Blog
-
அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக விருது பெற்ற இயக்குநர் வஸந்தின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக விருது பெற்ற இயக்குநர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”
நியூயார்க், கலிபோர்னியா மற்றும் அட்லாண்டா திரைப்பட விழாக்களில் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற சர்வதேச திபுரான் மற்றும் நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவினையும் தொடர்ந்து அட்லாண்டா மாகாணத்தின் திரைப்பட விழாவிலும் திரையிட இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரையிடப்பட்டு சிறந்த திரைப்படமாக தேர்வு செய்து விருது பெற்றுள்ளது. தொடர்ந்து பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட பட்டுகொண்டிருக்கும் இத்திரைபடத்திற்க்கு திரைப்ப்ட விழாக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழாவில் தேர்வுசெய்யப்பட்டு வெளியாகியுள்ளது
சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது.வீடியோவை பார்க்க :- https://youtu.be/SheNN0UUQTI
இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி , காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ”மயக்கம் என்ன“ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரத்யோகமாக பின்னனி இசை இல்லாதாது அனைத்து திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது குறிப்பிடதக்கது.
எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார். -
களவாணி – 2 பிரச்சனை தீர்ந்தது
களவாணி – 2 பிரச்சனை தீர்ந்தது
” களவாணி – 2 ” படத்திற்கான காப்பிரைட் உரிமை தன்னிடம் இருப்பதாகவும், இதற்காக நடிகர் விமலிடம் பணம் கொடுத்ததாகவும் கூறி சிங்காரவேலன் தரப்பினர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றிருந்தனர். பின்னர் இயக்குநர் சற்குணம் தரப்பினர் இந்த தடையை உடைத்தனர். இருப்பினும் வழக்கு நிலுவையில் இருந்ததால் படத்தை வெளியிடுவதில் முட்டுக்கட்டை நீடித்தது. இந்நிலையில் இன்று நேரில் சந்தித்து கொண்ட விமல் மற்றும் சிங்காரவேலன் பிரச்னையை பேசி தீர்த்து கொண்டனர்.
சிங்காரவேலன் கொடுத்த பணத்திற்கு ஈடாக 2019 ஆம் ஆண்டிற்குள் இரண்டு படங்களில் நடித்து கொடுத்து விடுவதாக விமல் உத்தரவாத கடிதம் கொடுத்ததையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக சிங்காரவேலன் தெரிவித்துள்ளார். இதனால் களவாணி – 2 படத்திற்கான தடை முற்றிலுமாக நீங்கி விட்டது. -
நாக்கை அறுப்பேன் என சொல்வதா… ராஜேந்திர பாலாஜியை கைது செய்க.. திருமாவளவன் ஆவேசம்.
நாக்கை அறுப்பேன் என சொல்வதா… ராஜேந்திர பாலாஜியை கைது செய்க.. திருமாவளவன் ஆவேசம்.
சென்னை:
கமல்ஹாசன் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்து, பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் மநீம கட்சி சார்பில் போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்து, பள்ளப்பட்டியில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காந்தி சிலைக்கு முன் சொல்கிறேன்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே என்றார். மேலும் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரனாக, அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருப்பதாக தெரிவித்தார்.அமைச்சர் கேள்வி
ராஜேந்திர பாலாஜி கேள்வி
கமல்ஹாசனின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐஎஸ் அமைப்பிடம் இருந்து பணம் வாங்கிவிட்டாரா கமல்ஹாசன்? என்று கேள்வி எழுப்பி உள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,கமல் நாக்கை அறுக்கவேண்டும்
அமைச்சர் விளக்கம்
சுதந்திர இந்தியாவின் தீவிரவாதி இந்து என கூறியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், மன்னிப்பு கேட்டால் கமல் நாக்கை அறுக்கவேண்டும் என பேசிய கருத்தை திரும்ப பெறுகிறேன் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கமளித்துள்ளார்.மதத்தை குறிப்பிட்டு பேசக்கூடாது
திருமாவளவன் வலியுறுத்தல்
இந்தநிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கமல்ஹாசன் உண்மையை பேசியதற்காக பாராட்டுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தேர்தல் பரப்புரையின் போது, மதத்தை குறிப்பிட்டு பேசக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் விதிக்கு முரணாக அவர் பேசியிருப்பது ஏற்புடையது அல்ல எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.உடன்பாடு இல்லை
திருமாவளவன் கருத்து
கமல்ஹாசன் இந்து எனக் குறிப்பிட்டு இருக்க வேண்டாம் என்பதே தமது நிலைப்பாடு எனவும் திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார். கமல்ஹாசனின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றால், அதனை அமைச்சர் கண்டிக்கலாம். ஆனால் அதனை விடுத்து அவரின் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது, மட்டுமல்ல தண்டனைக்குறியதும் தான் எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.நியாயம் அல்ல
முதல்வருக்கு வேண்டுகோள்
எனவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்து கைது கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இப்படி வன்முறையை தூண்டும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பதவியில் தொடர செய்வது நியாயம் அல்ல என தெரிவித்துள்ள தொல். திருமாவளவன் அவரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க தமிழக முதலமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளார். -
இந்தியாவிலிருந்து வெளியேறும் கோடீஸ்வரர்கள்.. ஷாக்கிங் ரிப்போர்ட்!
இந்தியாவிலிருந்து சாரை சாரையாக வெளியேறும் கோடீஸ்வரர்கள்.. ஷாக்கிங் ரிப்போர்ட்!டெல்லி: இந்தியாவில் இருந்து வெளியேறும் பணக்காரர்கள், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகமாகி இருப்பதாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் போது அந்நாட்டில் இருந்து, பணக்கார்கள் வெளியே செல்வார்கள். தங்கள் சொத்தை காக்கவும், வியாபாரம், வர்த்தகத்தை காக்கவும் இவர்கள் இப்படி நாட்டை விட்டு வெளியே செல்வது வழக்கம்.இதுகுறித்த அறிக்கையை ஏஎப்ஆர்ஏசியா வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. குளோபல் வெல்த் மைக்ரேஷன் ரிவ்யூ (Global Wealth Migration Review) என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டள்ளது. அதன்படி இந்தியாவில் இருந்து வெளியேறும் பணக்காரர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகமாகி உள்ளது.
இந்த பட்டியலில் சீனாதான் முதல் இடம் வகிக்கிறது. அதன்படி சீனாவின் மீது வரிசையாக அமெரிக்கா அதிக வரிகளை விதித்து வருகிறது. இதனால் சீனாவில் இருந்து வெளியேறும் பணக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதில் ரஷ்யா இரண்டாம் இடம் வகிக்கிறது. ரஷ்யாவில் நிலவும் மோசமான பொருளாதார சூழ்நிலை காரணமாக அந்நாட்டில் இருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
இந்தியாவை விட்டு வருடத்திற்கு வெளியேறும் பணக்காரர்களில் 5000 பேர் வரை கோடீஸ்வரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2% பேர் இதில் மிக மிக அதிக வளம் பெற்றவர்கள். அதேபோல் இந்தியாவின் மொத்த வளத்தில் 48% இந்த பணக்காரர்களிடம்தான் உள்ளது.
ஆனால் உலக அளவில் மொத்த பொருளாதாரத்தில் 36% பணக்காரர்களிடம் உள்ளது. இந்தியாவில்தான் இந்த நிலை மிக மோசமாக உள்ளது. கிட்டத்தட்ட பாதி அளவு வளத்தை மிக குறைவான மக்களே இந்தியாவில் கட்டுப்படுத்துகிறார்கள்.
இத்தனை நாட்கள் பிரிட்டனில் நிலவி வந்த பிரிக்சிட் (brexit) பிரச்சனை காரணமாக, அங்கிருந்து அதிக அளவில் பணக்காரர்கள் வெளியேறினார்கள். தற்போது அந்த சூழ்நிலை கொஞ்சம் மாறி உள்ளது.
பொதுவாக இந்தியாவில் இருந்து வெளியேறும் பணக்காரர்கள் அதிகம் செல்வது அமெரிக்காவாக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடி இந்திய பணக்காரர்கள் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. -
நிர்மலா சீதாராமன் மாயாவதிக்கு கேள்வி!
டெல்லி
நீங்கள் மட்டும்தான் ஒரே தலித் பெண்ணா? சொல்லுங்கள்.. நிர்மலா சீதாராமன் மாயாவதிக்கு கேள்வி!
டெல்லி: மாயாவதி மட்டும்தான் உத்தர பிரதேசத்தில் ஒரே தலித் பெண்ணா என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி உள்ளார்.
ராஜஸ்தானின் அல்வார் பகுதியில் தலித் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதான் உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் முக்கிய தேர்தல் பிரச்சாரமாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சனையை பாஜக கையில் எடுத்து பிரச்சாரம் செய்து வருகிறது.இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இதற்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆதரவும் உள்ளது. தன்னை தலித் என்று கூறிக்கொள்ளும் மாயாவதி, ஏன் ஒரு தலித் சிறுமிக்காக பேசுவதில்லை. ஏன் அவர் இன்னும் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கிறார் என்று மோடி பேசி இருந்தார்.
கமல் பேச்சை வைத்து மோதலை ஏற்படுத்த சதியா?
இதற்கு பதில் அளித்த மாயாவதி, பெண்கள் பாதுகாப்பு குறித்து மோடி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. மோடியை தங்கள் வீட்டு ஆண்கள் சந்திப்பதை கூட பாஜகவை சேர்ந்த பெண்கள் விரும்புவதில்லை. மோடியை சந்தித்தால் தங்கள் கணவர் தன்னை விட்டு பிரிந்துவிடுவாரோ என்று பாஜக பெண்கள் பயப்படுகிறார். பாஜகவின் நிலை அப்படித்தான் உள்ளது என்று மாயாவதி குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இந்த வார்த்தை போரில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சேர்ந்து இருக்கிறார். இதுகுறித்து அவர் பேட்டி அளித்துள்ளார்.
அதில், பாஜகவில் இருக்கும் பெண்களையும், மோடியையும் மாயாவதி அவமானப்படுத்திவிட்டார். மோடி ராஜஸ்தான் வன்புணர்வு குறித்து சரியான கேள்வியை கேட்டார். ஆனால் மாயாவதி அதற்கு பதில் அளிக்காமல், மோடியை அவமானப்படுத்துகிறார்.
மாயாவதி மட்டும்தான் ஒரே தலித் பெண்ணா? அவர் ஏன் மற்ற தலித் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேச மறுக்கிறார். மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மாயாவதி விமர்சனம் செய்வது மிகப்பெரிய தவறு.
எங்கள் கட்சியில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம். நாங்கள் எங்கள் கட்சிக்குள் எப்படி இருக்கிறோம் என்பதை மாயாவதி கூற வேண்டாம். தேர்தல் தோல்வி பயத்தில் மாயாவதி உளற வேண்டாம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். -
ஸ்டாலினை சரமாரியாக விளாசிய ஓபிஎஸ்!
மதுரை:
திமுக தலைவர் ஸ்டாலின் குறுக்கு வழியில் முதல்வராக துடிக்கிறார் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சாடியுள்ளார்.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி திமுக வேட்பாளராக டாக்டர் சரவணனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் செய்தார்.ஜல்லிக்கட்டு
அப்போது அவர் பேசியதாவது, காங்கிரஸ் – தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது.ஒரே நாளில்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி
அப்போது முதல்வராக இருந்த நான் உடனே டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். ஒரே நாளில் 4 துறைகளிடம் அனுமதி பெற்று திரும்பினேன். தி.மு.க. ஆட்சியில் தடை விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு விழா கடந்த சில வருடங்களாக தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது.மக்கள் ஏற்கமாட்டார்கள்
ஸ்டாலின் துடிக்கிறார்
மக்கள் நலனில் அக்கறை இல்லாத தி.மு.க.வை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். தி.மு.க. மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. மு.க. ஸ்டாலின் குறுக்கு வழியில் முதல்வராகத் துடிக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.பிரியாணி கடை
மாமூல் கேட்கும் பழக்கம்
பிரியாணி கடையில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுக்கும் தி.மு.கவினரின் அக்கிரமம் தற்போதும் தொடர்கிறது. மாமூல் கேட்கும் பழக்கம் இன்னும் திமுகவை விட்டு விலகவில்லை.காவிரி விவகாரம்
மக்களைப் பற்றி சிந்திக்கும்
காவிரி விவகாரம் உள்ளிட்டவற்றில் வெற்றி தேடித்தந்த அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி எப்போதும் மக்களுக்கான ஆட்சி மக்களைப் பற்றி சிந்திக்கும் கட்சி அ.தி.மு.க.அதிமுக வேட்பாளர்கள்
நல்ல தீர்ப்பு
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன். எஜமானர்களாகிய நீங்கள்தான் எங்களுக்கு நல்ல தீர்ப்பை தர வேண்டும்.அமைதி பூங்கா
ஆட்டவோ அசைக்கவோ முடியாது
தமிழகத்தில் எந்த பகுதியிலும் சாதி, மத கலவரங்கள் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. எந்த காலத்திலும் அ.தி.மு.க.வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. புயல், பூகம்பம் வந்தாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தின் போது பேசினார். -
தமிழ்நாடு முதல்வருக்கு பிறந்த நாள்.. 4 அமைச்சர்கள்தான் வாழ்த்தினார்களாமே.. பரபரக்கும் அதிமுக
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 65-வது பிறந்தநாள் நடந்து முடிஞ்சிடுச்சு.. ஆனா அன்றைய தினம் இந்த ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா?
நம்ம முதல்வர் எப்பவுமே சிம்பிள்தான். ரொம்ப ஆடம்பரம், கொண்டாட்டம் இப்படி எந்த விஷயத்திலயும் ஈடுபட மாட்டார். கடந்த வருடம் பிறந்த நாள்கூட ரொம்ப எளிமையாதான் கொண்டாடினார்.
அன்னைக்கு டிடிவி தினகரன் ஒரு பக்கம், ஸ்டாலின் ஒரு பக்கம் என குடைச்சல் தந்தனர். ஆட்சி மாற்றம், ஆட்சி கவிழ்ப்பு என்று சொல்லி சொல்லியே பீதி கிளப்பினர். இதனால் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை.
டிடிவி தினகரன்
முக ஸ்டாலின்
அதே மாதிரிதான் இந்த பிறந்த நாளுக்கும்! இந்தமுறையும் டிடிவி தினகரன், ஸ்டாலினின் பகீர் பேச்சுகள், அதிடி நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதை தவிர தேர்தல் முடிவுகளும் எப்படி இருக்க போகிறதோ என்ற கலக்கமும் உள்ளது. இதனால் ஆடம்பரமின்றிதான் பிறந்த நாள் நடந்து முடிந்தது. பிறந்த நாள் அன்று, திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரத்தில் இருந்ததால், கழக நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். ஆனால் அமைச்சர்கள் தரப்பிலிருந்து சத்தமே காணோம்!5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்- முதல்வர் கேள்வி
4 அமைச்சர்கள்
நமது அம்மா
ஒருவேளை கொண்டாட்டம், விழா என்று நடத்தினால் 4 தொகுதி இடைத்தேர்தலில் அது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றுகூட நினைத்திருக்கலாம் என்கிறது ஒரு தரப்பு. இன்னொரு தரப்பில், நமது அம்மா நாளிதழ் உட்பட எந்த பத்திரிகையிலும் வாழ்த்து சொல்லி விளம்பரம் தர வேண்டாம் என்று முதல்வர் தரப்பே கேட்டு கொண்டாதாக சொல்லப்படுகிறது.வாழ்த்து
பிறந்த நாள்
ஆனால் விஷயம் இது இரண்டுமே என தெரிகிறது. உண்மையிலேயே முதல்வருக்கு ஆதரவான அந்த 4 அமைச்சர்கள் மட்டும்தான் வாழ்த்து சொன்னார்களாம். வேறு யாருமே பிறந்த நாளில் ஆர்வம் காட்டவில்லையாம்.அதிருப்தி
டிடிவி தினகரன்
அந்த அளவுக்கு எடப்பாடி மீது நிறைய பேருக்கு அதிருப்தி இருக்கிறதாம். இவர்களில் பெரும்பாலானோர் தினகரன் பக்கம் சாயவும் யோசித்து வருகிறார்கள் என்றும், எதையாவது வாழ்த்து சொல்லி விளம்பரம் பண்ண போய், அது பின்னாளில் பாதிப்பை தந்துவிடுமோ என்று அச்சப்படுகிறார்களாம்.அமைதி
புறக்கணிப்பு
இப்போதைக்கு அதாவது தேர்தல் முடிவு வரை அமைதி காப்பதே சிறந்தது என்றும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சில அமைச்சர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் இப்படி ஒரு மனநிலைமையில் இருப்பதை அறிந்துதான் பிறந்த நாளை புறக்கணிக்க முதல்வர் முடிவு செய்தார் என்றும் மற்றொரு தரப்பு சொல்கிறது.வாழ்த்து
தமிழிசை
இவர்கள் மட்டுமில்லை.. கூட்டணியில் உள்ள யாருமே முதல்வருக்கு வாழ்த்து சொல்லவில்லை. கொஞ்சம் லேட்டாக வந்து வாழ்த்தியது தமிழிசை மட்டும்தான்! அதனால் தேர்தல் முடிவுகள் வந்தால்தான், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மற்றும் கட்சி நிர்வாகிகளின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும். -
தமிழகத்தில் தொடரும் ஆதரவு- விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!
டெல்லி: இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இத்தடை 2 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பல நாடுகள் தீவிரவாத இயக்கத்தின் பட்டியலில் சேர்த்தன. கடந்த 2006-ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியனும் தீவிரவாத இயக்கப் பட்டியலில் இணைத்தது. இதனால் ஐரோப்பிய நாடுகள் அந்த இயக்கங்களுக்கு தடை விதித்தன.
இதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.இலங்கை: முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல்- வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரை- சொத்துகள் சூறை!
அதில் 2009-ம் ஆண்டுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்பதால் அந்த அமைப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக தீர்ப்பளித்தது. எனினும் இந்தியாவில் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் அதாவது 2024-ம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் விடுதலை புலிகள் ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன. விடுதலைப் புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன. இதனால் வரும் 2024-ஆம் ஆண்டு வரை ஊபா (Unlawful Activities (Prevention) Act- UAPA) சட்டத்தின் கீழ் விடுதலை புலிகள் இயக்கத்தின் தடை நீட்டிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Indian Government extended ban of LTTE for 5 more years . -
ராகவா லாரன்ஸ் மக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில்
சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியின்றி வாழ்பவர்கள் இந்த உலகில் மிகவும் குறைவு. அந்த குறைவானவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அவர் செய்து வரும் அறம் சார்ந்த சேவைகள் எல்லாம் பலபேர்களை வாழ்வில் கரம் பிடித்து தூக்கி விட்டிருக்கிறது.
தன் அன்னைக்கு கோவில் கட்டியதோடு இல்லாமல் கடந்த அன்னையர் தினத்தன்று தாய் அமைப்பு என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய தெய்வங்களை காக்கும் பொருட்டு சில பலமான முன்னெடுப்புகளை துவங்கியுள்ளார். அதைப்போலவே தன்னை நாடி வரும் மக்களுக்கு மட்டும் அல்லாமல் தான் தேடிச் சென்றும் நல்லுதவி செய்வதற்காக தற்போது ராகவா லாரன்ஸ் ஒரு திட்டத்தை வகுத்திருக்கிறார்.
இதைப்பற்றி ராகவா லாரன்ஸ் கூறும்போது,
“என்னுடைய ஒவ்வொரு படிகளுக்கும் அடிநாதமாக இருப்பது இளைஞர்கள் தாய்மார்கள் ஆகிய ரசிகர்களும் முக்கியமாய் குழந்தைகளும் தான். அவர்களுக்கு வெறும் நன்றி சொல்வதோடு என் கடமை முடிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் ஒவ்வொரு முயற்சிகளாக செய்து வருகிறேன். தற்போது தாய் அமைப்பு ஒன்றை நிறுவி இருக்கிறோம்.
மக்களுக்கு சேவை செய்ய இனி எனது ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்குப் பிறகும் 15-நாட்கள் மக்களை நேரடியாக சந்திக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். காஞ்சனா சீரிஸ் படங்கள் தொடர்ந்து 100 கோடிகளுக்கும் மேல் வசூல் குவிக்கிறது என்றால் அதற்கு குழந்தைகள் தான் பெரிய காரணம். அதனால் இந்த சேவையை குழந்தைகளிடம் இருந்தே துவங்க விருப்படுகிறேன். குடும்பச் சூழல் காரணமாக கல்வி கிடைக்கப் பெறாத குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம். மேலும் பல நல்ல யோசனைகள் உள்ளது. அவை அனைத்தையும் நடைமுறைப் படுத்த நல்லோர்கள் வாழ்த்தும் ஆண்டவன் அருளும் கிடைக்கும் என்று நம்புகிறேன்” இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.இதன் துவக்கமாக கஜா புயலால் வீட்டை இழந்த சமூக சேவகர் கணேசனுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டி அதன் கிரகபிரவேசத்தை இன்று நேரில் சென்று நடத்தியுள்ளார் லாரன்ஸ்.
கொடுப்பவர்களுக்குத் தான் தெய்வம் கொடுக்கும் என்பார்கள். லாரன்ஸ் அவர்களுக்கு தெய்வம் ஒருபோதும் கொடுப்பதை நிறுத்தாது என்ற நம்பிக்கையை அவர் தொடர்ந்து பலப்படுத்திக் கொண்டே இருக்கிறார். வாழ்க அவரது சேவை!