நீளிரா திரைப்படத்தின் திரைக்கதை 1988-ஆம் ஆண்டு இலங்கையில் இந்திய அமைதிப்படை நிலைகொண்டிருந்த காலக்கட்டத்தில் கதை தொடங்குகிறது. இந்தியா மற்றும் ஈழத்து எல்லைப் பகுதியில் ஒரு முன்னாள் ராணுவ வீரர் தமிழகத்திலிருந்து இலங்கையை ஒட்டி உள்ள பகுதிக்கு குடி பெயர்ந்த ஒரு குடும்பத்தின் கதை இந்த நீளிரா .
தனது மகளின் திருமணத்தை நடத்துவதற்காக தமிழ்நாடு மற்றும் ஈழப் பகுதியில் ஒட்டி உள்ளதால் திருமணத்திற்காக இந்திய அமைதிப்படை மற்றும் இலங்கை படையினரிடம் ஒப்புதல் ரசீது பெறுவதாக ஆரம்பமாகிறது நீளிரா திரைக்கதை.
ஈழத்தமிழர் குடும்பம் அடுத்த நாள் காலை திருமணம் நடத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்தத் திருமண வீட்டின் உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் ஒன்று கூடி திருமண நிகழ்ச்சிக்கு பலகாரங்கள் செய்து மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
திருமண வீட்டில் இரவு நேரத்தில் இந்திய அமைதிப்படை வீரர்கள் அவர்களுடைய வீட்டின் முன்புறம் உள்ள காலி இடத்தில் தங்குகின்றனர்.
ராணுவ வீரர்கள் திருமண வீட்டின் முன்புறம் தங்குவதில் மூலம் திருமண வீட்டின் நிலைமை தலைகீழாக மாறுகிறது. ஒரு போராளி குழுவை தேடி தாக்க வரும் இந்திய அமைதிப்படை வீரர்கள் மூன்று போராளி குழுக்களை தாக்குவதற்காக திட்டமிட்டு வரும் அவர்கள் இருவர்கள் தங்களது இலக்கை நோக்கி போராளிக் குழுவை தாக்கியதாகவும் மூன்றாவது குழு வழி தவறி திருமணம் நடக்கும் வீட்டில் வந்து தங்குகிறார்கள் அப்பொழுது தனது தோழமையான ராணுவ வீரர்கள் இரண்டு குழுவை தாக்கியதாகவும் மூன்றாவது குழு உங்களைத் தேடி வர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர் அதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் அந்த திருமண வீட்டிற்கு உள்ளே புகுந்து தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர் அப்பொழுது திருமண வீடு ஏற்பட்டதாக இருக்கும் உறவினர்கள் ராணுவ வீரர்களை பார்த்து பயப்படுகிறார்கள் .
ஒரு நாள் இரவு முழுவதும் அந்த ராணுவ வீரர்களுக்கும் அந்தத் தமிழ் குடும்பத்திற்கும் இடையே நடக்கும் உளவியல் போர் மற்றும் அதிகாரப் போராட்டமே படத்தின் கதை.
இந்திய அமைதிப்படை கேப்டனுக்கும், அந்த வீட்டின் உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல், ஒரு கட்டத்தில் இந்திய அமைதிப்படை வீரர்கள் திருமண வீட்டில் தங்கியிருப்பதை அறிந்து வெளியில் இருக்கும் போராளிக் குழுக்களின் துப்பாக்கி தாக்குதலால் இன்னும் தீவிரமடைகிறது. இதனால் திருமணம் நடக்கும் குடும்பத்தினர் மற்றும் ராணுவ வீரர்கள் போராட்ட வீரர்கள் இவர்களுக்குள் நடக்கும் போர் மற்றும் உரையாடலை அந்த இரவை நீண்ட இரவாக கொண்டு செல்கிறது இதுவே நீளிரா திரைப்படத்தின் தலைப்பாகவும் காண்போரை பதற்றத்தோடு
சிந்திக்கவும் வைக்கிறது இந்த நீளிரா திரைப்படம்