
நாயகன் சரவண விக்ரமிற்கு சிறு வயதில் இருந்தே பெண்களிடம் பேசுவது என்றால் பதட்டம். அதனால் நாயகனை காதலித்த இரண்டு பெண்களும் நாயகனை நிராகரித்து வேறொருவரை காதல் செய்கின்றனர். பெண்களிடம் அவருக்கு இருக்கும் பயத்தை போக்குவதற்காக அவரது நண்பர் பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு அவரை அழைத்து செல்கிறார். அங்கு பாலியல் தொழிலாளியான நாயகி ஹஸ்லி அமானை சந்திக்கும் நாயகனுக்கு அவர் மீது ஒருவித ஈர்ப்பு வருகிறது. அதனால், அவருடன் மனம் திறந்து பழக ஆசைப்படுபவர், நாயகி உடன் ஒருநாள் முழுவதும் செலவிட நாயகன் விரும்புகிறார். அதற்கு நாயகி ஹஸ்லி அமானும் சம்மதிக்க, இருவரும் சேர்ந்து தங்களது ஒருநாள் பயணத்தை தொடங்குகிறார்கள். மறுபக்கம் ஹஸ்லி பெரும் கூட்டம் ஒன்று தேடி வருகிறது.
நாயகன் உடனான ஒருநாள் பயணத்தையும், பெரும் கூட்டத்தின் தேடுதல் பயணத்தையும் எதிர்கொள்ளும் நாயகி ஹஸ்லி அமான் யார் ?,
நாயகன் உடன் ஒரு நாள் பயணம் நாயகிக்கு எப்டி இருந்தது?
நாயகியை என் ஒரு பெரும் படை அவரை தேடுகிறது?
எதிரிகளை நாயகன் & நாயகி யார் எதிரிகளை தும்சம் செய்கின்றனர்?
இது போன்ற கேள்விக்கு பதிலே காமெடி மற்றும் ஆக்ஷன் விருந்தாக படம் அமைந்து உள்ளது ‘டியர் ரதி’ திரை கதை.