
பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு கும்கி திரைப்படம் வெளியானது. விக்ரம் பிரபு இப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். தற்போது 13 ஆண்டுகளுக்குப் பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் கும்கி 2 உருவாகியுள்ளது. மதியழகன் , அர்ஜூன் தாஸ் , ஶ்ரீதா ராவ் , ஹரிஷ் பேரடி சூஸன் ஜார்ஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார்.திரையரங்கில் வெளியாகியுள்ளது கும்கி 2
கும்கி 2 திரைப்படத்தில் இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யானையை பல்வேறு கோணங்களில் திரையில் ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் மற்றும் யானை சண்டை இடுவது போன்று அது உணர்ச்சி கண்ணீர் வடிப்பது போன்றும் காட்சிகளை திரையில் காண்போரை ரசிக்க வைத்துள்ளது நாயகன் தனது முதல் படத்தில் மிக நேர்த்தியாக நடித்துள்ளார்.
கும்கி 2 திரைப்படத்தில் குட்டி யானை பள்ளத்தில் நிக்கி கொள்கிறது அதனை நாயகன் மதி காப்பாற்றுகிறார். அதனை தொடர்ந்து மதியை அந்த யானை குட்டி விடாமல் துரத்த இருவருக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது சில நாட்களில். குட்டி யானை பெரிய யானையாக மாற நாயகனும் வளர்கிறார். சகோதரர்கள் போல் அவர்கள் இருவருக்குமான உறவு இருக்கிறது. ஒரு நாள் திடீரென்று யானை காணாமல் போகிறது. எங்கு தேடி அலைந்தும் யானை கிடைக்கவில்லை. தனது ஆசிரியரின் அறிவுறுத்தலின் பேரில் நாயகன் வெளி ஊருக்கு படிக்கச் செல்கிறான். ஐந்து ஆண்டுகள் கழித்து அவன் திரும்பி வரும் போது அவனது யானையைப் பற்றிய தகவல் கிடைக்கவே மறுபடியும் அதை தேடி செல்கிறான்.
யானை காணாமல் போனதன் பின்னால் இருக்கும் காரணம் என்ன ?
யானையை நாயகன் மதி கண்டுபிடித்தானா ?
யானை எதனால் கடத்தப்படுகிறார்கள் அவர்களிடம் இருந்து எப்படி தப்பித்தது? இது போன்ற கேள்விக்கு பதிலே கும்கி 2 படத்தின் கதை
.