Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் சென்னை மாநகரில் ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாட்டை நடத்தியது!

Posted on August 2, 2026

அகமது மாலிக் வடையார் தமிழ்நாடு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார்!

சென்னை, ஆகஸ்ட் 1: 2002ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் தேசிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், சென்னை மாநகரில் இன்று தனது ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாட்டை சிறப்பாக நடத்தியது. இந்நிகழ்வில் தேசிய நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள், சமூக பிரதிநிதிகள் மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்று, அமைப்பின் செயல்பாடுகள், எதிர்கால செயல் திட்டங்கள் மற்றும் தென்னிந்தியாவில் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் முயற்சிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, அகமது மாலிக் வடையார் அவர்கள் தமிழ்நாடு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாநில பொறுப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம் தமிழ்நாட்டில் அமைப்பின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் புதிய கட்டம் தொடங்கியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்சின் மார்கதர்ஷக் டாக்டர் இந்திரேஷ் குமார் ஜி அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக இந்திய அரசின் தேசிய சிறுபான்மையினர் கல்வி நிறுவன ஆணையத்தின் செயல் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஷாஹித் அக்தர், ஹிமாலயா பரிவார் தேசிய துணைத் தலைவர் விஜய் சங்கர் மிஸ்ரா, மாநிலங்களவை உறுப்பினர் மிதிலேஷ் குமார் கதேரியா, புகழ்பெற்ற புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மஜீத் தாலிகோட்டி, முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்சின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தென்னிந்திய பொறுப்பாளருமான எலியாஸ் அகமது மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அகமது மாலிக் வடையார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதுடன், வட இந்தியாவின் பல பகுதிகளில் தனது வலுவான செயல்பாடுகளை நிறுவியுள்ளது என்று நிகழ்வில் உரையாற்றியவர்கள குறிப்பிட்டனர். தற்போது தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் அமைப்பின் பணிகளை மேலும் விரிவுபடுத்தி, அதன் நோக்கங்கள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தனர்.

அமைப்பின் செயல்பாடுகள் தஅலீம் (கல்வி), தரக்கி (முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி), மற்றும் தஹ்ஸீப் (நற்பண்பு, ஒழுக்கம் மற்றும் நாகரிகம்) என்ற மூன்று அடிப்படை கொள்கைகளை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன என்று அவர்கள் விளக்கினர். கல்வியே நல்ல மனிதநேயத்திற்கும் பொறுப்புணர்விற்கும் அடித்தளம் என்றும், முன்னேற்றமும் உயர்ந்த பண்பாடும் சமூக ஒற்றுமை மற்றும் வலிமையான சமுதாயத்தை உருவாக்கும் என்றும் வலியுறுத்தினர்.

சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், அதிகமான மக்கள் இத்திட்டங்களைப் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றும் பேசியவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து உரையாடல் மற்றும் மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் மூலம் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஆக்கப்பூர்வமான குடிமக்கள் பங்கேற்பை ஊக்குவிப்பதில் தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட அகமது மாலிக் வடையார், தம்மை தமிழ்நாடு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்த தேசிய தலைமையினருக்கு நன்றி தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் அமைப்பின் அடித்தள கட்டமைப்பை வலுப்படுத்தி, அதன் செயல்பாடுகள் மற்றும் சமூக நல முயற்சிகளை முஸ்லிம் சமூகத்தினரிடம் கொண்டு செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபடுவதாக அவர் உறுதியளித்தார்.

மேலும், அமைப்பின் செயல்பாடுகள் மாநிலம், மாவட்டம் மற்றும் பிற நிர்வாக நிலைகளில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட நிர்வாக அமைப்பின் கீழ் செயல்பட்டு வருவதாகவும் பேச்சாளர்கள் தெரிவித்தனர்.

ஜன்சபை நிகழ்ச்சி, தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் அமைப்பின் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான உறுதிமொழியுடன் நிறைவடைந்தது. கல்வி, சமூக நலம், ஆக்கப்பூர்வ உரையாடல் மற்றும் தேசிய ஒற்றுமையை முன்னிறுத்தும் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் நிகழ்வில் உறுதி எடுக்கப்பட்டது.

  • முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் சென்னை மாநகரில் ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாட்டை நடத்தியது!
  • Muslim Rashtriya Manch Holds Jan Sabha & South India Meet in Chennai; Ahmed Malik Wadayar Assumes Charge as Tamil Nadu Chief Convener
  • நியூஸ் 7 தமிழ் விருது வழங்கும் விழா – GKM தமிழ்குமரன் விருதுகள் வழங்கி வாழ்த்துரை
  • திரையுலகம் சார்பில் மிக பிரமாண்ட விழா! பாரதிராஜா, பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை.
  • கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme