மழை பிடிக்காத மனிதன் திரை விமர்சனம்
அமைச்சரின் (ஏ.எல்.அழகப்பன்) மகனை கொன்றுவிடும் சலீமை (விஜய் ஆண்டனி) அழிக்க எதிரிகள் முயற்சிக்கிறார்கள். அவரைக் காப்பாற்றும் ரகசிய உளவு அதிகாரி (சரத்குமார்), அவர் (இறந்து விட்டதாக )அடையாளத்தை மறைத்து அந்தமானில் உள்ள தீவில் விட்டுச்செல்கிறார். என்றாலும் சலீமை கொல்ல எதிரிகள் தேடி அலைகிறார்கள். அந்தமானில் சலீமுக்கு சவும்யா (மேகா ஆகாஷ்), பர்மா (பிருத்வி அம்பார்) ஆகியோரின் நட்பு கிடைக்கிறது. இவர்கள் இருவருக்கும் உள்ளூரில் உள்ள பரம்பரை வட்டிக்கு பணம்கொடுக்கும் ரவுடியாக டாலியுடன் (தனஞ்செயா) பகை. இவர்கள் பிரச்சினையைத் தீர்க்க சலீம் என்ன செய்கிறார் என்பது மழை பிடிக்காத மனிதன்
கதை.
தனது அடையாளத்தை மறைத்து வாழும் நாயகன், அதற்காகஅந்தமானை தேர்ந்தெடுத்து படமாக்கியிருக்கும் விதத்துக்கு இயக்குநர் விஜய் மில்டனை பாராட்டலாம். தான் என்கிற அகம்பாவத்துடன் வாழும் ஒரு கதாபாத்திரத்தை டான் போல வில்லனாகக் காட்டியிருப்பதும் ரசிக்க வைக்கிறது.
விஜய் ஆண்டனியை அந்தமானில் சரத்குமார் விட்டுச் செல்லும் காட்சியின் பின்னணியில் பெரிய சம்பவங்கள் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஆனால், அங்கு புதிய கதையாக விரிந்து திரைக்கதை அதை நோக்கியே சுற்றுகிறது. இதனால்,விஜய் ஆண்டனி யார்?, என்னப் பிரச்சினை,அவர் அடையாளத்தைக் காட்டுவதால் திரையில் ரசிக்கும் படி உள்ளது .