

தயாரிப்பு : பேஷன் ஸ்டூடியோஸ், ரூட்
இயக்கம் : ஜே.கே.சந்துரு
நடிப்பு : கீர்த்திசுரேஷ், ராதிகா, சுனில், ஜான் விஜய், சென்ராயன்
இசை : ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு : தினேஷ்கிருஷ்ணன்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
வெளியான தேதி : நவம்பர் 28, 2025
நேரம் : 2 மணிநேரம் 22 நிமிடம்
கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக கதையின் நாயகியாக ரிவால்வர் ரீட்டா நடித்துள்ளார் இன்று திரையரங்கில் வெளியாகி மக்களிடம் வெற்றி படமாக திரையில் காண்போரை ரசிக்க வைத்துள்ளது. சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா,சுனில், ஜான் விஜய், சென்ராயன் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள ரிவால்வர் ரீட்டா.
ரிவால்வர் ரீட்டா திரை கதையின் தொடக்கத்தில் பாண்டிசேரியில் 2 சம்பவம் நடக்கிறது. கீர்த்தி சுரேஷ்” சிறு வயது பெண்ணாக இருக்கும் போது ” அப்பா நேர்மையான உழைப்பில் ஒரு நிலம் வாங்குகிறார். ஆனால், டான் ட்ராகுலா பாண்டியன் போலி பத்திரம் மூலம் ஏமாற்றி விற்றுவிட்டார்கள் என தெரிந்து எதிர்க்க முடியாமல் தன்னை தானே சுட்டு இறக்கிறார்.
பாண்டிசேரி மிகப்பெரிய டான் ட்ராகுலா பாண்டியன், ட்ராகுலா பேபி ஊரையே மிரட்டி ரவுடிசம் செய்ய, அந்த நேரத்தில் அவர்களை எதிர்த்த நரசிம்மா ரெட்டியை கொல்கின்றனர். இதனால், நரசிம்மா ரெட்டி தம்பி ட்ராகுலா பாண்டியனை கொல்ல ஸ்கெட்ச் போடுகிறார்.
அந்த வேலை கல்யாண் மாஸ்டருக்கு கொடுக்க, டான் ட்ராகுலா பாண்டியன் ஒரு வீட்டிற்கு வரவைத்து கொல்ல திட்டம் போட, ட்ராகுலா பாண்டியன் தவறுதலாக கீர்த்தி வீட்டிற்கு செல்கிறார், இங்கு அங்குள்ள பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார் அதனை எதிர்த்து ராதிகா, கீர்த்தி ட்ராகுலா பாண்டியனை தாக்க, அவர் கீழே விழுந்து இறக்கிறார்.
இதன் பிறகு ட்ராகுலா பாண்டியன் உடலை கீர்த்தி குடும்பம் எப்படி அவரது உடலை தனது வீட்டில் இருந்து வெளியே கொண்டு சென்று மறைத்தார்கள் என்பதை நகைச்சுவையுடன் திரையில் ரசிக்கும் திரைப்படமாக ரிவால்வர் ரீட்டா அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது என்பதே மீதிக்கதை.
கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக தனது நடிப்பின் மூலம் திரையில் காண்கோரை நகைச்சுவையுடன் ரசிக்க வைத்துள்ளார். தன் குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் மிகப்பெரிய மாஸ் ஹீரோ போல் திரையில் கதாநாயகியாக மாஸ் காட்டி பிரச்சனைகளை நகைச்சுவையாக சந்தித்து உடனுக்குடனே முடிவு எடுப்பது மற்றும் அவரது நடிப்பு திரையில் நகைச்சுவையாக ரசிக்க வைத்துள்ளது.
கீர்த்தி சுரேஷின் வெகுளியான தாயாக ராதிகா நடித்து திரைகள் காண்பவரை நகைச்சுவையோடு ரசிக்க வைத்துள்ளார். செண்ட்ராயன் வைத்து அவரால் கெட்ட வார்த்தை பேசாமல் இருக்க முடியாது, அவர் போலிஸிடம் மாட்டி அங்கு செய்யும் ரகளைகள் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது .