

டிடிஎப் வாசன், கிஷோர், அபிராமி
நடிப்பில் வெளியாகியுள்ள IPL குடும்ப திரை கதையாக திரையில் காண்பது ரசிக்க வைத்துள்ளது ஐபிஎல் திரைப்படம்.
குணசேகரன் ஒரு நடுத்தர குடும்பத் தலைவராக மற்றும் கார் ஓட்டுனராக தனது குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் எதிர்பாராத விதமாக குணசேகரன் (கிஷோர்) வேலையை இழந்ததால், சொந்தமாக கார் வாங்கி டாக்ஸியாக ஓட்டுகிறார். ஒருநாள் டெலிவரி பாயான அன்பு (TTFவாசன்) பைக்கில் செல்லும்போது குணசேகரன் குறுக்கே வர, அவரை திட்டிவிட்டு சென்றுவிடுகிறார்.
ஆனால் வேறொரு நபர் அவரது கால்மேல் பைக்கை ஏற்றிவிட, குணசேகரனுக்கு கால் முறிவு ஏற்பட்டு விடுகிறது. இதனால் அன்பு மீது அவர் கடும் கோபத்தில் உள்ளார். இதற்கிடையில், த.கு.க என்ற கட்சியின் தலைவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
ஆனால், அவரது செல்போனில் உள்ள ஒரு அதிர வைக்கும் வீடியோவை வைத்து முத்துக்கருப்பன் தப்பி பார்க்கிறார். அதற்கு அப்பாவியான குணசேகரனை அரசியல்வாதிகள், அதிகாரிகள் சேர்ந்து பலிகடாவாக்க பார்க்கிறார்கள் இதிலிருந்து குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அவருக்கு உதவியா நண்பர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பது ஐபிஎல்”இந்திய தண்டனை சட்டம் “” திரைப்படத்தின் திரைக்கதை .
டிடிஎப் வாசன் தனது கதைக்குத் தேவையான நடிப்பை கொடுத்து திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளார் மற்றும் இவரது கதைக்கு ஏற்ப தனது முதல் படத்திலேயே நடிப்பின் முத்திரை பதித்துள்ளார் பில்டப் இல்லாமல் அறிமுகம்.
டி டி எப் வாசன் திரைப்படத்தில் தன்னை பின்தொடர்புகளுக்கு தனது ரசிகர்களுக்கு மெசேஜ் சொல்லி உள்ளார் அது அது அவர் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது முதல் பாதி திரைப்படத்தில் TTF வாசன் பில்டப் இல்லாமல் திரைக்கதைக்கு என்ன தேவையோ அவற்றை சிறப்பாக நடித்து ரசிகர்களின் பாராட்டப்பட்டுள்ளார்குறிப்பாக, TTF வாசன் தன் ரசிகர்களுக்காக காக கிளைமேக்சில் பைக் ரைடு ஸ்டண்ட் செய்துள்ளார் மிகச் சிறப்பு.
கிஷோர்தான் முழுப்படத்தையும் தாங்குகிறார். அப்பாவித்தனமான முகபாவனை, கால் உடைந்த நிலையில் தாங்கி நடப்பதில் தொடங்கி, அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்கும் வசனங்களை எதார்த்தமாக பேசுவது என தனது நடிப்பின் மூலம் திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளார் .
நரேன் முதல்வராக மிரட்ட, ஜான் விஜய்,ஹரிஷ் பேரடி கொடூர வில்ல முகத்தை காட்டி மிரட்டுகிறார். போஸ் வெங்கட்டும், அபிராமியும் தங்களது நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்து உள்ளனர்