உலகம்மை திரை விமர்சனம்
அமரர் தோழர் சு.சமுத்திரம் அவர்கள் செம்மலரில் தொடராக எழுதி நாவலாக நூல் வடிவம் பெற்று வெளி வந்த புகழ்பெற்ற ஒரு கோட்டுக்கு வெளியே என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குநர் விஜய் பிரகாஷ் இயக்கத்தில், இளையராஜாவின் இசையில், மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி சார்பில் டாக்டர். வீ.ஜெயப்பிரகாஷ் தயாரிப்பில், திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் சமூக வாழ்வியல் திரைப்படம் “உலகம்மை”.
நெல்லை மாவட்டத்தில் 1970-களில் நாடாகும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது . கிராமத்து பெரிய மனிதரான மாரிமுத்து, திருமண வயதை தாண்டிய தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார். அப்போது, தனது விவசாய நிலத்தில் பணியாற்றும் உலகம்மையை தனது பெண்ணுடன் துணைக்கு போக சொல்லிவிட்டு, அங்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் தனது பெண்ணின் திருமணத்தை நடத்த திட்டமிடுகிறார். பெண் பார்க்க வந்த வாலிபரும் உலகம்மை தான் மணப்பெண் என்று நினைத்து திருமணத்திற்கு சம்மதித்து விடுகிறார். இந்த உண்மை உலகம்மைக்கு தெரிய வர, அவர் பெண் பார்க்க வந்தவரை நேரில் சந்தித்து அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடுகிறார். இதனால், திருமணம் நின்று விடுகிறது.
மகளின் திருமணம் நின்றதற்கு உலகம்மை தான் காரணம், என்று நினைக்கும் மாரிமுத்து,(கௌரி கிஷன்) உலகம்மையை பழிவாங்கும் நோக்கத்தில் அவருக்கு எதிராக செயல்படுகிறார் அதனை உலகம்மை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே திரைக்தை.
மாரிமுத்துவின் மச்சானாக நடித்திருக்கும் ஜி.எம்.சுந்தர் நெல்லை மாவட்ட தமிழிழை சிறப்பாக பேசி தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். (கௌரி கிஷன்)உலகம்மையின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் விஜய் பிரகாஷ், தனது நடிப்பு மூலம் மாயாண்டி திரையில் ரசிக்கவைக்கிறார் .
பெண் என்று துச்சமாக நினைப்பவர்களுக்கு உலகம்மையின் ஒவ்வொரு பதிலடியையும் பெண்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் கொடுக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் விஜய் பிரகாஷ், ஒரு தனிப்பட பெண்ணாக இருந்து ஆதிக்க சக்திகளை எதிர்த்து நிற்கும் உலகம்மையின் வாழ்வியலை அனைவரும் திரையில் பார்த்து விழிப்புணர்வு ஏற்படக்கூடிய திரைப்படமாக கொடுத்திருக்கிறார்.