
மதராஸ் மாஃபியா கம்பெனி பட தலைப்புக்கு ஏற்ற போல் மதராஸ் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் மிகப்பெரிய ‘டான்’ பூங்காவனம் (ஆனந்தராஜ்), தனது குற்றச் செயல்களை ஒரு வணிக நிறுவனம் போல நடத்துகிறார், ஒவ்வொரு பகுதியிலும் ஏஜெண்டாக செயல்படும் ரவுடி மூலம் கொலை நடைபெறுகிறது அதற்கு இப்போதை ஆதாரம் இல்லாததால் காவல்துறை இடம்” பூங்காவனம் (ஆனந்தராஜ்),”அவருக்கு எதிராக ஒரு வழக்கு பதிவு கூட இல்லை. அந்த அளவிற்கு காவல்துறையின் ஆதரவுடன் குற்ற செயல்களை கச்சிதமாக செயல்படுத்தி யாராலும் வீழ்த்த முடியாத ரவுடியாக திகழ்கிறார் பூங்காவனம். இதற்கிடையில் தொழில் போட்டி காரணமாக பூங்காவனத்தை கொல்ல அவருடைய கூட்டத்தில் சதி வேலைகள் நடைபெறுகிறது. இந்நிலையில் பூங்காவனத்தின் சாம்ராஜ்யத்திற்கு முடிவுகட்ட, அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, அவரை கைது செய்து என்கவுண்டர் செய்யும் முயற்சியில் காவல்துறை அதிகாரி திகழ் பாரதி (சம்யுக்தா) களம் இறங்குகிறார்.
பூங்காவனம் போலீஸிடம் சிக்காமல் தப்பித்தாரா?
காவல்துறை அதிகாரி திகழ் பாரதி பூங்காவனத்தை என்கவுண்டர் செய்தாரா? இல்லையா?
மதராஸ் மாஃபியா கம்பெனி என்ன ஆனது?
பூங்காவனத்தில் மனைவிகள் இறுதியில் என்ன முடிவு எடுத்தார்கள்?
இது போன்ற கேள்விக்கு பதில் மதராஸ் மாபியா திரைப்படத்தின் நகைச்சுவை மற்றும் சிந்திக்க வைக்கும் திரைப்படமாக திரை ரசிக்க வைத்துள்ளது