீர்மட்டம் 58 அடியை எட்டியதுமே உபரி நீரைத் திறக்கும் வகையில் நிரந்தர அரசாணை (GO) வெளியிட வேண்டும் என்பது உசிலம்பட்டி எம்.எல்.ஏ மற்றும் பாசன விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்

உசிலம்பட்டி தொகுதியில் மக்கள் சார்பாக வைகை அணையின் 58 விவசாய கால்வாய் நீர்ப்பாசனத் திட்டத்திற்கு நிரந்தர அரசாணை கோரி கோரிக்கை மனு வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வைகை அணையின் 58 கால்வாய் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தில், 58 அடி மட்டத்திலிருந்தே உபரி நீரை வெளியேற்றும் நடைமுறையை நிரந்தர அரசாணை மூலம் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. விஜய் அவர்களின் முன்னிலையில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

மேலும், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களிடமும், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களிடமும் இதுகுறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

58 கால்வாய் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, 67 அடியில் இருந்ததை , 58 அடி மட்டத்திலிருந்தே பாசனத்திற்கு தேவையான நீரை வெளியேற்றும் நடைமுறையை நிரந்தரமாக்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை மூலம் உசிலம்பட்டி தொகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு நிலையான நீர்ப்பாசன வசதி கிடைத்து, விவசாய உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது…

PRO : Shiek

  • எங்கள் தங்கம் திரை விமர்சனம்
  • மக்கள் தலைவா திரை விமர்சனம்
  • மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் மக்கள் சார்பாக வைகை அணையின் 67 அடி உபரி நீர் 58 அடி உபரி நீர் விவசாய கால்வாய் நீர்ப்பாசனத் திட்டத்திற்கு நிரந்தர அரசாணை கோரி கோரிக்கை மனு வழங்கப்பட்டது
  • அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது
  • கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme