தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து?

கல்லூரி தேர்வுகள் ரத்து-indiastarsnow.com

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லுாரிகள் கடந்த மூன்று மாதங்களாக இயங்கவில்லை. பள்ளி இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில்,கல்லுாரி மற்றும் பல்கலைகளின் இறுதி பருவ தேர்வுகளும் ரத்து செய்யப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி. இது குறித்து திட்டமிட்டு உள்ளது.

திருவாரூர் மத்திய பல்கலையில் இறுதி பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருக்கறது.

பத்தாம் வகுப்பு தேர்வு போலவே, முந்தைய பருவத் தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில் இறுதி பருவத்துக்கான தேர்ச்சி கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல சென்னை பல்கலை, அண்ணா பல்கலை, மதுரை காமராஜர் உள்ளிட்ட பல்வேறு பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் மாணவர்களுக்கு இறுதி பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.நாடு முழுவதும் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் இறுதி பருவத் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக புதிய விதிமுறைகளை யு.ஜி.சி. வகுத்து வருவதாகவும், மத்திய அரசின் அனுமதி கிடைத் உடன் இதற்கான அறிவிப்பு வெளியிடப்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளதுகல்லூரி தேர்வுகள் ரத்து-indiastarsnow.com

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *