இறைவன் திரை விமர்சனம்
சென்னையில் நாடாகும் தொடர் இளம் பெண்கள் நிர்வாணப்படுத்திக் கொடூரமாக கொல்லப்படு கிறார்கள் நகரையே கதிகலங்க வைக்கும் கொடூர வில்லனை (கொல்லும்) அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் அசிஸ்டென்ட் கமிஷனர் அர்ஜுன் (“ஜெயம் ரவிக்கு”) எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்று நாயகி நயன்தாராவை விட்டு விலகி இருக்கிறார் ஜெயம் ரவி, உடன் பணிபுரியும் நண்பரான ஆண்ட்ரூ (நரேன்). இந்நிலையில் இளம் பெண்கள் நிர்வாணப்படுத்திக் கொல்லப்படுகிறார்கள். இதைத் தன்னை கடவுளாக நினைத்துக்கொள்ளும் ‘பிரம்மா’ என்கிற ஸ்மைலி கொலைகாரன் செய்வதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்துக்கு மேல் கொலைகளின் எண்ணிக்கை 13 அதிகரிக்க, கொலையாளியைக் கண்டுபிடிக்க அர்ஜுனும், ஆண்ட்ரூவும் களமிறங்குகிறார்கள் அவர்களின் நிலைமை என்னவானது “ஆண்ட்ரூ என்னாவானர்?” ,”அர்ஜுனுக்கு வேலை என்னவானது ” அந்தக் கொலைகாரனைக் கண்டுபிடித்தார்களா, கொடூர வில்லனால் இவர்கள் குடும்பம் என்னவானது என்பதுதான் ‘இறைவன்’ படத்தின் திரைக்கதை.
தொடர் கொடூர வில்லனாக வரும் ராகுல் போஸ் திரைக்கதைக்கு தனது வில்லத்தனத்தில் மூலம்
கதைக்கு உயிர்க்கடுத்துள்ளார் , நயன்தாரா ,வினோத் கிஷன் , ஆஷிஷ் வித்யார்த்தி, சார்லி, விஜயலட்சுமி , சார்லி,என அனைவரின் நடிப்பு சிறப்பு .
யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் சில வித்தியாசமான குரல்களை வைத்து புதுமைகளை அருமையாக கையாண்டுள்ளார் யுவன் . ஒளிப்பதிவாளர் ஹரி.கே.வேதாந்த் தொடர் கொலையைப் பிரதிபலிக்கும் இருண்மையைத் தனது ஒளிப்பதிவில் சிறப்பு சேர்த்துள்ளார் . ஜெ.வி.மண்கண்ட பாலாஜி படத்தொகுப்பு திரையில் மிக சிறப்பு . கலை இயக்குநர் ஜாக்கி அருமையாக தனது பணியை செய்து திரையில் மிரட்டுகிறார் .