பாபா பிளாக் ஷீப் திரை விமர்சனம்
இயக்குனராக ராஜ் மோகன், தனது முதல் படைப்பை இயக்கியிருக்கும் திரைப்படம் தான் “பாபா பிளாக் ஷீப்”.
இப்படத்தில், ஆர்.ஜே.விக்னேஷ், நரேந்திர பிரசாத், அப்துல் அயாஸ், சேட்டை ஷெரீஃப், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், விருமாண்டி அபிராமி, அம்மு அபிராமி, வினோதினி, போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, ஜி.பி.முத்து உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சுரேஷ் சக்ரவர்த்திக்கு பாய்ஸ் ஸ்கூல் மற்றும் கோ-எட் ஸ்கூல் என்று இரு பள்ளிகள் உள்ளன. ஒரே காம்பவுண்டில் இருக்கும் இந்த இரு பள்ளிகளில் ஒரு சில சேட்டை பிடித்த மாணவர்கள் உள்ளனர்.
பாபா பிளாக் ஷீப் திரை கதை 2000-ம் ஆண்டு காலகட்ட பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள கதை, சுரேஷ் சக்ரவர்த்தி இறந்ததும், இரண்டு பள்ளியையும் ஒரே பள்ளியாக்கிவிடுகின்றனர் அவரது மகன்கள். இதனால், பாய்ஸ் ஸ்கூல் படிக்கும் மாணவர்களும், இருபாலர் படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளும் ஒரே பள்ளியில் இணைகின்றனர்…
இதனால், இரு பள்ளி மாணவர்களிடத்திலும் கடைசி பெஞ்ச் இடத்திற்கு இரு பள்ளி மாணவர்களிடையேயும் அடிக்கடி சண்டை வருகிறது இதற்கிடையே, மாணவர்கள் கையில் ஒரு கடிதம் கிடைக்கிறது. அந்த கடிதத்தில், மாணவர் ஒருவர் தான் தற்கொலை செய்துக்கொள்ள இருப்பதாக எழுதியிருக்கிறார். பெயர் உள்ளிட்ட விவரம் எதுவும் இல்லாத அந்த கடிதம் எழுதிய மாணவரை கண்டுபிடித்து, அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் சக மாணவர்கள் அதை எப்படி செய்தார்கள் என்பதே பாபா பிளாக் ஷீப் திரை கதை .
முதல் பாதி முழுவதும் நமது பள்ளி பருவத்தை நினைவுபடுத்துகிறது ,இரண்டாம் பாதி இன்றைய மாணவர்களின் தற்கொலை(மரணம்) எவ்வளவு துயரமானது என்பதை இயக்குநர் ராஜ்மோகன் மாணவர்களுக்கு புரியும்படியாக எளிமையான திரைக்கதையாக மணவர்களுக்கும் பெற்றோர்களும்கும் உள்ள இடைவெளியினை மிகவும் தெளிவாக வெளில்திரையில் ஜொலிக்க வைத்துள்ளார் இயக்குநர் ராஜ்மோகன்….