Blog

  • பிக்பாஸ் வீட்டிற்குள் கண்கலங்கிய லாஸ்லியாவின் தந்தை!

    பிக்பாஸ் வீட்டிற்குள் கண்கலங்கிய லாஸ்லியாவின் தந்தை!

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம், லாஸ்லியாவின் குடும்பத்தினர் அவரை சந்திப்பதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். முதலில் லாஸ்லியாவின் அம்மா மற்றும் இரு தங்கைகள் உள்ளே வந்தனர். அவர்கள் உள்ளே வந்த சில மணி நேரம் கழித்து லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தார்.பிக்பாஸ் வீட்டிற்குள் கண்கலங்கிய லாஸ்லியாவின் தந்தை!

    கிட்ட தட்ட 10 வருடங்களாக தந்தையை பார்க்காமல் இருக்கும் லாஸ்லியாவிற்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பிக்பாஸ் வீட்டில் முதலில் எண்ட்ரியான, அவருடைய அம்மா… நீ நீயாகவே இரு, மற்ற விஷயங்களை தூக்கி போடு என லாஸ்லியா – கவின் காதல் குறித்து, சூசகமா பேசினார்.பின் லாஸ்லியாவின் அப்பா உள்ளே சும்மா ஒரு ஹீரோ போல் நுழைந்தார். உள்ளே வரும் போதே, அவருடைய முகத்தில் ஏதோ ஒரு கோவம் தெரிந்தது. லாஸ்லியாவும் அவரை கண்ணீருடன் உள்ளே வரவேற்றார்.
    பிக்பாஸ் வீட்டிற்குள் கண்கலங்கிய லாஸ்லியாவின் தந்தை!

    வந்த உடனேயே… உன்னை நான் இப்படியா வளர்த்தேன்… அடுத்தவங்க உன்ன காரி துப்புரத்தை பார்க்கத்தான் உள்ளே வந்தியா என காரசாரமாக பேசினார். அனைத்தையும் தூக்கி எரிந்து விட்டு உள்ளே வா என கோவம் கலந்த பாசத்துடன் அவர் வாயில் இருந்து வார்த்தைகள் விழுந்தது.

    பின் லாஸ்லியா, அவருடைய தந்தையிடம் கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட காட்சிகள், நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் கண்களையே கலங்க வைக்கும் விதமாக இருந்தது. லாஸ்லியாவின் தந்தை இது ஒரு கேம் என்று கூறிவிட்டு தானே உள்ளே வந்தாய். நானும் அதற்கு தான் அனுப்பினேன். இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என அவருடைய காதல் விஷயத்திற்கு ஏதிராக பேசினார்.
    பிக்பாஸ் வீட்டிற்குள் கண்கலங்கிய லாஸ்லியாவின் தந்தை!
    மேலும் தனக்கு காசு – பணம் வேண்டாம். அதற்காக உன்னை உள்ளே அனுப்பவில்லை. அதற்கு பிச்சை எடுத்துவிட்டு போகலாம் என பல்வேறு அறிவுரைகளை கூறினார். தொடர்ந்து பேசிய அவர் எப்படி கெத்தாக உள்ளே வாந்தியை அப்படியே வெளியே வா… இது ஒரு கேம் அப்படியே நீயும் பார். இங்கு சொந்தங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் இடம் இல்லை என அவர் மனதில் ஆழமாக சொல்ல வந்த விஷயத்தை பதிவு செய்தார்.

    இனியாவது லாஸ்லியா… காதல் கத்தரிக்காய் என அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு, தனி ஆளாக இருந்து விளையாடுவாரா என்பது வரும் நாட்களில் தான் பார்க்க வேண்டும்.

  • விக்னேஷ் சிவன் கண்கள் முழுக்க முழுக்க அஞ்சலியைத்தான் ஃபோகஸ் செய்ய ??

    விக்னேஷ் சிவன் கண்கள் முழுக்க முழுக்க அஞ்சலியைத்தான் ஃபோகஸ் செய்ய ??

    கண்டிப்பாக இந்தவாட்டி கல்யாணத்தில் முடியும்’ என்று சினிமா துறை வல்லுநர்களால் வண்ணமாக எதிர்பார்க்கப்படுகிறது நயன்தாராவின் விக்னேஷ் சிவன் மீதான காதல். அஜித், விஜய், ரஜினி என மெகா மாஸ் ஸ்டார்களுடனான தனது படங்களை விறுவிறுவென நயன் முடித்துக் கொடுத்ததும் இதற்காகத்தான்! என்றார்கள்
    இந்த நிலையில் இப்போது இதில் ஒரு சின்ன பிரேக். நயன் தாரா மீண்டும் அஜித், சூர்யா என்று ஒரு ரவுண்டை எதிர்பார்க்கிறார். அதேபோல் விக்னேஸ் சிவனின் மனமும் மாறிவிட்டது.
    anjali-voignesh-shivan-indiastarsnow.com
    இப்போது அவரது கண்கள் முழுக்க முழுக்க ஃபோகஸ் செய்ய துவங்கியிருப்பது அஞ்சலியைத்தான். அஞ்சலிக்கு காதல் கற்றுத் தருவது, சிணுங்கல் கற்றுத் தருவது என செம்ம பிஸியாகிவிட்டார் விக்கி.
    anjali-voignesh-shivan-indiastarsnow.com
    என்னது விக்னேஸ் நயனை விட்டுட்டு அஞ்சலியை பிக் அப் பண்ணிட்டாரா? என்று எகிறாதீர்கள். விக்கி அடுத்து ஒரு ஃபுல் லென்த் படத்தை இயக்குவதற்கு முன்பாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்குகிறார். இதன் ஹீரோயின் அஞ்சலிதான். அதனால்தான் விக்கி, அஞ்சலியை ஃபோகஸ் செய்து கொண்டிருக்கிறார். அஞ்சலியும் இப்போ செம்ம பிஸிதான். நாடோடிகள் 2 விரைவில் ரிலீஸ், அதற்கு அடுத்து அனுஷ்கா ப்ரைம் ரோலில் பண்ணும் ‘சைலன்ஸ்’ படத்தில் அஞ்சலி இருக்கிறார், அருள்நிதியுடன் ‘ஓ’ போய்க் கொண்டிருக்கிறது.

    விக்னேஷ் சிவன் செம்ம யூத் ஃபுல் இயக்குநர், தமிழ் சினிமா ரசிகர்களின் டார்லிங்ஸில் அஞ்சலியும் ஒருவர். எனவே இந்த காம்போ இணையும் வெப் சீரீஸ் நிச்சயம் ஹிட்டடிக்கும்! என்கிறார்கள்.
    கலக்கு ஆஞ்ச்லி!

  • காப்பான்’கதை காப்பி என்று நிரூபித்தால் எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன் பட்டுக்கோட்டை பிரபாகர்

    காப்பான்’கதை காப்பி என்று நிரூபித்தால் எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன் பட்டுக்கோட்டை பிரபாகர்

    சூர்யா,கே.வி.ஆனந்த் கூட்டணியின் ‘காப்பான்’படம் திருட்டுக்கதை குற்றச்சாட்டிலிருந்து சட்ட ரீதியாக இன்று தப்பியது. ‘காப்பான்’கதை திருடப்பட்டதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் படத் தயாரிப்பாளர்,இயக்குநர்,கதாசிரியருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது.

    இன்னும் ஒரு வாரத்தில் செப்டெம்பர் 20 தேதி வெள்ளியன்று ரிலீஸாகவிருக்கும் ‘காப்பான்’படத்தின் கதை தன்னுடையது என்றும், ’சரவெடி’என்ற தலைப்பில் தான் எழுதி வைத்திருந்த கதையை கே.வி.ஆனந்த் ‘காப்பான்’என்ற பெயரில் மாற்றி எடுத்திருப்பதாகவும் கடந்த மாதம் குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். ஒன்றிரண்டு வாய்தாக்களுக்குப் பிறகு இன்று இறுதி விசாரணை நடந்த நிலையில் ‘காப்பான்’ ஜான் சார்லஸ் என்பவரிடமிருந்து திருடப்பட்ட கதை என்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
    காப்பான்’கதை காப்பி என்று நிரூபித்தால் எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன் பட்டுக்கோட்டை பிரபாகர்
    இதை ஒட்டி தனது படத்தின் கதாசிரியரான பட்டுக்கோட்டை பிரபாகருடன் அவசர பத்திரிகையாளர் சந்திப்பு இயக்குநர் கே.வி.ஆனந்த் அழைப்பு விடுத்திருந்தார். அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் ஆக்ரோஷமாகப் பேசிய பட்டுக்கோட்டை ,’காப்பான்’ கதை மட்டுமல்ல. 40 வருடமாக எழுதுகிறேன், ஒரு சிறுகதை காப்பி என்று சொல்லுங்கள் எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன்’என்று குறிப்பிட்டார்.

  • நடிகை டாப்ஸி ஒருவருடன் நெருங்கி பழகி வருவதை பற்றி முதல் முறையாக வாய் திறந்து உள்ளார் !!!

    நடிகை டாப்ஸி ஒருவருடன் நெருங்கி பழகி வருவதை பற்றி முதல் முறையாக வாய் திறந்து உள்ளார் !!!

    ஆனால் அவர் ஒரு நடிகரோ அல்லது கிரிக்கெட் வீரரோ கிடையாது என தெரிவித்து உள்ளார். இருந்த போதிலும் தாப்ஸி குறிப்பிடும் அந்த நபர் டென்மார்க்கைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் போயுவாகத்தான் இருக்க முடியும் என ஏற்கனவே பல்வேறு கிசுகிசு வெளியாகி உள்ளது.
    தனது 6 வயதிலிருந்தே பேட்மிண்டன் விளையாடி வரும் மத்தியாஸ் போயு “ஐரோப்பிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2006” இல் கார்ஸ்டன் மொகென்சனுடன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று முதல் சாதனையை பதிவு செய்தார்.

    அதன் பின், போ மற்றும் மொகென்சன் இருவரும் இணைந்து டென்மார்க் சூப்பர் சீரிஸ், பிரஞ்சு சூப்பர் சீரிஸ், சீனா ஓபன் மற்றும் இங்கிலாந்து சூப்பர் சீரிஸின் மற்ற அனைத்து போட்டியிலும் விளையாடி வெற்றி பெற்றனர்.

    ஆனால் அவரது வாழ்க்கையில் மிக முக்கிய தருணமாக அமைந்த ஒரு நிகழ்வு என்றால் அது லண்டனில் நடந்த “ஒலிம்பிக்கில் போட்டி 2012” இல் வெள்ளிப் பதக்கம் வென்றதே .
    டாப்ஸியின் சினித்துறை பயணத்தை பொறுத்தவரை… கடைசியாக கொடுத்த வெற்றி படமான “மிஷன் மங்கல்” ஐ தொடர்ந்து அடுத்து வெளியாக உள்ள சாண்ட் கி ஆங்க் (aand Ki Aankh) படத்திற்காக பெரும் எதிர்பார்ப்பில் உள்ளார்.

  • பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த தர்ஷனின் அம்மா கேக் வெட்டி கொண்டாடிய

    பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த தர்ஷனின் அம்மா கேக் வெட்டி கொண்டாடிய

    நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டிற்கு, லாஸ்லியாவின் பெற்றோர், மற்றும் அவருடைய தங்கைகள் வந்த நிலையில், இன்றைய தினம் தர்ஷனின் அம்மா, மற்றும் அவருடைய தங்கை வரும் காட்சி இன்றைய ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது.Bigg Boss Tamil 3

    தர்ஷன், எப்போதும் போல்… தன்னுடைய துணி மணிகளை சரித்துக்கொண்டிருக்கும் போது, ப்ரீஸ் டாஸ்க் வருகிறது. வெளியில் இருந்து தன்னுடைய அம்மா வருவதை அறிந்து தர்ஷன் ஓடி சென்று முத்தமிட்டு வரவேற்கிறார்.

    Bigg Boss Tamil 3
    அதே போல் தன்னுடைய தங்கையை கட்டி அணைத்து, தன்னுடைய பாசத்தை வெளிப்படுத்தி இருவரையும் வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். அவர்கள் அனைவருடனும் பேசிக்கொண்டிருந்த போது, திடீர் என சாண்டி ஹாப்பி பர்த்டே அட்வான்ஸ்ட் என ஏதோ அவருக்கு ஸ்வீட் வழங்குகிறார்.
    பின் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும், ஓரிரு தினங்களில் வரவிருக்கும் இவருடைய பிறந்தநாளை பிக்பாஸ் வீட்டில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி மகிழும் காட்சி ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

    இன்றைய ப்ரோமோ..

  • பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவின்  குடும்பம் கதறி அழுது ???

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் குடும்பம் கதறி அழுது ???

    இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரீஸ் டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது அது அனைவரும் அறிந்ததுதான். அந்த வகையில் நேற்றைய தினம், இலங்கை செய்திவாசிப்பாளர் லாஸ்லியாவின் அம்மா தங்கைகள் மற்றும் அப்பா ஆகியோர் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வீட்டிற்குள் வந்தனர்.
    Bigg Boss Tamil 3-losliya army-www.indiastarsnow.com
    முதலாவதாக லாஸ்லியாவின் அம்மா மற்றும் அவருடைய தங்கைகள் இருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அவர்கள் வருவார்கள் என்று சற்றும் எதிர்பார்க்காத லாஸ்லியா, அனைவரையும் கண்டு தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினார், அழுதவாறே லாஸ்யா அவர்களை வரவேற்றார். கட்டியணைத்து இத்தனை நாள் பார்க்காத ஏக்கத்தை, பாச மழை பொழிந்தனர்.
    Bigg Boss Tamil 3-losliya army-www.indiastarsnow.com

    பின் லாஸ்லியாவிடம், அவருடைய அம்மா நீ நீயாக இரு. மற்றவர்கள் அனைவரும் அவர்களுடைய விளையாட்டை நன்றாக விளையாடி வருகிறார்கள். நீ எப்படி மாறினாய் என கேள்வி கேட்டார். நீ செய்யும் ஒரு விஷயத்தை தவிர, மற்றது எல்லாம் சரி. அதை விட்டுவிடு, எப்படி நீ அம்மாவையும், தங்கையையும் மறந்தாய் என அழுது கொண்டே கேட்கிறார்.
    Bigg Boss Tamil 3-losliya army-www.indiastarsnow.com
    இதற்கு லாஸ்லியா, இங்கு இப்படி தான் இருக்க முடியும் என்பது போல் ஏதோ கூற, நீ அம்மாவின் மகளாகவே… தனியாக நின்று விளையாடு. உன்னால் தான் நாங்கள் சந்தோஷமாக இருதோம். இப்போது உன்னால் எப்படி மாற முடிந்தது என அறிவுரை கூறுகிறார். லாஸ்லியாவின் தங்கைகளும், எங்களை விடு, அம்மா- அப்பாவை பாரு, இப்போது அப்பாவிற்கு கூட உடல் நிலை சரியில்லை என கூறுகிறார்.

    மேலும் லாஸ்லியாவின் அம்மா, உனக்கு ரசிகர்களிடம் இருந்த வரவேற்பு தற்போது இல்லை என்பதை எடுத்துக் கூறும் விதமாக சூசகமாக சில வார்த்தைகள் பேசுகிறார். அம்மா சொல்லும் வார்த்தைகளை கேட்டு, என்னசொல்வது என தெரியாமல் லாஸ்லியா குழப்பத்தில் சிரிக்கிறார்.Bigg Boss Tamil 3-losliya army-www.indiastarsnow.com

  • முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ‘குயீன்’தொடருக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

    முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ‘குயீன்’தொடருக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

    வெள்ளித்திரையில் பல நெருக்கடிக்கடிகளைச் சந்தித்ததால் அங்கிருந்து தப்பி ஓடி வந்து சின்னத்திரைக்கு ‘குயீன்’என்ற வெப் சீரிஸை இயக்கி வந்த கவுதம் மேனனுக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் தொடரை தங்கள் அனுமதியில்லாமல் அவர் இயக்கி வெளியிடமுடியாது என்று ஜெ’வின் அண்ணன் மகன் தீபக் பேட்டியளித்துள்ளார்.
    ஜெ’வின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை ‘குயீன்’என்ற பெயரில் கவுதம் மேனன் இயக்கியிருக்கும் வெப் சீரிஸ் முடிவடைந்து மிக விரைவில் பிரபல தனியார் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். அவரை அச்சு அசலாக ஜெ’பாத்திரத்துக்கு மாற்றியிருந்த ‘குயீன்’படத்தின் முதல் பார்வை இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி வலைதளங்களில் வைரலாகியிருந்தது. அதைக் கண்டு கொதித்தெழுந்த முன்னாள் முதல்வரின் அண்ணன் மகள் தீபா எங்கள் அனுமதி இல்லாமல் அந்தத் தொடர் எப்படி வெளியாகிறது என்று பார்ப்போம் என்று சவால் விட்டிருந்தார்.

    தீபாவைத் தொடர்ந்து இன்று இது தொடர்பாக கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில்,பத்திரிகைகளின் மூலம் கௌதம் வாசுதேவ் மேனன் ’குயீன்’ என்ற தலைப்பில் வெப் சீரிஸ் எடுக்க உள்ளார் எனத் தெரிந்து கொண்டேன். அத்துடன் அந்தப் படம் ஒரு அரசியல்வாதியின் சுயசரிதை என்று அவர் அறிவித்துள்ளார். எனினும் அது யாருடையது என்று அவர் இன்னும் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே ஏ.எல்.விஜய் எடுக்கும் ’தலைவி’ என்ற படம் ஜெயலலிதா அவர்களின் கதை என்பதால், விஜய் எங்களிடம் கதை கூறி அனுமதி பெற்றார். ஆனால் கவுதம் மேனன் அப்படி எங்களிடம் இதுவரை அனுமதி பெறவில்லை.
    எனவே பத்திரிகை மூலம் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். யாராவது எங்களது குடும்பத்தின் அனுமதி இன்றி ஜெயலலிதா குறித்து படம் எடுக்க முற்பட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியலான தீவிர நடவடிக்கை பாயும். ஆகவே இயக்குநர் கௌதம் மேனன்’குயின்’ என்ற வெப் சீரிஸ் எந்த அரசியல்வாதியின் சுயசரிதை என்பதை விரைவில் தெளிவுப்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    வெள்ளித்திரையில் கவுதம் மேனன் இயக்கி முடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’,’எனை நோக்கிப் பாயும் தோட்டா’ஆகிய இரு படங்களும் ஃபைனான்ஸ் பிரச்சினை காரணமாக நீண்ட காலமாகக் கிடப்பில் இருக்க சின்னத்திரை சீரியலிலும் சிக்கலை எதிர்கொண்டுள்ளார் கவுதம்.

  • நடிகை மஹிமா நம்பியார் சேலையில் இதுவரை வெளியாகாத சூப்பர் புகைப்படங்கள்

    நடிகை மஹிமா நம்பியார் சேலையில் இதுவரை வெளியாகாத சூப்பர் புகைப்படங்கள்

    தாநாயகி மஹிமா நம்பியார் சேலையில் இதுவரை வெளியாகாத சூப்பர் புகைப்படங்கள்

    மகாமுனி படத்தில் நடித்த மகிமா நம்பியார் படம் த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. .மஹிமா நம்பியார் இவரின், விதவிதமான சேலையில் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் இதோ

  • கதாநாயகி வாணி போஜன் வித விதமான சேலையில் இதுவரை வெளியாகாத சூப்பர் புகைப்படங்கள்!

    கதாநாயகி வாணி போஜன் வித விதமான சேலையில் இதுவரை வெளியாகாத சூப்பர் புகைப்படங்கள்!

    தாநாயகி வாணி போஜன். தமிழில், நடிகர் வைபவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல், விஜய் தேவரக்கொண்டா தயாரித்து வரும் படத்திலும் நடிக்க உள்ளார்.

    இவரின், விதவிதமான சேலையில் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் இதோ

  • தங்கத்தை வாங்க தொடங்கினால் அதன் விலை மேலும் அதிகரிக்க தொடங்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்

    தங்கத்தை வாங்க தொடங்கினால் அதன் விலை மேலும் அதிகரிக்க தொடங்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்

    தங்கத்தின் தேவைக்கு இந்தியா இறக்குமதியையே முழுமையாக நம்பியிருக்கிறது இதனால் டாலரின் மதிப்பு உயரும்போது எல்லாம், தங்கத்தின் விலையும் அதிகரிக்கிறது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி மட்டும் ஒரு சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.1, 113 அதிகரித்தது. அன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 650 அதிகரித்தது.

    இதே நிலை நீடித்தால் இந்த ஆண்டு இறுதியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 40 ஆயிரத்தை தொடும் அபாயம் உள்ளது. தங்கத்தின் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சர்வதேச அம்சங்களும் சேர்ந்து தங்கத்தின் விலையை பாதிக்கின்றன. சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி 10-%ல் இருந்து 12.5 %ஆக அதிகரிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் 35 அடிப்படை புள்ளிகள் குறைத்திருப்பது தங்கத்தின் விலைக்கு தடங்கலாகியுள்ளது.

    “ரெப்போ வட்டி விகிதம் என்றால் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்கப்படும் தொகைக்கு வங்கிகள் கொடுக்கக் கூடிய வட்டி விகிதம்தான். இந்த வட்டியை குறைப்பது என்பது ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் அதிக பணம் கடன் வாங்கும் திறனை உருவாக்கும்.”

    இதனால் வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தங்களிடம் அதிக பணம் இருப்பதால், வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்கும். நிதிப் புழக்கம் பொதுவாக அதிகரிக்கும். இதனால், நிறுவனங்களும், மக்களும் இந்தப் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வர். இதனால் தங்கத்திற்காக தேவை அதிகரிக்கும். விளைவு, தங்கத்தின் விலையும் அதிகரிக்கும் என்கின்றன தொழில்துறை வட்டாரங்கள்.

    அதேபோல் பல்வேறு நாடுகளிலுள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்க தொடங்கி விட்டன. இதனால், தங்கத்திற்கு தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு இணையாக சீனாவும் அதிக தங்கத்தை வாங்கி வருகிறது. இதுவும் தங்க விலை உயர்வுக்கு காரணமாகும்.

    தற்போதைய நிலையில் தங்கத்தை வாங்குவதைவிட தேவையின் அடிப்படையில் வாங்க முடிவெடுப்பது நல்லது. தங்கத்தை வாங்க தொடங்கினால், அதன் விலை மேலும் அதிகரிக்க தொடங்கும் .