Category: News

  • டிஸ்னி பிக்சார் புதிய விஷுவல் ஸ்பெக்டக்கிள் “எலியோ” – தமிழ் ட்ரெய்லர் வெளியீடு! ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளிவரவுள்ளது!

    டிஸ்னி பிக்சார் புதிய விஷுவல் ஸ்பெக்டக்கிள் “எலியோ” – தமிழ் ட்ரெய்லர் வெளியீடு! ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளிவரவுள்ளது!


    இன்சைட் அவுட் 2 மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, டிஸ்னி மற்றும் பிக்சார் இணைந்து மற்றுமொரு கனவுபோன்ற அதிரடியான திரைப்படத்தை வழங்க உள்ளன – “எலியோ”! இந்த இன்டர்கலக்ஸி அத்தியாயம் வரும் ஜூன் 20, 2025 அன்று ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

    இன்க்ரெடிபிள்ஸ், டாய் ஸ்டோரி, ஃபைண்டிங் நீமோ, இன்சைட் அவுட் போன்ற கனவுகளை ரசிகர்களுக்கு வழங்கிய புகழ்பெற்ற ஸ்டூடியோ, இப்போது நம்மை விண்வெளிக்கு அப்பால் அழைத்துச் செல்லும் புதிய அனுபவத்தை வழங்குகிறது.

    எலியோ – விண்வெளியை பற்றிய ஆசையுடன் வாழும் ஒரு சிறுவன், எதிர்பாராத விதமாக அண்டாரங்கள் முழுவதும் பயணம் செய்யும் புது அவதாரத்தில், பூமியின் தூதராக பரிசீலிக்கப்படுகிறான்! வித்தியாசமான கிரகங்கள், வினோதமான உயிரினங்கள் மற்றும் பிரபஞ்சத்தை பாதிக்கும் ஒரு பெரும் சிக்கலை சந்திக்கிறான் எலியோ. இந்த பயணத்தில், தனக்கென இருக்கும் இடத்தை உணர்வதும், உண்மையிலேயே யார் என்பதை கண்டுபிடிப்பதும் தான் கதையின் மையம்.

    இத்திரைப்படத்தை இயக்கியவர்கள்:
    மடலின் ஷரஃபியன் (Burrow),
    டோமீ ஷீ (Turning Red, Bao),
    ஏட்ரியன் மோலினா (Coco).

    வாய்ஸ் காஸ்ட்:

    யோனாஸ் கிப்ரீயாப் – எலியோ

    சோயி சால்தானா – ஆன்ட் ஒல்கா

    ரெமி எட்ஜர்லி – கிளோர்டன்

    பிராட் காரெட் – லார்ட் கிரிகான்

    ஜமீலா ஜமீல் – தூதர் குவெஸ்டா

    ஷர்லி ஹென்டர்சன் – OOOOO

    டிஸ்னி பிக்சார் வழங்கும் “எலியோ” – ஜூன் 20, 2025 முதல் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்!

    Tamil Trailer : https://youtu.be/llO2FBh9P9w?si=e8ifLQBRg0bANzQh

  • ​Disney Pixar’sdrops the language trailer of latest visual spectacle ELIO ; coming to theatres on June 20, 2025​* ​Tamil Trailer: https://youtu.be/llO2FBh9P9w?si=e8ifLQBRg0bANzQh After the phenomenal success of Inside Out 2, Disney and Pixar return with Elio, a must-watch intergalactic adventure hitting cinemas on June 20th, 2025, in English, Hindi, Tamil, and Telugu!​ From the Studio that brought the wondrous stories like Incredibles, Toy Story, Finding Nemo, Inside Out, and many more, brings a bold new cinematic journey beyond the stars. Meet Elio, a space-obsessed boy with a wild imagination who suddenly finds himself beamed across the galaxy and declared Earth’s ambassador by a quirky council of aliens. As he navigates bizarre planets, eccentric lifeforms, and a crisis of cosmic scale, Elio must learn what it truly means to belong — and who he is destined to become. Directed by Madeline Sharafian (Burrow), Domee Shi (Turning Red, Bao), and Adrian Molina (Coco), Elio boasts a stellar voice cast featuring: – Yonas Kibreab as Elio – Zoe Saldaña as Aunt Olga – Remy Edgerly as Glordon – Brad Garrett as Lord Grigon – Jameela Jamil as Ambassador Questa – Shirley Henderson as OOOOO Disney Pixar’s ELIO will hit theatres on June 20th, 2025 in English, Hindi, Tamil, and Telugu.

    ​​Disney Pixar’sdrops the language trailer of latest visual spectacle ELIO ; coming to theatres on June 20, 2025​*

    ​Tamil Trailer: https://youtu.be/llO2FBh9P9w?si=e8ifLQBRg0bANzQh

    After the phenomenal success of Inside Out 2, Disney and Pixar return with Elio, a must-watch intergalactic adventure hitting cinemas on June 20th, 2025, in English, Hindi, Tamil, and Telugu!​

    From the Studio that brought the wondrous stories like Incredibles, Toy Story, Finding Nemo, Inside Out, and many more, brings a bold new cinematic journey beyond the stars. Meet Elio, a space-obsessed boy with a wild imagination who suddenly finds himself beamed across the galaxy and declared Earth’s ambassador by a quirky council of aliens. As he navigates bizarre planets, eccentric lifeforms, and a crisis of cosmic scale, Elio must learn what it truly means to belong — and who he is destined to become.

    Directed by Madeline Sharafian (Burrow), Domee Shi (Turning Red, Bao), and Adrian Molina (Coco), Elio boasts a stellar voice cast featuring:

    – Yonas Kibreab as Elio
    – Zoe Saldaña as Aunt Olga
    – Remy Edgerly as Glordon
    – Brad Garrett as Lord Grigon
    – Jameela Jamil as Ambassador Questa
    – Shirley Henderson as OOOOO

    Disney Pixar’s ELIO will hit theatres on June 20th, 2025 in English, Hindi, Tamil, and Telugu.
    ​Tamil Trailer: https://youtu.be/llO2FBh9P9w?si=e8ifLQBRg0bANzQh

    After the phenomenal success of Inside Out 2, Disney and Pixar return with Elio, a must-watch intergalactic adventure hitting cinemas on June 20th, 2025, in English, Hindi, Tamil, and Telugu!​

    From the Studio that brought the wondrous stories like Incredibles, Toy Story, Finding Nemo, Inside Out, and many more, brings a bold new cinematic journey beyond the stars. Meet Elio, a space-obsessed boy with a wild imagination who suddenly finds himself beamed across the galaxy and declared Earth’s ambassador by a quirky council of aliens. As he navigates bizarre planets, eccentric lifeforms, and a crisis of cosmic scale, Elio must learn what it truly means to belong — and who he is destined to become.

    Directed by Madeline Sharafian (Burrow), Domee Shi (Turning Red, Bao), and Adrian Molina (Coco), Elio boasts a stellar voice cast featuring:

    – Yonas Kibreab as Elio
    – Zoe Saldaña as Aunt Olga
    – Remy Edgerly as Glordon
    – Brad Garrett as Lord Grigon
    – Jameela Jamil as Ambassador Questa
    – Shirley Henderson as OOOOO

    Disney Pixar’s ELIO will hit theatres on June 20th, 2025 in English, Hindi, Tamil, and Telugu.

  • *’மக்கள் செல்வன் ‘விஜய் சேதுபதி- பூரி ஜெகன்நாத் -சார்மி கார் -பூரி கனெக்ட்ஸ் -கூட்டணியில் இணைந்த நடிகை சம்யுக்தா*

    *'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி- பூரி ஜெகன்நாத் -சார்மி கார் -பூரி கனெக்ட்ஸ் -கூட்டணியில் இணைந்த நடிகை சம்யுக்தா*
    ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – இயக்குநர் பூரி ஜெகன்நாத்- சார்மி கவுர் – பூரி கனெக்ட்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா இணைந்திருக்கிறார்.

    அற்புதமான இயக்குநர் பூரி ஜெகன்நாத், பல் துறை திறமை கொண்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை முன்னணி வேடத்தில் நடிக்க வைத்து, தன்னுடைய இலட்சிய பான் இந்திய படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். தனது அதி நவீன பாணியிலான கதை சொல்லலுக்கு பெயர் பெற்ற பூரி ஜெகன்நாத் – தனது தனித்துவமான வெகுஜன மற்றும் வணிகத்தனம் மிக்க பாணியை, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் காந்தம் போன்ற திரை தோற்றத்துடன் இணைந்து தனித்துவமான சினிமா அனுபவத்தை வழங்க உறுதியளிக்கிறார். இந்த திரைப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கின்றனர். மேலும் இது தொடர்பான அனைத்து முன் தயாரிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளன.

    இப்படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் பட்டியலை தயாரிப்பாளர்கள் அண்மையில் ஒன்றன்பின் ஒன்றாக அறிவித்தனர். தபு, துனியா விஜய் குமார் ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த பட்டியலில் தற்போது ‘தென்னிந்திய சினிமாவின் வசீகரம் ‘என போற்றப்படும் திறமையான நடிகை சம்யுக்தா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    இது வழக்கமான கதாநாயகி வேடம் அல்ல. சம்யுக்தாவின் கதாபாத்திரம் கதையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நடிப்பிற்கும், உணர்ச்சிபூர்வமான ஆழத்திற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நடிகை சம்யுக்தா – இந்த படத்தின் கதை மற்றும் அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நாளை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

    சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பை நடத்துவதற்கான இடங்களை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இதன் வழக்கமான படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் தொடங்குகிறது.

    பான் இந்திய அளவிலான இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியிடப்படும். மேலும் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவரும் நோக்கில் இந்த படம் இருக்கும்.

    நடிகர்கள் :
    ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார்.

    தொழில்நுட்பக் குழு :

    எழுத்து & இயக்கம் : பூரி ஜெகன்நாத்
    தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்னாத் – சார்மி கவுர்
    தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ்
    தலைமை நிர்வாக அதிகாரி : விஷூ ரெட்டி
    மக்கள் தொடர்பு : யுவராஜ்
    மார்க்கெட்டிங் : ஹாஷ்டாக் மீடியா

  • Samyuktha Comes On Board For Vijay Sethupathi, Puri Jagannadh, Charmme Kaur, Puri Connects’ Most Ambitious Pan India Project

    Samyuktha Comes On Board For Vijay Sethupathi, Puri Jagannadh, Charmme Kaur, Puri Connects’ Most Ambitious Pan India Project

    Dashing director Puri Jagannadh is all set to begin the shoot for his most ambitious Pan-India project, with the versatile Vijay Sethupathi in the lead role. Known for his high-octane storytelling, Puri blends his signature mass and commercial style with Vijay Sethupathi’s magnetic screen presence, promising a one-of-a-kind cinematic experience. The film will be produced under the Puri Connects banner by Puri Jagannadh and Charmme Kaur, and all pre-production formalities have been completed.

    The makers recently announced the key cast members of the movie one after the other. Tabu and Duniya Vijay Kumar play crucial roles in the movie. Now, the very talented Samyuktha who is termed as the lucky charm of Tollywood comes on board to portray leading lady in the movie.

    Importantly, this is not a conventional heroine role. Samyuktha’s character is integral to the narrative, with ample scope for performance and emotional depth. The actress is reportedly thrilled with the story and her role, and is eager to begin shooting.

    The team has recently completed an extensive recce in Hyderabad and Chennai to finalize locations for the first schedule. The regular shoot is set to begin in the last week of June.

    This pan-India project will be released in Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi, aiming to captivate audiences across the country.

    Cast: Makkal Selvan Vijay Sethupathi, Samyuktha, Tabu, Vijay Kumar

    Technical Crew:
    Writer, Director: Puri Jagannadh
    Producers: Puri Jagannadh, Charmme Kaur
    Banner: Puri Connects
    CEO: Vishu Reddy
    PRO: Yuvraaj
    Marketing: Haashtag Media

  • JioHotstar Unveils Teaser of ‘Good Wife’ Starring Priyamani and Sampath Raj, Directed by Revathi The teaser of Hotstar Specials ‘Good Wife’, helmed by Director Revathi and produced by Banijay Asia was officially released on JioHotstar social handles.

    JioHotstar Unveils Teaser of ‘Good Wife’ Starring Priyamani and Sampath Raj, Directed by Revathi
The teaser of Hotstar Specials ‘Good Wife’, helmed by Director Revathi and produced by Banijay Asia was officially released on JioHotstar social handles.
    Chennai, June 16, 2025 – JioHotstar set social media abuzz today by dropping the Teaser of its forthcoming Hotstar Specials drama, the Tamil adaptation of the internationally acclaimed series The Good Wife. Headlined by National Award–winner Priyamani and versatile actor Sampath Raj, the show marks Actor-Director Revathi’s OTT directorial debut.

    This Tamil adaptation brings a regional touch to the globally beloved format, following the success of its Hindi adaptation, The Trial- Pyaar, Kanoon, Dhokha, which featured Kajol and Jisshu Sengupta in lead roles and was a massive hit on JioHotstar in India.

    Making her OTT directorial debut, actor-director Revathi expressed her excitement saying, “Adapting The Good Wife in Tamil, after its successful Hindi remake, is a fantastic opportunity. The show has a strong female lead, whose journey is filled with emotional complexities and professional challenges, making it a great script to execute. I am excited to be working with talented actors like Priyamani and Sampath Raj, and look forward to delivering a narrative that’s both engaging and relatable. This will be an experience I cherish as I step into the world of OTT with proven industry leaders JioHotstar and Banijay Asia.”

    Krishnan Kutty, Head of Cluster, Entertainment (South) – JioStar added, “We are thrilled to bring the Tamil adaptation of The Good Wife to our audiences. The Hindi version, The Trial – Pyaar, Kanoon, Dhokha was met with great enthusiasm from viewers, and we believe the Tamil adaptation will be just as impactful. Our focus is on delivering high-quality, engaging content, and with a director like Revathi and a cast led by Priyamani and Sampath Raj, together with Banijay Asia, we’re confident that the show will engage and entertain our audience.”

    Deepak Dhar, Founder and Group CEO, Banijay Asia & EndemolShine India said, “Following the overwhelming success of The Trial, Pyaar, Kanoon, Dhokha in Hindi, we are delighted to bring The Good Wife in Tamil to our audiences in the South. South India has been a key market for us at Banijay Asia and the appetite for quality content here continues to grow, and with a story as powerful and timeless as The Good Wife, we believe this adaptation will resonate well with the audiences there. This project is yet another addition to our growing collaboration with JioHotstar, where we continue to deliver exceptional content to the audiences.”

    Katie Pike, Director, International Formats from Paramount Global Content Distribution, which holds the format rights to The Good Wife added, “We are delighted to see The Good Wife continue to captivate audiences around the world. Given India’s growing appetite for diverse storytelling, it is the perfect market to bring this powerful narrative to life in a new regional form. The strength of the show’s narrative and characters transcends borders, and we are excited to see how JioHotstar and Banijay Asia reimagine this story with their creative expertise for Tamil-speaking audiences.”

    Robert and Michelle King served as creators, showrunners and executive producers of the original U.S. series. Ridley Scott, David Zucker and Brooke Kennedy also served as executive producers. The Good Wife is produced by CBS Studios in association with Scott Free Productions and King Size Productions. The format rights are licensed by Paramount Global Content Distribution.

    *****

    About JioHotstar
    JioHotstar is one of India’s leading streaming platforms, formed through the coming together of JioCinema and Disney+ Hotstar. With an unparalleled content catalogue, innovative technology and a commitment to accessibility, JioHotstar aims to redefine entertainment for everyone across India.

    About Banijay Asia:
    Launched in early 2018, as a Joint Venture between content powerhouse Banijay Entertainment and Deepak Dhar, Banijay Asia is today amongst the biggest players in entertainment – across screens, and across genres. Over the last few years, Banijay Asia has delivered mega-hit scripted adaptations like The Night Manager, The Trial (The Good Wife), Hostages, Call My Agent: Bollywood, Fall and successful originals such as Dahan, Matsya Kaand, Undekhi, and Tribhanga amongst many others. The content studio’s upcoming shows include Indian adaptations of Monk, House and Suits. On the non-scripted front, Banijay Asia is leading the genre with blockbuster titles like Temptation Island, The Kapil Sharma Show, MTV Roadies, The Voice, The Big Picture, Into The Wild with Bear Grylls, Case Toh Banta Hai and more.

    For further media queries:

    Media Contact: D’one
    Point of contact : Abdul.A.Nassar
    Email ID: d.onechennai@gmail.com
    Ph. No: 99418 87877

  • *ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!*

    *ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!*

    சென்னை, ஜூன் 16, 2025: ஜியோஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம். தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இந்தத் தொடரை நடிகை-இயக்குநர் ரேவதி இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக ரேவதி ஓடிடியில் அறிமுகமாகிறார்.

    இதே சீரிஸ் இந்தியிலும் ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ என்ற பெயரில், நடிகர்கள் கஜோல் மற்றும் ஜிஷூ சென்குப்தா நடிப்பில் உருவானது. இது ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகி வெற்றிப்பெற்றது. இப்போது தமிழ் ரசிகர்ளுக்கு ஏற்றபடி இந்த தொடர் உருவாகியுள்ளது.

    ஓடிடியில் இயக்குநராக அறிமுகவாது குறித்து நடிகை- இயக்குநர் ரேவதி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தி ரீமேக்கில் ‘குட் வொய்ஃப்’ வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து தமிழில் இதனை இயக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்தக் கதையில் கதாநாயகி கதாபாத்திரம் மிகவும் வலுவானது. தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் தொழில் சார்ந்தும் நிறைய சவால்களை அவர் எதிர்கொள்கிறார். இதனை திரைக்கதையில் இருந்து படமாக்குவதை மிகவும் விரும்பி செய்தேன். பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் போன்ற திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பானிஜே ஆசியாவுடன் ஓடிடி உலகில் நான் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சிகரமான அனுபவம்” என்றார்.

    கிருஷ்ணன் குட்டி, ஹெட் ஆஃப் கிளஸ்டர், எண்டர்டெயின்மென்ட் (சவுத்) ஜியோஸ்டார், “தமிழ் ரசிகர்களுக்கு ‘குட் வொய்ஃப்’ சீரிஸை வெளியிட ஆர்வமாக இருக்கிறோம். இதன் இந்தி வெர்ஷனான ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் அப்படியான வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். உயர்தர தொழில்நுட்பம், என்கேஜிங்கான கண்டெண்ட், ரேவதி போன்ற இயக்குநர், ப்ரியாமணி, சம்பத் ராஜ் போன்ற நடிகர்கள் மற்றும் பனிஜய் ஆசியா ஆகியோருடன் இணைந்து நல்ல படைப்பை பார்வையாளர்களுக்குக் கொடுக்க இருக்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

    தீபக் தார், ஃபவுண்டர் & குரூப் சிஇஓ, பானிஜே ஆசியா & எண்டேமோல்ஷைன் இந்தியா பகிர்ந்து கொண்டதாவது, “’குட் வொய்ஃப்’ சீரிஸின் இந்தி வெர்ஷனான ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தக் கதையை தமிழிலும் கொண்டு வர ஆர்வமாக இருக்கிறோம். பானிஜே ஆசியா தென்னிந்தியாவை முக்கிய சந்தையாக கருதுகிறது. இங்கு தரமான உள்ளடக்கம் கொடுப்பதற்கும் ஆர்வம் காட்டுகிறது. அதற்கான முதல்படியாக ‘குட் வைஃப்’ இருக்கும். தரமான கதைகளைத் தொடர்ந்து கொடுத்து வரும் ஜியோஹாட்ஸ்டாருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.

    கேட்டி பைக், இயக்குநர், இண்டர்நேஷனல் ஃபார்மட்ஸ் ஃப்ரம் பாராமவுண்ட் குளோபல் கன்டென்ட் டிஸ்டிரிபியூஷன், ’குட் வொய்ஃப்’ சீரிஸின் ஃபார்மட் உரிமைகளை பெற்றுள்ளது. ”உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை ‘குட் வொய்ஃப்’ கவர்ந்திருப்பது மகிழ்ச்சி. இந்தியாவில் வளர்ந்து வரும் மாறுபட்ட கதைசொல்லல் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வலுவான கதையை பார்வையாளர்களுக்குக் கொண்டு வர இருக்கிறோம். ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பானிஜே ஆசியா ஆகியவை தமிழ் ரசிகர்களுக்காக இந்தக் கதையை எவ்வாறு மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க நாங்கள் ஆவலாக உள்ளோம்”.

    ஒரிஜினல் யு.எஸ். சீரிஸில் ராபர்ட் மற்றும் மிஷேல் கிங் ஆகியோர் கிரியேட்டர்ஸ் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர்களாகப் பணியாற்றினர். ரிட்லி ஸ்காட், டேவிட் ஜுக்கர் மற்றும் ப்ரூக் கென்னடி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றினர். ’குட் வைஃப்’ தொடரை சிபிஎஸ் ஸ்டுடியோஸ், ஸ்காட் ஃப்ரீ புரொடக்ஷன்ஸ் மற்றும் கிங் சைஸ் புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து தயாரித்தது. பாராமவுண்ட் குளோபல் கன்டென்ட் டிஸ்ட்ரிபியூஷன் இதன் ஃபார்மட் உரிமைகளை பெற்றுள்ளது.

    *ஜியோஹாட்ஸ்டார் பற்றி:*

    ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. நல்ல கதையம்சம், புதுமையான தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்புடன், ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    *பானிஜே ஆசியா பற்றி:*

    பானிஜே ஆசியா என்டர்டெயின்மென்ட் மற்றும் தீபக் தார் இடையே கூட்டு முயற்சியாக 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பானிஜே ஆசியா தொடங்கப்பட்டது. இன்று பல்வேறு வகைகளில் பொழுதுபோக்குத் துறையில் மிகப்பெரியதாக பானிஜே ஆசியா உருவெடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், பானிஜே ஆசியா தி நைட் மேனேஜர், தி டிரையல் (தி குட் வைஃப்), ஹோஸ்டேஜஸ், கால் மை ஏஜென்ட்: பாலிவுட், ஃபால் போன்ற மெகா-ஹிட் (தழுவல்), தஹான், மத்ஸ்யா காண்ட், உண்டேகி மற்றும் திரிபங்கா போன்ற வெற்றிகரமான அசல் படங்களையும் வழங்கியுள்ளது. மாங்க், ஹவுஸ் அண்ட் சூட்ஸ் ஆகியவை அடுத்து வரவிருக்கிறது. டெம்ப்டேஷன் ஐலேண்ட், தி கபில் சர்மா ஷோ, எம்டிவி ரோடீஸ், தி வாய்ஸ், தி பிக் பிக்சர், இன்டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ், கேஸ் தோ பந்தா ஹை மற்றும் பல போன்ற பிளாக்பஸ்டர்களையும் பானிஜே ஆசியா கொடுத்துள்ளது.

    தொடர்பு:

    Media Contact: D’one
    Point of contact : Abdul.A.Nassar
    Email ID: d.onechennai@gmail.com
    Ph. No: 99418 87877

  • *ரெபல் ஸ்டார் பிரபாஸின் ‘தி ராஜாசாப்’ படத்தின் மாபெரும் டீசர் வெளியீடு, இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது!*

    *இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபான்டஸி படமான ‘தி ராஜாசாப்’ டீசர் தற்போது வெளியாகியுள்ளது!*

    ஹைதராபாத் மாநகரமே, ‘தி ராஜாசாப்’ டீசர் விழாவுக்காக ஒரு திருவிழாக்கோலமாக மாறியது. இசை, ரசிகர் பேரதிர்வு, மாயாஜாலக் கலை—all-in-one கலந்த ஒரு களமாக மாறியது. ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் இந்த ஹாரர்-ஃபான்டஸி படத்திற்கான டீசர் விழா, அண்மைக்கால இந்திய சினிமாவில் நடந்த மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது.

    இந்த டீசர் பழமையான புராணக் கதைகள், திகில் மற்றும் மர்மங்களை நேர்த்தியாக இணைத்து, கிராண்டியர் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இசை மாஸ்ட்ரோ தமன் எஸ் வழங்கிய பின்னணி இசை, தோள்கள் புடைக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது வெறும் டீசர் வெளியீடாக இல்லாமல், உணர்ச்சிகளை கிளப்பும் பார்வை அனுபவமாக மாறியுள்ளது.

    இந்தியாவில் இதுவரை உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஹாரர்-ஃபான்டஸி செட்டில் இந்த விழா நடந்தது. அந்த மர்மக் குகையில், பத்திரிகையாளர்களும் விருந்தினர்களும் நுழைந்து பழங்கால மாளிகை, இருளின் ஜாலங்கள், மெழுகுவர்த்திகளால் ஒளிரும் பாதைகள், மற்றும் மர்மங்களால் நிரம்பிய சுற்றுச்சூழலை நேரில் அனுபவித்தனர்.

    இயக்குநர் மாருதி, தயாரிப்பாளர் டி.ஜி. விஷ்வ பிரசாத், இசையமைப்பாளர் தமன் எஸ், மற்றும் ரெபல் ஸ்டார் பிரபாஸ் ஆகியோர் மேடையில் தோன்றி ரசிகர்களிடம் பேரதிர்வை ஏற்படுத்தினர். இது ஒரு டீசர் நிகழ்வை தாண்டி, கலையுலகமே திரும்பிப் பார்க்கும் திருவிழாவாக மாறியது.

    டீசரில் பிரபாஸ் இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் வெளிப்படுகிறார் — ஒன்று ஸ்டைலிஷான ஹீரோ தோற்றம்; மற்றொன்று இருண்ட, மர்மமிக்க, பரபரப்பூட்டும் தோற்றம். அவரது எனர்ஜி மற்றும் நடித்த விதம் ரசிகர்களை மைய வட்டத்தில் இழுத்துவைத்தது.

    டீசரின் இறுதியில் தோன்றும் சஞ்சய் தத், அதிரடியான தோற்றத்துடன் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.

    நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் போன்ற நடிகைகளும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

    தயாரிப்பாளர் டி.ஜி. விஷ்வ பிரசாத் கூறியதாவது:

    “தி ராஜாசாப்’ஐ ஆரம்பித்த போது, இந்தியா இதுவரை கண்டிராத வகையில் ஒரு பெரிய படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. இன்று ரசிகர்கள் முன்னிலையில், பிரம்மாண்ட அரங்கில் டீசரை வெளியிட்டதே, அந்த உலகத்தில் நம்மை நேரடியாக எடுத்து செல்வது போலவே உணர்ந்தோம். இது இன்னும் ஆரம்பமே!”

    இயக்குநர் மாருதி கூறியது:

    “தி ராஜாசாப் என்பது வழக்கமான ஜானரை மீறிய ஒரு தனித்த பயணம். ஹாரர், ஃபான்டஸி, உண்மை, மாயை—இவை அனைத்தையும் இணைக்கும் இந்தப் பயணத்தில், நெஞ்சை பதைக்கும் உணர்வுகளும் உள்ளன. பிரபாஸின் சொந்த ஊரில் இந்த டீசரை வெளியிடுவதே, ஒரு மறக்க முடியாத அனுபவம்.”

    தமன் எஸ் வழங்கிய பின்னணி இசை சமூக ஊடகங்களில் வலையைக் கிளப்பி, டீசரை வைரலாக்கியுள்ளது. ரசிகர்கள் தற்போது ஏராளமான மீம்கள், ஃபேன் எடிட் வீடியோக்கள், கதை ஊகங்கள் போன்றவற்றால் இணையத்தை கலக்கி வருகின்றனர்.

    People Media Factory தயாரித்துள்ள இந்த பான் இந்தியத் திரைப்படம் 2025 டிசம்பர் 5 அன்று, தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது — இது மாயாஜாலம் கலந்த மர்ம உலகுக்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் ஒரு பான் இந்திய சினிமா அனுபவமாக அமையும்!

  • *The Grand Teaser Launch of Rebel Star Prabhas’ The RajaSaab Raises Spirits Across the Nation; Teaser Out Now*

    *The Teaser Of India’s Biggest Horror Fantasy Starring Rebel Star Prabhas Unveiled*

    Hyderabad turned into a whirlwind of mystery, music, and mass frenzy as the grand teaser of Rebel Star Prabhas’ much-awaited horror-fantasy spectacle The RajaSaab was unveiled amidst thunderous celebrations. One of the biggest teaser launches in recent memory, the event brought together nationwide media and fans on a scale that truly matched the ambition of the film — and what followed was nothing short of a cinematic eruption.

    The teaser lands with a bang, blending grandeur, folklore, and edge-of-the-seat horror in a spellbinding cocktail. Music maestro Thaman S delivers a haunting and electrifying background score that pulses through the veins of the teaser. This wasn’t just a teaser drop — it was a sensory spectacle.

    Set inside India’s largest horror-fantasy set ever created, the event gave media an exclusive walkthrough of The RajaSaab’s eerie universe — a towering, haunted haveli steeped in secrets, flickering candlelight, and ominous silence. As fog swirled through the air and shadows danced across the age-old corridors, guests were transported into the very world that will soon haunt cinema screens.

    Director Maruthi, producer TG Vishwa Prasad, music director Thaman S, and the man of the hour — Prabhas — took center stage, greeted by deafening cheers from thousands of fans. The launch felt like a festival of cinema, celebrating not only the return of Prabhas but his bold step into a genre that India hasn’t seen at this scale.

    In the teaser, Prabhas appears in two striking looks — one brimming with irresistible swag, boundless energy, and screen-dominating charm, and another that hints at darker, mystical undertones. His charisma is magnetic, his performance sharp, and his dedication to the role shines through in every frame. Fans are rejoicing to see him dancing, delivering punchlines, and embracing a character he’s poured his heart into.

    Sanjay Dutt is a surprise that nobody saw coming, his presence is magnificent and leaves us wanting more.

    Joining them are Nidhhi Agerwal, Malavika Mohanan, and Riddhi Kumar — each adding layers of mystery to the cursed mansion’s tale.

    Producer TG Vishwa Prasad shared:

    “With The RajaSaab, we wanted to build something massive, something India hasn’t seen. The sets, the scale, the story — everything is crafted to pull audiences into this fantastical world. Launching the teaser within the haveli itself gave it life — it felt like we were stepping into the movie before it even released. This is only the beginning.”

    Director Maruthi added:

    “The RajaSaab is a genre-defying journey — it flows between horror and fantasy, the real and the surreal. At its heart, it’s about emotion, but surrounded by magic, mystery, and madness. Launching it in Prabhas’ city, and seeing everyone respond so powerfully, was unforgettable. This haveli isn’t just a set — it breathes with the film’s soul.”
    Backed by Thaman S’s goosebump-inducing score, The RajaSaab is already setting social media on fire. From viral fan edits to endless theories, the film has grabbed the country’s imagination — and if the teaser is anything to go by, The RajaSaab promises a theatrical experience like no other.

    Produced by People Media Factory and directed by Maruthi, The RajaSaab releases on December 5, 2025, in Telugu, Hindi, Tamil, Kannada, and Malayalam — a pan-Indian entertainer with a supernatural soul.

  • *ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    *ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    *’ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் – ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ஹும்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.*

    இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், பாடலாசிரியர் விவேகா, இயக்குநர்கள் எல். சுரேஷ், இஸ்மாயில், தயாரிப்பாளர்கள் ராஜா, கஸாலி, பத்திரிக்கையாளர்கள் டி எஸ் ஆர் சுபாஷ், செந்தில் வேல், ‘ஜீவா டுடே’ ஜீவ சகாப்தன், ‘ யூ டூ ப்ரூட்டஸ்’ Minor, தொழிலதிபர்கள் அப்பு பாலாஜி, கமல்ஹாசன், டி. சுரேஷ், இணை தயாரிப்பாளர்கள் சித்தர் திருதணிகாசலம், கௌரி ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை இயக்குநர் கே பாக்யராஜ் வெளியிட, வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

    இவ்விழாவில் இசையமைப்பாளர் ஹேமந்த் சீனிவாசன் பேசுகையில், ” இந்த திரைப்படத்தில், கதாநாயகனும், கதாநாயகியும்’ காதல் கோட்டை’ படத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் காதலிப்பார்களே.. அதுபோல் நானும், பாடலாசிரியரும் பணிபுரிந்தோம். பாடலாசிரியர் விவேகா எழுதி கொடுத்த பாடலுக்கு இசையமைத்தேன். இதற்கு கொரோனா காலகட்டத்தில் இப்பணிகள் நடைபெற்றதே காரணம். இந்தப் பாடலுக்கு இசையமைத்த பிறகு படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு பிடிக்குமா? என்ற ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அந்த பாடலை தற்போது திரையில் பார்த்தபோது எங்கள் அனைவருக்கும் பிடித்தது. ரசிகர்களுக்கும் பிடித்திருக்கும் என்ன நம்புகிறேன்.

    இந்தப் பாடலை உருவாக்குவதற்கு முன் தயாரிப்பாளர் எனக்கு படத்தில் இடம்பெறும் காட்சிகளின் புகைப்படங்களை காண்பித்தார். தற்போது திரையில் காண்பித்த போது மிகவும் அற்புதமாக இருந்தது. இதற்காக உழைத்த இயக்குநருக்கும், இதில் முகத்தை காண்பிக்காமல் நடித்த நாயகன் – நாயகிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த மேடையில் திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜிடமிருந்து வாழ்த்து பெற்றதை பாக்கியமாக கருதுகிறேன். ” என்றார்.

    இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ” ஹும் என்பதை எப்படி சொல்வது என எனக்குத் தெரியவில்லை. ஹும் என்பதில் ஏகப்பட்ட மாடுலேஷன் இருக்கிறது. ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு மாடுலேஷனில் இந்த ஹும் இருக்கலாம். அப்படி ஒரு அழகான டைட்டில். இப்படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இப்படத்தின் தயாரிப்பாளரான உமாபதி மற்றும் என் நண்பர் சுபாஷ் ஆகியோரின் பேச்சில் ஏராளமான விசயங்கள் இருக்கும். நான் அவர்களை பேச சொல்லிவிட்டு, அவர்கள் பேசுவதை கேட்பேன். யார் எப்போது சினிமாவில் வருவார்கள் என்று சொல்லமுடியாது. ‘தூறல் நின்னு போச்சு’ படத்தின் தயாரிப்பாளர் நஞ்சப்பனுடன் அதுபோன்றதொரு அனுபவம் ஏற்பட்டது. அது வித்தியாசமாகவே இருந்தது. இதுபோன்ற தருணங்களில் என்னுடைய ஆசான் சொன்னது தான் நினைவுக்கு வரும். ‘நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான். அவரிடமிருந்து நீ கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு விசயம் இருக்கும்’ என சொல்வார். அதனால்தான் நான் யாரையும் எளிதாக பார்க்க மாட்டேன் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விசயம் இருக்கும்.

    இயக்குநர் கிருஷ்ணவேல் யாரிடமும் உதவியாளராக பணியாற்ற வில்லை என்றார் . சரி சுயம்புவாக சிலர் வருவார்கள் என எண்ணினேன்.

    சினிமா மாறிவிட்டது. பாடலாசிரியர் விவேகாவிடம் இயக்குநரை பற்றி கேட்டபோது, ‘அவரை நான் இப்போதுதான் நேரில் சந்திக்கிறேன்’ என்றார். சினிமா ரொம்ப அட்வான்ஸாக சென்று கொண்டிருக்கிறது.

    தயாரிப்பாளராக இருக்கும் உமாபதி நிறைய விசய ஞானம் உள்ளவர் . அவர் படத்தை தயாரித்திருக்கிறார் என்றால் அதில் ஏதேனும் விசயம் இருக்கும். அவர் தன்னுடைய அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி இருக்கிறார். அவருடன் ஆரம்ப காலத்தில் பழகிய நண்பரையும் தயாரிப்பாளராக்கியது அவர் நட்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தெரிகிறது. விரைவில் அவருடைய இலட்சிய கனவான இயக்குநராகவும் ஆக வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    இங்கு மேடையில் பேசிய யூ டூ ப்ரூட்டஸ் Minor, அவருக்கு யார் மேல் கோபமோ.. அவருடைய பேச்சில் என்னையும் கோர்த்து விட்டார். ” என்றார்.

    கதாநாயகன் கணேஷ் கோபிநாத் பேசுகையில், ” என்னுடைய மானசீக குரு கே. பாக்யராஜ் சார். அவர் இருக்கும் மேடையில் அவருடன் இருந்ததை பெருமிதமாக கருதுகிறேன்.

    இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் அடுத்த நாளே படப்பிடிப்பு சென்றேன். இந்த அனுபவம் வித்தியாசமாக இருந்து. படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

    கதாநாயகி ஐஸ்வர்யா பேசுகையில், ” இந்தப் படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும் , இயக்குநருக்கும் நன்றி. வித்தியாசமான முயற்சியில்.. அழுத்தமான செய்திகள் இந்த படத்தில் இருக்கிறது. பல தடைகளை கடந்து இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நானும், நாயகனும் முகத்தை காண்பிக்காமல் நடித்திருந்தாலும்… இந்த படம் வெளியான பிறகு ஏராளமானவர்கள் எங்களை பாராட்டுவார்கள் என ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். ” என்றார்.

    இயக்குநர் கிருஷ்ணவேல் பேசுகையில், ” திரைப்படத் துறைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் எந்த இயக்குநரிடமும் உதவியாளராக பணியாற்ற வில்லை. எந்த உதவி இயக்குநரும் எனக்கு நண்பராகவும் இல்லை. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று எனக்கு ஏன் தோன்றியது? என்றால்.. அடிப்படையில் நான் ஒரு சர்வைவர்.

    கொரோனா காலகட்டத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய மகளை நாயகியாக முன்னிறுத்தி திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என சொன்னார்.‌ அதற்காக ஒரு கதையை எழுதினோம். கதை எழுதிய பிறகு தயாரிப்பாளர் பின்வாங்கி விட்டார். அந்தத் தருணத்தில் தான் யாருடைய முகத்தையும் காண்பிக்காமல் ஒரு படத்தை உருவாக்கலாம் என நினைத்து இப்படத்தின் கதையை எழுதத் தொடங்கினேன்.

    ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் பாக்கியராஜ் கதாபாத்திரத்திற்கு பெயர் இருக்காது. அதுவும் இந்த திரைப்படத்திற்கு ஒரு இன்ஸ்பிரேஷன். அறிஞர் அண்ணாவின் ‘ஓர் இரவு’ எனும் திரைப்படமும் இன்ஸ்பிரேஷன் . கலைஞரின் படங்களும் இன்ஸ்பிரேஷன். பார்த்திபனின் படங்களும் இன்ஸ்பிரேஷன். இப்படியாக ஒரு வித்தியாசமான படத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்து இருக்கிறேன்.

    பெண்களின் பாதுகாப்பு குறித்து.. பெண்கள் எதைக் கண்டு அச்சப்படக்கூடாது என்பது குறித்து.. ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும். இது பல படங்களின் தழுவலாகவும் இருக்கலாம். சாயலாகவும் இருக்கலாம். காப்பி என்று கூட சிலர் சொல்லலாம். ஆனால் கதை புதிது. அதற்கு நான் உத்திரவாதம். இந்த படம் கண்டிப்பாக பேசப்படும் என நம்புகிறேன் ” என்றார்.

    தயாரிப்பாளர் உமாபதி பேசுகையில், ” எங்களின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி.
    பத்திரிக்கை துறையில் புகைப்பட கலைஞராக பணியாற்றத் தொடங்கி அதன் பிறகு பல முன்னணி ஊடகங்களில் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் உண்டு.

    2004 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் ‘Grand Master of Politics ‘ எனும் புத்தகத்தை எழுதினேன். அதனை அப்போதைய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டார். அதன் பிறகு பத்தாண்டுகள் கழித்து ‘பதிவுகள்’ எனும் இரண்டாவது புத்தகத்தை எழுதினேன். அதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.

    என்னுடைய நண்பர் கிருஷ்ணவேல் ஒரு படத்தை தயாரித்து நிறைவு செய்திருந்தார். ஆள் இல்லாத படம் என்றார். அதன் பிறகு ஒரு நாள் அந்தப் படத்தை காண்பித்தார். அரை மணி நேரம் கடந்தது தெரியவில்லை. சுவாரசியமாக இருந்தது. இதுவரை யாரும் அது போன்ற முயற்சியை மேற்கொண்டதில்லை. புதிதாக இருந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது அதன் பிறகு விவாதித்தோம். அதனைத் தொடர்ந்து அந்தப் படத்தை மீண்டும் தயாரிக்க தொடங்கினோம். நண்பர்களின் உதவியுடன் இப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். ” என்றார்.

    தயாரிப்பாளர் கஸாலி பேசுகையில், ,” இந்த திரைப்படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன். ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக இருக்கும். இந்த திரைப்படம் வெளியான பிறகு பெரிய அளவில் பேசப்படும். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

    பாடலாசிரியர் விவேகா பேசுகையில், ” மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர் உமாபதி முன்னணி செய்தி நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார். கம்போடியா நாட்டில் நடைபெற்ற உலக தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தேன். அந்த தருணத்தில் இருந்து தயாரிப்பாளர் உமாபதியுடன் நெருக்கமாக பழகத் தொடங்கினேன். அவர் தயாரிப்பாளர் மட்டுமல்ல அவரிடம் ஏராளமான கதைகளும் உள்ளது. விரைவில் அவர் இயக்குநராகவும் மாறுவார். அதற்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலக படங்களில் சில படங்கள் வித்தியாசமாக இருக்கும். நண்பர் சந்திர மௌலி ஹிட்ச்காக்கின் நாற்பது திரைப்படங்களையும் பார்த்து, அவரைப் பற்றிய ஒரு ஆவண படத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தார். அவரோடு இணைந்து நானும் அந்த நாற்பது திரைப்படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஒவ்வொரு படத்திலும் அவர் ஒவ்வொரு புதுமையை செய்திருப்பார். அதில் ‘ரோப்’ என்று ஒரு படம். அதில் 11 ஷாட்ஸ்கள் மட்டும்தான் இருக்கும்.

    அப்படி ஒரு வித்தியாசமான படமாக நான் இந்த திரைப்படத்தை பார்க்கிறேன். இந்தப் படத்தில் 13 கதாபாத்திரங்கள். 13 குரல்கள். 13 உடல்கள் நடித்திருக்கின்றன. 13 உணர்ச்சிகள் நடித்திருக்கின்றன. ஆனால் அவர்களது முகங்கள் மட்டும் வெளியில் தெரியாது. இதுதான் இப்படத்தின் வித்தியாசம். இதுதான் இப்படத்தில் முகவரி என்று நினைக்கிறேன். இந்தப் படத்தின் முகவரியே முகம் இல்லை என்பதுதான்.
    இது ஒரு புது முயற்சி.

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹேமந்த் சீனிவாசன் அற்புதமாக இசையமைத்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் உமாபதி இப்படத்திற்காக கடுமையாக உழைத்தது நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

    கொரோனா காலகட்டத்தின் போது நாம் முற்றாக நவீன உலகத்திற்கு மாறிவிட்டோம். இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பம்.. நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்துகிறது. நேர விரயத்தை தவிர்க்க முடிகிறது. தொழில்நுட்பம் இல்லாமல் இன்று நம்மால் வாழவே இயலாது.

    இந்த உலகத்தில் விமர்சிக்கப்பட வேண்டும் அல்லது விமர்சிக்க வேண்டும். விமர்சனம் இல்லாமல் வாழவே இயலாது. ‘நீ விமர்சிக்கப்படக்கூடாது என நினைத்தால் நீ எதையும் பேசாதே.. எதையும் செய்யாதே.. எதுவாகவும் உருவாகாதே’ என தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் குறிப்பிட்டதை போல்..
    நீ எதுவும் பேசவில்லை என்றால்.. நீ எதுவும் செய்யவில்லை என்றால்… எதுவாகவும் உருவாகவில்லை என்றால்.. உன்னை எவனும் கண்டுகொள்ள மாட்டான். உன்னை எவனும் கவனிக்க மாட்டான். எனவே விமர்சிக்கப்படுவது ஒரு அங்கீகாரம். ஒவ்வொரு விமர்சனங்களிலும் அழகும், அறிவும் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

    இந்தப் படத்தில் இயக்குநரின் உழைப்பை விட தயாரிப்பாளர் உமாபதியின் உழைப்பு அதிகம். இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன். ” என்றார்.

  • மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் அப்போலோ மருத்துவமனையின் CSR பிரச்சாரத்திற்கு திருமதி. உபாசனா காமினேனி கொனிடேலா ஆதரவு*

    *

    அப்போலோ மருத்துவமனையின் CSR பிரிவின் துணைத் தலைவரான திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா மார்பக புற்று நோய் குறித்தான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் CSR பிரச்சாரத்திற்கு தனது ஆதரவை வழங்கி உள்ளார்.

    நாடு முழுவதும் 23 நகரங்களில் இந்தப் பிரச்சாரம் நடத்தப்படும். இதில் அப்போலோ டெலி மெடிசின் நெட்வொர்க்கிங் அறக்கட்டளை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக செயல்படுகிறது.

    மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பொறுப்பேற்க ஊக்குவிப்பதும் தான் இந்த CSR பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

    ஹைதராபாத், ஜூன் 11, 2025: சுகாதார துறை சார்ந்த தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள FUJIFILM இந்தியா, அப்போலோ மருத்துவமனை அறக்கட்டளையின் CSR பிரிவின் துணைத் தலைவர் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா முன்னிலையில் , ”முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல்” ( Find It Early, Fight It Early) எனும் அதன் சமீபத்திய CSR பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த முயற்சி மார்பக புற்றுநோய் மற்றும் அதன் ஆரம்ப கால நோய் பாதிப்பினைக்கண்டறிதலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் குறித்த விவாதங்கள் பெரும்பாலும் நடைபெறாத அல்லது எதிர்மறையான- நியாயமற்ற நம்பிக்கைகளை கொண்டிருக்கும் பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

    இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் 23 நகரங்களில் செயல்படுத்தப்படும். கட்டமைக்கப்பட்ட சமூக ஈடுபாடு – சுகாதார இடர் மதிப்பீடுகள் மற்றும் உணர்திறன் முயற்சிகள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களை சென்றடைவதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் இந்த பிரச்சாரம், இதற்காக பிரத்யேகமாக பயிற்சி பெற்ற களக் கல்வியாளர்களால் வழிநடத்தப்படும். அப்போலோ டெலி மெடிசின் நெட்வொர்க்கிங் அறக்கட்டளை ( ATNF) செயல்படுத்தும் இந்த திட்டம், அதிக அளவில் தகவல்களை அறிந்த மற்றும் சுகாதார விழிப்புணர்வு உள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான FUJIFILM இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

    மார்பக புற்றுநோய் இந்திய பெண்களிடையே மிகவும் பரவலாக காணப்படும் புற்று நோய்களில் ஒன்றாகும். ICMR எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய புற்றுநோய் பதிவு திட்டத்தின் படி, பெண்களிடையே கண்டறியப்பட்ட அனைத்து வகையான புற்று நோய்களிலும் இது தோராயமாக 14 சதவீதம் ஆகும். மேலும் 29 பெண்களில் ஒருவருக்கு இந்த நோய் உருவாகும் அபாயமும் உள்ளது. துரதிஷ்டவசமாக இது பற்றிய அறியாமை , விழிப்புணர்வு இன்மை, சரியான நேரத்தில் நோயை கண்டறிவதற்கான வசதிகள் எளிதில் கிடைக்காதது மற்றும் பராமரிப்பு கிடைக்காததால்.. பெரும்பாலான வழக்குகள்.. நோய் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகின்றன.‌ ‘முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல்” என்பது சமூகத்தில் நம்பகமான, கலாச்சார ரீதியாக உணர்திறன் வாய்ந்த தகவல்களை வழங்குவதன் மூலம், இந்த சவால்களை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆரோக்கியமான விவாதங்கள் – விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமர்வுகள் மூலமும் மரியாதையுடன் கூடிய திறந்த நிலையிலான உரையாடல்களை நிகழ்த்தி எளிதாக்குவதன் மூலம் .. இந்த முயற்சி பெண்கள் தங்களின் உடல் நலம் குறித்து மிகவும் விழிப்புணர்வுடனும் முன் முயற்சியுடனும் செயல்பட ஊக்குவிக்கிறது. ஆரம்பக் கட்ட அறிகுறிகளை அறிந்து கொள்வது மற்றும் கண்டறிவது, சுய பரிசோதனைக்கான நுட்பங்களை புரிந்து கொள்வது மற்றும் சரியான தருணத்தில் முழுமையான மருத்துவ ஆலோசனையை பெறுவது உள்ளிட்டவைகளும் இதில் அடங்கும்.‌

    இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனையின் CSR பிரிவின் துணைத் தலைவரான திருமதி. உபாசனா காமினேனி கொனிடேலா பேசுகையில், ”சுகாதாரத் துறையில் முன்னணியில் இருக்கும் நாங்கள் நோய்க்கு சிகிச்சை அளிப்பதுடன் மட்டுமல்லாமல், அது குறித்த விழிப்புணர்வு , கல்வி, எளிதில் அணுகும் முறை ஆகியவற்றை வழங்கும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. மார்பக புற்றுநோய் தொடர்ந்து உயிர்களை கொன்று வருகிறது. ஏனெனில் பல பெண்களுக்கு இத்தகைய நோய் பாதிப்பை கண்டறிந்து முன்கூட்டியே செயல்படுவதற்கு தேவையான தகவல்களும், வசதிகளும் இல்லை. FUJIFILM இந்தியாவின் இந்த CSR முயற்சி அந்த யதார்த்தத்தை பற்றிய ஆழமான புரிதலை பிரதிபலிக்கிறது. மிகவும் முக்கியமான இடங்களில் அர்த்தமுள்ள நடவடிக்கை மேற்கொள்வதற்கும் , தாமதமாகிவிடும் முன் விழிப்புணர்வு தேவைப்படும் பெண்களை சென்றடைவதை உறுதி செய்வதற்கும் பகிர்ந்துக் கொள்ளப்பட்ட உறுதிப்பாட்டில் எங்களது ஆதரவு அடித்தளமாக உள்ளது என்றார்.

    இது தொடர்பாக FUJIFILM இந்தியாவின் நிர்வாக இயக்குநரான திரு கோஜி வாடா தொடர்ந்து பேசுகையில், ” எங்களின் FUJIFILM இந்தியா, ‘ நம் உலகிற்கு மேலும் அதிகளவிலான புன்னகைகளை வழங்குதல்’ ( Giving Our World More Smiles) என்ற எங்கள் குழுவின் நோக்கத்தை உள்ளடக்கிய புதுமையான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.‌ பல்வேறு ஆலோசனைகள், தனித்துவமான திறன்கள் மற்றும் அசாதாரணமான மக்களுடன் கலந்து கொள்வதன் மூலம் உலகிற்கு மகிழ்ச்சியையும் , புன்னகையும் தரும் தீர்வுகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம். ‘முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல் ‘ எனும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு CSR பிரச்சாரத்தின் மூலம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை விரிவுபடுத்துவதையும், இதனால் இறக்கும் பல உயிர்களை காக்கும் வகையில் ஆரம்ப கால நோயறிதலை மேம்படுத்துவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்” என்றார்.

    FUJIFILM இந்தியா தனது CSR முயற்சிகள் மூலம் பூர்த்தி செய்யப்படாத மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலமும், ஆரம்பகால நோய் கண்டறிதலை ஊக்குவிப்பதன் மூலமும், கல்வி மூலமும், தடுப்பு மற்றும் பராமரிப்பை செயல்படுத்துவதன் மூலமும், சுகாதார பராமரிப்பை கூடுதலாக உள்ளடக்கியதாகவும் , எளிதில் அணுகக் கூடியதாகவும் மாற்றுகிறது. ‘முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல்’ என்ற FUJIFILM குழுமத்தின் நிலையான மதிப்பு 2030 ஆம் ஆண்டிற்கான திட்டத்துடன் ஒத்துப் போகிறது. இது குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற மக்களுக்கு சுகாதார சமத்துவம் மற்றும் ஆதரவிற்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த முயற்சி தேவைப்படும் இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் ‘நம் உலகிற்கு அதிக புன்னகையை வழங்குதல்’ என்ற எங்கள் நிறுவனத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது. தொலைதூரம் உள்ள நகரமாக இருந்தாலும் அல்லது அடர்த்தியான நகர் புறமாக இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணும் தனது ஆரோக்கியத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவும், அதனை பாதுகாத்துக் கொள்ளவும், தனது ஒட்டு மொத்த நல்வாழ்விற்கான பொறுப்பினை ஏற்கவும், அதற்கான வாய்ப்பினை பெற தகுதியானவர் என FUJIFILM இந்தியா நம்புகிறது.