உதவி இயக்குனர் கே.பி.செல்வா தன்னுடைய கதையை திருடி பிகில் படம் நீதிமன்றத்தில் வழக்கு

எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு

பிகில்’ உருவாகியுள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இதனிடையே உதவி இயக்குனர் கே.பி.செல்வா என்பவர், தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கே.பி.செல்வா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. பணத்திற்காக வழக்கை தொடரவில்லை என கே.பி.செல்வா தரப்பு மறுப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *