"இ-மெயில்-சினிமா-விமர்சனம்-indiastarsnow.com"

எஸ் ஆர் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், எஸ் ஆர் ராஜன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில், அசோக் குமார், ராகினி திவேதி, ஆதவ் பாலாஜி, மனோபாலா, லொள்ளு சபா மனோகர், ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் இமெயில்.
கதாநாயகி ராகினி திவேதியும் அவரது தோழிகள் நான்கு பேர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கின்றனர். ராகினி திவேதி, மனோபாலா நடத்தும் கைலாசா ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். அங்கு அவருக்கு போதிய வருமானம் கிடைக்காததாலும் வீட்டு வாடகையை கட்ட முடியாத சூழ்நிலையில், அவரது அப்பார்ட்மெண்டில் வசிக்கும் முருகா அசோக்கிடம் தனக்கு ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை வாங்கித் தருமாறு உதவி கேடிக்கிறார் நாயகி ராகினி திவேதி. கண்டிப்பாக நல்ல நிறுவனத்தில் வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்கிறார் முருகா அசோக். இரண்டு பேருக்கும் நட்பு ஏற்பட்டு பிறகு காதலாக மாறி திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இதற்கிடையிலே ராகினி திவேதி தனது செல்போனில் உள்ள சூதாட்ட கேம் விளையாடுகிறார். அதில் அவரது செல்போன் எண்ணை பதிவு செய்கிறார். இந்நிலையில் அவரது வீட்டைத் தேடி கொரியர் மூலம் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கிறது. அந்த பணத்தைப் பெற்றுக் கொண்ட ராகினி திரிவேதி தொடர்ந்து சூதாட்ட கேம் ஆடுகிறார் அப்போது ஒருவர் அவரது தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த சூதாட்டம் கேம் நடத்துபவர் வீட்டுக்கு வர சொல்கிறார். ராகினி திவேதியும் அந்த நபர் சொன்ன வீட்டுக்கு செல்கிறார். அங்கு அந்த மர்ம நபர் இறந்து கிடக்கிறார் அந்தக் கொலை பழி ராகினி திவேதி மீது விழுகிறது.
நாயகி ராகினி திவேதி சூதாட்ட கேம் பிரச்சினையால் முருகா அசோக்கின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனால் இந்த விஷயத்தை தன் தோழிகளிடம் சொல்லி, தானே அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முயல்கிறார். அவரது தோழிகளும் அவருக்கு உதவி செய்ய முன் வருகின்றனர். அப்போது அந்த மர்ம நபர்கள் ராகினி திரிவேதியிடம் இருக்கும் ஒரு முக்கிய ஹார்ட் டிஸ்க்கை கேட்டு மிரட்டுகிறார்கள். அந்த மர்ம நபர்களிடம் ராகினி திவேதி அந்த ஹார்ட் டிஸ்க்கை கொடுத்தாரா? அந்த ஹார்ட் டிஸ்கில் மறைந்திருக்கும் மர்மம் என்ன? என்பதுதான் ‘ஈமெயில்’ படத்தின் மீதி கதை.
மனோ பாலாவின் , லொள்ளு சபா மனோகர் இருவரும் காமெடி ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர். ஆதவ் பாலாஜி, பில்லி முரளி, ஆர்த்தி ஸ்ரீ என நடிப்பில் திரையில் ரசிக்கவைத்துள்ளார் .
எம்.செல்வத்தின் ஒளிப்பதிவில் திரையில் ரசிக்கவைத்துள்ளார் . கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் ரசிக்கவைத்துள்ளார் . ஜுபினின் பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் மூலம் ஏற்படும் ஆபத்துகளை மையப்படுத்தி அதன் பாதிப்புகளைப்பற்றி கதை எழுதி, யாரும் யூகிக்க முடியாத அளவிற்க்கு சஸ்பென்ஸாக பல திருப்பங்களுடனும் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன்.