Author: admin

  • திமுக பிரமுகர் அடாவடி, இணையத்தில் வைரலாகும் வீடியோ

    சென்னை கிரீம்ஸ் ரோடு, சுகந்திரா நகர் பகுதியில் நடு ரோட்டில் திமுக பிரமுகர் மாணிக்கம் தனது காரை நிறுத்தியுள்ளார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த முதியவர் ஒருவர், அந்த காரை கடக்க முயன்றபோது, லேசாக காரில் உரசியுள்ளார். அதை பார்த்த மாணிக்கத்தின் பெற்றோர் மற்றும் சகோதரர் அந்த முதியவரை மரப்பலகை உள்ளிட்டவற்றை வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் தட்டி கேட்டபோது, அநாகிரகமான முறையில் உடையை தூக்கி காட்டி தகாத வார்த்தையில் பேசியுள்ளனர். மாணிக்கத்தின் மனைவி செல்வி, ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் ஆயிரம்விளக்கு பகுதியின் கவுன்சிலர் வேட்பாளராக திமுக சார்பில் நிறுத்தப்பட்டவர்.

    மேலும் தகவலுக்கு காஞ்சனா-9840767252

    பிரான்சிஸ்-7358423563

  • அச்சாரம் ரெடி?.. சந்திக்க மாட்டாங்கன்னு சொன்னாங்களே.. ஸ்டாலினை இன்று சந்திக்கிறார்

    அச்சாரம் ரெடி?.. சந்திக்க மாட்டாங்கன்னு சொன்னாங்களே.. ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் கேசிஆர்!

    1996 பிளான்.. சந்திரசேகர ராவ் அதிரடி மூவ் பின்னணி…
    சென்னை: 3-வது அணிக்கான வேலைகளில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மும்முரமாகியுள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திமுக தலைவர் முக ஸ்டாலினை இன்று மாலை அவர் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    இன்னும் கொஞ்ச நாளில் நாடாளுமன்ற தேர்தல் முடியப் இருப்பதால் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி பேச்சுவார்த்தைகளை (கொள்கை, கோட்பாடுகள், மக்கள் விருப்பம், மக்கள் தீர்ப்பு ஆகியவற்றை தூக்கி குப்பையில் போட்டு விட்டு) எல்லா கட்சிகளுமே ஆரம்பித்துவிட்டன.
    தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜக, காங்கிரஸ் என இந்த இரண்டு கட்சியுமே இல்லாத ஒரு 3-வது அணியை அமைக்க புது வியூகம் அமைக்க தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் முடிவெடுத்துள்ளார்.
    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.. கமல்ஹாசன் விமர்சனம்
    சந்திப்பு
    பினராயி விஜயன்
    இதற்காக ஒவ்வொரு கட்சித் தலைவரையும் சந்தித்து பேசி வருகிறார். கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் போன்றோருடன் சந்திப்பு என தீவிரம் காட்டி வருகிறார்.

    இன்று மாலை
    சந்தேகங்கள்
    அப்படித்தான் திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்திக்க முடிவு செய்தார். அதற்காக இன்றைய தினம் அதாவது 13-ம் தேதி சந்தித்து பேச நேரமும் கேட்டிருந்தார். இந்த பேச்சு வந்தபோதே பல்வேறு சந்தேகங்களும், யூகங்களும் எழுந்தன.

    ராகுல்காந்தி
    சலசலப்புகள்
    ராகுல் காந்திதான் பிரதமர் என்று இந்தியாவிலேயே முதன்முதலில் முந்திக் கொண்டு சொன்னவர் முக ஸ்டாலின்தான்! அப்படி இருக்கும்போது, சந்திரசேகரராவ் ஸ்டாலினை சந்தித்து பேச நேரம் கேட்டது பெரும் சலசலப்புகளையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. ஸ்டாலின் அணி தாவுகிறாரா என்ற பேச்சும் கிளம்பியது.

    கேசிஆர்
    ஆழ்வார்பேட்டை
    இதன் காரணமாக ஸ்டாலின், கேசிஆரை சந்திக்க மறுத்து விட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் இருவரும் இன்று சந்திக்கப் போகிறார்கள். ஸ்டாலினின் ஆழ்வார்ப்பேட்டை இல்லத்திற்கு கேசிஆர் வருகிறார். ஸ்டாலினை சந்திக்கிறார். பேசுகிறார். 3வது அணி குறித்தும் விவாதிக்கிறார். நிச்சயம் இது இதயப்பூர்வமான சந்திப்பாகத்தான் இருக்கும். ஆனால் இதனால் காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவுக்கு இனிக்குமா என்பதுதான் கேள்விக்குறி.

    நிலைப்பாடு
    திருமாவளவன்
    ஸ்டாலின் காங்கிரஸ் ஆதரவு என்ற தன் நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்க ஆரம்பித்துள்ளாரா? அல்லது இது வெறும் மரியாதைக்குரிய சந்திப்புதானா என்று தெரியவில்லை. அப்படியே தன் முடிவில் மாற்றம் என்றால், கூட்டணியில் உள்ள திருமாவளவன் போன்றோரை எப்படி சமாளிப்பார் என்று தெரியவில்லை. ஏனெனில் காங்கிரஸ் தலைமையில்தான் ஆட்சி வரவேண்டும் என்று உறுதியாக இருப்பவர் திருமாவளவன், வைகோ, இடதுசாரிகள், காங்கிரசார்!

    ஸ்டாலின்
    என்ன பேசபோகிறார்?
    அதனால் ஸ்டாலின் என்ன பேசபோகிறார், சந்திரசேகராவ் 3-வது அணிக்கு ஆதரவு தரபோகிறாரா? இல்லை என சொல்லி திருப்பி அனுப்பபோகிறாரா என்பது இன்று மாலை தெரிந்துவிடும். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது… திமுக, காங்கிரஸுடன் மட்டும் தொடர்பில் இல்லை.. எல்லா கட்சிகளுடனும் தொடர்பில்தான் உள்ளது!

  • ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுக வைகோ எச்சரிக்கை

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுக;
    இல்லையேல் மக்கள் போராட்டம் வெடிக்கும்!

    • மிழகத்தின் உயிராதாரமான காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் அழித்து ஒழித்துவிட்டு, இலட்சக்கணக்கான மக்களை ஏதிலிகளாக புலம் பெயரச் செய்வதற்கு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும், அதற்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி பழனிச்சாமி அரசும் சதித் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்து இருக்கின்றன.
    • சோழ நாடு சோறுடைத்து என்ற பெருமை பெற்றிருக்கும் ‘நெற்களஞ்சியமான’ காவிரி பாசனப் பகுதி மக்களை சோற்றுக்கு கை ஏந்தும் நிலைக்குத் தள்ளிவிட மோடி அரசு மூர்க்கத்தனமாக மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு போன்ற நாசகாரத் திட்டங்களைச் செயல்படுத்த முனைந்துள்ளது. மோடி அரசுக்குக் காவடி தூக்கும் கையாலாகாத எடப்பாடி அரசு, காவிரி டெல்டா மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் துரோகம் இழைத்து வருகிறது.
    • காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தினால் தமிழகத்தின் வேளாண்மை இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.
      2017 பிப்ரவரி 15 இல் பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, இந்தியா முழுவதும் 8 கடற் பகுதிகள் மற்றும் 23 உள்நிலப்பகுதிகள் அடங்கிய மொத்தம் 31 வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் வழங்கும் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
      பின்னர் 2018 ஜனவரி 19 ஆம் தேதி நாடு முழுவதும் 55 புதிய வட்டாரங்களில் நூறு விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மேற்கொள்ள ஏல நடைமுறை தொடங்கப்பட்டது.
    • இதற்காக ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த ‘நெல்ப்’ (New Exploration Licensing Policy -NELP) எனப்படும் உரிமம் வழங்கும் திட்டத்தை மாற்றி, ‘ஹெல்ப்’ (Hydrocarbon Exploration and Lincesing Policy -HELP) எனும் ஒற்றை உரிமம் வழங்கும் திட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி புதைபடிவ எரிபொருளான மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் மற்றும் நீர்ம உரிவாயு உள்ளிட்ட எந்த வகையாக இருந்தாலும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் பூமிக்கு அடியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் . தனித் தனியாக உரிமங்கள் பெறத் தேவை இல்லை. இதற்காக ‘திறந்தவெளி அனுமதித் திட்டம்’ (Open Acreage Lincensing Policy -OALP) ஒன்றையும் மத்திய அரசு அனுமதித்து இருக்கின்றது.
    • மேலும் ஓ.ஏ.எல்.பி. உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பகுதிகளை ஆய்வு மூலம் கண்டறியவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
      இத்திட்டத்தில் தமிழகத்தில் 3 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் – தியாகவல்லி முதல் நாகை மாவட்டம் சீர்காழி வரையில் உள்ள தரைப் பகுதி வட்டாரத்தில் 731 சதுர கி.மீ. ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த இந்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது.
    • 1794 சதுர கி.மீ. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் கடலூர் மாவட்டம் வரையிலான கடல் பகுதி வட்டாரத்திலும், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரையில் 2674 சதுர கி.மீ. நிலப்பகுதி வட்டாரத்திலும் என ஆக மொத்தம் இரண்டு வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த வேதாந்தா குழுமத்திற்கும் மத்திய அரசு உரிமம் வழங்கி இருக்கிறது.
    • மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா குழுமம் ஆகியவை ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை மே 10 ஆம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
      நீரியல் விரிசல் முறையில் (Hydro Fracking) 10 ஆயிரம் மீட்டருக்கும் கீழே பூமிக்குள் ஆழமாக துளையிடப்பட்டு, பின்னர் அங்கிருந்து பக்கவாட்டில் 2 கிலோ மீட்டர் வரை எல்லா பக்கங்களிலும் துளை போடப்படும். பின்னர் பூமியின் மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் வேதி நுண்துகள்கள் கலந்த நீர் துளைக்குள் செலுத்தப்படும். அவ்வாறு செலுத்தும்போது பக்கவாட்டுத் துளைகளில் செல்லும் நீர் அந்தத் துளைகளின் மேலும் கீழும் விரிசல்களை உண்டாக்கும். அந்த விரிசல்கள் வழியே பூமிக்கடியில் அடைபட்டுக் கிடக்கும் எரிவாயு ஒன்றைக் கலக்கும். அவற்றை உறிஞ்சி பூமியின் மேல் பரப்புக்கு எடுத்து வந்த நீரைப் பிரித்துவிட்டு, வாயு தனியாக சுத்திகரிக்கப்பட்டு பிரித்து எடுக்கப்படும்.
      இதனால் வளம் கொழிக்கும் காவிரி பாசனப் பகுதியின் நிலங்களில் நீர் வளம் பாதிக்கப்படும். கடல்நீர் உட்புகும் ஆபத்து நேரும். விளை நிலங்கள் பாழாகி பயிர் சாகுபடி செய்ய முடியாத பேராபத்து உருவாகும். இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். சொந்த மண்ணிலேயே நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு ஏதிலிகளாக அலையும் கொடுமைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள்.
    • வேளாண்மையை அழித்து பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பலிகொடுத்து, இந்திய அரசு ஹைட்ரோ கார்பன் மூலம் பல இலட்சம் கோடிகளைக் குவிப்பதற்கும், பெரு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கும் தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
      தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூலம் இலட்சக்கணக்கான மக்களை வாழ முடியாத நிலைமைக்குத் தள்ளி கொடுமை புரிந்த வேதாந்தா குழுமத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்களைச் சுட்டுக்கொன்று 13 பேர் உயிரைப் பறித்த எடப்பாடி பழனிச்சாமி அரசு, என்ன துணிச்சலில் அதே வேதாந்தா குழுமம் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் பெற்றுள்ளதை அனுமதிக்கிறது?
      தூத்துக்குடி போன்று காவிரி டெல்டாவிலும் மக்களை பலிவாங்கத் துடிக்கும் தப்புக் கணக்கை மத்திய, மாநில அரசுகள் போடக்கூடாது.
    • காவிரி தீரத்து மக்கள் தங்கள் உயிரைவிட மேலாக நேசிக்கும் நிலத்தையும், வேளாண் தொழிலையும் மற்றும் காவிரி உரிமையையும் பாதுகாப்பதற்கு அணி அணியாக திரண்டு வருவார்கள்.
      எனவே காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிச்சாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன்.
  • அடுத்த 2 நாளைக்கு வடகடலோர மாவட்டங்களை வெயில் வச்சு செய்யும்!!!!!!!!

    அடுத்த 2 நாளைக்கு இங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு.. வடகடலோர மாவட்டங்களை வெயில் வச்சு செய்யும்

    சென்னை: தமிழகத்தில் உள்மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதேநேரம் வட கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    கத்தரி வெயில் தொடங்கி பின்னரே தமிழகத்தின் சில இடங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு, தேனி, திண்டுக்கல, நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை தெரிவித்துள்ளது. அதேநேரம் . மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    மழை பெய்யாத இடங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், 7 சென்டி மீட்டர் மழை பெய்திருக்கிறது. தேனி மாவட்டம் கூடலூரில் 4 சென்டிமீட்டரும், கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில், 3 சென்டிமீட்டர் மழையும் பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

  • சென்னையில் ரூ.7க்கு 20 லிட்டர் வாட்டர் கேன்.. 800 இடங்களில் வருகிறது வாட்டர் ஏடிஎம்

    சென்னையில் ரூ.7க்கு 20 லிட்டர் வாட்டர் கேன்.. 800 இடங்களில் வருகிறது வாட்டர் ஏடிஎம்

    சென்னை: சென்னையில் 200 வார்டுகளிலும் சுமார் 800 இடங்களில் குறைந்த விலையில் தூய்மையான குடிநீர் வழங்கும் வாட்டர் ஏடிஎம்களை நிறுவ சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
    சென்னையில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை பெரும்பாடாக இருக்கிறது. மக்கள் வாட்டர் கேன் வாங்கித்தான் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள். சென்னையில் ஒரு வாட்டர் கேன் 35 ரூபாயில் இருந்து 40 ரூபாய் வரை சில்லரை விலையில் விற்கப்படுகிறது. இதனால் சாமானிய ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் குடிநீருக்காக அதிக அளவு செலவழிக்க வேண்டியதுள்ளது.

    இந்நிலையில் பொதுமக்கள் தனியார் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் சென்னையில் 20 லிட்டர் குடிநீர் வாட்டர் கேனை ரூ.7க்கு விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சுமார் 800 இடங்களில் வாட்டர் ஏடிஎம்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
    அரசு இதற்காக 250 சதுர அடி நிலத்தையும், மெட்ரோ வாட்டர் மற்றும் மின்சார வசதியையும் அளிக்கும். இதனை பயன்படுத்தி தனியார்கள், ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் முறையில் தூய்மையான குடிநீராக மாற்றி பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும். இந்த விநியோகிக்கும் வேலையை அந்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மேற்கொள்வார்கள். இந்த திட்டம் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஒரு 20 லிட்டர் கேன் குடிநீர் விற்றால் ரூ1 கிடைக்கும்.
    தமிழகத்தில் இடி மின்னலுடன் நல்ல மழை இருக்கும்.. வானிலை மையம் நல்ல செய்தி!
    இந்த மலிவு விலை குடிநீர் விற்பனை மூலம் ஒவ்வொரு வார்டிலும் 10 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் கண்காணிப்பின் கீழ் சென்னை, தாம்பரம், பூந்தமல்லி, செங்கல்பட்டு, உள்பட நகரங்களில் ஏற்கனவே 400 இடங்களில் வாட்டர் ஏடிஎம் திட்டம் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது.

  • அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் !!!!!!

    அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.
    தற்போது அவர் சிறை சென்ற இரண்டு வருடம் ஆகிவிட்டது. இன்னும் ஒன்றரை வருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை முழுதாக அனுபவிக்கும் முன் அவர் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
    ஜெ., வழியில் ஏழை மக்களுக்காக ஆட்சி நடத்தும் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து.. தமிழிசை ட்விட்.

    முதல் திட்டம் என்ன


    அதன்படி சசிகலா இன்னும் சில நாட்களில் 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த உள்ளார். இதன் மூலம் அவரது தண்டனை 4 வருடம் என்பது உறுதியாகும். அந்த அபராதத்தை கொடுக்கவில்லை என்றால், சசிகலா கூடுதல் நாட்கள் சிறையில் இருக்க வேண்டும். இதனால் விரைவில் சசிகலா இந்த அபராதத்தை செலுத்துவார் என்கிறார்கள்.

    அடுத்த திட்டம் என்ன

    இதற்கு அடுத்தபடியாக டிஐஜி ரூபா சசிகலா மீது கொடுத்து இருக்கும் 2 கோடி ரூபாய் லஞ்ச புகாரில் இருந்து வெளியே வர வேண்டும் என்று முடிவெடத்து இருக்கிறார். இந்த புகார் சசிகலாவின் நன்னடத்தையை பாதிக்கும் என்பதால், அதில் இருந்து எப்படியாவது வெளியே வர சசிகலா திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள். ஜூலை மாத இறுதிக்குள் இந்த புகாரில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று டிடிவி தினகரன் தரப்பு நம்புகிறது.

    என்ன நிலவரம்

    இதனால் பெரும்பாலும் சசிகலா நன்னடத்தை விதியை வைத்து சிறையில் இருந்து இன்னும் 5-6 மாதத்தில் வெளியே வருவார் என்கிறார்கள். அதாவது, வரும் நவம்பர் மாதம் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 100 கைதிகள் வரை நன்னடத்தை விதியின் படி வெளியேற இருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் உருவான தினமான நவம்பர் 1ல் இந்த விடுதலை நடக்கும்.

    வருவார் வர வாய்ப்பு

    இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி சசிகலாவும் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். இந்த பட்டியலில் ஏற்கனவே சசிகலா பெயர் இடம்பெற்றுள்ளது. இதை காரணமாக வைத்துத்தான், சசிகலாவை மீண்டும் அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

    ஆனால் இது எல்லாம் சசிகலாவிற்கு நன்னடத்தை சான்றிதழ் அளிக்கப்பட்டால் மட்டுமே நடக்கும். அந்த சான்றித

  • மே.வங்கத்தில் பதற்றம்.. தேர்தலுக்கு சில மணி நேரம் முன்னர் படுகொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர்

    கொல்கத்தா: டெல்லி, மேற்குவங்கம் உட்பட 7 மாநிலங்களில் 6-ம் கட்டமாக மக்களவைத்தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
    வாக்குப்பதிவு துவங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு, முன்னர் நேற்றிரவு மேற்குவங்கத்தில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்டவர் பாரதிய ஜனதாவை சேர்ந்த வாக்குச்சாவடி முகவரான ரமீன் சிங் என்பவர் ஆவார்.
    மேற்குவங்க மாநிலத்தின் ஜார்கிராம் மாவட்டத்தில் உள்ள கோபிபல்லபூர் என்ற இடத்தில், ரமீன் சிங் உடலில் காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். உயிரிழந்துள்ள ராமன் சிங் ஜுனசோல் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க பிரமுகரான கைலாஷ் விஜயவர்த்தியா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பின்புலத்தில் ரவுடிகள் சிலர்ரமீன் சிங்கை படுகொலை செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். ஜனநாயகத்திற்கு இது ஒரு சோகமான நாள் என குறிப்பிட்ட அவர், பாரதிய ஜனதா கட்சியின் வாக்குச்சாவடி முகவர் என்ற ஒரே காரணத்திற்காகவே ரமீன் சிங் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சாடினார்.
    இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஜார்கிராம் பகுதி பாஜ தலைவரான சுகாமதே சாஷ்டி, கடந்த சில நாட்களாகவே கொல்லப்பட்ட ரமீன் சிங்கை ஆளும்கட்சியை சேர்ந்த சிலர் தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறினார். இந்த விவகாரத்தில் ஒரு உயர் மட்ட விசாரணை மற்றும் உடனடி இழப்பீடு தேவை என்று தாங்கள் விரும்புவதாக கூறினார்.
    பல்வேறு எதிர்கட்சி தலைவர்களும் பாரதிய ஜனதா பிரமுகர் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பரபரப்பான சூழலில் மேற்குவங்கத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருவதால் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்

  • தியாகத் தலைவர் நல்லகண்ணு ஆதரவாக வைகோ கடும் கண்டனம்!!!

    பொதுஉடைமை இயக்கத்தின் தியாகத் தலைவர் அண்ணன் திரு நல்லகண்ணு அவர்களை, அரசு குடியிருப்பிலிருந்து வெளியேற்றிய எடப்பாடி பழனிச்சாமி அரசின் நடவடிக்கை, மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் தருகிறது.

    தாமிரபரணி நதிக்கரையில் திருவைகுண்டத்தில் பிறந்து, இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டக் களத்தில் குதித்தவர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு, பின்னர் பொதுஉடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அண்ணன் நல்லகண்ணு, மக்கள் போராளியாக உருவெடுத்தார்.

    பொதுஉடைமை இயக்கத்தின் தீவிரமான தோழராக இருந்தபோது, நாடு விடுதலை அடைந்ததும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட சூழலில், காவல்துறை அவரை கைது செய்து, அவரது மீசையையும் பொசுக்கிப் பிய்த்துச் சித்ரவதை செய்தது.

    புரட்சிகர சிந்தனைகளுடன் வலம்வந்த நல்லகண்ணு, பாலதண்டாயுதம் போன்ற தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில், அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளித்தது நீதிமன்றம். ஏழு ஆண்டு காலம் வெங்கொடுமைச் சிறையில் தள்ளப்பட்டார் அண்ணன் நல்லகண்ணு.

    வாழ்நாள் முழுவதும் போராட்டக் களங்களிலேயே நிற்பவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் காவலராகப் போராடியவர். நான்குநேரி வானமாமலை கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச் செல்லும் போராட்டம், வீடுகளுக்கு நிலை வைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் போராட்டம், செருப்பு அணிந்து பொது வீதிகளில் நடக்கும் போராட்டம் போன்றவை நல்லகண்ணு அவர்களின் போர்க்குணத்தை வெளிப்படுத்தியவை ஆகும்.

    தென் மாவட்டங்களில் சாதிக் கலவர நெருப்பு பற்றிப் படர்ந்தபொழுது, நல்லகண்ணு அவர்களின் மாமனார் அன்னச்சாமி வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் அண்ணன் நல்லகண்ணு அமைதியை நிலைநாட்ட ஆற்றிய அருந்தொண்டுதான் சாதித் தீயை அணைத்தது. தனது மாமனார் மரணத்துக்கு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையையும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரு சமூக குழந்தைகளின் கல்வி உதவிக்கே அளித்துவிட்டார். அண்ணன் நல்லகண்ணுவின் 80 ஆம் அகவையைக் கொண்டாடி, கம்யூனிஸ்ட் கட்சி திரட்டிக் கொடுத்த ஒரு கோடி ரூபாய் நிதியை கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

    தமிழக அரசு ‘அம்பேத்கர் விருது’ வழங்கி, அதனுடன் கொடுத்த ஒரு இலட்சம் ரூபாய் நிதியையும் விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கு அளித்துவிட்டார்.

    தமிழகத்தின் சுற்றுச் சூழலைக் காப்பதற்கு போராட்டக் களத்தில் முன்னோடியாக இருந்தவர். குற்றாலம் அருவிக்கு அருகில் ரேஸ்கோர்ஸ் அமைக்கும் முயற்சியைத் தடுத்தவர். தாமிரபரணி மணல் கொள்ளையைத் தடுக்க மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடியவர். தாமிரபரணி ஆற்று நீரை வரைமுறையின்றி பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் சுரண்டுவதைத் தடுக்கப் போராடியவர். அவரது போராட்ட வரலாறு அத்தியாயங்கள் நீளமானவை.

    மக்கள் தொண்டராக எளிய வாழ்வில் எல்லோருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து வரும அண்ணன் நல்லகண்ணு அவர்கள் தனது வாழ்விணையரையும் இழந்த நிலையில், 94 வயதில் தியாகராயர் நகர் அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    2007 ஆம் ஆண்டு ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் நல்லகண்ணு அவர்களுக்கு அரசுக் குடியிருப்பை இலவசமாக ஒதுக்கீடு செய்தார். ஆனாலும் அதற்கு குடியிருப்பு வாடகைத் தொகையை அரசுக்குச் செலுத்தி வந்தவர்.

    அண்ணன் நல்லகண்ணு அவர்களின் தியாகத்தைப் பற்றியும், மக்களுக்கு அவர் ஆற்றிய பொதுத் தொண்டையும் மதிக்கத் தெரியாத எடப்பாடி பழனிச்சாமி அரசு, அரசுக் குடியிருப்பிலிருந்து அவரை வெளியேற்றிய முறை வன்மையான கண்டனத்துக்கு உரியது. மன்னிக்க முடியாதது.

    பெருந்தலைவர் காமராசர் அவர்களின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தியாக சீலர் கக்கன் அவர்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்பிலிருந்து அவரது குடும்பத்தினரை வெளியேற்றி இருப்பதும் கண்டிக்கத் தக்கது.

    எடப்பாடி பழனிச்சாமி அரசு இத்தகைய செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், அண்ணன் நல்லகண்ணு அவர்களுக்கும், கக்கன் குடும்பத்திற்கும் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கித் தரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

     

  • மக்களவை தேர்தலுக்கான வு 6ம் கட்ட வாக்குப்பதி தொடங்கியது7 மாநிலம், 59 தொகுதியில் 6ம் கட்ட

    7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளில் இன்று 6ம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    இன்றைய தேர்தலில் 3 முன்னாள் முதல்வர்கள், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஏற்கனவே 425 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள? நிலையில், எஞ்சியுள்ள 118 தொகுதிகளுக்கு மேலும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, இன்று பீகார் 8, அரியானா 10, ஜார்கண்ட் 4, மபி. 8, உபி. 14, மேற்கு வங்கம் 8, டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதையொட்டி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீசாரும், மத்தியப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    6ம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 10 மணி வரை பதிவான வாக்கு சதவிகித விவரம்

    பீகார் – 9.03%  ஹரியானா – 8.79%
    மத்திய பிரதேஷ் – 12.54%
    உத்தர பிரதேஷ் – 9.37%
    மேற்கு வங்காளம் – 16.99%
    ஜார்கண்ட் – 15.36%
    டெல்லி – 7.91%

  • தணிக்கை குழுவில் U/A சான்றிதழை பெற்ற ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு

    சுட்டுப்பிடிக்க உத்தரவு’ அதன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எதிர்பாராத விதத்தில் வெளியாகி, மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை தூண்டி விட்டிருக்கிறது. குறிப்பாக, இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோரும் இணைந்து நடிப்பது படத்துக்கு ஒரு பெரிய ஈர்ப்பை கொடுத்துள்ளது. படத்தின் காட்சி விளம்பரங்கள் இன்னும் பெரிய அளவில் சுவாரஸ்யமாக அமைந்து, படத்தை மேலும் சிறப்பாக கொண்டு சென்றது. அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த படம் தணிக்கை சான்றிதழையும் பெற்று விட்டது. சமீபத்தில் இந்த திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்துக்கு U/A சான்றிதழை அளித்திருக்கிறார்கள்.
    சுட்டுப்பிடிக்க உத்தரவு ஒரு தீவிர ஆக்ஷன் த்ரில்லர் படம். தினேஷ் காசி சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கூடுதலாக, அவரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, டூப் இல்லாமலும், கயிறு இல்லாமலும்  சண்டைக் காட்சிகளில் அவரே துணிந்து செய்திருக்கிறார். உயரமான ஒரு கட்டடத்திலிருந்து குதிக்கும்போது அவரது கால் முறிந்து விட்டது. ஆனாலும் அடுத்த 30 நிமிடங்களில் சக்கர நாற்காலியில் படப்பிடிப்புக்கு திரும்பி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இந்த படத்தின் 80% படப்பிடிப்பு சண்டக்கலைஞர்களை வைத்து தான் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது, இந்த படம் ஒரு மிகச்சிறந்த ஆக்‌ஷன் படமாக இருக்கும் என உறுதியளிக்கலாம்.
    ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராம் பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்குகிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் இந்த படத்தை தயாரிக்கிறார். சுஜீத் சாரங் (ஒளிப்பதிவு), ஜாக்ஸ் பிஜாய் (இசை) மற்றும் ஜி.ராமராவ் (படத்தொகுப்பு) ஆகியோர் டிரைலரிலேயே தங்கள் முத்திரையை பதித்து விட்டனர். படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தயாரிப்பாளர்களால் வெளியிடப்படும்.