
ஊட்டியில் வசித்து வரும் சாரு (கிருஷா குரூப்) சிறுவயதில் பெற்றோரை இழந்து சித்தியின் பாதுகாப்பில் வளர்க்கப்படுகிறார். சித்தி தனது பொறுப்பற்ற தம்பிக்கு ஏற்பாடு செய்யும் திருமணத்தில் துளியும் விருப்பமில்லாத சாரு, தனது வீட்டின் அருகிலிருக்கும் ஒருவரைக் காதலிக்கத் தொடங்குகிறார் சாரு. ஆனால், தனது காதலைத் தெரியப்படுத்துவதற்கு முன்பே அவர் வீட்டைக் காலி செய்துவிட்டு சென்னைக்குப் புறப்பட்டுவிடுகிறார்.
நாயகன் ஊட்டியில் அரிய வகை பறவை ஒன்றை புகைப்படம் எடுக்க சூர்யா (ஸ்ரீராம் கார்த்திக்), ஊட்டிக்கு வருகிறார். அங்குச் சாருவுடன் சூர்யாவுக்கு நட்பு மலர்கிறது. பின்பு நாயகன் ஒரு தலையாக காதலிக்க தன் காதலை மறைத்து காதலியின் முன்னாள் காதலனிடம் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார். சென்னையில் இருக்கும் தன்னுடைய காதலுடன் சேர்த்து வைக்க அவரிடமே உதவி கேட்கிறார் சாரு.
நாயகி சித்தியின் ஏற்பாட்டில் நடக்கும் திருமணத்தில் இருந்து தப்பித்தாரா?
நாயகன் நாயகி மீது ஒரு தலை காதல் நிறைவேறியதா?
நாயகி சாருவின் காதல் இறுதியில் என்ன ஆனது என்பதுதான் இந்த ‘மைலாஞ்சி’யின் கதை.