Author: admin

  • ஹெய் வெசோ” திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது !!

    சுதீர் ஆனந்த், பிரசன்னா குமார் கோட்டா, சிவா சேர்ரி, ரவிகிரண், வஜ்ர வராஹி சினிமாஸ் இணையும் புரடக்சன் நம்பர் 1 – “ஹெய் வெசோ” திரைப்படம் பிரமாண்டமாக துவங்கியது!! VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடித்து துவக்கி வைத்தார் !!

    சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் தன் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கும் சுதீர் ஆனந்த் (சுடிகாளி சுதீர்) தனது புதிய படத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரசன்னா குமார் கோட்டா ( Prasanna Kumar Kota) இயக்குநராக அறிமுகமாகும் , சிவா சேர்ரி – ரவிகிரண் ஆகியோர் வஜ்ர வராஹி சினிமாஸ் (Vajra Varahi Cinema) சார்பில் தங்கள் முதல் தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்கள். இது சுதீர் ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் ஐந்தாவது படமாகும். “கோர்ட்” படத்தில் வில்லனாக, தனது அழுத்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த சிவாஜி, இப்புதிய படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    “ஹெய் வெசோ” எனும் தலைப்பு, விவசாயிகளிடையே பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நாட்டுப்புறச் சொல் என்பதால், படத்திற்கு இயற்கையான மண் மணத்தைக் கொடுக்கிறது. டைட்டில் டிசைன் வெகு அற்புதமாக கப்பலின் வடிவில், அதில் பெண்ணின் கால் வடிவில் ‘S’ எழுத்தாக அமைந்திருப்பது சிறப்பு. ஆயுதம் ஏந்திய மர்ம மனித உருவமும் அதில் காணப்படுகிறது.

    டைட்டில் போஸ்டரில் புராணத்தன்மையும் கிராமிய வட்டார சுவையும் கலந்திருக்கிறது. பொற்காலணியும் விரலணியும் அணிந்த ஒரு தெய்வீக பாதம் பெரிய பச்சை இலையில் பதித்துக் கொண்டிருக்கும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. அந்த இலையில் சடங்கினை குறிக்கும் வகையில் சமைத்த சாதம், ஆடு-கோழி தலைகள், பூக்கள், குங்குமம் வைக்கப்பட்டுள்ளது. இரத்தம் சொட்டும் வாள், கதையின் தீவிரத்தன்மையையும், தெய்வீக சக்தியும் இருப்பதை வலியுறுத்துகிறது.

    படம் இன்று பிரமாண்ட விழாவுடன் கோலாகலமாக தொடங்கப்பட்டது. ஹீரோ நிகில் டைட்டிலை வெளியிட்டார். பன்னி வாசு (Bunny Vasu) திரைக்கதைப் பிரதியை வழங்கினார். இயக்குநர்கள் வசிஷ்டா (Vassishta) , சந்தூ மொண்டேட்டி (, Chandoo Mondeti) , மெஹர் ரமேஷ் ( Meher Ramesh )கேமரா ஸ்விட்ச் ஆன் செய்தனர். VV வினாயக் முகூர்த்தக் காட்சிக்கு க்ளாப் அடித்தார். இயக்குநர் பிரசன்னா குமார் முதல் காட்சிக்கு “ஆக்சன்” கூறினார்.

    நடாஷா சிங் (Natasha Singh) , நக்‌ஷா சரண் (Naksha Saran) ஆகியோர் ஹீரோயின்களாகவும், பிரபல கன்னட நடிகை அக்‌ஷரா கவுதா (Akshara Gowda) முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர்.

    இளம் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழு இந்த படத்தில் பணியாற்றுகிறது. அனுதீப் தேவ் (Anudeep Dev) இசையமைக்க, சுஜாதா சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். சோட்டா K பிரசாத் (Chota K Prasad) எடிட்டிங், பிரஹ்மா கடலி ( Brahma Kadali )ஆர்ட் டைரக்சன், சிந்தா ஸ்ரீனிவாஸ் எழுத்து ஆகிய பணிகளை மேற்கொள்கிறார்கள்.

    “ஹெய் வெசோ” படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ளது.

    நடிகர்கள் : சுதீர் ஆனந்த், சிவாஜி, நடாஷா சிங், நக்‌ஷா சரண், அக்‌ஷரா கவுதா, மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா மற்றும் பலர்.

    தொழில்நுட்பக் குழு:

    தயாரிப்பு நிறுவனம்: வஜ்ர வராஹி சினிமாஸ்
    தயாரிப்பாளர்கள்: சிவா சேர்ரி – ரவிகிரண்
    இயக்குநர்: பிரசன்னா குமார் கோட்டா
    இசை: அனுதீப் தேவ்
    ஒளிப்பதிவு: சுஜாதா சித்தார்த்
    எடிட்டிங்: சோட்டா கே பிரசாத்
    தயாரிப்பு வடிவமைப்பாளர்: பிரம்ம கடாலி
    பாடல்கள்: ராமஜோகைய்யா சாஸ்த்ரி
    எழுத்து: சிந்தா ஸ்ரீனிவாஸ்
    உடை வடிவமைப்பு: ரஞ்சிதா குவ்வலா
    நடன அமைப்பு: விஜய் போலாகி
    ஸ்டண்ட்: ப்ருத்வி
    லைன் புரொட்யூசர்: உதய் நந்திபட்டி
    மார்க்கெட்டிங்: மனோஜ் வல்லூரி (Hashtag Media)
    பிரசாரக் கலை: தானி ஆலே
    மக்கள் தொடர்பு: யுவராஜ்

    Sudheer Anand, Prasanna Kumar Kota, Siva Cherry, Ravikiran, Vajra Varahi Cinemas Production No 1 Titled Hai Lesso, Launched Grandly Today, VV Vinayak Clapped For Muhurtham Shot

    Sudheer Anand, fondly known as Sudigaali Sudheer, continues to make his mark on both the small screen and the silver screen. His new film has been officially announced today. Directed by Prasanna Kumar Kota in his directorial debut, the movie also marks the production debut for Siva Cherry and Ravikiran under the banner Vajra Varahi Cinemas. Touted as Production No. 1 for the banner, this project is the fifth film as a lead actor for Sudheer Anand. Billed to be a rural drama, Shivaji who recently spellbound with his intense performance in Court plays the antagonist in the new movie.

    Titled impressively Hai Lesso, it is derived from a colloquial expression commonly used in farming communities, giving it an authentic rural touch. The title logo is creatively designed, shaped like a ship with a female leg forming the letter ‘S’. A mysterious figure holding a weapon can also be spotted.

    The title poster adds a mythological and rustic tone. It features a regal foot adorned with golden anklets and toe rings, stepping onto a large green leaf. On the leaf lies a traditional offering of cooked rice mixed with hen and goat heads, flowers, and sindoor, representing rituals and sacrifice. A blood-soaked sword heightens the drama, hinting at divine power and conflict. The title poster alone indicates the intense nature of the story.

    The film was launched in a grand ceremony today, attended by the core team and several special guests. Hero Nikhil unveiled the title, while Bunny Vasu ceremoniously handed over the script to the makers. Directors Vassishta, Chandoo Mondeti, and Meher Ramesh switched on the camera, and VV Vinayak sounded the clapboard for the muhurtham shot. Director Prasanna Kumar himself called the action for the film’s very first shot.

    Natasha Singh and Naksha Saran are the heroines in the movie, while popular Kannada actress Akshara Gowda will be seen in a pivotal role. Motta Rajendran, Getup Srinu, and Bevara Duhitha Saranya are the other prominent cast.

    The movie will have a very young and talented team of technicians taking care of different crafts. Anudeep Dev scores the music, while Sujatha Siddarth handles the cinematography. Chota K Prasad takes care of editing, while Brahma Kadali is the production designer. Chintha Srinivas is the writer.

    Hai Lesso will have its theatrical release in all south Indian languages- Telugu, Tamil, Kannada, and Malayalam languages.

    Cast : Sudheer Anand, Shivaji, Natasha Singh, Naksha Saran, Akshara Gowda, Motta Rajendran, Getup Srinu, Bevara Duhitha Saranya, and others.

    Technical Crew:

    Banner: Vajra Varahi Cinemas
    Producers: Siva Cherry – Ravikiran
    Director: Prasanna Kumar Kota
    Music Director: Anudeep Dev
    DOP: Sujatha Siddarth
    Editor: Chota K Prasad
    Production Designer: Brahma Kadali
    Lyrics: Ramajogaiah Sastry
    Writer: Chintha Srinivas
    Costume Designer: Ranjitha Guvvala
    Choreographer: Vijay Polaki
    Stunts: Prudhvi
    Line Producer: Uday Nandipati
    Marketing: Manoj Valluri (Haashtag Media)
    Publicity Designer: Dhani Aley
    PRO: Yuvraaj

  • யாஷிகா ஆனந்த்” நடிக்கும் “டாஸ்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது…

    பிளாக் டைமண்ட் ஸ்டுடியோ சார்பில் சையத் ஜாஃபர் தயாரிப்பில், சகு பாண்டியன் இயக்கத்தில் ரத்தன் மௌலி, யாஷிகா ஆனந்த், விஜய் டிவி புகழ் யோகி, தேஜா ஸ்ரீ, சஞ்சய் ஷங்கர் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் ‘டாஸ்’ (TOSS). இந்த படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா படக்குழுவினர் கலந்து கொள்ள கோவில்பட்டியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த பூஜை மற்றும் துவக்க விழாவில் முன்னாள் அமைச்சர் திரு. கடம்பூர் C ராஜூ MLA அவர்கள் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார்.

    படத்தை பற்றி இயக்குனர் சகு பாண்டியன் கூறியதாவது: மர்மமான முறையில் மூன்று கொலைகள் நிகழ்கின்றன. அந்த கொலைகளின் பின்னணி என்ன? யாஷிகா ஆனந்துக்கும் கொலைகளுக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லும் ஒரு கிரைம் திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. யாஷிகா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு திரையுலகில் இருந்து வந்திருக்கும் தேஜா ஸ்ரீ இன்னொரு நாயகியாக நடிக்கிறார். கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் ஒரே கட்டமாக 25 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த ஊர் மக்களின் ஆதரவும், அன்பும் எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது.

    முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி MLA-வுமான திரு.கடம்பூர் C ராஜூ அவர்கள் பூஜைக்கு வந்திருந்து எங்கள் குழுவை வாழ்த்தியதோடு, படப்பிடிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்திருக்கிறார். TOSS என்ற தலைப்பே எளிதில் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது எனவும் எங்களை பாராட்டினார்.

    படக்குழுவினர் விபரம்:
    நடிகர்கள்:

    ரத்தன் மௌலி,
    யாஷிகா ஆனந்த்,
    விஜய் டிவி புகழ் யோகி, ஷன்னா
    தேஜா ஸ்ரீ,
    சஞ்சய் ஷங்கர் & மற்றும் பலர்.

    தொழில்நுட்ப கலைஞர்கள்:

    இயக்குனர் – சகு பாண்டியன்,
    தயாரிப்பு – சையத் ஜாஃபர்,
    இசை – சாந்தன் அனிபஜகனே,
    ஒளிப்பதிவு – தர்மதுரை,
    படத்தொகுப்பு – வளர்பாண்டி,
    பாடல்கள் – நலங்கிள்ளி,
    ஸ்டண்ட்ஸ் – ஜேசுதாஸ்,
    துணை இயக்குனர் -A. வரதராஜ். நித்யானந்தம்,
    நிர்வாக தயாரிப்பு – A. சுந்தரமூர்த்தி,
    புரொடக்‌ஷன் எக்சிகியூட்டிவ் – KR வெங்கடாசலம்,
    மக்கள் தொடர்பு – ஷேக்.

    விரைவில் படப்பிடிப்பை முடித்து விட்டு 2025 இறுதியில் அல்லது 2026 துவக்கத்தில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

  • TOSS” starring “Yashika Anand”, was launched auspiciously with a pooja ceremony…

    On behalf of Black Diamond Studio, produced by Syed Jaffer and directed by Sagu Pandian, the film “TOSS” stars Rathan Mouli, Yashika Anand, Vijay TV fame Yogi, Teja Sri, Sanjay Shankar, and many others. The film’s pooja and launch ceremony took place grandly at Kovilpatti, with the full team in attendance. Former Minister and Kovilpatti MLA Mr. Kadambur C. Raju participated in the ceremony and conveyed his best wishes to the team.

    Speaking about the film, director Sagu Pandian said:
    “Three mysterious murders take place. What is the reason behind these killings? What is Yashika Anand’s connection to them? This forms the core of the story, which will be presented as a crime thriller. Yashika Anand plays the lead role, while Teja Sri, from the Telugu film industry, plays the other heroine. We plan to complete the shoot in one stretch within 25 days across Kovilpatti, Virudhunagar, and Sattur. The love and support of the local people has been very motivating for us.”

    He further added that Kadambur C. Raju MLA, who attended the pooja, not only blessed the team but also assured full support for the smooth progress of the shoot. He also praised the title “TOSS”, calling it an instantly appealing one that would connect well with the audience.

    Cast:
    • Rathan Mouli
    • Yashika Anand
    • Vijay TV fame Yogi, Shanna
    • Teja Sri
    • Sanjay Shankar & many others

    Technical Crew:
    • Director – Sagu Pandian
    • Producer – Syed Jaffer
    • Music – Santhan Anibajagane
    • Cinematography – Dharmathurai
    • Editing – Valarpandi
    • Lyrics – Nalangilli
    • Stunts – Jesudass
    • Associate Directors – A. Varatharaj, Nithyanandam
    • Executive Producer – A. Sundaramurthy
    • Production Executive – K.R. Venkatasalam
    • PRO – Shiek 

    The team aims to wrap up filming soon and release the movie either by late 2025 or early 2026.

  • யாத்திசை’ பட இயக்குநரின் அடுத்தப் படத்தில் இணைந்துள்ளார் நடிகர் சசிகுமார்!

    அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அட்டகாசமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது!

    நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ரசிகர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. அந்த வகையில், நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திரைத்துறையில் களம் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் ஜே. கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படத்தை அறிவித்துள்ளது. இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தை விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு, வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற ‘யாத்திசை’ பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் முக்கியமான சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    படம் குறித்து இயக்குநர் தரணி ராசேந்திரன் பகிந்து கொண்டதாவது, “நடிகர் சசிகுமார் எங்கள் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டது பெருமகிழ்ச்சி. பிரிட்டிஷ் சகாப்தத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த கதையில், அவர் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் சுவாரஸ்யமான விஷயமாக ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும்” என்கிறார்.

    நடிகர்கள் தேர்வு குறித்து கேட்டபோது, “சசிகுமார் சார் தவிர வேறு யாரையும் இந்தக் கதாபாத்திரத்திற்கு கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு தன் நடிப்பால் கதாபாத்திரத்தையும் படத்தையும் மெருகேற்றியுள்ளார் சசிகுமார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றிக்குப் பின்பு அவர் இந்தப் படத்தின் கதையை கேட்டு உடனே ஒத்துக்கொண்டது எங்களுக்கு ஆச்சரியமான விஷயம்” என்றார்.

    படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்த நிலையில், ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

    சேயோன், பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். நடிகர் சசிகுமாருக்கும் படக்குழு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. படம் குறித்தான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

  • Actor Sasikumar Joins “Yaathisai” Director’s Spellbinding Next

    Team Unveils His Striking Poster on the Occasion of His Birthday

    When vision converges with artistry, the outcome is nothing short of extraordinary. J.K. Film International J Kamalakannan, which has entered the film production with a sheer commitment to producing content-driven films, has already stirred anticipation with its forthcoming venture. The untitled project, helmed by director Dharani Rasendran, acclaimed for his critically lauded and commercially successful Yaathisai, now attains greater significance with the arrival of filmmaker-actor Sasikumar in a pivotal role. Marking his birthday, the team has unveiled a distinguished poster in his honour.

    “It feels like a crowning moment for our project, rather than merely an icing on the cake,” excitedly claims director Dharani Rasendran, expressing his delight at Sasikumar’s gracious acceptance to be a part of this movie. He continues, “In this story, set against the backdrop of the British era, he will embody an INA officer. We are preparing to film compelling action sequences that will be one of the intriguing attractions of this film.”

    Reflecting on the casting choice, Dharani Rasendran remarks, “We could not imagine anyone else for this role. Sasikumar sir carries with him a gravitas that elevates a film’s very essence. While we were uncertain if he would accept, particularly after the resounding success of Tourist Family, he surprised us with his immediate affirmation upon hearing the script and his character.”

    With 70 per cent of filming already completed, J.K. Film International is shaping this untitled production on a grand scale.

    The ensemble cast features Seyon, Bhavani Sre, Samuthirakani, Shivadha, and Kishore, among others. On this special occasion, the team extends its warmest wishes to Sasikumar and looks forward to revealing further details of the project in due course.

  • BLACK THREAD premium Menswear launched at Taramani

    BlackThread the modern classic, lightweight luxury everyday Menswear for all seasons launched by Honourable Tan Sri M.Ramasamy – Vice President of Malaysian Indian Congress & Chairman of Mic Perak, Malaysia,Honourable Puan Sri Indra Ramasamy smp Malaysia, Actor Master Mahendran, Mr.Karthik Founder of BLACK THREAD.

    Black Thread has opened its Third Outlet store dedicated to menswear collections. The retail space is located in Taramani Intended to serve as a one-stop shopping destination, the menswear store offers a wide selection of pieces from the category, In Shirts, Polos, Jeans, Linen pants Cargis, corduroy Travel available from Sizes S to 2xL.

    A private shopping experience in the form of an exclusive area further enhances space for Lightweight luxury everyday wear for all seasons. Black Thread vision is to provide Quality with affordable prices stands unique in the modern classic look & Budget Friendly.

    Black Thread is a crafted Premium Fabrics with Elegant Designs & Good Threads announces 50% Discounts and buy 2 get one free offer and much more.

    Black Thread located at No.1 Kambar Street, Thanthai Periyar Nagar, Taramani Chennai – 600113.

  • சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11ல் இசை ஞானி இளையாராஜாவை கொண்டாடும் விதமாக ‘Celebrating இசை’ !!

    சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 பாடகர் சரணுக்கு, இளையராஜா டீசர்டை பரிசளித்த யுவன்சங்கர் ராஜா !!

    இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கங்கை அமரன் கலந்துகொண்ட இளையராஜா ஸ்பெஷல் சூப்பர் சீனியர் சீசன் 11 !!

    தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின், 11 வது சீசன் வெகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் இசைக்கடவுள் இசை ஞானி இளையாராஜாவை கொண்டாடும் விதமாக ‘Celebrating இசை’ என்ற தலைப்பில் அடுத்த மூன்று எபிசோடுகள் நடைபெறவுள்ளது. முழுக்க முழுக்க இளையராஜா பாடல்களை பங்கேற்பாளர்கள் பாடவுள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் கங்கை அமரன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு பாடகர்களை ஊக்குவித்தனர்.

    அச்சு அசல் இளையராஜாவின் பிரதி போலவே பாடும் பாடகர் சரணுக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இளையராஜாவின் புகைப்படம் பதித்த டீசர்டை பரிசளித்து வாழ்த்தியது மிக நெகிழ்வான தருணமாக அமைந்தது.

    தமிழக மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட இளையராஜாவின் இசையை கொண்டாடும் வகையிலும், அவரின் தீவிரமான ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. வழக்கத்தை விடவும் இந்த வாரம் நிகழ்ச்சி பெரிய அளவில் களைகட்டும் என ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

    பல இளம் திறமையாளர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி, இந்த முறையும் பல அதிரடி புதுமைகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

    சூப்பர சிங்கர் சீனியர் 11 நிகழ்ச்சியை சனி, ஞாயிறு கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியிலும், ஜியோ ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டுகளியுங்கள்.

  • அந்த 7 நாட்கள் திரை விமர்சனம்

    வானியற்பியல் (Astrophysics) ஆராய்ச்சி மாணவரான நாயகன் அஜிதேஜ், சூரியகிரகண ஆய்வில் “பழமையான டெலஸ்கோப் மூலம் வாணி ஆய்வு செய்கிறார் அப்பொழுது பாதிப்பால் அதிசய திறன் ஒன்றை அடைகிறார். அதன் மூலம் பிறருக்கு நடக்க இருக்கும் கெட்ட விசயங்களை முன் கூட்டியே அறிந்துக் கொள்கிறார். இதற்கிடையே, 7 நாட்களில் தனது காதலி ஸ்ரீஸ்வேதாவுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட போவதை தனது அதிசய ஆற்றல் மூலம் அறிந்துக் கொள்ளும் நாயகன், அதில் இருந்து அவரை காப்பாற்ற முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா ?, இல்லையா ? என்பது தான் ‘அந்த 7 நாட்கள் திரைப்படத்தின் திரைக்கதை.

  • பல்டி திரை விமர்சனம்

    பல்டி கபடி படம் 4 நண்பர்கள் விளையாட்டாக செய்யும் தவறினால் அவர்களுக்கே தெரியாமல் ஒரு கேங்ஸ்டர் உலகிற்குள் சென்று அவர்களை வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை விறுவிறுப்பாக மற்றும் எமோஷ்னல் ட்ராமாவாக படமாக்கி திரையில் ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் உன்னி.

    பஞ்சமி, பொற்றாமரை இரண்டு கபடி குழு-க்கும் எப்போதும் கடும் போட்டி நடக்கிறது, பொற்றாமரை டீம் செல்வராகவன் வைத்துள்ளார், அவர் அதிக வட்டிக்கு  விடுபவர். இவருக்கு அவருடைய டீம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் நாள் என் கபடி குழுவில் விளையாடுகிறார்களா என்று பஞ்சமி கபடி குழு விடம் கேட்க, கேப்டன் சாந்தனுவும் பணத்திற்காக சம்மதிக்கிறார் .
    கபடி வீரரான சாந்தனு பணத்திற்கு ஆசைப்பட்டு ஒரே நேரத்தில் இரண்டு டீம் இடம் சம்மதம் தெரிவிக்கிறார் ஆனால், சாந்தனு ஏற்கனவே அல்போன்ஸ் புத்திரன் வைத்திருக்கும் ஷோ பாய்ஸ் கபடி டீம்-ல் ஆட சம்மதிக்க, பணத்திற்காக தற்போது பொற்றாமரை டீம்-ல் விளையாட சம்மதிக்க அல்போன்ஸ் புத்திரன் ஈகோ அதிகமான, அவர் செல்வராகவனுக்கு சொந்தமான ஒரு கார்-யை தூக்குகிறார், அந்த கார் தங்களால் தான் போனது என்பதால் சமாதானம் பேச போன ஷான் நிகம், சாந்தனும் மற்றும் அவர் நண்பர்களை அல்போன்ஸ் தாக்க, அங்கு அவரை தாக்கி விட்டு ஷான் நிகம் & கோ கார்-யை எடுத்து வர, அடுத்தடுத்து இவர்கள் பகை எங்கு கொண்டு சென்றது
    சாந்தனு தன் நண்பர்களுக்காக ஏன் எதிராக மாறினார்?
    நாயகன் ஷான் நிகம் செல்வராஜ் எதிர்த்தது ஏன்?
    நான்கு நண்பர்களின் வாழ்க்கை கபடி விளையாட்டின் மூலம் எந்த சூழ்நிலை ஏற்படுத்தியது?
    திரைப்படத்தின் நாயகி  செல்வராகவனை எதிர்த்தது ஏன்? போன்ற கேள்விக்கு பதில் பல்டி திரைப்படத்தின் கதை.

    செல்வராகவன் வில்லத்தனம் நடிப்பிலும் திரையிலும் ரசிக்க வைத்துள்ளார், ஜீ-மா கதாபாத்திரம் நல்ல நடிப்பு. அதிலும் இரண்டாம் பாதியில் ஜீ-மா ஆடும் ஆட்டத்தில் 4 நண்பர்கள் சிக்கும் இடம் நல்ல திருப்பம்.

  • ரைட் திரை விமர்சனம்

    “ரைட்” திரைப்படம் ஒரு காவல் நிலையத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் சஸ்பென்ஸ் திரில்லர் வகை படமாகும் இதில் நடித்த அனைவரும் தங்களது பங்களிப்பு சிறப்பாக கொடுத்துள்ளனர் திரைக்கதை தொடக்கத்தில் காவல் நிலையத்தில் இருக்கும் காவலர்கள் பிரதமர் வருகையால் பாதுகாப்பிற்காக இன்ஸ்பெக்டர் நட்டியுடன்  ஒரு டீமோடு போய் விட, ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டர் , பெண் போலீஸ் , ஏட்டு, அந்த ஏட்டுக்கு பொருட்களை திருடிக் கொண்டு வந்து தரும் ஒரு திருடன், லாக்கப்பில் சில கைதிகள் மட்டும் இருகின்றனர் . தன் மகன் (அருண் பாண்டியன்) காணாமல் போனது குறித்து  புகார் தர வந்த அவரை அசிங்கப்படுத்தி அனுப்புகின்றனர் ஏட்டுவும் சப் இன்ஸ்பெக்டரும்.
     அரசியல்வாதியின் மகன் தனது அடியார்களை போலீஸ் ஸ்டேஷன் வந்து லாக்கப்பில் உள்ள கைதிகளை ஏட்டுவின் உதவியோடு மீட்டுக் கொண்டு போகிறான் .


     அருண் பாண்டியன் மகனைக் கண்டு பிடிக்கச் சொல்லி  கமிஷனர் அலுவலகம் செல்கிறார் அங்கும் அவர் அவமானத்துக்கு ஆளாகிறார்.

     இந்த நிலையில் திருட்டில் இருந்து மீட்கப்பட்ட நகைகளை மக்களுக்குக் கொடுக்கும் நிகழ்ச்சி காவல் நிலையத்தில் நடக்க, அதோடு சம்மந்தம் இல்லாமல் ஒரு லேப் டாப்பும் சேர்ந்து இருக்கிறது .  எப்படி வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.
     அந்த நேரம் பார்த்து  கல்யாண ஏற்பாட்டுக்காக  லீவில் இருக்கும் பெண் சப் இன்ஸ்பெக்டர் பத்திரிக்கை கொடுக்க வருகிறார் .
     அவர் ஐ மேக் லேப் டாப்பை இயக்குவது பற்றி ஏட்டுவுக்கு கற்றுக் கொடுக்க,
     ஆன் செய்யப்பட்டதும் தானாக இயங்கும் கம்பியூட்டர் ,வழியே வரும் ஒரு குரல், ஏட்டு  உட்கார்ந்து இருக்கும் இருக்கைக்கு கீழும் , ஸ்டேஷனை சுற்றியும் வெடிகுண்டு  இருக்கிறது . யார் வேண்டுமானலும் உள்ளே வரலாம். ஆனால் வந்தவர் வெளியே போக நினைத்தால் பாம் வெடிக்கும் . எல்லோரும் சாவீர்கள் என்கிறது .
     ஆட்கள் உள்ளே வர, வெளியே ஓடிய ஒருவன் வெடித்து உயிர் ஆபத்துக்குப் போக, எல்லோருக்கும் சீரியஸ்நெஸ் புரிகிறது .
     எல்லோரும் உயிரோடு தப்பிக்க வேண்டும் என்றால் நீதிபதி ஸ்டேஷனுக்கு வந்து விசாரணை செய்ய வேண்டும் என்கிறது  மிரட்டல் குரல்.
    நீதிபதி  வர, போலீஸ் ஸ்டேஷனுக்குள் கோர்ட் செட்டப் உருவாகிறது .
    அரசியல்வாதிகளுக்கு  துணை போவதற்காக,  போலீசே ஒரு பெண்ணுக்கு அநியாயம் இழைத்த கதையை சொல்லி , அவன் கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் . இல்லை எனில் பாம் வெடிக்கும் என்கிறது மிரட்டல் குரல்  அடுத்து
    பெண்ணுக்கு அநியாயம் இழைத்த யார்?
    அருண் பாண்டியன் மகனை மீட்டாறா?
    காவல் நிலைய ரைட்டர்  வெடிகுண்டில் இருந்து மீட்கப்பட்டாரா?
    கால் நிலத்தில் பாம் வைத்தது மிரட்டியது யார்?
    போன்ற கேள்விக்கு பதில் ரைட் திரைப்படத்தின் கதை மற்றும் காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது என்பதை திகில் பரவ சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுப்ரமணியன் ரமேஷ்குமார்.