தீராக் காதல் திரை விமர்சனம்
புதையுண்ட பொக்கிஷம் (காதலி) மீண்டும் கண் முன் வந்தால் என்னவாகும் என்பதை உன்னத உணர்வுகளை வெள்ளித்திரையில் கான்போரை உருக கவைத்துல திரைபடம் “தீராக்காதல்” கோடையில் காதலர்களின் தாகத்தை தீர்த்ததா இந்த “தீராக்காதல்”!!!
இயக்குனர் ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் ‘தீராக் காதல்’. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதி செய்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.
திரை விமர்சனம்
முன்னாள் காதலர்களாக கெளதம் (ஜெய்), ஆரண்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்). திருமணமான பின் ஜெய்க்கு ஜோடியாக ஷிவதா இருக்கிறார். அஜ்மத்தின் மனைவியாக ஐஸ்வர்யா இருக்கிறார்.
இரண்டு குடுப்பதிற்கும் இருக்கும் வித்தியாசம், ஜெய்யும் ஷிவதாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சந்தோஷமான வாழ்க்கை நடத்தி வர, அஜ்மத் – ஐஸ்வர்யாவுக்கு இடையே தினம் சண்டையும், அடிதடியுமாக நகர அஜ்மத்தை விட்டுப் பிரிகிறார் ஐஸ்வர்யா.
இரண்டாம் பத்தியில் தொடங்கும் பிரச்சனை ஐஸ்வர்யா ராஜேஷ் , ஜெய்யைத் தேடி ஓடி வர, தனது அன்பான குடும்பத்தையும் இழக்க முடியாமல் காதலியின் விருப்பத்தை நிறைவேற்றவும் முடியாமல் ஜெய் எப்படி இந்த பிரச்சனையை சமாளித்தார் என்பதுதான் ‘தீராக்காதல்’…..
அலுவல் வேலையாக மங்களூரு செல்லும் கெளதம் (ஜெய்), அங்கு ரயில் பயணத்தில் எதிர்பாராதவிதமாக தனது கல்லூரி காதலி ஆரண்யாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) சந்திக்க . இருவரும் தங்களது தற்போதைய திருமண வாழ்க்கை, பழைய நினைவுகள் என(மங்களூரு) அங்கிருக்கும் சில நாட்கள் நேரில் சந்தித்து உரையாடுகிறார்கள்.
சித்து குமாரின் பின்னணி இசையும் பாடல்களும் கதைக்கு பலம் சேர்த்துள்ளது . ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவும், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பும் கதைக்கு பலம். ஜெய்யின் நண்பனாக அப்துல் லீ வரும் காட்சிகள் எல்லாம் கதையோட்டத்தில் இயல்பாக ஒன்றியிருப்பது ப்ளஸ்.பிரேக்கப் எல்லாம் காதலர்களுக்குத்தான் காதலுக்கு இல்லை “பிரிவுக்கு பின் நம்ம காதல் மனசுல ரகசியமாகவே இருக்கட்டும்” என்பது போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன இந்த “தீராக்காதல்”.
“தீராக்காதல்” படத்தின் ஒன்னு லைன் (ஐஸ்வர்யா ராஜேஷ்)ஆரண்யாவின் காதல் “யாதும் நீயே💕 ஆனல் நீ எனது இல்லையே”