திரௌபதி  பாகம் 2 விமர்சனம்

திரௌபதி  பாகம் 1-ல் நாயகன் தற்காப்பு கலை வாத்தியார் பிரபாகரன்(ரிச்சர்ட்) மனைவி இழந்து, மகளை அன்பாக வளர்த்து வர, அவர் இருக்கும் கிராமத்துக்கு ஒரு பிரச்சனை வர அதை தீர்த்து வைக்கும்படி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இவரை நாடுகிறார் வருகிறார்.

திரௌபதி  பாகம் 2 திரைப்படம் தொடர அதில் கிராமத்திலிருந்து வெளிநாட்டிற்கு குடி பெயர்ந்த ஒருவர் தனது ஊரில் உள்ள பழமையான கோவிலை சீரமைப்பதற்காக தனது மகளை அனுப்பி வைப்பதாகவும் அவர் அங்கிருந்து கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவார் என்றும் வெளிநாட்டில் இருக்கும் இந்த கிராமத்தை சேர்ந்தவர் கூற  அந்த கோவிலுக்கு சென்றது அந்த பெண் பல நூற்றாண்டு முன் வாழ்ந்த திரௌபதியாக மாறி  இருப்பவர்களுக்கு அருள் கூறுகிறார் அதன் மூலம் திரௌபதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கதை தொடங்குகிறது கதை சொல்ல ஆரம்பிக்கிறார். கதையில் திருவண்ணாமலை ஆளும் வீர வள்ளலார் பார்வையில் காடவராயன்(ரிச்சர்ட்) வளர்கிறார்.

அப்போதும் மதுரையில் உள்ள கில்ஜி படை தன் அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் படியும் இல்லையென்றால் மக்களை  முஸ்லிம் மதத்திற்கு மாற சொல்லி மக்களிடம் மதம் மாற்றம் செய்யும் வேலையை செய்து வருகின்றர். அதே போல் டெல்லியில் இருக்கும் துக்ளக் பார்வையும் தமிழகத்தில் விழ, அவரும் தமிழக மக்களை பரிசுமை சுமத்தி அவர்களை மதமாற்றம் செய்ய  உத்தரவு பிறப்பிக்கிறார் என ஏற்காத மக்களை பொது இடத்தில் வைத்து கொண்டு விடுகின்றனர் இதனை காணும் மக்கள் மக்கள் ஒன்று திரண்டு போராட முடிவு எடுக்கின்றனர் இதற்கு திருவண்ணாமலை மன்னர் வீர வள்ளலார்  போரின் போது  எதிரிகளின் துரோகத்தால் இறக்க, அவர்களை பழிவாங்கி மக்களை காக்கும் பொறுப்பு காடவராயனுக்கு வருகிறது. காடவாராயன் துக்ளக், கில்ஜி என பல எதிரிகளை கொன்று மக்களை காப்பாற்றினாரா ,மன்னர் வீர வள்ளலார் உத்தரவை மதித்து மக்களையும் நாட்டையும் கருட படை வீரரா காடவராயன் எதிர்களை வென்று மன்னராக முடி சூடினார் திரௌபதியின் நிலை என்ன ஆனது இது போன்ற கேள்விக்கு பதிலே திரௌபதியின் 2 படத்தின் திரைக்கதை .