சிங்கப்பூர் சென்ற விமானத்தில் மின்கசிவு: உயிர்தப்பிய 170 பயணிகள்!

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து, சென்னையில் அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து, சென்னையில் அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு 170 பயணிகளுடன் ஸ்கூட் ஏர்வேஸ் விமானம் இன்று அதிகாலை புறப்பட்டது. அப்போது, நடுவானில் விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், விமானம் அவசர அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது. இதில், விமானத்தில் பயணம் செய்த 170 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதையடுத்து, விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணி நடந்து வருவதாக கூறப்படுக்கிறது
Leave a Reply