
“ரைட்” திரைப்படம் ஒரு காவல் நிலையத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் சஸ்பென்ஸ் திரில்லர் வகை படமாகும் இதில் நடித்த அனைவரும் தங்களது பங்களிப்பு சிறப்பாக கொடுத்துள்ளனர் திரைக்கதை தொடக்கத்தில் காவல் நிலையத்தில் இருக்கும் காவலர்கள் பிரதமர் வருகையால் பாதுகாப்பிற்காக இன்ஸ்பெக்டர் நட்டியுடன் ஒரு டீமோடு போய் விட, ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டர் , பெண் போலீஸ் , ஏட்டு, அந்த ஏட்டுக்கு பொருட்களை திருடிக் கொண்டு வந்து தரும் ஒரு திருடன், லாக்கப்பில் சில கைதிகள் மட்டும் இருகின்றனர் . தன் மகன் (அருண் பாண்டியன்) காணாமல் போனது குறித்து புகார் தர வந்த அவரை அசிங்கப்படுத்தி அனுப்புகின்றனர் ஏட்டுவும் சப் இன்ஸ்பெக்டரும்.
அரசியல்வாதியின் மகன் தனது அடியார்களை போலீஸ் ஸ்டேஷன் வந்து லாக்கப்பில் உள்ள கைதிகளை ஏட்டுவின் உதவியோடு மீட்டுக் கொண்டு போகிறான் .

அருண் பாண்டியன் மகனைக் கண்டு பிடிக்கச் சொல்லி கமிஷனர் அலுவலகம் செல்கிறார் அங்கும் அவர் அவமானத்துக்கு ஆளாகிறார்.
இந்த நிலையில் திருட்டில் இருந்து மீட்கப்பட்ட நகைகளை மக்களுக்குக் கொடுக்கும் நிகழ்ச்சி காவல் நிலையத்தில் நடக்க, அதோடு சம்மந்தம் இல்லாமல் ஒரு லேப் டாப்பும் சேர்ந்து இருக்கிறது . எப்படி வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.
அந்த நேரம் பார்த்து கல்யாண ஏற்பாட்டுக்காக லீவில் இருக்கும் பெண் சப் இன்ஸ்பெக்டர் பத்திரிக்கை கொடுக்க வருகிறார் .
அவர் ஐ மேக் லேப் டாப்பை இயக்குவது பற்றி ஏட்டுவுக்கு கற்றுக் கொடுக்க,
ஆன் செய்யப்பட்டதும் தானாக இயங்கும் கம்பியூட்டர் ,வழியே வரும் ஒரு குரல், ஏட்டு உட்கார்ந்து இருக்கும் இருக்கைக்கு கீழும் , ஸ்டேஷனை சுற்றியும் வெடிகுண்டு இருக்கிறது . யார் வேண்டுமானலும் உள்ளே வரலாம். ஆனால் வந்தவர் வெளியே போக நினைத்தால் பாம் வெடிக்கும் . எல்லோரும் சாவீர்கள் என்கிறது .
ஆட்கள் உள்ளே வர, வெளியே ஓடிய ஒருவன் வெடித்து உயிர் ஆபத்துக்குப் போக, எல்லோருக்கும் சீரியஸ்நெஸ் புரிகிறது .
எல்லோரும் உயிரோடு தப்பிக்க வேண்டும் என்றால் நீதிபதி ஸ்டேஷனுக்கு வந்து விசாரணை செய்ய வேண்டும் என்கிறது மிரட்டல் குரல்.
நீதிபதி வர, போலீஸ் ஸ்டேஷனுக்குள் கோர்ட் செட்டப் உருவாகிறது .
அரசியல்வாதிகளுக்கு துணை போவதற்காக, போலீசே ஒரு பெண்ணுக்கு அநியாயம் இழைத்த கதையை சொல்லி , அவன் கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் . இல்லை எனில் பாம் வெடிக்கும் என்கிறது மிரட்டல் குரல் அடுத்து
பெண்ணுக்கு அநியாயம் இழைத்த யார்?
அருண் பாண்டியன் மகனை மீட்டாறா?
காவல் நிலைய ரைட்டர் வெடிகுண்டில் இருந்து மீட்கப்பட்டாரா?
கால் நிலத்தில் பாம் வைத்தது மிரட்டியது யார்?
போன்ற கேள்விக்கு பதில் ரைட் திரைப்படத்தின் கதை மற்றும் காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது என்பதை திகில் பரவ சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுப்ரமணியன் ரமேஷ்குமார்.