
கிராமத்தூ பெண்ணாக பவுனுதாயி என்ற தாய் கிழவி வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை திரை கதை யாக மட்டும் இல்லாமல் குடும்ப உணர்வுகளையும், பெண்மையின் மனவலிமை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் தாய் கிழவி. , கதையின் இறுதியில் ஒரு பெண்ணின் மனவலிமை அவள் எடுக்க முடி என்ன என்பதை திரை கதையாக திரையில் காண்போர் ரசிக்கும் படி கதையின் நாயகி ராதிகா அவரின் கண்கள், உடல் மொழி, பேசும் விதம் எல்லாமே ஒரு கிராமத்துவாழ்க்கையை உணர்த்துகிறது. பல காட்சிகளில் ராதிகா மட்டுமே போதும் என்று சொல்ல வைக்கும் அளவுக்கு ராதிகா நடிப்பு மிக அருமையாக உள்ளது.
பவுனுதாயி என்ற தாய் கிழவிக்கு குடும்பத்தில் அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி என 3 மகன் மற்றும் ஒரு மகள் ராதிகாவுக்கு இருக்கின்றனர். இவர்கள் எல்லோரும் அம்மா எப்போது இறப்பார் சொத்தை அடையாளம் என காத்திருக்க, மகள் மட்டும் கணவரை விட்டு அம்மாவிற்காக வீட்டோடு வாழ்ந்து வருகிறார்.

🎬 இயக்கம்
இயக்குநர் சிவகுமார் முருகன் தனது திரைக்கதையின் மூலம் குடும்பம், உறவு, தியாகம் போன்ற உணர்வுகளை திரையில் ரசிக்க வைத்துள்ளார். சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், உணர்ச்சி காட்சிகள் அதைக் காப்பாற்றுகின்றன.
சாமானிய கிராமத்தில் வாழும் ஒரு பெண்ணின் வாழ்க்கை சிறையில் ரசிக்க வைத்துள்ளாரா இயக்குனர்?
பவுனுத்தாய் தன்னை மட்டுமே நம்பி வாழ்வில் உயர்ந்து கிராமத்துக்கே வட்டி காசு கொடுக்கும் தாக்கியவியின் இறுதி நிலை என்ன?
தாய் கிழவி சேர்த்து வைத்த 160 பவுன் தங்கம் இறுதியில் யாரிடம் சேர்ந்தது?
தாய் கிழவி உடல்நிலை சரியில்லாத பொழுது அவர் காப்பாற்றியது யார்?
தாய் கிழவியின் வாழ்க்கை உயர்வுக்கு காரணம் எந்தக்கை (நம்பிக்கை)?
இவன்ட கேள்விக்கு பதிலே தாய்க் கிழவியின் கிராம வாழ்க்கையும் அவரின் அசாதாரண உயர்வு.

🎵 இசை
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசை படத்தின் உணர்வை இன்னும் உயர்த்துகிறது. பின்னணி இசை பல காட்சிகளில் திரையில் ரசிக்க வைத்து உள்ளது .
📝 முடிவு
தாய் கிழவி கதை மனசை தொடும் குடும்பக் கதை விரும்புவோர் கண்டிப்பாக ரசிப்பார்கள்.
⭐ Rating: 3.5 /