அஜய் மக்கான் அளித்த பேட்டியில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்

அஜய் மக்கான் அளித்த பேட்டியில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்

புதுடெல்லி,

17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன.

வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. டெல்லி காங்கிரஸ் தலைவரும் புதுடெல்லி மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான அஜய் மக்கான் பேட்டி அளித்தார்.

அப்போது, அவர் கூறும் போது, தேர்தல் முடிவுகள் நிச்சயம் எங்களுக்கு சாதகமாகவே அமையும். காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ராகுல் காந்தி பிரதமராவார். டெல்லியில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான் போட்டி” என்றார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *