மம்தா பானர்ஜியை அவரது இல்லத்தில் சந்தித்த சந்திரபாபு நாயுடு

ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட பல தலைவர்களை ஏற்கனவே சந்தித்த அவர் நேற்று கொல்கத்தா சென்று மம்தா பானர்ஜியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இருவரும் சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பது பற்றி அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது.

முன்னதாக அமராவதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, ‘‘தேர்தல் கருத்து கணிப்புகள் உறுதியானது அல்ல. ஆந்திராவில் நாங்கள் நிறைவேற்றிய நலத்திட்டங்கள் மூலம் மீண்டும் நாங்கள் வெற்றிபெறுவோம்.

50 சதவீத விவிபாட் சீட்டுகளை எண்ண வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனில் கோரிக்கை விடுத்துள்ளோம். தேர்தல் முடிவுக்கு பின்னர் ஜனாதிபதியை சந்திப்பது குறித்தும் டெல்லி கூட்டத்தில் முடிவு செய்வோம்’’ என்றார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *