
ஒரு சிறப்பான கேங்ஸ்டர் படத்தை பார்த்து அனுபவத்தை கொடுத்துள்ளது ஃப்ரைடே திரைப்படம், குடும்ப பாசம்,வன்மம்,ரத்தம், துரோகம் என திரைக்கதை திரையில் காண்போரை கதி கலங்க வைக்கிறது இந்த ஃப்ரைடே திரைப்படம். திரைக்கதை மற்றும் காட்சியமைப்பு படத்தை விறுவிறுப்பாக பயணிக்க வைப்பதோடு, சில இடங்களில் பயத்தோடு திரையில் காண்பவரை ரசிக்க வைக்கிறது இந்த ஃப்ரைடே திரைப்படம்.
நாயகன் அனிஷ் மாசிலாமணி மற்றும் கே.பி.ஒய் தீனா சேர்ந்து ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், தீனா எதிர்பாராத விதமாக தாக்குதலுக்கு ஆளாக, அவரை காப்பாற்றுவதற்காக அனிஷ் மாசிலாமணி அவருடன் ஒரு இடத்தில் தஞ்சம் அடைகிறார். மறுபக்கம், தீனாவும் அனிஷ் மாசிலாமணியுடன் இருந்துக் கொண்டே அவரை கொலை செய்ய திட்டமிடும் கூட்டம் ஒன்றுக்கு உதவி செய்துக் கொண்டிருக்கிறார்.
ஃப்ரைடே திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருக்கும் எதிரியை கொள்வதற்கான ஒரு காரணம் அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு துயர சம்பவமாக ( பிளாஷ்பேக் )மையப்படுத்தப்பட்டுள்ளது.
கே.பி.ஒய் தீனா ஏன் அனிஷ் மாசிலாமணி பழி வாங்க துடிக்கிறார்?
கே.பி.ஒய் தீனா தாயாரை கொன்றது யார் அவர்கள் எப்படி பழி வாங்குகிறார்?
அனிஷ் மாசிலாமணி யாரை, எதற்காக கொலை செய்ய முயன்றார் ?,
சாமானிய மனிதன் தனது வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சில மாற்றங்களால் பழிவாங்க துடிக்கும் ரவுடிகளாக எப்படி தள்ளப்படுகிறார்கள், என்பதை ரத்தம் கத்தி துப்பாக்கி துரோகம் வன்மம் திரை கதையாக சொல்வதே ’ஃப்ரைடே’.