
“தீயவர் குலை நடுங்க”திரைக்கதையை
பழிவாங்கும் ஒருவரின் மைய கதையாக வைத்து அனைவருக்கும் “சமூகத்திற்கு” விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் தினேஷ் லட்சுமணன்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தத் “தீயவர் குலை நடுங்க” திரைப்படத்தில் தனது மாறுபட்ட நடிப்பினை வெளிப்படுத்தி காண்போரை திரையில் ரசிக்கவும் வைத்துள்ளார் ஆக்ஷன , காதல், சென்டிமென்ட், என்று திரையில் காண்பவரை ஆச்சரியப்படுத்தியும் தனது ரசிகர்களுக்கு ஒரு ஆக்ஷன் விருந்தாக ஐஸ்வர் ராஜேஷ் இந்த திரைப்படத்தை கொடுத்துள்ளார்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் திரைக்கதையில் எழுத்தாளர் ஒருவர் விபத்தில் சிக்குகிறார் அதே இடத்தில்ப மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். சில நாட்களில் தொழிலதிபரான ராம்குமார் மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். இந்த இரண்டு கொலைகள் விசாரிக்க அர்ஜுன் களமிறங்குகிறார், தீவிர விசாரணையில் அர்ஜுன். ஒரு கட்டத்தில் இந்த கொலைகளை எல்லாம் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் செய்கிறார் என்பது தெரிய வருகிறது.
நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் கொலை செய்வதற்கான காரணம் என்ன?
இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷ் யார்? நாயகி எதற்காக கொலைகள் செய்கிறார்? போலீஸ் அதிகாரியான அர்ஜுன் எப்படி ஐஸ்வர்யா ராஜேஷை கண்டுபிடித்தார்?
இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த கொலை குற்றத்திலிருந்து காப்பாற்றுவது யார்? இது போன்ற கேள்விக்கு பதில் “தீயவர் குலை நடுங்க”.
படத்தின் மீதி கதை.
துணை நடிகர்கள் அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, தொழிலதிபர் ராம்குமார், போலீஸ் கான்ஸ்டபிள் தங்கதுரை ஆகியோர் தங்கள் நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.