நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் சாத்தியமா விடவே கூடாது’

நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் சாத்தியமா விடவே கூடாது’

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் சித்ரவதைச் செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தந்தை- மகனைக் கொன்ற அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். தந்தை- மகனை கொன்றவர்களை விடக் கூடாது; சத்தியமா விடவே கூடாது. தந்தை- மகனை சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்துள்ளது. காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரில் சில காவலர்கள் நடந்து கொண்ட முறை, பேசிய பேச்சு அதிர்ச்சியளிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *