சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர். மேலும் முதலமைச்சர் வீடு அமைந்துள்ள பகுதி விளக்கொளியில் ஜொலித்தது. தொடர்ந்து துபாயில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை வந்து சேர்ந்தார். அவரை வரவேற்க அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் முட்டி மோதினர்.

அமைச்சர்கள் அனைவரும் முதலமைச்சரை வரவேற்க ஆஜராகியிருந்தனர். இதே போல் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் அங்கு வந்திருந்தனர். ஆனால் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வரவில்லை. முதலமைச்சரின் சென்னை திரும்பும் நிகழ்ச்சி குறித்து ஓபிஎஸ்சிடம் ஏற்கனவே கூறப்பட்டது. மேலும் வரவேற்க வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும்சொல்கிறார்கள்.
ஆனால் முதலமைச்சரை வரவேற்கும் நிகழ்ச்சிக்காக பெரிதாக ஓபிஎஸ் அலட்டிக் கொள்ளவில்லை. மேலும் நள்ளிரவில் வந்து வரவேற்க என்ன இருக்கிறது என்பது போல் ஓபிஎஸ் இப்படி ஒரு முடிவெடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். அதே சமயம் முதலமைச்சர் தலைமைச் செயலகம் திரும்பிய பிறகு நேரில் சென்று சந்தித்து வெளிநாட்டு சுற்றுப்பயண விவரங்கள் குறித்து ஆலோசிப்பார்கள் என்கிறார்கள்.