இம்சை அரசன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சிம்புதேவன்??

இம்சை அரசன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சிம்புதேவன்இளவேனில் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவாக இருந்த இந்த படத்திலும் நடிகர் வடிவேலுவே நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து தொடங்கினார்கள்இடையில், பல்வேறு பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறுஏற்பட்டு வடிவேலு படத்திலிருந்து விலகினார்.

இதனால் படப்பிடிப்பு பாதியில் நின்று போனது. இந்த பிரச்சினையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு போனார் இயக்குனர் ஷங்கர். வடிவேலுவிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு ஏற்படவில்லை. இதையடுத்து இயக்குநர் சிம்புதேவன் தனது அடுத்த படத்தை இயக்க சென்றுவிட்டார். ஷங்கரும் ரஜினியின் 2.0 படத்தில் பிசியாகிவிட்டார். இந்த நிலையில், சிம்புதேவன் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது அடுத்த படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு முதலில் இருந்து மீண்டும் துவங்கப்படும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *