பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஆரம்பித்து விட்டது
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஆரம்பித்து விட்டது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக களமிறங்க ஆரம்பித்து விட்டனர். முதல் நாளே அவர்களை அதிர வைக்கும் வகையில் பிக்பாஸ் செம டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்ச்சி இன்று ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதில், முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் களமிறங்கினார். அவருக்கு பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்தவுடன் கேப்டன்ஸி பேட்ஜ் கொடுக்கப்பட்டது. ஆனால், அதை அவர் கையில் கொடுத்தவுடன் ஒரு ட்விஸ்டும் வைக்கப்பட்டது. அடுத்து வரும் போட்டியாளரிடம் 5 நிமிடத்திற்குள் விவாதம் செய்து, அந்த கேப்டன்ஸி பதவியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி அந்த விவாதம் முடிவு பெறவில்லை என்றால் அந்த கேப்டன்ஸி தற்போது யாரிடம் இருக்கிறதோ அவரிடமே இருக்கும். இந்த போட்டி காரசாரமாக நடைப்பெற்று வருகிறது.
பிக்பாஸ் வெற்றியாளருக்கு கிடைக்க போகும் பரிசு என்ன?
பிக்பாஸ் போட்டியில் 7 வது சீசன் போட்டியில் 100 நாட்கள் தாக்குப்பிடிக்கும் போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதையடுத்து, இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் பரிசாக வழங்கப்படும்.