அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ் 3 பக்கம்
தயாரிப்பு : 20த் செஞ்சூரி பாக்ஸ்
இயக்கம் : ஜேம்ஸ் கேமரூன்
நடிப்பு : சாம் வொர்த்திங்டன், சோயா சால்டனா, வராங், ஸ்டீபன்லாங்
ஒளிப்பதிவு : ரசூல்கார்பெண்டர்
இசை : சிமன் பிராங்களின்
வெளியான தேதி : டிசம்பர், 19, 2025
நேரம் : 3 மணிநேரம் 17 நிமிடம்
படத்தின் இரண்டாம் பகுதிக்கு ரேட்டிங் : 3.5/5

அவதார் பயர் அண்ட் ஆஷ்.3ம் பாகம் உலகம் முழுவதும் ஐமாக்சில், 3D இல் வெளியாகி உள்ள இந்த படம், தமிழிலும் டப்பாகி உள்ளது. முந்தைய 2 பாகங்களை பார்த்தவர்கள், இந்த பாகத்துடன் எளிதில் கதை உடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியும் அவர்களுக்கு முந்தைய கதை தெரியும் என்பதால் பல விஷயங்களை, கேரக்டர்களின் தன்மையை எளிதில் புரிந்து கொள்வார்கள்.

அவதார் 2- விட்ட இடத்திலிருந்து அவதார் பாகம் 3 படம் தொடங்குகிறது, ஜாக்சலி தன் குடும்பத்தை காப்பாற்ற, நாவி பகுதிக்குள் தங்குகிறார். அங்கு ஜாக்சலி இளைய மகன் தன் அண்ணனை இழந்த சோகத்தில் இருக்க, ஸ்பைடர் மனிதன் அவனால் இந்த உலகில் வாழ முடியாது அவனை மனிதர்கள் வாழும் பகுதியில் விட வேண்டும் என ஜாக்சாலி குடும்பத்துடன் வான்வெளி பயனத்தில் பறக்கிறார்.

அப்படி பறக்கும் போது சாம்பல் பகுதியை சார்ந்த நெருப்பை வைத்து ஆட்சி செய்யும் ஒரு கூட்டம் இவர்களை தாக்குகிறது, அங்கு மிகப்பெரிய போராட்டத்தின் பிறகு ஜாக்சலி மீண்டும் தன் குடும்பத்துடன் இணைகிறார்.
ஆனால், ஸ்பைடர் மூச்சு விட முடியாமல் திணற, அந்த நேரத்தில் கிரி ஏவாவை வணங்கி வேர்கள் மூலம் ஸ்பைடரை இந்த உலகிலேயே சுவாசிக்க வைக்கிறார்.

இந்த உண்மையை அறிந்த கேனல் மைல்ஸ், சாம்பல் பகுதி ராணியின் உதவியுடன், ஸ்பைடரை கைப்பற்றுகிறார், ஸ்பைடரை ஆராய்ச்சி செய்தால் சாதரணம் மனிதர்களும் இங்கு வந்து வாழ தொடங்கிவிடுவார்கள். இது நடக்க கூடாது என ஜாக்சாலி பெரும் படையுடன் அவர்களை எதிர்த்து வெற்றி கண்டாரா,
திமிலங்கள் போன்ற வினோத விலங்குகள் ஒன்றாக கூடுகையில் அவற்றை கொன்று பணம் சம்பாதிக்க நினைக்கும் வில்லன் கும்பலை, ஹீரோ, ஹீரோயின் அவர்களின் வாரிசுகள், அவர்களின் ஆதரவாளர்கள் எப்படி விரட்டி அடித்து ஜெயிக்கிறார்கள் என்பது கதை. இதற்கிடையில் ஹீரோ குடும்பத்தில் ஒருவராகிவிட்ட, தனது மகன் மைல்சை வில்லன் அடைந்தாரா? அதற்கு புது வில்லி ஓனா சாப்ளின் எப்படி உதவி செய்கிறார். இவர்களின் முடிவு என்ன என்பதே அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படத்தின் மீதிக்கதை.