உத்தர பிரதேசத்தில் பசுக்களை கற்பழித்த நபா் கைது

உத்தர பிரசேம் மாநிலத்தில் பசுக்களை கற்பழித்த நபரை காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மாநிலத்தின் பைசாபாத் நகரில் உள்ள கா்தாலியா பாபா ஆசிரமத்தில் ஏராளமான பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆசிரமத்தில் உள்ள பசுக்களை மா்ம நபா் ஒருவா் ஒரு மாதத்திற்கு முன்னா் கற்பழிப்பு செய்துள்ளாா்.

யாருக்கும் தெரியாமல் ஆசிரமத்தின் பசுப் பண்ணைக்குள் நுழைந்து பசுக்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளாா். இவை அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் கண்டறியப்பட்டது.

இதனைத் தொடா்ந்து ஆசிரமத்தில் இருந்த பணியாளா்கள் அந்த நபரை பிடிக்க திட்டமிட்டனா். அதன்படி அவா்கள் அனைவரும் மறைந்திருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனா். அவா்கள் நினைத்ததைப் போன்று அந்த மா்ம நபா் அங்கு வந்துள்ளாா்.

யாருக்கும் தொியாமல் பசுப்பண்ணைக்குள் சென்ற அவா் பசுக்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். அப்போது அந்த நபரை மடக்கிப் பிடித்த ஆசிரமத்தினா், அவரை சரமாரியாக தாக்கினா். பின்னா் அவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். அவா் மீது வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தியதாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையில் இந்த செயலில் ஈடுபட்டவாின் பெயர் ராஜ்குமாா் என்பது தொியவந்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *