
இருபதாம் நூற்றாண்டு நடக்கும் இளைஞர்களை (பள்ளிப்பருவ) மாணவர்களை குறி வைத்து நடத்தப்படும் போதை பொருட்கள் அவலங்களை மைய கதையாக முதற்கனல். திரைப்படம் அமைந்துள்ளது.
இந்தியாவில் (1901 முதல் 2026 வரை வரை) உலக வரலாற்றில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய காலமாகும். அறிவியல் புரட்சி, உலகப் போர்கள், இந்திய விடுதலை, மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி அறிவியல் & தொழில்நுட்பம் கணினி கண்டுபிடிப்பு, விண்வெளி ஆய்வு, மருத்துவத்தில் அதி நவீன சிகிச்சை முறைகள் மற்றும் மின்னணுவியல் யுகத்தின் தொடக்கம் இன்று பல்வேறு முன்னேற்றங்களை கொண்டு வரும் இந்தியாவில் அதே அளவு பல்வேறு போதை பொருள் கண்டுபிடிப்புகள் அன்றாடம் புது வகையான போதை பொருட்களை உருவாக்கி இன்றைய (பள்ளி & கல்லூரி) இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்து அவர்களது வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகிறது மிகப் பெரிய போதை மாபியா கும்பல் இதன் மூலம் இளைஞர்களில் வாழ்வாதாரமும் நாட்டின் வளர்ச்சியும் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை மைய திரைக்கதை அமைத்து அதில் (பள்ளிப்பருவ)இளைஞர்களை கொண்டு தனது கருத்தை திரையில் காண்பவரை வெகுவாக சிந்திக்க வைத்துள்ளது இயக்குனர்.
‘முதற்கனல்’ வெறும் திரைப்படமாக மட்டுமல்லாமல், சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கியமான விழிப்புணர்வு காவியம் இதனை திரையில் குடும்பத்தோடு காண வேண்டிய சிறப்பான திரைப்படம் மற்றும் இயக்குனரின் சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வு திரைக்கதையுடனும், பள்ளிப் பருவம் இளைஞர்களின் துடிப்பான நடிப்பு, திரையில் காண்பவரை ரசிக்க வைக்கும் தரமான தொழில்நுட்ப அம்சங்களுடனும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பாராட்டுக்குரிய படைப்பாக திகழ்கிறது. சஸ்பென்ஸ், உணர்வு, சமூகப் பொறுப்பு ஆகிய மூன்றையும் சரியான அளவில் கலந்து வழங்கியுள்ள இயக்குனர்.
ஆகியவை இக்காலகட்டத்தின் முக்கிய அடையாளங்களாகும்
இன்றைய சமூகத்தில் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் பழக்கத்தை மையமாக வைத்து, அதனை ஒரு சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் கதையாக ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கியிருக்கும் திரைப்படம் ‘முதற்கனல்’.
முதற்கனல் திரைக்கதையில் பள்ளி பருவத்தில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவன் சமுதாயத்தில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் வாழும் ஒரு திறமையான இளைஞன் தவறான நட்பின் காரணமாக போதைப்பொருள் உலகில் சிக்கிக்கொண்டு தனது படிப்பு மற்றும் வாழ்க்கையை இழக்கும் சூழல் ஏற்படுகிறது அதிலிருந்து மீண்டு தனது எதிர்காலத்தை வெல்ல பள்ளிப் பருவ மாணவன் மேற்கொள்ளும் போராட்டம் என உணர்வுபூர்வமாகவும், திரையில் காண்பவரை சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளது முதற்கனல் திரைப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஆர். வெங்கடரமணன் தன் எடுத்துக்கொண்ட கதைக்கு நியாயம் செருப்பு வகைகள் பள்ளிப்பொருள் இளைஞர்களை வைத்து சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வை கொண்டு சேர்த்திருப்பது அவரது இயக்கத்தின் மிகப்பெரிய பலமாகும்.
முதற்கனல் திரைப்படத்தில் பள்ளிப் பருவ மாணவனாக கதாநாயகனாக நடித்துள்ள அஸ்வின் விஸ்வநாதன், தனது நடிப்பின் மூலம் தன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து உள்ளார் இயல்பான நடிப்பின் மூலம் திரையில் காண்போரின் கவனத்தை ஈர்க்கிறார். ஒரு இளைஞனின் போதைக்கு அடிமையான ஒரு இளைஞனின் கனவுகள், தவறுகள், மனவேதனை இவற்றிலிருந்து மீண்டு வருவதற்கான போராட்டம் ஆகிய அனைத்தையும் தனது நடிப்பின் மூலம் திரையில் காண்பவரை சிந்திக்க வைத்துள்ளார் அவரது நடிப்பின் சிறப்பாக அமைகிறது.
திரைப்படத்தில் நடித்தவர்கள் ராஜேஷ், ராமசாமி, தனுஜா, இலக்கியா, அரி கரன், யோகேஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுக்கான கதாபாத்திரங்களை முழுமையாக உணர்ந்து நடித்து திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் கந்தசுவாமி கோபால், ஒளிப்பதிவு தனித்துவமான தோற்றத்தை விரைவில் காண்பது ரசிக்க வைத்துள்ளது.
இசையமைப்பாளர் மீரா லால் இசை கதையுடன் இயல்பாக ஒன்றிணைந்து மனதில் பதிகின்றன. பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம் அமைந்துள்ளது.
எடிட்டர் திஸ்யன் சாரதி திரைக்கதை திரைகளுக்கான பொழுது எங்கும் சோர்வடையாமல் இறுதிவரை சுவாரஸ்யமாக பயணிப்பது மிகவும் சிறப்பு