
கெணத்த காணோம் திரை விமர்சனம்
கெணத்த காணோம் திரைப்படத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடாங்கிபட்டி கிராமத்தில் கடும் தண்ணீர் பஞ்சம கிராம, மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கிறது.
நாயகன் மணிவாசகம் (யோகி பாபு) கிராமத்தில் கோவில் பூசாரி மற்றும் சாமி சிலை செதுக்கும் சிற்பி. அவர் பக்கத்து ஊரைச் சேர்ந்த யாழினியை (லவ்லின் சந்திரசேகர்) காதலிக்கிறார். யாழினியின் தந்தை, “தண்ணீரே இல்லாத ஊருக்கு மகளைத் தரமாட்டேன்” என மறுக்கிறார். இந்தத் தண்ணீர் பிரச்னை மணிவாசகத்தின் காதலுக்கு தடை யாக நீக்க.
ஊர் மக்கள் ஒருபுறம் கிராமத்தில் தண்ணீர் இருக்கும் இடத்தை தேடுகின்றனர் ஊர் மகளின் முயற்சி வெற்றிபெற நாயகன் மணிவாசகத்தின் வீட்டு அருகில் நீர் ஊற்று இருப்பதை அறிந்து, ஊர் மக்கள் ஒன்று கூடி கிணறு தோன்றுகிறார்கள். கிணறு தோண்டும் பணி தீவிரமாக நடக்கும்போது, 30 அடி ஆழத்தில் தண்ணீர் வருவதற்கு பதிலாக, எதிர்பாராத விதமாக பூமிக்கு அடியில் இருந்து மிக பழைமை வாய்ந்த டைனோசர் எலும்புக்கூடு கண்டு ஊர் மக்கள் அதிர்ச்சி அடைகின்றனர். இந்தச் செய்தி மத்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறை கிடைக்க, கிராமத்தை ஆக்கிரமிக்கிறது. அந்த இடம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கப்பட, மணிவாசகம் தன் வீட்டையும் தான் பிறந்த ஊரையும் இழக்கும் நிலை ஏற்படுகிறது. ஒரு பக்கம் தண்ணீர் தாகம், மறுபக்கம் அரசு அதிகாரிகளின் கெடுபிடிகள் என அந்த கிராமமே அரசு அதிகாரிகள் (போலீஸ்) துன்புறுத்தலில் இருந்து எப்டி தப்பித்தார்கள்?
நாயகன் நான் பிறந்த மண்ணை காப்பாற்ற என்ன முயற்சி செய்தார்?
அத்தியாவசியமான தண்ணீர் அந்த கிராம மக்களுக்கு கிடைத்ததா?
திரைப்படத்தின் தலைப்பு போல கிராம மக்கள் கிணற்றை கண்டுபிடித்தார்களா?
இது போன்ற கேள்விக்கு பதில் கெணத்த காணோம் திரைப்படத்தின் திரைகதை .