வதந்தி இணை தொடர் 2022 டிசம்பரில் வெளியான தொடர் இளம்பெண் மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்படுகிறார். அவர் இறந்தது எப்படி? எதனால்? என்பதைக் காவல்துறையினர் கண்டுபிடிப்பதுதான் எட்டு பாகங்கள் கொண்ட வதந்தி இணையத் தொடர்.மர்மமான முறையில் இறந்த நாயகி வெலோனி எனும் பெயர் கொண்ட சஞ்சனாவின் வழக்கை விசாரிக்க வரும் உதவி ஆய்வாளர் வேடத்தில் நாயகன் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார்.

இன்று 7/08/2026 வெள்ளிக்கிழமை அமேசான் பிரைமில் வதந்தி 2 இணையத் தொடர் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

வதந்தி 2 தொடரைAndrew Louis உருவாக்கியுள்ளார், அதற்கான திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார். Wallwatcher Filmsதயாரிப்பில், Pushkar மற்றும் Gayatri ஆகியோர் படைப்புத் தயாரிப்பாளர்களாக (creative producers) பணியாற்ற, எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடரில் M. Sasikumar முதன்மைப் பாத்திரமான SI Moosa Raza-வாக நடிக்கிறார். இவருடன் Yashwanth, Anagha Maruthora, Aparna Das, Vivek Prasanna, Revathy Sharma மற்றும் Arjun Nandhakumar ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வதந்தி 2 ஆகஸ்ட் 7 அன்று Prime Video-வில் பிரத்தியேகமாக வெளியாகிறது இது தமிழில் வெளியாவதுடன், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் வசன வரிகளுடனும் (subtitles) இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியிடப்படுகிறது.

கிடைக்கின்றன.அதன் பின்னணியில் இருக்கும் மர்மங்கள் மற்றும் குற்றவாளி யார்? என்பதைக் கண்டுபிடிக்கக் தனி படை தலைவராக உதவி ஆய்வாளர் சசிகுமார்.அந்த விசாரணையில் அவர் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் என்ன என்பதை விறுவிறுப்பாகச் சொல்ல முயன்றிருப்பதே வதந்தி 2 விறுவிறுப்பான இணை தொடர் .

இணை தொடரில் முதன்முறையாக காவல்துறை உதவி ஆய்வாளர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார் சசிகுமார். தனது அனுபவ நடிப்பு மற்றும் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் அவர் உடல் மொழி ஆகியவை திரையில் ரசிக்கும் படியாக உள்ளது .
சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் அபர்ணாதாஸ் குடும்பத் தலைவியாகவும் தன் கணவருக்கு மனைவியாகவும் திரையில் காண்போரின் கவனம் ஈர்க்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மதுரைமாவட்ட காவல்கண்காணிப்பாளராக நடித்திருக்கும் அனகா, தனது கதாபாத்திரத்தை கர்ப்ப சிறப்பான நடிப்பை கொடுத்து திரையில் காணோவரை ரசிக்க வைத்துள்ளார் .
அறிமுக நடிகர் யஷ்வந்த்,மாடு பிடிப்பதில் ஆர்வம்காட்டும் மதுரை இளைஞராக நடித்து கவனம் பெறுகிறார்.யஷ்வந்த்தின் காதலியாக நடித்திருக்கும் ரேவதி இவர்களின் இருவரின் நடிப்பு மற்றும் காதல் காட்சிகள் திரையில் ரசிக்க வைத்துள்ளது.

வதந்தி 2 இணை தொடர் கதை களம் எது உண்மை என்று நம்மைத் தொடர்ந்து கேள்வி கேட்க வைப்பதையே அதற்கு நாயகனின் விசாரணை பதில் சொல்கிறது, இது ஒரு காவல் துறை விசாரணைத் தொடராக, ஒரு விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது என்பதை யதார்த்தமாகக் திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளது