மாவீரன் திரை விமர்சனம்
மாவீரன் படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது ,மாவீரன் திரைப்படம் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் மிஷ்கின், யோகிபாபு, சரிதா, சுனில் இப்படத்தில் நடித்துள்ளது. பரத் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.
கோயையான நாயகன் சத்யா (சிவகார்த்திகேயன்) தனது அம்மா, தங்கையுடன் குடிசைப்பகுதியில் வாழ்ந்து வருகிறார். அரசு சார்பில் அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறச் சொல்லி அறிவிப்பு வருகிறது. மேலும், அம்மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக கூறி, அடுக்குமாடி குடியிருப்புக்கு இடமாற்றம் செய்கிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பு தரமற்று மோசமான நிலையில் இருப்பதை எதிர்த்து முறையிடும் தன் தாயிடம் ‘அட்ஜஸ்ட் பண்ணி வாழ வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் பயந்த சுபாவம் கொண்ட சத்யா.பிரச்சனை என்று தெரிந்தால் ஒதுங்கிப் போவதே சரி, என்ற மனநிலையில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார் சத்யா. கார்ட்டூனிஸ்ட் வேலையில் சேருவதற்கான முயற்சியில் இருக்கும் அவருக்கு, நாயகி அதிதி ஷங்கர் மூலம் அந்த வேலை கிடைக்கிறது. இதற்கிடையே, சிவகார்த்திகேயனின் குடும்பமும், அவர் வசிக்கும் குடிசைப்பகுதி மக்களும் அரசு கட்டிக்கொடுத்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறுகிறார்கள். ஆனால், அங்கு சென்ற பிறகு அந்த மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
இதன் தொடர்ச்சியாக அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாவலர் மூலமாக தனது குடும்பத்துக்கு மற்றொரு பாதிப்பு நேரும்போதும் கூட, அதையும் தட்டிகேட்க முடியாமல் தன்னையே நொந்துகொள்ளும் அவர் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது தரமில்லாத சுவரினால் அவர் விபத்துக்குள்ளாகிறார் அப்போது உயிருக்கு பிரியும் தருவாயில் அவருக்கு அவர் வரைந்த கார்டூன் கதாபாத்திரத்தின் குரல் ஒன்று அசரீரீயாய் ஒலிக்கிறது. அந்தக் குரல் கோழையான சத்யா (சிவகார்த்திகேயன்) எப்படி ‘மாவீரன்’ஆக மாறுகிறார் என்பதே படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை.
சென்னை குடிசைப்பகுதி வாழ் இளைஞராக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், இதுவரை நடித்து வந்த பாணியில் இருந்து முற்றிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.மட்ரரஸ் லோகல் மொழி ,தோற்றம், நடிப்பு என அனைத்திலும் சத்யா என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன், பயந்துக்கொண்டே எதிரிகளை பந்தாடும் (பயம் & நகைசுவை)காட்சிகள் (ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது.
நாயகியாக நடித்திருக்கும் அதிதி ஷங்கர், தின தீ பத்திரிகை துணை ஆசிரியர் வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு வேலை வாங்கி கொடுப்பதோடு அவரது வேலை முடிந்து விட்டாலும், ஹீரோவுக்கு பக்கபலமாக அதிதி நிற்பது கதைக்கு பக்கபலமாக உள்ளது.
ஹீரோவின் அம்மாவாகவும் அடித்தட்டு மக்களில் ஒருவராக யதார்த்த நடிப்பில் கவனம் பெறுகிறார் சரிதா.
சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்துக்கான விஜய் சேதுபதியின் பின்னணி குரல் கூடுதல் பலம் . முதல் பத்தியில் யோகிபாபுவின் டைமிங் காமெடிங்கள் நிறைய இடங்களில் ரசிக்கவைக்கிறார் முதல்பாதி படத்தை தனது நகைசுவையின் மூலம் தூக்கி நிறுத்துகிறார். தமிழக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இன்று எப்படி பாதிக்கப்படுகிறது என்று யோகிபாபு கதாபாத்திரம் மூலம் காட்சிப்படுத்தியிருப்பது சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கிறது..
பின்னணி இசையில் ஒலிக்கும் பீஜியங்கள் அனைத்தும் காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்கிறது.பிலோமின் ராஜின் படத்தொகுப்பு கதையை சுவாரஸ்யமாகவும், வேகமாகவும் நகர்த்தி செல்கிறது.