வாஸ்கோடகாமா திரை விமர்சனம்-indiastarsnow.com
நகுல்,ஆர்த்தன பினு,கே.எஸ்.ரவிக்குமார்,வம்சி கிருஷ்ணா, ஆனந்தராஜ், முனீஸ்காந்த்,ரெடிங் கிங்ஸ்லி, பிரேம்குமார்,படவா கோபி மற்றும் பலர் நடிப்பில் என்.வி.அருண் இசையில் ஆர்,ஜி,கே இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் “வாஸ்கோடகாமா”
அறிவியல் முன்னேற்றங்களை கண்டு வரும் இவ்வுலகில் கலியுகத்தில் நாடாகும் திரை கதையாக அமைத்து இயக்கி உள்ளானார் எதிர்காலத்தில் நல்ல செயல்களில் ஈடுபடும் மக்களை குற்றவாளிகளாகவும், தீய செயல்களில் ஈடுபடுபவர்களை உத்தமர்களாகவும் பார்க்கப்படலாம், என்ற கற்பனையை காமெடியாக சொல்வதே ‘வாஸ்கோடகாமா’ படத்தின் கதை.
நல்லது செய்தால் கைது செய்து வாஸ்கோடகாமா என்ற சிறையில் அடைக்கும் காவல்துறை, கெட்டது செய்பவர்களை விடுதலை செய்கிறது. இப்படிப்பட்ட மாறுபட்ட சமூகத்தில் தொடர்ந்து நல்லவனாகவே பயணிக்கும் நாயகன் நகுலும், கெட்டவராக இருந்துவிட்டு வாஸ்கோடகாமா சிறைக்குள் நுழைவதற்காக நல்லவராக நடிக்கும் வம்சி கிருஷ்ணாவும் கைதிகளாக சிறைக்குள் செல்கிறார்கள். அவர்கள் ஏன் அந்த சிறைக்கு செல்கிறார்கள், என்பதை பல கிளைக்கதைகளுடன் நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆர்.ஜி.கே.
தீமை செய்பவர்கள், தீயவர்கள் மட்டுமே வாழ்ந்து வரும் காலத்தில் நல்லவனாக வாழும் வாசுதேவன் (நகுல்) சந்திக்கும் சிரமம் என்ன? எதனால் வாசுதேவன் சிறைக்குச் செல்கிறான்? அந்த சிறையில் அவன் சந்திக்கும் சவால் என்ன? இதுவே படத்தின் கதை.