குடற்புண் குணமாக அஷ்ட சூரணம்

அஷ்ட சூரணம் அஷ்ட சூரணம்

குடற்புண் குணமாக அஷ்ட சூரணம்

சுக்கு – 50 கிராம்
மிளகு – 50 கிராம்
திப்பிலி – 50 கிராம்
ஓமம் – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
சோம்பு – 50 கிராம்
இந்துப்பு – 50 கிராம்
பெருங்காயம் – 50 கிராம்

இந்துப்பு, பெருங்காயம் நீங்கலாக, பிற சரக்குகள் அனைத்தையும் இளவறுப்பாய் வறுத்துக் கொள்ளவும். பின்னர் இவற்றைத் தூளாக்கி இந்துப்பு, பெருங்காயம் இவற்றையும் தூள்செய்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
குடற்புண் குணமாக அஷ்ட சூரணம்
பயன்கள்

குடற்புண், வாயுக்கோளாறுகள், பசியின்மை, செரியாமை ஆகியன தீரும். மூன்று வேளை உணவுக்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிடலாம் அல்லது இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இது ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய உணவுப் பொடியாகும். இது ‘அஷ்ட சூரணம்’ என்ற பெயரில் அனைத்து நாட்டு மருத்துக் கடைகளிலும் கிடைக்கிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *