Blog

  • Petromax Movie Review

    Petromax Movie Review

    சென்னையில் பிறந்து வளர்ந்து மலேசியாவில் செட்டில் ஆனவர் பிரேம். இவரது தாய், தந்தை சுற்றுலா சென்றபோது கேரள வெள்ளத்தில் சிக்கி இறந்துவிடுகிறார்கள். இதையடுத்து சென்னையில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டை விற்க முயற்சிக்கிறார் பிரேம். ஆனால் அங்கே வசிக்கும் தமன்னா உள்ளிட்ட 4 பேய்கள் வீட்டை விற்க விடாமல் தடுக்கின்றன. வீடு வாங்க வருபவர்களை பயமுறுத்தி அனுப்பவே வீட்டை விற்கும் முயற்சி தடைபடுகிறது.

    இந்த சூழலில் பார் ஒன்றில் வேலை பார்க்கும் முனீஸ்காந்த் வீட்டில் பேய் இல்லை என்று நிரூபித்து விற்று தருவதாக உறுதி தருகிறார். அவசர பண தேவை உள்ள காளி வெங்கட், சத்யன், திருச்சி சரவணகுமார் மூவரையும் இந்த பணிக்கு சேர்த்துக்கொள்கிறார். இவர்கள் நால்வரும் பேய் வீட்டில் 4 நாட்கள் தங்குகின்றனர். இதன்பின் நால்வருக்கும் என்ன ஆனது? அந்த 4 பேய்களும் யார்? பிரேமின் பெற்றோர் என்ன ஆனார்கள்? என்ற கேள்விகளுக்கு படம் பதில் தருகிறது.

    இன்று தமிழ் சினிமாவில் பேய் படம் என்றாலே சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை என்று ஆகிவிட்டது. பெட்ரோமாக்ஸ் படத்தின் கதையும் வழக்கமான கதை தான். ஆனால் முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் திரைக்கதை, வசனத்தால் படம் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு படமாக மாறி இருக்கிறது. இயக்குனர் ரோகின் வெங்கடேசனுக்கும் எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்திரநாத்துக்கும் பாராட்டுகள்.

    தமன்னா படத்தின் நாயகி என்றாலும் துணை கதாபாத்திரம் தான். மற்ற கதாபாத்திரங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம். இருந்தாலும் பிற கதாபாத்திரங்கள் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பதால் அது பெரிய குறையாக தெரியவில்லை. ஆனால் காட்சிகளில் மிகவும் அழகாக தெரிகிறார் தமன்னா.
    படத்தின் கதாநாயகனே முனீஸ்காந்த் தான். நெஞ்சு வலி காரணமாக பயம் வரும்போது அவர் சிரிக்கும் காட்சிகள் சிரிப்பூட்டுகின்றன. அவருடன் சேர்ந்து காளி வெங்கட், திருச்சி சரவணகுமார், சத்யன் மூவரும் வயிறு குலுங்க வைக்கிறார்கள். முதல் பாதியை விட இரண்டாம் பாதி வயிறை அதிகம் பதம் பார்க்கிறது. பேய்களை நால்வரும் வெறுப்பேற்றும் காட்சிகளில் சிறுவர்களாகவே மாறி விடுகிறோம்.

    யோகி பாபு, மைனா நந்தினி வரும் காட்சிகளும் சிரிக்க வைக்கின்றன. கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் தனது குணச்சித்திர கதாபாத்திரத்தால் தனித்து தெரிகிறார். பிரேம், மைம் கோபி, பேபி மோனிகா, பேய் கிருஷ்ணன் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
    டேனி ரேமண்டின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாக இருக்கின்றன. ஜிப்ரானின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. லியோ ஜன பலைன் படத்தொகுப்பும் கச்சிதம். தெலுங்கில் வெளியான படத்தின் ரீமேக் தான் என்றாலும் தமிழ் ரசிகர்ளுக்கு ஏற்றவாறு ரோகினும் சுரேந்திரநாத்தும் திரைக்கதையை மாற்றி இருக்கிறார்கள்.

    வசனங்களும் நன்றாக சிரிக்க வைக்கின்றன. வழக்கமாக பேய் படத்தில் இருக்கும் லாஜிக் மீறல்களும் பிளாஷ்பேக் காட்சியும் மட்டும் தான் சின்ன சின்ன குறைகள். நீண்ட நாள் கழித்து 1 மணி நேரம் வயிறு குலுங்க சிரிக்க வைத்து ஒரு நல்ல கருத்தையும் சொல்லி அனுப்புகிறது இந்த பெட்ரோமாக்ஸ்.

  • puppy movie review

    puppy movie review

    கல்லூரி மாணவண் நாயகன் வருண், வகுப்பறையில் SEX VEDIO வீடியோ பார்த்த குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். வருண் வீட்டிற்கு மேலே குடிவருகிறார் நாயகி சம்யுக்தா. இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. நண்பர் யோகிபாபுவின் அறிவுரைப்படி சம்யுக்தாவிடம் காதலை சொல்லுகிறார் வருண்.

    நாயகி சம்யுக்தா உல்லாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் வருணுக்கு, அந்த சூழ்நிலையும் அமைகிறது. இருவரும் ஒன்றாகி சில நாட்களில் சம்யுக்தா, தான் கர்ப்பமாக இருப்பதாக உணர்கிறார். வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனை ஆகும் என்று நினைக்கும் இவர்கள் எப்படி இந்த சூழ்நிலையை சமாளித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் வருண் பல படங்களில் சிறு வேடங்களில் நடித்தாலும், இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காதல், காமெடி, செண்டிமெண்ட், நடனம் என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். படம் முழுக்க இவரை சுற்றியே கதை நகர்வதால் அதை உணர்ந்து திறம்பட நடித்திருக்கிறார். நாய் மீதான செண்டிமெண்ட் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார்.

    நாயகி சம்யுக்தாவிற்கு பொருப்பான கதாப்பாத்திரம். அதை உணர்ந்து நடித்திருக்கிறார். வருணின் நண்பராக வரும் யோகிபாபு படம் முழுவதும் பயணிக்கிறார். பல இடங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. நான் கடவுள் ராஜேந்திரன், கண்டிப்பான அப்பாவாக வரும் மாரி முத்து ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    இளைஞர்கள் இளம் பெண்களுடன் பழக ஆசைப்பட்டு, காதல், அதைத் தொடர்ந்து கர்ப்பமாக்குதல், பின்னர் அதை கலைக்க மருத்துவமனைக்கு செல்கிறார்கள். ஒரு உயிரை கொல்வது மிகவும் தவறு. இந்த மாதிரி தவறுகள் நடக்காமல் ஒரு ஆணும் பெண்ணும் கட்டுப்பாட்டுடன் பழக வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் நட்டு தேவ். இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி விழிப்புணர்வு படமாகவும் கொடுத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கவனிக்க வைத்திருக்கிறார்.

    தரண் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார். தீபக் குமாரின் ஒளிப்பதிவு கலர்ப்புல்லாக அமைந்திருக்கிறது.

  • Namita official  Photoshoot

    Namita official Photoshoot

    நடிகை நமிதாவின் சிவப்பு புடவை கிளுகிளுப்பு போட்டோ இன்று வெளியிட்டார்

    நடிகை நமிதாவின் சிவப்பு புடவை கிளுகிளுப்பு போட்டோ இன்று வெளியிட்டார்

  • பிகில் டிரெய்லர் தெறிக்க விட

    பிகில் டிரெய்லர் தெறிக்க விட

    சென்னை,

    நடிகர் விஜய் நடித்து, அட்லி இயக்கிய ‘பிகில்’ படம் தீபாவளிக்கு வருவது உறுதி என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார். ‘வில்லு’ படத்துக்கு பின், இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம், இது.

    இந்த படத்தில், விவேக், கதிர், ஜாக்கி ஷராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, மனோபாலா, தேவதர்ஷினி, இந்துஜா, அமிர்தா ஐயர், ரெப்பா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.

    ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகிய மூவரும் தயாரித்துள்ளனர்.

    படத்தில், கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்து இருக்கி றார். பிசியோதெரபிஸ்ட் ஆக நயன்தாரா நடித்துள்ளார். படம், மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி இருக்கிறது. அதற்கு இணையாக வியாபாரமும் ஆகியிருக்கிறது. படம், விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணியளவில் டுவிட்டரில் வெளியானது. 2.41 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய இதன் முதல் காட்சியில், கால்பந்து போட்டியை விளையாடுவதற்காக டாஸ் போடப்படுகிறது. தொடர்ந்து வரும் சில காட்சிகளில் நடிகர் விஜய் தோன்றுகிறார்.

    நடிகர் விஜய் கால்பந்து போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தும் வகையில் விளையாடுவது போலவும், அதிரடி சண்டை காட்சிகளில் ஈடுபடுவது போன்றும், நடிகை நயன்தாராவுடன் சில காட்சிகளும், நடனம் ஆடும் காட்சிகளும் மற்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையிலான வசனம் பேசும் காட்சிகளும் வெளியிடப்பட்டு உள்ளன.

    டிரெய்லரில், அனைத்து மகளிருக்காகவும் படம் அர்ப்பணிக்கப்படுகிறது என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. ஹேப்பி தீபாவளி நண்பா என்ற வாசகத்துடன் டிரெய்லர் முடிவடைகிறது.

  • மலேசியப் பொருட்கள் இறக்குமதியை குறைத்துக் கொள்ள முடிவு?

    மலேசியப் பொருட்கள் இறக்குமதியை குறைத்துக் கொள்ள முடிவு?

    மலேசியப் பொருட்கள் இறக்குமதியை குறைத்துக் கொள்ள முடிவு

    மலேசியப் பொருட்கள் இறக்குமதியை குறைத்துக் கொள்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சமையல் எண்ணெய் இறக்குமதியில் முதல் இடத்தில் உள்ள நாடு இந்தியா. சமையல் எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்கை வகிக்கும் பாமாயிலுக்காக மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளையே இந்தியா அதிகம் சார்ந்துள்ளது.

    அந்த இரு நாடுகளிடம் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 90 லட்சம் டன், பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்கிறது. அதிகபட்சமாக இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மலேசியாவிடம் இருந்து 39 லட்சம் டன் பாமாயிலை வாங்கியுள்ளது இந்தியா. இந்த நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் மலேசியா எடுத்த நிலைப்பாட்டால், இந்தியாவுடனான அந்நாட்டின் வர்த்தக உறவில் பூசல் ஏற்படும் சூழல் உண்டாகியுள்ளது.

    கடந்த மாதம் நடந்த ஐ.நா. அவை கூட்டத்தில் பேசிய மலேசிய பிரதமர் மகாதீர் முகமது, காஷ்மீருக்குள் இந்தியா ஊடுருவி இருப்பதாகவும் ஆக்கிரமித்து இருப்பதாகவும், கூறி இருந்தார். அவரது பேச்சால், மத்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    எனவே தான், மலேசியா நாட்டுப் பொருட்கள் இறக்குமதியைக் குறைத்துக் கொள்வதென, வர்த்தக அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மலேசியாவுக்குப் பதில் இந்தோனேசியாவிடம் இருந்து பாமாயில் இறக்குமதியை அதிகப்படுத்துவது எனவும், அர்ஜெண்டினாவிடம் இருந்து சோயா எண்ணெய்யையும், உக்ரைனிடம் இருந்து சூரிய காந்தி எண்ணெய்யையும் அதிகம் இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • அமெரிக்காவில் டெல் கே கணேசன்னுக்கு க்ளோபல் ஐகான்ஸ் விருது

    அமெரிக்காவில் டெல் கே கணேசன்னுக்கு க்ளோபல் ஐகான்ஸ் விருது

    ஒரு தமிழனாகப் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும், தமிழின் மீதும் தமிழ் கலை-கலாச்சாரங்களின் மீது பெருமதிப்பு கொண்டு, தனித்துவமான, உணர்வுபூர்வமான திரைப்படங்களை கைபா பிலிம்ஸ் என்ற எனது நிறுவனத்தின் மூலம் நான் தயாரித்து வருவது நீங்கள் அறிந்ததே.

    2019 ஒரு கிடைத்தற்கரிய ஒரு மிகச் சிறந்த ஆண்டு, ஏனெனில் இது ‘மகாத்மாவின் 150வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஆண்டு. இத்தகைய ஒரு மிகச் சிறந்த ஆண்டில், அமெரிக்காவின் மிகவும் பழமையான, பாரம்பரியமிக்க லாபநோக்கமற்ற நிறுவனங்களில் முன்னணி நிறுவனம் ‘மெட்ரோபாலிட்டன் ஆசியன் ஃபேமிலி சர்வீசஸ் இன்க்’.

    தனது அர்பணிப்பான பயணத்தில் 27வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நிறுவனம், இந்த ஆண்டை ‘மகாத்மாவின் 150வது பிறந்த நாள் விழா சிறப்பு ஆண்டாக’ கொண்டாட முடிவெடுத்து இருக்கிறது. அதன் ஒரு முக்கிய அங்கமாக, பல்வேறு துறைகளிலும் காந்தீய வழிகளில், அவரது பெருமதிப்பிற்குரிய கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களை தேர்ந்தெடுத்து கௌரவிக்கும் வகையில் ‘டாப் 20

    வழங்க தீர்மானித்திருக்கிறார்கள்.

    வரும் அக்டோபர் 12ம் தேதி, அமெரிக்காவின் இல்லினாயிஸ் நகரில் சுமார் 1000 சிறந்த தலைவர்கள், மற்றும் தனித்துவமானவர்கள் முன்னிலையில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் எனக்கும் அந்த விருது வழங்கப்படவிருக்கிறது.

    அமெரிக்காவுக்கான Indian Consul General, Chicago Sudhakar Dalela and US Congressman Raja Krishnamoorthy அவர்கள் இந்த விருதை வழங்கி கௌரவிக்கவிருக்கிறார்கள்.

    இந்த பொன்னான தருணத்தில், ஒரு தமிழனாக, ஒரு இந்தியனாக, மகாத்மா காந்தியின் மண்ணின் மைந்தனாக இந்த விருதை நான் பெறும் மட்டற்ற மகிழ்ச்சியை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

    என்றும் உங்கள் ஆதரவை போற்றும்,

    டெல் கே கணேசன்

  • விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ சங்கத்தமிழன்’ படத்துக்குச் சிக்கல்

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ சங்கத்தமிழன்’ படத்துக்குச் சிக்கல்

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ சங்கத்தமிழன்’ படத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கான பின்னணி என்ன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், நாசர், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சங்கத்தமிழன்’. விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்தப் படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ள லிப்ரா நிறுவனம், ‘தீபாவளி வெளியீடு’ என அறிவித்துவிட்டது. விரைவில் தணிக்கைச் செய்யப்பட்டுப் படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு. இதனிடையே ‘வீரம்’ படத்தால் ‘சங்கத்தமிழன்’ படத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ‘வீரம்’ படத்தைத் தயாரித்ததும் விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    ‘ வீரம்’ சமயத்தில் நடந்தது என்ன?
    பல ஆண்டுகள் கழித்து அஜித் – விஜய் இருவரது படங்களும் ஜனவரி 10-ம் தேதி வெளியானது. ‘ஜில்லா’ மற்றும் ‘வீரம்’ படங்கள் ஒரே தேதியில் வெளியானதால், இரண்டு படங்களுக்குமே சிக்கல் ஏற்பட்டது. ’ஜில்லா’ படத்துடன் ‘வீரம்’ வந்ததால் அந்தப் படத்துக்கு நஷ்டம், ‘வீரம்’ படத்துடன் ‘ஜில்லா’ வந்ததால் அந்தப் படத்துக்கு நஷ்டம். இரண்டு படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் லாபம் தான் என்றாலும், படத்தைப் பெரும் விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்களுக்கே நஷ்டம் ஏற்பட்டது.

    அந்தச் சமயத்தில் தமிழக அரசிடமிருந்து பெறப்படும் வரிச்சலுகை என்பது படத்தின் வசூலுக்குப் பெரிதும் உதவியது. இரண்டில் ஒரு படத்துக்குக் கொடுத்துவிட்டு, மற்றொரு படத்துக்குக் கொடுக்காமல் இருக்க முடியாது என்பதால் இரண்டு படங்களுக்குமே தமிழக அரசு வரிச்சலுகை வழங்கவில்லை. ஆனால், இரண்டு படத்தின் விநியோகஸ்தர்கள் வியாபாரத்தில் வரிச்சலுகை கிடைத்துவிடும் என்றே கூறியுள்ளனர். ‘ஜில்லா’ படத்துக்கு வரிச்சலுகைக் கிடைக்கவில்லை என்றவுடன், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி 10% பணத்தை விநியோகஸ்தர்களுக்கு திரும்ப அளித்துவிட்டார்.

    அதே போல், ‘வீரம்’ படத்தின் தயாரிப்பாளர் தனக்கு வரும் விநியோகஸ்தர்கள் தொகையில் 10% பிடித்துவிட்டுக் கொடுங்கள் எனவும் தெரிவித்துவிட்டார். ஆனால், அவர் சொல்வதற்கு முன்பாகவே சேலம் விநியோக உரிமையை 7ஜி சிவா முழுத்தொகையையும் வழங்கிவிட்டார். 10% தொகையைத் திரும்பக் கேட்ட போது கண்டிப்பாகக் கொடுத்துவிடுகிறோம் என்று கூறியுள்ளது விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்.

    ‘பைரவா’ படத்தின் போது நடந்த பேச்சுவார்த்தை
    தொடர்ச்சியாக 10% தொகையைத் தராமல் இருந்ததால், அடுத்த படத்தின் மீது சரி செய்து கொள்ளலாம் என விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தச் சமயத்தில் தான் ‘பைரவா’ படத்தைத் தயாரித்தது. அது வெளியாகும் போதும் 7ஜி சிவாவுக்குப் பணம் வழங்கவில்லை. விஜய் படம் பெரிய பட்ஜெட் என்பதால், 7ஜி சிவாவும் எதுவும் கேட்கவில்லை. ஆனால், இது தொடர்பாக ‘பைரவா’ சமயத்திலேயே புகார் ஒன்றையும் வழங்கியுள்ளார். இந்தப் புகார் கடிதம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ‘சங்கத்தமிழன்’ படத்துக்குச் சிக்கல்
    ‘வீரம்’ சமயத்தில் கொடுக்க வேண்டிய தொகையை, விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கித் தருமாறு தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார் 7ஜி சிவா. இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்போது விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் வெங்கட்ராம ரெட்டி காலமாகிவிட்டதால், என்ன செய்வதென்று பேசி வருகிறார்கள். ஆனால், இந்தத் தொகையைக் கொடுத்தால் மட்டுமே சேலம் ஏரியாவில் படத்தின் வியாபாரம் நடக்கும் என்று தெரிவித்துவிட்டார்கள்.

    இதனால் ‘சங்கத்தமிழன்’ பட வெளியீட்டில் சிக்கல் தொடங்கியுள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்தால் மட்டுமே பட வெளியீடு என்பதில் விநியோகஸ்தர்களும் தெளிவாக இருக்கிறார்கள்.

  • இன்று பட பூஜையுடன் தொடங்கிய சம்பவம் படப்பிடிப்பு  ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும்

    இன்று பட பூஜையுடன் தொடங்கிய சம்பவம் படப்பிடிப்பு ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும்

    ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் சம்பவம்

    மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் பங்கு பெறுகின்றனர்.

    நேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

    இப்படத்தை இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். இசை: அம்ரிஷ், ஒளிப்பதிவு: முத்து கே.குமரன், படத்தொகுப்பு: கோபி கிருஷ்ணா, வசனம்: நீலன் கே.சேகர், பாடல்கள்: அருண்பாரதி, முருகானந்தம், கலை: ஏ.பழனிவேல், நடனம்: தினேஷ், ஸ்டண்ட்: விஜய் ஜாகுவார், தயாரிப்பு மேற்பார்வை: ஜி.சங்கர், நிர்வாக தயாரிப்பு: கேஆர்.ஜி.கண்ணன், இணை தயாரிப்பு : டாக்டர் ஆர்.முருகானந்த்.

    இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கதையின் நாயகன்கள் ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ், கதாநாயகிகள் பூர்ணா, சிருஷ்டி டாங்கே, தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ், இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் உள்ளிட்ட படக்குழுவினரும், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஜாக்குவார் தங்கம், இயக்குனர்கள் பேரரசு, ஏ.வெங்கடேஷ், தரணி, திருமலை, நடிகர் நட்டி என்கிற நட்ராஜன், நாஞ்சில் சம்பத், தயாரிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், கே.ராஜன் உள்ளிட்ட பிரபலங்களும் பலர் கலந்துக் கொண்டனர்.

    Sambavam Film Pooja Starring – Srikanth Dance Master Dinesh, Poorna Shrustidange

  • தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய பாராட்டு தமன்னாவுக்கு

    தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய பாராட்டு தமன்னாவுக்கு

    பிரபல நடிகைக்கு வைர மோதிரம் பரிசுதெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய பாராட்டு தமன்னாவுக்கு

    ‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா, தமன்னா ஆகிய இருவரும் நடித்திருந்தனர். ஆனால் அந்த படத்தில் சிரஞ்சீவியின் காதலியாக நடித்த தமன்னாவின் நடிப்பிற்கு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய பாராட்டு கிடைத்துள்ளது. இந்நிலையில், சைரா படத்தை தயாரித்த நடிகர் ராம் சரணின் மனைவி உபசான, விலையுர்ந்த வைர மோதிரம் ஒன்றை தமன்னாவிற்கு பரிசளித்துள்ளார். அதே சமயம், படத்தில் மற்றொரு நாயகியாக நடித்த நயன்தாராவிற்கு பரிசு எதுவும் வழங்கப்படவில்லை.

  • ‘கைதி’ படத்தின் புதிய போஸ்டர்

    ‘கைதி’ படத்தின் புதிய போஸ்டர்

    தீபாவளிக்கு வெளியாகும் கார்த்தியின் Kaithi Film new poster launch
    தீபாவளி தினத்தில் விஜய்யின் ‘பிகில்’ மற்றும் கார்த்தியின் ‘கைதி’ திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘கைதி’ படத்தின் புதிய ?போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தீபாவளி வெளியீட்டை படக்குழு உறுதி செய்துள்ளது. இதனிடையே விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ தீபாவளி வெளியீட்டில் இருந்து பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.