
மும்பையில் இருந்தபடி தமிழ்நாட்டில் போதை பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார் தாவூத் .
கடத்தல் மன்னன் தாவூத் யார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் அர்ஜெய் தலைமையிலான காவல்துறை தமிழ்நாட்டில் இருந்து கடத்த இருக்கும் போதை பொருளை கைப்பற்றவும் தீவிரம் காட்டுகிறது.
மறுபக்கம், தாவுத்தின் கடத்தல் பணிகளை பார்த்து வந்த தீனா, போதை பொருளை கைப்பற்ற திட்டமிடுகிறார். மற்றொரு தரப்பும் தாவுத்தின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்கிறது.
இப்படி இருக்கையில், தாவுத்தின் போதைப் பொருள் சரியான இடத்தில் கொண்டு சேர்க்க வழக்கமான ஆட்களை பயன்படுத்தாமல், வாடகை கார் ஓட்டுனரான லிங்காவை தேர்வு செய்கின்றனர் தாவுத்து கும்பல்.
லிங்காவும் பணத் தேவைக்காக கடத்தலில் ஈடுபடுகிறார். இறுதியில், திட்டமிட்டபடி லிங்கா தாவுத் சரக்கை கொண்டு போய் சேர்த்தாரா?
தாவுத்தின் கடத்தலின் பின்னணியில் உதவுவது யார்?
தமிழக போலீசார் தாவத்தின் கடத்தலை எவ்வாறு முறியடித்தனர்?
இது போன்ற கேள்விக்கு பதிலே தாவத் திரைப்படத்தின் திரைக்கதை.