connection to the Jurassic series and how it captured his imagination National, 18th June 2025: Universal Pictures (distributed by Warner Bros. Discovery) returns with the next epic and eagerly awaited chapter in the iconic Jurassic Saga, Jurassic World: Rebirth will be releasing worldwide on 4th July, 2025.
With its breathtaking visuals, a deeper look into the new era, the movie elevates the excitement, positioning it as one of the most eagerly awaited films of 2025.
Directed by Emmy Award winning director Gareth Edwards, the film promises to immerse audiences
in a thrilling new era. Leading the stellar cast is the powerhouse talent of Academy Award nominee
Scarlett Johansson, joined by Emmy Award nominee Jonathan Bailey and Academy Award winner
Mahershala Ali offering a groundbreaking and a new path to the enduring Jurassic saga.
Following Jurassic World Dominion, the story shifts to an isolated equatorial region where surviving
dinosaurs have found a familiar, thriving habitat. Now, the fate of humankind may rest on the three most immense among them, who hold the secret to a miraculous, life-altering drug. Dr. Henry Loomis (played by Jonathan Bailey), a paleontologist, whereas Zora Bennett (played by Scarlet Johansson), a skilled covert operative who leads a skilled team on a top-secret mission to secure genetic material from the world’s three most massive dinosaurs. Her operation clashes with a civilian family’s desperate plight after aquatic dinosaurs overturn their boat. Marooned on a forgotten island, they unearth a shocking, decades-long global secret.
While discussing his love for the Jurassic series and how it has been a huge part of his childhood that
captured his imagination for cinema, Emmy Award Nominee Jonathan Bailey who plays Dr. Henry
Loomis in the upcoming Jurassic World: Rebirth shared, “I was five years old when my family took me to Jurassic Park, so a slightly questionable choice by my parents, given that it was PG-13,” Bailey further said, “I remember it was kind of spiritual, not only because of the vision and the fantasy, but because it spoke to something about the modern world’s relationship to the past and nature.
Thecharacters were so vivid and so playful, the writing was so taut, and because it was Spielberg, it was
a sumptuous escapist delight. And the John Williams score! How do you rank the John Williams scores? I’m literally paid to say this now, but I do think it’s number one.”
The dinosaurs are back! Catch the stunning spectacle of Jurassic World and jaw-dropping visuals,
igniting a new era where thrill meets science. The new era begins on July 4th, 2025!
Jurassic World: Rebirth | Official Trailer 2
JURASSIC WORLD: REBIRTH | Official Hindi Trailer 2
JURASSIC WORLD: REBIRTH | Official Tamil Trailer 2
JURASSIC WORLD: REBIRTH | Official Telugu Trailer 2
Sony Liv, Applause Entertainment மற்றும் Kukunoor movies ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த திரைப்படம் தான் “தி ஹண்ட்”. இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருப்பமாக அமைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள வெவ்வேறு யதார்த்தக் கதையான “தி ஹண்ட்: தி ராஜீவ் காந்தி அசாசினேஷன் கேஸ்” வெப்சீரிஸ், ஜூலை 4ஆம் தேதி முதல் Sony LIV தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்கனூர் இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸ், பத்திரிகையாளர் அனிருத்ய மித்ரா எழுதிய பேஸ்ட் செல்லிங் புத்தகமான ‘Ninety Days’-ஐ அடிப்படையாகக் கொண்டது. அவரது நேரடி விசாரணை அனுபவங்களைத் தழுவி உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், உளவுத்துறை தோல்விகள், இருண்ட அரசியல் உறவுகள், தர்மத்தின் பெயரில் மனித இழப்புகள் ஆகியவற்றை சுவாரசியமான வகையில் ஆராய்கிறது.
இத்திரைப்படத்தின் திரைக்கதை, ரோஹித் பனாவாலிகர் மற்றும் ஸ்ரீராம் ராஜன் ஆகியோருடன் இணைந்து எழுதப்பட்டுள்ளது.
Sony LIV in collaboration with Applause Entertainment and Kukunoor Movies brings this extraordinary true story to the screen in The Hunt: The Rajiv Gandhi Assassination Case, a gripping political thriller based on the bestselling book Ninety Days by investigative journalist Anirudhya Mitra.
Directed by National Award-winning filmmaker Nagesh Kukunoor, and co-written with Rohit Banawalikar and Sriram Rajan, the series delves deep into a world of espionage, blurred loyalties, intelligence breakdowns, and the sheer human cost of justice.A Riveting Ensemble Cast Includes: Amit Sial as D.R. Kaarthikeyan (Chief of SIT), Sahil Vaid as Amit Verma, (SP-CBI), Bhagavathi Perumal as Ragothaman (DSP-CBI), Danish Iqbal as Amod Kanth (DIG-CBI), Girish Sharma as, Radhavinod Raju (DIG-CBI), Vidyut Garg as Capt. Ravindran (NSG Commando)Along with Shafeeq Mustafa, Anjana Balaji, B Sai Dinesh, Shruthy Jayan, Gouri Menon, and others
*விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா*
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு – சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் நடிகர் – இயக்குநர் முருகானந்தம் பேசுகையில், ” இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஜூனியர்கள் சீனியர்களை இயக்குவது போல் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் கலைஞர்களை அவர்கள் கையாண்ட விதம் நன்றாக இருந்தது. ஒரு குடும்பம் போல் படப்பிடிப்பு தளம் கலகலப்பாக இருந்தது. ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைக்கும். இந்தப் படத்தில் நடிக்க தொடங்கி நிறைவை எட்டிய போது, ஆஹா! படத்தின் படப்பிடிப்பு இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே? என்ற ஏக்கத்தை உண்டாக்கியது. இதுதான் இயக்குநர் சண்முக பிரியனுக்கு கிடைத்த முதல் வெற்றி. அந்த அளவிற்கு ஒட்டுமொத்த படக் குழுவையும் அவர் நேர்த்தியாக அரவணைத்தார்.
படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விக்ரம் பிரபு சக கலைஞர்கள் மீது அதிக அக்கறையும் அன்பும் காட்டினார். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் சுஷ்மிதா படத்தில் மட்டுமல்ல படப்பிடிப்பு தளத்திலும் எதார்த்தமான ஹீரோயினாகவே இருந்தார். அவருக்கும் வாழ்த்துக்கள்.
படத்தில் பணியாற்றத் தொடங்கும் போது இயக்குநர் யார் ? என்று தெரியாது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் எனக்கு தலை வலிக்கிறது உடல் வலிக்கிறது என ஏதாவது காரணத்தை சொன்னால் உடனே ஒரு பெயரை சொல்லி அந்த மாத்திரையை வாங்கி சாப்பிட சொல்வார். அதன் பிறகு தான் அவர் மருத்துவர் என தெரியவந்தது. எந்த வேலை பார்த்தாலும் இயக்குநராக வரலாம். ஆனால் ஒரு மருத்துவராக இருந்து இயக்குநராகி இருக்கிறார் என்றால்.. முதலில் அவருடைய பெற்றோர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
லவ் மேரேஜ் திரைப்படத்திற்கு அரேஞ்ச் மேரேஜ்க்கு வரும் கூட்டம் போல் அனைவரும் வருகை தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் ” என்றார்.
தயாரிப்பாளர் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ பேசுகையில், ” எல்லோருக்கும் அவர்களுடைய முதல் குழந்தை ஸ்பெஷலானது. அது கடவுளின் ஆசி என்று சொல்வார்கள் அந்த வகையில் எங்களின் அஸ்யூர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் படம் லவ் மேரேஜ். நான் வணங்கும் பெருமாளின் அருளுடன் ஜூன் 27ஆம் தேதியன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் நடிகர் தனுசுக்கு நன்றி.
இப்படத்தின் கதையை இயக்குநர் சண்முக பிரியன் முதன் முறையாக சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது. இதுதான் எங்களின் முதல் படமாக இருக்க வேண்டும் என தீர்மானித்தோம். இந்த கதையை மிகவும் திறமையாகவும் இயக்கியிருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கும் வகையில் படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. அந்த மண்ணின் மணம் மாறாமல் அழகியலுடன் படம் உருவாகி இருக்கிறது. படத்தில் நடித்த நடிகர்களின் பாசிட்டிவிட்டி படத்திலும் இடம் பிடித்திருக்கிறது.
இந்தப் படத்தில் நடித்த விக்ரம் பிரபு , சத்யராஜ், சுஷ்மிதா பட், அருள்தாஸ், ரமேஷ் திலக் ஆகிய அனைத்து நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் இந்தப் படத்திற்காக எங்களுடன் இணைந்து பணியாற்றிய ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகருக்கும், இந்த படத்தின் இசையை வெளியிட்ட சோனி மியூசிக் நிறுவனத்திற்கும், படத்தை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலனுக்கும், தயாரிப்பில் எங்களுடன் தொடக்கத்திலிருந்து முழு ஒத்துழைப்பு வழங்கிய தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனுக்கும், சிறப்பு விருந்தினராக வருகை தந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
‘லவ் மேரேஜ்’ ஜாலியான படம். ஜூன் 27ஆம் தேதியன்று அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து கொண்டாடி ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகை சுஷ்மிதா பட் பேசுகையில், ” இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆண்டவனின் ஆசியாகவே பார்க்கிறேன். இதற்குக் காரணமாக இருந்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழில் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறேன்.
இந்தப் படத்தில் அனுபவம் மிக்க இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன். இப்போது அவர்கள் அனைவரும் என்னுடைய குடும்பமாக ஆகிவிட்டனர். விக்ரம் பிரபு சாரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் திறமையானவர். நட்பாக பழகக் கூடியவர்.
இந்தப் படத்தில் அனைவரும் தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். இதற்காக அனைவருக்கும் வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசுகையில், ” லவ் மேரேஜ் படத்தின் ட்ரெய்லரை.. 90ஸ் கிட்ஸ்களின் எதிரொலியாகத்தான் பார்க்கிறேன். இந்த படத்தின் முன்னோட்டத்துடன் என்னால் எளிதாக தொடர்பு கொள்ள முடிந்தது. இப்படத்தில் மிஷ்கின் பாடிய பாடலை கேட்டவுடன் இந்தப் பாட்டு ஹிட் ஆகும் என சொன்னேன்.
ஒரு படத்திற்கு பாசிட்டிவிட்டியை முதன்முதலாக பரப்புவது அப்படத்தின் டைட்டிலிருந்து தொடங்கும் என்பதை நம்புபவன். அந்த வகையில் லவ் மேரேஜ் என்பது எல்லா தரப்பினரும் இயல்பாக கேட்டிருக்கும் பார்த்திருக்கும் வார்த்தை.
நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் யாராவது காதலித்திருப்பார்கள் அல்லது காதலித்துக் கொண்டிருப்பார்கள். காதல் என்பது திருமணம் வரை செல்லக்கூடியது தான். இதனால் இந்தப் படத்திற்கு டைட்டிலே மிகப்பெரிய வெற்றியைத் தரும். இதற்காக இயக்குநருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் ரசிகன் நான். அவரை நீண்ட காலமாக பின் தொடர்கிறேன். அவருடைய இசையில் ஒலிகள் வித்தியாசமாக ரசிக்கக் கூடிய வகையில் இருக்கும். அந்த ஓசை இளைய தலைமுறையினர் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
விக்ரம் பிரபு கடினமாக உழைக்கக்கூடிய நடிகர். பக்கத்து வீட்டு பையனாக இந்த படத்தில் அவர் நடித்திருக்கிறார் . இதற்காகவே இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். அவர் வில்லனாகவும் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பரிசோதனை முயற்சியாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். அவர் இயல்பாக நடித்திருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் ” என்றார்.
பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், ” தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தான் இந்த படக்குழுவினரை அறிமுகப்படுத்தினார். இயக்குநர் சண்முக பிரியன் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனை சந்திக்கும் போதெல்லாம் ஷான் ரோல்டன் உற்சாகமாகி விடுவார். அந்த அளவிற்கு இயக்குநரை நேசிப்பார். இயக்குநர் போனில் ‘அண்ணா’ என அழைக்கும் போதெல்லாம் அந்த சொல்லிற்கான உணர்வை நான் உணர்ந்திருக்கிறேன்.
இந்தப் படத்தில் மிஷ்கின் பாடிய பாடலை தான் நாங்கள் முதல் முதலில் உருவாக்கினோம். மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் அந்தப் பாடல் உருவானது. அதாவது ஒரே நாளில் இந்த பாடலை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் அந்தப் பாடலை ஒரு மணி நேரத்தில் நிறைவு செய்தோம். இதற்காக மிஷ்கினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர்களின் திருமண கலாச்சாரத்தில் மாப்பிள்ளை அழைப்பிற்கான பாடல் மிக அரிதாகத்தான் இருக்கிறது. அந்தக் குறையை போக்குவதற்காக இந்த படத்தில் ஒரு மாப்பிள்ளை அழைப்பிற்கான பாடல் இருக்கிறது. பாடல் நிறைவு பெற்ற பின் இயக்குநர் சண்முகப்பிரியன் என்னை தொடர்பு கொண்டு இந்தப் பாடலில் எங்கேனும் சில வார்த்தைகள் திரும்பத் திரும்ப வர வேண்டும் என விரும்புகிறேன் என்றார். அதன் பிறகு புதிதாக நான்கு வரிகளை சேர்த்த பிறகு பாடலின் தரம் மிக உயர்ந்ததாக இருந்தது.
இந்தப் படத்தில் நான் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறேன். ஷான் ரோல்டனுடன் இணைந்து பணியாற்றிய பிறகுதான் எனக்கு சிறந்த பாடலாசிரியருக்கான ஆனந்த விகடன் விருது கிடைத்தது. இதற்காகவும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், ” இந்தப் படத்தில் நான் பணியாற்றியதற்கு மிக முக்கியமான காரணம் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தான். இதற்காக முதலில் அவருக்கு நன்றி.
இயக்குநர் என்னை சந்தித்து கதை சொன்ன பிறகு கதையைப் பற்றிய ஒரு விசுவல் பேலட்டை ( காட்சி மொழிக்குரிய சித்திரங்கள்) காண்பித்தார். அதைப் பார்த்தவுடன் இந்த படத்தில் பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.
நான் ஒரு 90ஸ் கிட்ஸ். அதனால் திரையரங்கத்திற்கு செல்லும் போது தமிழ் படம் பார்க்க வேண்டும் என்று தான் செல்வோம். தற்போது பான் இந்திய திரைப்படங்களை பார்க்கிறோம் தென்னிந்திய திரைப்படங்களை பார்க்கிறோம். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தமிழ் படத்தை பார்த்த மன நிறைவை ஏனைய திரைப்படங்கள் ஏற்படுத்துமா? என்று கேட்டால் தெரியாது. வேற்று மொழி திரைப்படங்களும் இங்கு வெற்றி பெறுகிறது. ஆனால் தமிழர்களுக்கு என ஒரு அடையாளம் இருக்கிறது. அந்த அடையாளம் இந்த படத்தின் கதையைக் கேட்கும் போது இருந்தது. இயக்குநர் சண்முக பிரியன் இசைமீது பற்று கொண்டவர். இப்போது அவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஆகிவிட்டார். அவருக்கு திரைத் துறையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் உண்டு.
புதிய தயாரிப்பாளர்களான டாக்டர் ஸ்வேதாவும் , டாக்டர் தீரஜும் சினிமா மீது உள்ள காதலால் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். அதை அவர்களை சந்தித்து பேசும்போது தெரிந்து கொண்டேன். ஆர்வம் மட்டும் இல்லாமல் சினிமா பற்றிய வர்த்தக அறிவும் அவர்களிடத்தில் இருக்கிறது.
விக்ரம் பிரபு சினிமாவில் நான் சந்தித்த நபர்களிலேயே நேர்மையானவர் . கண்ணியமானவர் . அவர் நடித்த படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அவருடன் இணைந்தும் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது சிறந்த தொடக்கமாக இருக்கும் என கருதுகிறேன். அவருடைய படத்தில் சிறந்த பாடல்களை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. அது இந்த படத்தில் சாத்தியமாக இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் ஆல்பமாக ஹிட் ஆகும்.
மிஷ்கின் ஒரு முழுமையான கலைஞன். அவர் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் நூல் தான். அந்த நூலில் கட்டப்பட்ட பூக்கள் தான் மோகன் ராஜாவின் பாடல் வரிகள். இதனால் பூமாலையில் அவர் பூவாக இருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றுவது எப்படி இருக்கும் என்றால் நல்ல குளிரான சூழலில் கதகதப்பான நெருப்பிற்கு முன் உட்காருவது போல் சௌகரியமாக இருக்கும். அவர் தமிழ் சினிமாவில் பாடல்கள் மூலம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு பல தமிழ் வார்த்தைகளையும் ,தமிழ் தத்துவங்களையும் சாமர்த்தியமாக உள்ளே புகுத்தி வருகிறார். இந்தப் படத்தில் கூட காதலுக்கான அழகான வரிகளை எழுதி இருக்கிறார்.
இந்தப் படத்தை அனைவரும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு சென்று கண்டு ரசிக்கலாம். இந்தப் படம் சிறந்த படமாக இருக்கும். அனைவருக்கும் திருப்தியை அளிக்கும் படமாகவும் இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.
விநியோகஸ்தர் சக்தி வேலன் பேசுகையில், ” சில தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து திரையரங்க அதிபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு ‘லவ் மேரேஜ்’ படத்தின் பிரத்யேக காட்சி திரையிட்டால் உடனே தகவல் தெரிவிக்கவும் நான் என்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் அந்தப் படத்தை காண ஆவலாக இருக்கிறேன் என்றார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக திரைப்படங்களை முன்கூட்டியே திரையிட்டால் திரையரங்க தரப்பிலிருந்து அதனை காண்பதற்கு ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு வாரத்தில் நான்கு ஐந்து படங்கள் திரையிடுவதால் அதற்கான பணிச்சுமை இருக்கும்.
அவர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸின் நெருங்கிய நண்பரும் கூட. இவர்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்த பொழுது விரைவில் வெளியாகும் நல்ல படங்களை பற்றிய பேச்சு நடந்தபோது .. லவ் மேரேஜ் கண்டிப்பாக மிக நல்ல படமாக இருக்கும் என ஏ ஆர் முருகதாஸ் அவரிடம் தெரிவித்து இருந்தாராம்.
ஒரு படம் வெளியாவதற்கு முன் அங்கீகாரம் கிடைப்பது என்பது… அதிலும் அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கிய படத்திற்கு இந்தியா முழுவதும் திறமையான இயக்குநர் என அறியப்பட்ட ஏ ஆர் முருகதாஸ் சிறந்த படம் என பாராட்டும் போது உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.
எங்கள் அன்னை இல்லத்தில் வாரிசான விக்ரம் பிரபு இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை வழங்கி சிறப்பித்து இருக்கிறார். 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்துடன் தங்களை எளிதாக தொடர்பு படுத்திக் கொள்வார்கள்.
திருமணம் தொடர்பான விசயங்களை தமிழ் சினிமாவிற்கான பாரம்பரிய இலக்கணங்களுடன் உருவாகி இருக்கும் படம். அற்புதமான – அழகான பீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது.
இந்த திரைப்படத்துடன் வணிக ரீதியாக தொடர்பே இல்லாத தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன், இப்படத்தின் வெற்றிக்காக தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறார். இது எனக்கு மிகப்பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது.
அந்த அளவிற்கு இயக்குநர் சண்முக பிரியன் திரையுலகில் வலிமையான நட்பு வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இதனை நான் அவரின் வெற்றியாகவே பார்க்கிறேன்.
மருத்துவராக இருந்தும் சினிமா மீதான ஆர்வம் காரணமாக இப்படத்தின் மூலம் அறிமுக தயாரிப்பாளராக களம் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர்கள் ஸ்வேதா ஸ்ரீ – தீரஜ் ஆகியோருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றால் இவர்களைப் போல் ஏராளமான புதுமுக தயாரிப்பாளர்கள் திரையுலகிற்கு வருகை தருவார்கள். ரசிகர்களுக்கும் நல்ல படைப்புகள் கிடைக்கும். ” என்றார்.
இயக்குநர் சண்முக பிரியன் பேசுகையில், ” சிறப்பு விருந்தினராக வருகை தந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நன்றி. அவருடைய படங்களில் இருக்கும் எனர்ஜி எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இயக்குவது போன்ற படங்களை இயக்க வேண்டும் என்றால் எனக்கு இன்னும் சில ஆண்டுகாலம் ஆகும் என நினைக்கிறேன்.
இந்தப் படத்தின் பணிகள் தொடங்குவதற்கு காரணமாக திகழ்ந்த என்னுடைய இயக்குநர் ரா. கார்த்திக்கு நன்றி. 2017 ஆம் ஆண்டின் சினிமாவில் உதவிய இயக்குநராக சேர்வதற்கு முயற்சி செய்தேன். அந்த தருணத்தில் நானும், தயாரிப்பாளர் யுவராஜும் இணைந்து குறும்படத்தினை உருவாக்கினோம். அன்றிலிருந்து இன்று வரை அவருடனான நட்பு தொடர்கிறது. இயக்குநர்கள் ஆனந்த் சங்கர், ரா. கார்த்திக் ஆகியோருடன் பணியாற்றியிருக்கிறேன்.
படத்தின் தயாரிப்பாளரான ஸ்வேதா ஸ்ரீ என்னுடைய நண்பர் தான். அவருடைய வீட்டிற்கு ஒரு முறை சென்ற போது உணவருந்தி கொண்டே படத்தைப் பற்றிய விசயங்களை பேசினேன். நானே தயாரிக்கிறேன் என அவரே ஆர்வத்துடன் முன் வந்தார். இந்தப் படத்திற்கு என்ன பட்ஜெட் என்று அவர் கேட்கவில்லை. ஆனால் நான் கேட்டது எல்லாம் கிடைத்தது. சுதந்திரமாக இந்த படத்தினை உருவாக்கி இருக்கிறேன். இதற்காக தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்திற்கு விக்ரம் பிரபு தான் நாயகன் என தீர்மானித்து விட்டேன். ஆனால் என்னுடைய நண்பர்கள்தான் அவர் ஆக்சன் ஹீரோ! இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பாரா? என்ற சந்தேகத்தை எழுப்பினார்கள். அப்போதுதான் அவருடைய நடிப்பில் ‘இறுகப்பற்று ‘என்ற படம் வெளியானது. அதில் அவருடைய நடிப்பில் வேறு ஒரு பரிமாணம் வெளிப்பட்டது. இது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. அதன் பிறகு அவரை நேரில் சந்தித்தேன்.
அவர் நடிக்க சம்மதம் தெரிவித்த உடன் இப்படத்தின் பணிகள் வேகம் எடுத்தது. படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை எந்த கேள்வியும் என்னிடம் கேட்கவில்லை. என் மீது முழு நம்பிக்கை வைத்தார். தற்போது இந்த படத்தை பார்த்த பிறகும் என் மீதான நம்பிக்கை விலகவில்லை என நம்புகிறேன். இவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இசையப்பாளர் ஷான் ரோல்டனை சந்தித்த போதும் விக்ரம் பிரபுவிடம் சொன்னது போல் எனக்கு கதை சொல்ல தெரியாது. திரைக்கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் என்றேன். அதன் பிறகு அவரிடம் ஒன்றரை மணி நேரம் கதையை சொன்னேன். அவரும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் பணியாற்ற தொடங்கினார். அந்தத் தருணத்தில் விக்ரம் பிரபுவுக்கு சிறந்த ஆல்பம் ஒன்றை இந்த முறை நான் தருவேன் என்று என்னிடம் சொன்னார். அந்த வகையில் இதுவரை வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை தொடர்ந்து பாடலாசிரியர் மோகன் ராஜன், நடிகர் ரமேஷ் திலக் , விநியோகஸ்தர் சக்தி வேலன், அருள் தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு, சுஷ்மிதா பட் ஆகிய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்கும். கல்யாணம் ஆகாத அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கல்யாணத்திற்காக காத்திருக்கின்ற எல்லா ஆண்களும், பெண்களும் இந்த படத்தை பார்க்கலாம்.
இந்த சமூகம் வயதுடன் பல விசயங்களை ஒப்பிட்டு பேசிக் கொண்டே இருக்கிறது. அது தொடர்பான கேள்வியையும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. பொதுவாக யாருக்கும் மற்றவர்கள் கேள்வி கேட்டால் பிடிக்காது. அந்த வகையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும். ” என்றார்.
நடிகர் விக்ரம் பிரபு பேசுகையில், ” நாங்கள் இங்கே அனைவரும் குடும்பமாக இணைந்து ஒரு குடும்ப படத்தை வழங்குகிறோம்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தருணத்தில் கிடைத்த மகிழ்ச்சி இதற்கு முன் எந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் கிடைத்ததில்லை. நான் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கோபிசெட்டிபாளையம் செல்கிறேன் என்று அப்பாவிடம் சொன்னதும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அத்துடன் மட்டும் நிற்காமல் அங்கு சென்றால் இன்னார் வீட்டுக்கு செல்… இன்னார் வீட்டுக்கு செல்.. என்று ஏராளமானவர்களை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அவர்களை அங்கு சந்தித்தபோது மகிழ்ச்சி இரட்டிப்பானது.
அந்தத் தருணத்திலேயே இந்த படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற அழுத்தம் எனக்குள் ஏற்பட்டது. இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என நான் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த பட குழுவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றியது.
ஷான் ரோல்டனை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் இந்த படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றினோம். இந்தப் படத்திற்கு இசை மிகப்பெரிய பலம். அவர் அழகாக செய்து இருக்கிறார் நல்ல ஆல்பமாக கொடுத்து சாதித்து இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு மாத காலம் வரை குடும்பமாக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம். இது மறக்க இயலாத அனுபவம்.
இந்தப் படத்தில்… இந்த கதாபாத்திரத்தில்… நடிகை சுஷ்மிதாவை தவிர வேறு யாராலும் பொருத்தமாக நடித்திருக்க முடியாது. அந்த அளவிற்கு அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள். தமிழ் சினிமா சார்பில் அவரை மனதார வரவேற்கிறேன்.
இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
லவ் மேரேஜ் படத்திலும் வித்தியாசமாக குடும்பத்தினர் அனைவரும் கண்டு களிக்கும் வகையிலான குடும்ப படமாக உருவாக்கி இருக்கிறோம். எப்போதும் போல் என் மீதும், என் படங்கள் மீதும் அன்பு செலுத்தி, படத்தை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகி ஜூன் 27 ஆம் தேதி அன்று வெளியாகும் ‘லவ் மேரேஜ்’ திரைப்படத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட் ,ரமேஷ் திலக், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜா கவனித்திருக்கிறார். ஃபேமிலி எண்டர்டெயின்ராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஸ்யூர் ஃபிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டேய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்தி வேலன் வழங்குகிறார்.
இதனைத் தொடர்ந்து ‘லவ் மேரேஜ் ‘ படத்தின் முன்னோட்டத்தை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரியின் கூட்டணியில் உருவாகியுள்ள சையாரா படத்தின் பாடல்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு பாலிவுட்டில் இருந்து வெளிவந்த சிறந்த இசை ஆல்பமாக மாறியுள்ளது .சையாரா டைட்டில் பாடலுக்கு பிறகு, ஜூபின் நௌடியல் பாடிய இரண்டாவது பாடல் பர்பாத் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாடலான ‘தும் ஹோ தோ’ என்கிற காதல் பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். இப்பாடலை இன்று இந்தியாவின் மிகவும் பேசப்படும் இளம் பாடகர் விஷால் மிஸ்ரா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷாலை கடந்த 12 வருடங்களாகத் தெரியும் .கல்லூரி நாட்களில் தன் படங்களில் இடம்பெற்ற ஆத்மார்த்தமான காதல் பாடல்களைக் கேட்ட பிறகு தான் விஷால் இசை கலைக்கு வர முடிவு செய்ததை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக மோஹித் சூரி கூறியுள்ளார் .
பாலிவுட் திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து, நாடு முழுவதும் போற்றும் ஏராளமான மெகா ஹிட் பாடல்களை வழங்கிய மோஹித் கூறுகையில் , “விஷால் 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னைச் சந்திக்க வந்ததிலிருந்து, நானும் அவரும் கண்டிப்பாக ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என திட்டமிட்டிருந்தோம் .சரியான தருணத்திற்காக நாங்கள் காத்திருந்தோம்.அது சையாராபடத்தில் நிகழ்ந்தது. இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன். கல்லூரி நாட்களில் அவர் மனவேதனையில் இருந்தபோது, எனது இசை அவரை கவர்ந்தது. உங்கள் படைப்புகள் ஒருவரின் மீது இது போன்ற தாக்கத்தை ஏற்படுத்துவதை நீங்கள் கேட்கும் போது, அது ஒரு மிகப்பெரிய உணர்வு. இசை மக்களின் இதயங்களைத் தொடும் திறன் கொண்டது என்றும், அது மிகவும் தூய்மையான ஊடகம் என்றும் நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். எனவே, எனது 20 ஆண்டுகால இசை இயக்கம் மற்றும் உருவாக்கத்தில், எனது பாடல்கள் மூலம் மக்களுக்கு நினைவுகளை உருவாக்கியதற்கு நான் நன்றி உள்ளவனாக உணர்கிறேன். விஷால் மிஸ்ரா எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகவும் திறமையான கலைஞர்களில் ஒருவர், அவருடன் பயணிப்பது ஒரு பாக்கியம்.விஷாலின் அபாரமான திறமையால் அவரது அபார வெற்றியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன் .அவரை அறிவது, அவருடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் அவர் ஒரு கலைஞராக வளர்வதைப் பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தும் ஹோ தோவுடன் அவர் என் கருத்துப்படி ஒரு மேஜிக்கை உருவாக்கியுள்ளார்.மேலும் சையாராவின் மூன்றாவது பாடல் மூலம் அவரது இசையை விரும்புவோருக்கு, அவரது சிறந்த காதல் பாடல் இன்னும் கிடைப்பதில் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
சையாரா தலைப்பு பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இது ஒரு அலைந்து திரியும் நட்சத்திரம் ,எப்போதும் பிரகாசிக்கும், எப்போதும் வழிகாட்டும், ஆனால் எப்போதும் எட்டாதது.” என இவ்வாறு கூறியுள்ளார் .
இந்த திரைப்படத்தின் மூலம் அஹான் பாண்டே ஹிந்தித் திரைப்படத் துறைக்கு ஒரு ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார் . மேலும் அனீத் பத்தா (பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை என்ற மிகவும் பாராட்டப்பட்ட தொடரில் அவரது அற்புதமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ) கதாநாயகியாக நடிக்கிறார். சையாராவை யஷ் ராஜ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் விதானி தயாரித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 18ந் தேதியன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
Yash Raj Films and Mohit Suri’s Saiyaara is turning out to be the best music album to have come out of Bollywood in a long, long time. After the chartbuster Saiyaara title track, the second song Barbaad, sung by Jubin Nautiyal, is also a rage on the internet now. The makers have dropped the third song of the film today, a peppy love track called Tum Ho Toh, sung by the most talked-about young singer of India today, Vishal Mishra!
Catch the song here : https://www.youtube.com/watch?v=rOUuGvJkBrQ
Mohit Suri reveals that he has known Vishal for 12 years now and was overwhelmed to learn that Vishal decided to pursue music as a career after listening to Mohit’s soulful love songs during his college days.
Mohit, who completes 20 years in the Hindi film industry during which he has delivered scores of musical megahits that the country has called in love with, says, _“Vishal & I had always planned to collaborate on something special ever since he came to meet me over 12 years back! We just waited for the right moment and I’m glad it was for Saiyaara. I was humbled to hear him say that it was my music that made him want to pursue music as a career. He fell in love with my brand of music when he was going through a heart-break during his college days!”_
He adds, _“When you hear your work have an impact like this on someone, it is an overwhelming feeling. I have always felt that music has the ability to touch people’s hearts and is an extremely pure medium. So, in my 20 years of directing and creating music, I do feel grateful that I have created memories for people through my songs. Vishal Mishra is one of the most talented artistes I have ever met in my career and it is my privilege to have him in the music album of Saiyaara. I still have the scratches that Vishal had given me since he kept meeting me for 12 years now and they are just pure gold!”_
Mohit is thrilled to see Vishal’s meteoric success due to his sheer talent. He says, _“To know him, to collaborate with him and to see him grow as an artist, just gives me a lot of joy. He has created magic in my opinion with Tum Ho Toh and I can’t wait to unleash his genius with the third song drop from Saiyaara. For those who love his music, they will be thrilled to probably have his best romantic song yet and for those who are growing fond of Vishal’s music, they will fall in love with him with Tum Ho Toh.”_
Ever since the teaser release, Saiyaara that brings together YRF and Mohit, both known for creating timeless love stories, has garnered unanimous praise for making an intense love story with debutants who share infectious chemistry and brilliant acting skills.
The title of Saiyaara has also piqued interest of audience. It means a wandering celestial body, but in poetry it’s often used to describe something (or someone) dazzling, ethereal, or otherworldly — a wandering star – always shining, always guiding, but always out of reach.
The film introduces Ahaan Panday as a hero to the Hindi film industry and also stars Aneet Padda (who stole hearts with her brilliant performance in the much-acclaimed series Big Girls Don’t Cry) as the female lead. Saiyaara is produced by the company’s CEO Akshaye Widhani and it is set to release on July 18, 2025 in theatres worldwide.
YRF, in its 50 year history, is known for giving India some of the cult romantic films of all time primarily directed by Yash Chopra and Aditya Chopra. Mohit Suri, who is currently in his 20th year in cinema, has also directed some of the most favourite romantic films like Aashiqui 2, Malang, Ek Villain, etc.
*நடித்த கதாபாத்திர பாதிப்பில் இருந்து மீள முடியாமல் மருத்துவ சிகிச்சை பெற்று மீண்ட ‘கைமேரா’ படத்தின் ஹீரோ*
பரமு, செல்பிஷ் படங்களை இயக்கிய மாணிக் ஜெய்.N இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ‘கைமேரா’.
‘வச்சுக்கவா’ படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் ‘பரமு’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக மாறினார்.
தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகி வரும் செல்பிஷ் என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கைமேரா என்கிற படத்தை தயாரித்து, இயக்கி முடித்துள்ளார் மாணிக் ஜெய்.
இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.. மாறுபட்ட வேடங்களில் தாரை கிருஷ்ணன், ரஞ்சித் குமார் மற்றும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் மாணிக் ஜெய் நடித்துள்ளனர்..
கதையின் நாயகிகளாக சௌமியா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் நடித்திருக்கின்றனர்..
மனித உடம்புக்குள் மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டால், மனிதனின் குணம் மிருகக் குணமாக மாறினால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது.
மிருகங்களுக்குள்ளேயே வேறு மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டு அதன் குணாதிசயங்கள் எவ்விதம் மாறுபட்டு இருக்கின்றன என்பதை ஆய்வுகள் சொல்கின்றன. அதை மையப்படுத்தித் தான் ‘கைமேரா’ என டைட்டில் வைத்துள்ளோம்.
கைமேரா என்பது மராத்திய மொழி வார்த்தை. இதை மனோ ராஜ்ஜியம் (மரபணுக்கள் மாற்றம்) என சொல்லலாம்.
பெங்களூருவைச் சுற்றி நிகழும் கதைக்களம் என்பதால் கர்நாடகாவில் பெங்களூர், ஹம்பி, இங்கே ஓசூர், ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
படத்தின் நாயகன் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்ததால் படப்பிடிப்பு முடிந்த கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பின்னரே அதிலிருந்து மீண்டார்..
படம் பற்றி இயக்குநர் மாணிக் ஜெய் கூறும்போது, “சயின்டிஃபிக் கிரைம் திரில்லர் படம் இது. ஒரு மனிதனின் உடம்புக்குள் மிருகத்தின் செல்களை புகுத்தினால் என்கிற புதிய கோணத்தில் யாரும் சொல்லாத ஒரு கதையாக புது அனுபவமாக இருக்கும். சஸ்பென்ஸ் பிரியர்களுக்கு ஒரு யூகிக்க முடியாத கதையாக இது இருக்கும் அதேசமயம் படம் முழுவதிலும் நகைச்சுவைக்கு குறைவில்லாமலும் அதேசமயம் குடும்பப்பாங்கான கதையம்சம் கொண்ட படமாகவும் இருக்கும்.. ரியலிஸ்டிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த படத்திற்கு புதுமுகங்களை மட்டுமே நடிக்க வைத்துள்ளோம்..
இந்தப் படத்தை எந்த மொழியில் பார்த்தாலும் அவர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம் போலவே இருக்கும்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இது ரிலீஸாக இருக்கிறது.
இதில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன. உன்னி கிருஷ்ணன், சத்யபிரகாஷ், பிரசன்னா,. அனுராதா பட், மானஸா ஹொல்லா மற்றும் அந்தந்த மொழிகளில் பிரபலமான பாடகர்கள் பாடியுள்ளனர்.
குறிப்பாக பிரபல பாடகி அனுராதா பட்டுக்கு இந்த படத்தின் பாடல்கள் பிடித்துப்போனதால் எல்லா மொழியிலும் நானே பாடுவேன் என விரும்பி கேட்டு ஒரு பாடலை ஐந்து மொழிகளிலும் பாடியுள்ளார்.
தற்போது சென்சாருக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதையடுத்து அனைத்து மொழிகளிலும் இதற்கான புரமோஷன் பணிகள் துவங்கப்பட இருக்கின்றது, விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது” என்று கூறினார்..
The team of the upcoming heist comedy entertainer Chennai City Gangsters met with the press today in a vibrant and lively press conference held in Chennai, exactly ten days ahead of the film’s grand theatrical release on June 20, 2025.
Headlining the event were lead actors Vaibhav, Athulya Ravi, Manikanda Rajesh, John Vijay, Chaams, and Soorya Ganapathi, who shared their excitement about being part of this unique genre film packed with laughs, action, and quirky twists. The cast recalled fun moments from the shoot and expressed confidence that the audience will enjoy the film’s fresh storytelling and comic energy.
The film is helmed by the dynamic director duo Vikram K Rajeshwar and Arun Kesav, who spoke about crafting a screenplay that blends humour with a high-stakes heist backdrop. They thanked the cast and crew for bringing the characters to life and praised the collaborative spirit that shaped the film.
Action sequences have been choreographed by renowned Stunt Director Don Ashok, adding a dose of thrilling stunt work to the comic narrative. National Award-winning composer D. Imman has scored the music for the film, promising an engaging soundtrack that complements the film’s tone and tempo.
The project is produced by Bobby Balachandran under the banner of BTG Universal, marking a strong entry into mainstream Tamil commercial cinema. Dr. Manoj Beno, Head of Strategy at BTG Universal, highlighted the production house’s vision to back entertaining, genre-bending films and support emerging talent and fresh content.
Chennai City Gangsters promises to be a full-fledged commercial entertainer with a mix of smart humour, fast-paced action, and an ensemble of talented performers. With its release slated for June 20, the film is poised to bring laughter and excitement to theatres across Tamil Nadu.
*CREW*
Produced by: Bobby Balachandran
Production Company: BTG Universal
Head of Strategy: Dr.Manoj Beno
Written & Directed by: Vikram Rajeshwar & Arun Kesav
Music Director: D Imman
Lyrics: Karthik Netha, Karunakaran, Super Subu, Ofro
DOP: Tijo Tomy
Editor: Suresh A Prasad
Production Designer: Arunshankar Durai
Costume Designer: Dhatsha
Make-up: Abdulla
Stunts: Don Ashok
Dance Choreographer: Ajay Raj
Production Controller: Manikandan
Production Executive: Venugopal
PRO: Riaz K Ahmed, Paras Riyaz
One of India’s biggest superstars ever, Hrithik Roshan, hailed as the Greek God of India cinema, has captivated the imagination of one and all with his hypnotic screen presence in the War 2 teaser in which he again looked like a million bucks. Hrithik plays the role of the super spy Kabir in the blockbuster War franchise within the YRF Spy Universe that has only delivered historic hits!
His suave look and effortless style caused an internet meltdown as soon as the War 2 teaser was released by Yash Raj Films. The costume designer of War 2, Anaita Shroff Adajania, reveals the film will push Hrithik’s magnetic presence ever further with the way his character has been styled in War 2.
Anaita says, “I’ve been incredibly fortunate to work with Hrithik over the years — on Dhoom 2, Bang Bang, countless appearances and ads—and then came War. Each project brought something new, but with War, we made a conscious decision to shift gears. We moved away from the grunge aesthetic and instead created a cleaner, sleeker look for him. It still had an edge—somewhere between real and godlike. And yes, kind of like a a super hero in plainclothes! His look determined, yet casual.”
She adds, “For War 2, it felt essential to explore a deeper, darker mood in Kabir. This version of him is layered—not just emotionally, but visually too. Thinner fabrics, pieces that feel a little more lived-in, slightly unkempt even… and there’s more! But of course, Kabir is still Kabir — his sharpness always cuts through.”
Anaita further says, “We built on what worked in War 1: that transformative haircut, Hrithik’s magnetic presence, and then we just pushed it further. I think that combination—the looks, the attitude, the restraint—is what truly created this Kabir for War 2.”
Produced by Aditya Chopra and directed by Ayan Mukerji, War 2 pits NTR, regarded as the Man of the Masses, against Hrithik Roshan. Kiara Advani plays the female lead. War 2 is set to release on August 14th worldwide in Hindi, Tamil, and Telugu.
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்களும் நல்ல படைப்பு என்ற விமர்சனத்தை வழங்கி வருகிறது. இதனால் இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த தருணத்தில் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் ‘லொள்ளு சபா’ சாமிநாதன் பேசுகையில், ” புதிய கலைஞர்களின் முயற்சியை ஊடகங்கள் பாராட்டின. இதனால் இந்த படத்திற்கு வெற்றி கிடைத்தது.
இந்தப் படத்தில் என்னுடைய வழக்கமான பாணியில் நடிக்காமல் இயக்குநர் சொன்னதை கேட்டு நடித்தேன். படப்பிடிப்பு தளத்திற்கு மதியம் ஒரு மணிக்கு சென்றேன். இரண்டு மணிக்கு காட்சிகளை படமாக்க தொடங்கினர். நான்கு மணிக்கு என்னுடைய பங்களிப்பு நிறைவு என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு படத்திற்கு பின்னணி பேசுவதற்காக சென்றேன். அங்கும் எனக்கு வித்தியாசமான அனுபவம் தான் கிடைத்தது. இப்படத்தின் இயக்குநரை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் ரசனையுடன் சொல்லிக் கொடுத்தார்.
படத்தில் நடித்த அனைத்து நடிகர் , நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி. ” என்றார்.
இசையமைப்பாளர் கே. சி. பால சாரங்கன் பேசுகையில், ” அனைவருக்கும் நன்றி. இப்படம் தொடர்பாக இணையத்தில் வெளியான அனைத்து விமர்சனங்களையும் நான் கவனித்து வாசித்திருக்கிறேன். அனைவரும் தங்களின் மேலான ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். படத்தை தங்களுடைய படமாக நினைத்து அனைவரிடமும் பகிர்ந்து கொண்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. இந்த படத்திற்கு சிறப்பான திரையரங்க அனுபவத்தை ஒலி மூலம் வழங்கிய தொழில்நுட்பக் கலைஞர் ரூபனுக்கும் நன்றி. என்றார்.
நடிகர் விஷ்வா பேசுகையில், ” இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி. வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் வித்தியாசமான அனுபவங்களை சந்திக்கிறேன். எனக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.
படத்தில் நடிப்பதற்கு ஒவ்வொரு கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கிய இயக்குநருக்கு நன்றி. குறிப்பாக என் மீது நம்பிக்கை வைத்து தினேஷ் கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார் .
நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் பேசுகையில், ” சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் எங்களின் கனவு பெரிதாக இருந்தது. கனவும் , ஆசையையும் வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தொடங்கும்போது பேப்பரில் இருந்த இந்த கதையை திரைக்கு கொண்டு வந்து, அந்த உணர்வை அனைவரும் உணர்ந்து ரசித்து பாராட்டும் போது அதை சொல்வதற்கு வார்த்தை இல்லை. நாங்கள் அனைவரும் இணைந்து நடித்த ஒரு படத்திற்கு அனைவரும் தங்களின் இதய பூர்வமான ஆதரவை தெரிவித்ததை நேரில் பார்க்கும் போது உற்சாகமாக இருந்தது. ரசிகர்கள், ரசிகைகள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ” என்றார்.
இந்தப் படத்தை வெளியிட்ட ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், இந்த படத்தை பார்த்து பாராட்டிய திரையுலக பிரபலங்களுக்கும் நன்றி” என்றார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விநியோகிஸ்தர் குகன் பேசுகையில்… இப்படத்திற்கு ஊடகங்களும் , ரசிகர்களும் கொடுத்த ஆதரவும் , வரவேற்பும் மிக அதிகம். இதற்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் கோடான கோடி நன்றிகள். இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டிய திரையுலக பிரபலங்களுக்கு நன்றி.
‘மெட்ராஸ் மேட்னி’ நடுத்தர குடும்பத்து மக்களின் கதை. இதில் என்ன கதையை இவர்கள் சொல்ல வருகிறார்கள்..? இது ஒரு சாதாரண கதை. ஆனால் இதை ஒரு திரைப்படமாக உருவாக்குவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். மேலும் இந்த கதை மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்.
சாதாரண கதையை அசாதாரணமான திரைக்கதை மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருந்தார். அதனால் தான் இந்தப் படத்தை பார்த்த மக்கள் அனைவரும் பாராட்டினார்கள். படத்துடன் உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்டார்கள். படம் வெளியான பிறகு படத்தைப் பார்த்த ரசிகர்களிடத்தில் அதன் தாக்கம் அதிகம் இருந்தது.
படத்தின் கதையை கேட்டு நடித்த நடிகர்கள் அனைவரும் இதனை எப்படி புரிந்து கொண்டிருப்பார்கள். அதை திரையில் வழங்கிய விதம் இன்னும் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.
இயக்குநர் – இசையமைப்பாளர் – ஒளிப்பதிவாளர் – படத்தொகுப்பாளர் – என அனைவரும் புதுமுக கலைஞர்கள். சினிமா மீது அர்ப்பணிப்புடன் கூடிய ஆர்வத்துடன் இருப்பவர்கள். இதன் காரணமாகத்தான் இவர்களால் இப்படி ஒரு படைப்பை உருவாக்க முடிந்தது என நான் நினைக்கிறேன்.
இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனத்துடன் இணைந்து பயணித்த திரையரங்கு உரிமையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் நிறுவனம் கலந்து கொள்ளும் மூன்றாவது நன்றி அறிவிப்பு விழா இது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் மூன்று படங்களில் பணியாற்றியவர்கள் அனைவரும் புதுமுக படைப்பாளிகள் என்பது தான். ” என்றார்.
இயக்குநர் கார்த்திகேயன் மணி பேசுகையில், ” மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படத்தை ஏன் முதலில் இயக்கினேன் என்றால்.. இது வரை சொல்லப்படாத ஒரு கதை. உண்மையான ஹீரோ யார் என்பதை சொல்லும் கதை இது.
தான் முன்னேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் ஓயாமல் ஓடும் நம்முடைய அப்பா அம்மாக்கள் தான் என்னைப் பொறுத்தவரை ரியல் ஹீரோ.
அவர்களுடைய கதையை ஒரு திரையரங்க அனுபவத்துடன் கூடிய கதையாக சொல்ல வேண்டும் என நினைத்தேன். இந்த நோக்கத்தில் உருவானது தான் இந்த திரைப்படம்.
புது தயாரிப்பு நிறுவனம் – புது இயக்குநர் – புது தொழில்நுட்பக் கலைஞர்கள் – சின்ன பட்ஜெட் படம் – நாங்கள் எளிதாக காணாமல் போயிருக்கலாம். அதற்கான வாய்ப்பும் அதிகம் இருந்தது. ஆனால் இந்த கதை ஒரு அர்த்தமுள்ள கதையாக இருந்ததால்.. ஊடகங்கள் இந்த படத்தை வெகுவாக ஆதரித்தன. இதுதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எனும் பிரபலமான நிறுவனம் எங்களுடன் இணைந்ததால் இந்த வெற்றி சாத்தியமானது. இதற்காக அந்த நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு மற்றும் குகனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதைத்தொடர்ந்து இந்த படத்திற்கு நடிகர்கள் தங்களின் அர்ப்பணிப்புள்ள உழைப்பை வழங்கி கதாபாத்திரத்திற்கு உயிர்ப்பூட்டியதால் இந்த வெற்றி கிடைத்தது. இதற்காக இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் , நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.
இந்தப் படத்திற்கு ரசிகர்களின் எதிர்வினையை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். படம் வெளியான இரண்டாவது நாள் பல்லாவரத்தில் இரவு காட்சியை பார்த்துவிட்டு திரும்பும் ஒரு பெண் தன் கண்ணீரை அடக்கிக் கொண்டு’ நான் ஒரு டாக்டர் என் அப்பா ஒரு ஆட்டோ டிரைவர் ‘என்று என்னிடம் சொன்னபோது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.
தமிழ் ரசிகர்கள் உணர்வுபூர்வமானவர்கள் மட்டுமல்ல. அறிவு பூர்வமானவர்களும் கூட. இந்த இரண்டும் இணைந்து கொடுத்தால் அவர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. மெட்ராஸ் மேட்னி அதற்கு ஒரு சிறந்த உதாரணம். படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்கும் ரசிகர்களுக்கு நன்றி.
இந்தப் படம் வெளியான பிறகு, ‘காளி வெங்கட் கொண்டாடப்பட வேண்டியவர்’ என்பதை உணர்ந்தேன். அவர் ஒரு லாபத்தை வழங்கும் நட்சத்திர நடிகர் என்பதையும் ஒரு தயாரிப்பாளராக இங்கு கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன்” என்றார்.
நடிகர் காளி வெங்கட் பேசுகையில், ” இந்தப் படத்திற்கு இதுவரை வழங்கிய ஆதரவிற்கும், இதற்கும் மேலும் தொடர்ந்து வழங்கப் போகும் ஆதரவிற்கும் நன்றி.
இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசரான அபிஷேக் ராஜா மூலம் இயக்குநர் அறிமுகமாகி கதையை சொன்னார். அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தை சொன்னார். அது என்னுடைய தந்தையை நினைவு படுத்தியது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இந்தப் படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை தெரிந்து கொள்வதற்காக திரையரங்கத்திற்கு சென்ற போது, சிலர் என்னை கட்டிப்பிடித்து அழுதனர். என் சட்டை ரசிகர்களின் கண்ணீரால் நனைந்தது. இந்த அனுபவம் புதிதாக இருந்தது மறக்க முடியாததாகவும் ஆகிவிட்டது.
நடிக்கும்போது அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை.
கலையில் மட்டும் தான் அழுவதை கூட ரசிக்க முடியும். இது சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.
நான் இதற்கு முன்பு அதிகமாக பார்த்த படம் கார்கி. தற்போது அதைவிட அதிகமாக பார்த்த படம் மெட்ராஸ் மேட்னி. ஏனெனில் இந்தப் படத்தின் ஒலி அமைப்பு மிகச் சிறப்பாக இருந்தது.
இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடிய வடிவேலுக்கு நன்றி. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை படமாக்குவதில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு இயக்குநர் இந்த படத்தை பதிலாக அளித்திருக்கிறார். இதனால் நான் இயக்குநரை மனதார பாராட்டுகிறேன். மேலும் இந்தக் கதையை.. அவர் சொன்ன விதத்தை நான் முக்கியமானதாக பார்க்கிறேன்.
ஒரு கவிதையை மொழிபெயர்த்து அதனை திரைப்படமாக உருவாக்குவது போல் இருந்தது. இயக்குநர் கார்த்திகேயன் மணி தொடர்ந்து இது போன்ற படங்களையும் இயக்க வேண்டும். மேலும் இந்தப் படம் ஏராளமானவர்களுக்கு புது நம்பிக்கையை அளித்திருக்கிறது. இதற்காகவும் இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.