siren-jayam-ravi-keerthy-suresh-- சைரன் திரை விமர்சனம் -Siren movie review

அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி,கீர்த்தி சுரேஷ், யோகிபாபு, அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் வெளியாகியுள்ள சைரன் (Siren) படத்தின் விமர்சனம் குறித்து இங்கு காணலாம். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் (16 .2 .2023)இன்று உலகம் முழுவதும்வெளியாகி உள்ளது .
இந்தியாவில் : 1500 தியேட்டரிலும்
வெளிநாடு : 200 திரைஅரங்கிலும்
உலகம் முழுவதும் மொத்தம் : 1700 திரைஅரங்ககில் வெளியாகி உள்ளது .
அரசியல் வாதி அழகம் பெருமாள், போலீஸ் உயர்அதிகாரி சமுத்திரக்கனி, அரசியல் வாதி கையால் அஜய் இவர்களின் ஜாதிவெறி காரணமாக சமுத்திரக்கனி தங்கை வேறு ஜாதியினரை காதலிக்கிறார் அதனை கண்டிக்கும் சமுத்திரக்கனி அவரை கொலைசெய்ய முடிவுசெய்க்கிறார் அப்போது சமுத்திரகனியின் தங்கை காதலன் ரோடில் துரத்தி வெட்டுகின்றனர் அப்போது சமுத்திரகனியின் தங்கை காதலன் ஆம்புலன்ஸ் டிரைவராக திலகன்(ஜெயம் ரவி) செல் பொன்முலாம் உதவி கேட்டகிறார் திலகன்(ஜெயம் ரவி) ஆம்புலன்ஸ் டிரைவராக உதவி செய்து காப்பாற்றுகிறார் மற்றும் அந்த மூன்று பேர் மீது சமுத்திரகனியின் தங்கை காதலன் கொலைக்குற்ற சாட்டி தண்டனை வாங்கி கொடுக்க முயல்கின்றனர் அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் திலகன்(ஜெயம் ரவி) சாட்சியாக உள்ளார் அந்த மூன்று எதிர்த்து நின்ற எதிர்த்துநின்ற ஆம்புலன்ஸ் டிரைவர் திலகன்(ஜெயம் ரவி) மனைவி இந்த மூன்று பேர் சேந்து அழகம் பெருமாள், போலீஸ் உயர்அதிகாரி சமுத்திரக்கனி, அரசியல் வாதி , அஜய் கையால் கொன்று அந்த கொலையினி ஆம்புலன்ஸ் டிரைவர் திலகன்(ஜெயம் ரவி) மீது தண்டனை சுமத்தி அவர்
மனைவியை (கள்ளக்காதல்) சந்தேகத்தின் பேரில் கொன்றதாக பொய்யாக குற்றம் சட்டி ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்து திலகன்(ஜெயம் ரவி) ஆயுள் தண்டனைக் கைதியாக 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வருகின்றார். வீட்டில் இருக்கும் அனைவரும் அவரைப் பார்க்க ஆசையாக இருக்கும்போது, ஜெயம் ரவியின் மகள், “கொலைகார அப்பாவைப் பார்க்க மாட்டேன்” எனக் கூறி வீட்டில் இருந்து வெளியே போகிறார். தனக்கு கிடைத்த பரோலில் தனது குடும்பத்தை பார்ப்பது மட்டும் இல்லாமல், திலகன்(ஜெயம் ரவி) தான் 14 ஆண்டுகள் சிறையில் இருக்க காரணமானவர்களை பழிவாங்கவும் முயற்சியில் வெற்றி பெற்றாரா இல்லையா ,தான் மகளுடன் இணைந்தர என்பது தான் சைரன் படத்தின் திரைக்கதை .
ஜெயம் ரவி பரோலில் வெளிவந்தவுடன் சில பெரும்புள்ளிகள் கொலை செய்யப்பட, அதற்கு அவர் தான் காரணம் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி சுரேஷ் அவரை கைது செய்து தண்டனை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கிறார். ஆனால், அந்த கொலைகளை தான் செய்யவில்லை என்று கூறும் ஜெயம் ரவி, அதற்கான சரியான ஆதரங்களை நீதிபதி முன்பு சமர்ப்பித்து தப்பித்துவிடுகிறார்.
பெப்பர் சால்ட் ஹேர் ஸ்டைல் மற்றும் உடல் மொழிழில் வித்தியாசத்தை காட்டியிருக்கும் திலகன்(ஜெயம் ரவி) 45 வயது தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார் அவரது நடிப்பும் வசன உச்சரிப்பின் மூலம் திரையில் ரசிக்க வைக்கிறார் . பரோலில் வரும் திலகன் தன் வீட்டில் காலடி எடுத்து வைக்கும்போது இளமை பருவத்தில் திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் காட்சியும் , பரோலில் ஜெயிலில் இருந்து வீட்டுக்கு வரும் காட்சி மாற்றி மாற்றி காட்டிய விதம் படத்தை திரையில் ரசிக்கும் படியாக உள்ளது .
அதே போன்று பரோலில் வரும் திலகன் தன் மகளை முதல் முறையாக பார்க்கும்போது அந்த மருத்துவமனையில் சிறுமி பிறந்தபோது எடுத்த காட்சிகளை காட்டும் பொது தந்தையின் பாசம் திரையில் நெகிச்சியாக உள்ளது .
.
ஜெயம் ரவியுடன் ஷேடோ போலீஸாக பயணிக்கும் காவல் அதிகாரியான யோகிபாபு பல இடங்களில் சிரிக்க வைக்கின்றார். அழகம் பெருமாள், சமுத்திரக்கனி, அஜய் என மொத்தம் மூன்று வில்லன்கள். மூன்று பேரும் ஜாதிவெறி பிடித்த வில்லன்கள் என்பது வசனத்தில் இருந்தாலும் அது திரைக்கதைக்கு மிகவும் பக்கபலமாக உள்ளது.
ஜி.வி. பிரகாஷின் பாடல்களும் பின்னனி இசையும் மற்றும் செல்வகுமாரின் ஒளிப்பதிவு அருமை. படத்தொகுப்பில் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார் ரூபன். ஆர்ட் டைரக்டர் சக்தி வெங்கடராஜ் திரைப்படத்தில் கோவில் திருவிழா மற்றும் அனைத்தும் இயல்பாக உள்ளது . அழுத்தமான வசனங்களாலும், சமீபகாலமாக தமிழ் சினிமா தொடாத கதையை நேர்த்தியாக கையாண்டு திரையில் அனைவரின் பாராட்டியும் பெற்றுள்ள அறிமுக இயக்குநர் அந்தோனி பாக்கியராஜ்.
சைரன் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி முதல் படத்தில் முத்திரை பதித்திதுள்ளார் இயக்குநர்.
சைரன் திரையில் குடுப்பதுடன் ரசிக்கும் படியான திரைக்கதையாக சைரன் அமைந்துள்ளது . இந்த ஆண்டு ஜெயம் ரவிக்கு வெற்றிப் பட வரிசையில் சைரன் முக்கிய பங்குவகிக்கும் .
