
மகாசேனா படத்தில் விமல், ஜான் விஜய், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு நடித்துள்ளார்கள். தினேஷ் கலைச்செல்வன் இந்த படத்தை இயக்கி உள்ளார். குரங்கனி என்ற மலையில் உள்ள மக்களுக்கு தலைவராக இருக்கிறார் விமல் . மலை அடிவார பகுதியில் உள்ள கங்கா என்ற பெண்ணை தலைவியாக கொண்ட கிராமம் கும்பல் . இந்தஇரண்டு .குரங்கணி மலைப்பகுதியில் யாழி கிராம மக்களுக்கும் அடிவார பகுதி மக்களுக்கும் 3000 ஆண்டுகால பகை இருந்து வருகிறது. குறிப்பாக யாழி கிராமத்தில் இருக்கும் சாமி சிலையை அடிவார பகுதி மக்கள் அபகரிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்த மக்கள் யாளி தெய்வத்தை வழிபடுகிறார்கள். இந்த தெய்வ சிலையை அதே மலையில் வேறு பகுதியில் உள்ள கங்கா என்ற பெண்ணை தலைவியாக கொண்ட ஒரு கும்பல் அபகரிக்க முயல்கிறது. ஒரு கல்லூரியிலிருந்து ஒரு பேராசிரியர் தலைமையின் கீழ் ஒரு மாணவர் குழு இந்த சிலையை காண வருகிறது. தமிழ் தெரியாத ஒரு கார்ப்பரேட் வில்லன் இந்த யாளி சிலையை கடத்த முயற்சி செய்கிறார்.
யாழி கிராமத்தில் சித்ரா பௌர்ணமி அன்று கோவில் திருவிழா நடத்த முயற்சி செய்கிறார்கள். அன்றைய தினத்தில் அடிவார பகுதி மக்கள், சாமி சிலையை திருட நினைக்கிறார அதே சமயம் மற்றொரு கும்பல் சாமி சிலையை வனப்பகுதி காவல் அதிகாரி ஜான் விஜய் மூலம் திருட திட்டம் போடுகிறார்கள்.
இறுதியில் யாழி கிராமத்தில் திருவிழா நடைபெற்றதா? சாமி சிலை என்ன ஆனது? சாமி சிலையை விமல் பாதுகாத்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.